யார் பெத்த மகனடா நீ? (எச்சரிக்கை படங்கள் கோரமானவை)

ஆகஸ்டு 3, 1990

காத்தான் குடியில் தொழுகைக்கு குனிந்த தலைகள் குருதியில் சரிந்த நாள்!

இஸ்ரேலிய சியோனிஸ்டுக்களிடம் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்ட பாசிசப்புலிகள்சியோனிசத்தின் ஆலோசனையின் பேரில் கொலை வெறி கொண்டு அலையத்தொடங்கிய அந்த நாட்களில்

1990 இதே தினம்

பள்ளிவாசலில் புகுந்தனர்!உறக்கத்திலிருந்த ஊருக்குள் புகுந்தனர்!இஸ்ரேலியர்களின் ஏவலின் பேரில்குருதியுறைய வைக்கும் கொலைவெறியாட்டத்தைநடத்தி முடித்தனர்!

பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 129 முஸ்லிம் மக்கள் புலிகளினால் துடிதுடிக்க சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இன ஒற்றுமைக்கும், சகோதரத்துவக்கும் இலக்கணமாக கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மீது, விடுதலையின் பேரால் புலிகள் புனிதப் பள்ளிவாசல்களில் குருதியை ஓட விட்ட கோரமான நாள் இதுவாகும்.

இந்த படுகொலையில் காத்தான்குடி பெரிய பள்ளிவாசலில் 103 பேரும், ஹீசைனியா பள்ளிவாசலில் 26 பேரும் புலிகளின் இரத்த வெறிக்குப் பலியானார்கள் ஏறாவூர் கிராமத்திற்குள் புகுந்த புலிகளின் உறக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களை இனப் படுகொலை செய்தனர்.

15 ஆண்டுகள் சென்று விட்ட வரலாற்று கறைபடிந்த இந்த நாளை, இன்று காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, மற்றும் மட்டக்களப்பு வாழ் முஸ்லிம் மக்கள் துக்கதினமாக இன்று அனுஷ்டித்தார்கள். முஸ்லிம் மக்கள் தமது வியாபார நிலையங்களைப் பூட்டியும், வீடுகளில் வெள்ளைக் கொடிகளைப் பறக்க விட்டும் இந்த நினைவு தினத்தை அனுஷ்டித்ததாக எமது மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று காத்தான்குடிப் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக விசேட துவாப் பிராத்தனைகளும் நடத்தப்பட்டன.

கொல்லப்பட்ட சகோதர மக்களை இலக்கு நினைவு கூருகிறது!

நன்றி: இலக்கு இணையத் தளம















2 மறுமொழிகள்:

Blogger சும்மா அதிருதுல மொழிந்தது...

புலிகளை தாங்கி பிடிப்பவர்கள் பதில் சொல்லுவார்களா...??

6:47 PM  
Blogger CAPitalZ மொழிந்தது...

புலி ஒட்டுமொத்தமாக பலரை இதுவரை சுட்டுக் கொன்றதில்லை [பொது மக்களை]. இதற்கு புலிகளின் இரக்க மனம் என்று சொல்ல வரவில்லை. வீணாகத் தோட்டாக்களை அவர்கள் உபயோகப் படுத்துவதில்லை. ஒவ்வொரு தோட்டாவும் அவர்களுக்கு மிக மிக முக்கியம். இலங்கை இராணுவம் போல் யாராவது தமிழன் செத்தால் சரி தான் என்று சுடுமளவிற்கு புலிகளிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை. ஒரு எதிரிக்கு இத்தனை தோட்டா என்ற விகிதத்தில் தான் புலிகள் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்திய இராணுவத்துடனான மோதலில் ஒரு இராணுவத்திற்கு 7 ரவைகள் என்பது தான் கணக்காக இருந்ததாம். கூட ரவை உபயோகித்தால் அவர்களுக்கு தண்டனை வளங்கப்பட்டதாம். புலிகளுக்குத் தண்டனை என்ன என்று யோசிக்கிறீர்களா? அது வந்து சமருக்கு அவரை அனுமதிப்பதில்லை. அதாவது அவரை கூடாரத்தில் சமைக்க விடுபடும். பங்கர் கிண்ட வி:Dடுபடும். சுத்தம் செய்ய விடுபடும். கூடிய தண்டனையாக மரத்தில் கட்டி வைத்து விடுவார்களாம்.
ஒரு சிங்கள கிராமத்தில் புகுந்து பலரை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள் [சுடவில்லை]. இதற்குக் காரணம், அந்தக் கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழர்பகுதிக்குள் புகுந்து தமிழர்களைக் கொன்றார்கள். அதற்காக புலி செய்தது. அதன் பிறகு அப்படி கலவரம் அந்தப் பிரதேசத்தில் நடக்கவில்லை. இது நியாயமா என்று கேட்கத் தொடங்காதீர்கள். புலி இதுவரைக்கும் எந்தத் துரோகியையும், கோவிலுக்குள் வைத்தோ, தேவாலயத்திற்குள் வைத்தோ, மசூதிக்குள் வைத்தோ கொலை செய்தது கிடையாது.

நான் சொல்வதைக் கவனித்துப் பாருங்கள். புலிகள் கொன்ற துரோகிகள் அத்தனை பேரையும், அவர்கள் வீட்டில் வைத்தோ, வீட்டிலிருந்து கூட்டிச் சென்றோ (அ) வீட்டிலிருந்து வெளியில் போகும்போதோ தான் கொன்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு முதலில் ஒரு எச்சரிக்கை விடப்பட்டிருக்கும். இது தான் புலிகளின் பாணி.

இதனால் முஸ்லிம்களைக் கொன்றது புலிகளாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.

ஐயா, புலிகளின் சட்டத்தில் துரோகத்திற்கு ஒரு துளியேனும் இடமில்லை. எவராக இருந்தாலும் பாகுபாடின்றி மரண தண்டனை தான். புலியில் இருந்த ஒருவருடைய தாயையே புலி மண்டையில் போட்டது [மகன் புலியில் இருந்த காலத்திலேயே]. அவ இந்திய இராணுவத்துடன், எச்சரிக்கை விடப்பட்ட பின்னும், கதைத்தா என்பதற்காக. அதற்காக அந்தப் புலிவீரன் புலியை வெறுத்தது கிடையாது. இது தன்யா புலி. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. [புலியைப் பெற்ற தாயிற்கே இந்த நிலமை என்றால் இராசீவ் காந்தி எல்லாம் எம்மாத்திறம்]

இப்படிப் பல இருக்கு. இப்படியான் ஒரு கட்டுக்கோப்பு தான் வேறெங்குமில்லாத வண்ணம் புலிகளை வலுவாக்கி இருக்கிறது.

______
CAPital
http://1paarvai.wordpress.com/

9:25 PM  

Post a Comment

<< முகப்பு