பெரியவருக்கு பின்னாலை பிளேன்ரை படத்தை காணேலை

பெரியவருக்கு பின்னாலை இந்தமுறை பிளேன்ரை படத்தை காணேலை

பிரபாகரனின் உரைக்கு பொழிப்பு எழுதும் புலம்பெயர் தமிழர்கள் !

- ஜானகி


புலிகளின் தலைவர் அதி உத்தம மேதகு மாமனிதர் பிரபாகரனின் மாவீரர் தின மசாலா அவரின் புலம்பெயர் உறவுகளை குசிப்படுத்தியிருக்கும் அதே நேரம், பல பொறுப்புள்ள தமிழர்களை கொதிப்படையவும் வைத்திருக்கிறது.இலங்கையின் வட-கிழக்கு மற்றும் தென் பகுதிகளைச் சேர்ந்த இவர்களுள் சிலரிடம் இந்த வருட மாவீரர் தின உரை பற்றிக் கருத்துக் கேட்டபோது அவர்களுள் பெரும் பகுதியினர் தேசிய தலைவரைக் கண்டித்துள்ளனர்.

திருமதி நாகம்மா (63 வயது: விதவை: புன்னாலைகட்டுவனைச் சேர்ந்த இளைப்பாறிய கை வைத்தியர்;: 12 வருடங்களாக லண்டனில் வசிப்பவர்)) –

~ சிங்களவனுக்கு அடி குடுக்கிறதுக்கு அவரை விட்டால் வேறை ஆர் மோனை இருக்கினம் ? அந்த மாதிரி குடுத்திருக்கிறார் சிங்களவனுக்கு. எனக்கு காது கேக்கர்து மோனை. ஆனால் அவற்றை படத்தை பாத்தனான். அந்தமாதிரி இருக்கிறார். கடவுளே கண் பட்டிடக் கூடாது. போன முறை மாதிரி பின்னுக்கு ஒரு பிளேன் படமும் வைச்சிருந்தல் நல்லாய் இருந்திருக்கும். சிங்களவன் பீச்சிக்கொண்டு திரிஞ்சிருப்பான். |

திரு சிவக்கொழுந்து ( 66 வயது: திருமணமானவர்: முன்னாள் விதானையார், அல்லைப்பிட்டி: 22 வருடங்களாக லண்டனில் வசிப்பவர்) :

~ தலைவரை ஒருதராலையும் அசைக்கேலாது எண்டதை நிருபிச்சிட்டார். சிங்களவன் நினைச்சான் பொருளாதார தடையைக் கொண்டுவந்தால் தலைவர் இறங்கிவருவார் எண்டு. பொருளாதாரத் தடை தலைவரைப் பாதிக்காதெண்டு தெரியாத முட்டாள்கள். இந்தமுறை தலைவற்ரை பேச்சோடை கலங்கிப் போய் இருப்பாங்கள்|.

~ எனக்கென்ன முழுப் பிள்ளையளும் இஞ்சை. பிரச்சினையில்லை. என்ரை பிள்ளையள் ஒருநாளும் அங்கைபோய் இருக்காதுகள். ஒரு ஒன்பது பரப்பு காணியள் மட்டிலை ஊரிலை இருக்கிது. நளப்படையள் போய் அதுக்கை அடாத்தாய் இருக்கிதுகள். இயக்கப் பெடியளைப்பிடிச்சு அதையும் விக்கிறதுக்கு அலுவல் பாத்துக் கொண்டிருக்கேக்கை இந்த நாசமாய்போன சண்டை வந்திட்டிது. அதையும் வித்துப்போட்டனெண்டால் என்ரை பிரச்சினை முடிஞ்சுது. வெளியாலை வரமுடியாமல் அங்கை இருக்கிற அப்பாவிச் சனங்கள்தான் பாவம். ஆனால் அதுக்கென்ன செய்யிறது. ஏல்லாம் அவர் அவற்ரை விதி. தனிநாடு வேணுமெண்டால் இழப்புகள் வருமெண்டு தலைவர் எப்பவோ சொல்லீட்டாரே|.

~ வேலைக்குப் போறபடியாலை இந்தமுறை பேச்சை முழுசாய் கேட்கேலை. பெரியவற்ரை படத்துக்குப் பின்னாலை பிளேனைக் காணேலை எண்டு என்ரை பிள்ளையள்; சரியாய் குறைப்பட்டிதுகள். தலைவர் போனமுறை மாதிரி பிளேன்ரை படத்தையும் போட்டு விட்டிருந்தால் சிங்களவனுக்கு அந்தமாதிரி இருந்திருக்கும்|.

திரு சிவசீலன் (22 வயது: திருமணமாகாதவர்: எரிபொருள் நிலையத்தில் வேலை செய்பவர்; யாழ்ப்பாணம்: 3 வருடங்களாக லண்டனில் அகதி அந்தஸ்துபெற்று வசிப்பவர்) –

~ தலைவர் சொன்னதோடை நிப்பாட்டாமல் உடனையே சண்டையை தொடங்கீடோனும். சிங்களவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்காட்டில் சரி வரமாட்டான். எனக்கும் குடும்பமெல்லாம் ஊரிலைதான், ஆனால் அவையளை நான் இந்தியாவுக்கு அனுப்ப வழிபாத்துக் கொண்டிருக்கிறன். கொஞ்ச நாளிலை என்ரை பிரச்சினையெல்லாம் தீர்ந்து போடும். அதுக்குப் பிறகு நான் தலைவருக்கு காசு குடுப்பன்|.

பெயர் சொல்ல விரும்பாதவர்: லண்டனில் 20 வருடமாக வசிப்பவர்: நெல்லியடியைச் சேர்ந்தவர்: ஊடகவியலாளர்:


~ நீண்ட காலமாக லண்டனிலை மிகப் பெரிய மண்டபங்களிலை, பெரிய களியாட்ட விழா போலைதான் மாவீரர் தின விழா நடந்து வந்தது. போன வருசம், ரெண்டு சின்ன மண்டபங்களிலை வைச்சினம். இந்தமுறை நாலு குட்டி குட்டி மண்டபங்களிலை வைச்சிருக்கினம். புலிகளுடைய இணையத்தளங்களிலை லண்டன் ஹரோ மண்டபத்திலை நடந்த மாவீரர் நாளைப் பற்றித்தான் படங்கள் போட்டு எழுதினம். உண்மையிலை அந்த மண்டபத்திலை ஆகக்கூடியது 300 பேர்வரைதான் கொள்ளும். லண்டனிலை டூட்டிங் எண்ட இடத்திலை ஒரு ரெஸ்டோரண்டிலைதான் மாவீரர் நாளை வைச்சிருக்கினம். புலிகளுக்கு புலம்பெயர் நாடுகளிலை ஆதரவு குறைஞ்சு வருகிது எண்டதைதான் இது காட்டுது. ஒண்டு ரெண்டாகி இந்த வருசம் ரெண்டு நாலாகி இருக்கிது. அடுத்த வருசம் நாலு எட்டர்குமோ அல்லது ஒண்டும் இல்லையோ தெரியாது.

இதுவரை வந்த 17 மாவீரர் தின உரையளிலை, இந்தமுறையான்தான் மிக மோசமான மாவீரர் தின உரை. தலைவருக்கு எழுதத்தெரியாத படியாலை மாவீரர் உரையை ஆரோ தானே எழுதிக் குடுக்கோணும். இந்தமுறை ஆர் எழுதிக் குடுத்தீச்சினமோ தெரியாது. நிறைய சினிமா வசனம் பேசியிருக்கிறார். பேபி சுப்பிரமணியமோ தெரியாது. |

~ சிங்கள சமூகம் புதிய உலக மாற்றத்திற்கேற்ப புதிதாய் சிந்திக்க மறுக்கிறது எண்டு சொல்லிறார். உண்மையிலை உவர்தான் உலக மாற்றத்தை கவனத்திலெடுக்க தயாரில்லை. அதனாலைதான் சமாதான காலத்திலைகூட பல நாடுகளிலை பயங்கரவாத இயக்கமெண்டு தடைசெய்யப்பட்டிருக்கினம்|.

உண்மையிலை இவற்ரை உரையை வடிவாய் வாசிச்சுப் பாத்தால் தங்களுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளுறது வடிவாய் தெரியும். தன்னுடைய தலைமையிலை நடந்த 25 வருட போராட்டமும் மனித அவலங்களைத்தான் தந்திருக்கு என்றதை ஒப்புக்கொண்டு தானே பட்டியல் போடுறார்|.~ தமிழீழ மக்களுக்கு எந்தவித செய்தியும் இவற்ரை உரையிலை இல்லை. முழுக்க முழுக்க புலம்பெயர் தமிழ் மக்களுக்குதான் இந்தமுறை வாசிச்சிருக்கிறார்|.;

~ இந்தப் பயல் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படும் மட்டும் தமிழ் மக்களுக்கு நிம்மதி ஏற்படப் போவதில்லை.|

பெயர், ஊர் சொல்ல விரும்பாதவர்: ஒரு பேராசிரியர்: மேற்படிப்பு நிமித்தம் இரண்டு வருட விடுமுறையில் லண்டன் வந்திருப்பவர:;; தென் இலங்கையில் வசிப்பவர்:

~ எந்தவித பொறுப்புமில்லாத பேச்சு. ஆனால் ஒரு வழியிலை பாத்தால் தோல்வியை ஒப்புக்கொள்ள விருப்பமில்லாத பட்சத்திலை பிரபாகரன் வேறை என்னத்தைத்தான் சொல்ல முடியும்|.~ தமிழ் ஈழம் என்பது உலகத்திலை எந்த ஒரு நாட்டாலையும் அங்கீகரிக்கப்படப் போவதில்லை எண்டது தெரிஞ்ச பிறகும், அதுவும் தன்னுடைய தலைமையில ஒரு நாளும் தமிழ் ஈழம் எண்ட ஒரு நாட்டை உலகத்திலை உள்ள எந்த ஒரு நாடும் அங்கீகரிக்காது எண்டு தெரிஞ்ச பிறகும், முழுப் பொது மக்களையும் ஏமாத்திறதுக்காகவும், புலம் பெயர் மக்களிட்டையிருந்து தொடர்ந்து பணம் கறக்கிறதுக்காகவும், ஈழப் போராட்டத்தை தொடங்கப் போறதாகக் கதை விட்டிருக்கிறார். தமிழ் மக்கள் பாவம்.|

கலாநிதி திருச்சிற்றம்பலம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவ ஆசிரியரான அன்ரன் பாலசிங்கம் கலாநிதிப் பட்டம் பெற்ற அதே பல்கலைக் கழகத்தில் அன்ரன் பாலசிங்கத்துடன் ஒரே வகுப்பில் படித்து அன்ரன் பாலசிங்கத்தைப் போலவே கலாநிதிப் பட்டம் பெற்றவர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்;:

~ இலங்கையின் எந்தப் பகுதியிலுமுள்ள தமிழ் மக்களின் நலன்களையும் கவனத்தில் எடுக்காத பொறுப்பற்ற பேச்சு. இவர் ஒரு பேட்டை ரவுடி. இந்தியா, அமெரிக்கா போன்ற பெரியசண்டியர்களுடன் சவால்விடப் பாக்கிறார். அது தமிழ் மக்களுக்கு பெரிய அழிவைத்தான் கொண்டுவரும்.|~ நாம் நேர்மையுடனும், நெஞ்சுறுதியுடனும் சமாதானத்திற்கு முயற்சித்ததாக பச்சைப் பொய் சொல்கிறார். போரைவிட சமாதானத்தின் மூலம் தீர்வை அடைய நீண்ட காலம் எடுக்கும். இலங்கை அரசை அம்பலப்படுத்தவேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தவறவிட்டிட்டு இப்ப பச்சைப் பொய் சொல்லி முழுத் தமிழ் மக்களையும் ஏமாற்றப் பார்க்கிறார். சமாதானம் தொடங்கினதிலையிருந்து 2004ம் ஆண்டு மட்டும் மாற்றுக்கட்சி அரசியல் தலைவர்கiயும், அப்பாவி உறுப்பினர்களையும், பெண்கள் பிள்ளைகளையும் கொலை செய்தது புலிகளே. 2004ல் கருணா பிரிந்தபின் தான் புலிகளிற்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமாகியிருந்தன. அதுவரை மாற்றுக்கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்களை தலைவர் கொலை செய்யும்போது தமிழ் அரசியல் தலைமையோ அல்லது தமிழ் புதினப் பத்திரிகைகளோ அவற்றைக் கண்டிக்கவில்லை. பிறகு 2005 பிற்பகுதியில் மக்கள் படையெண்டு சொல்லி சில காட்டுமிராண்டியளைகொண்டு அரச படைகள்மேல் தாக்குதல் நடத்திப் பார்த்தார். இப்போது அரச படைகள் மிக மோசமாக, தலைவருடைய பாணியிலை திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளனர். பலியாவது அப்பாவித் தமிழ் மக்களும்தான். மக்கள் படை மாயமாய் மறைஞ்சு போட்டிது. இதைப்பற்றி கேட்க ஒருவருமில்லை. தலவர் என்ன செய்வது எண்டு தடுமாறுவது அவருடைய பேச்சிலை தெரியுது.|

~ கருணா அம்மானுடைய பிரச்சினையை கவனமாகக் கையாண்டிருக்கலாம். அதுவும் அவராலை முடியாமல் போய் இப்ப கிழக்கு மாகாணம் ஏறத்தாழ முழுவதாய் பறிபோயிட்டிது. தனது பேச்சில் அடிக்கடி ஏகபோக தமிழ் மக்கள் என்று குறிப்பிடுவதன் மூலம், தமிழ் மக்களின் ஏகபோக உரிமை தற்போது தங்களிடமிருந்து பறிபோய் விட்டது என்பதை தலைவர் உணர்ந்திருக்கிறார் போல் தெரிகிறது. யார் இந்த முறை பேச்சை எழுதிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால் இவர் பேச்சில் சொன்னபடி சர்வதேச உலகமும் எதிர்க்கின்ற ஈழப் போராட்டத்தை ஆரம்பிப்பரானால், மேலும் சர்வதேசத்திடமிருந்து இவர் தனிமைப் படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகும். இவர் சர்வதேசத்தைப்பற்றி பகடியாக எடுக்கிறார்போல் தெரிகிறது. இவ்வளவுதூரம் சர்வதேசத்தால் அந்நியப்படுத்தப்ட்ட எந்தவொரு இயக்கமும் உலகத்திலை எந்தவொரு காலத்திலையும் இருந்ததில்லை என்பதை தலைவருக்கு ஆராவது செல்லோணும்|.

~ ஒரு பக்கத்தில் பார்த்தால் பிரபாகரன் பாவம் போலவே தெரிகிறது. நண்பர் அன்ரன் பாலசிங்கமும், தமிழ் சனங்களும், தமிழ் பத்திரிகையளும் இவ்வளவு இழப்புகள் வருமட்டும் நல்லாய் உசுப்பேத்தி விட்டிட்டாங்கள். இப்ப தலைவருக்கு வேறை வழியே இல்லை. இறங்கி வரேலாது. இறங்கி வந்தால் ஒரு லட்சம் அப்பாவி மக்களுடைய இழப்புக்கும், கிட்டத்தட்ட இருபதினாயிரம் புலிப் போராளியளுடைய இழப்புக்கும் கணக்கு காட்ட வேண்டும். இந்த நிலையிலை தலைவர் என்ன செய்யலாம்.?|

~ தலைவருடைய காலம் எண்ணப்படுகிறது என்பதைத்தான் என்னால் சொல்ல முடியும் |.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு