புலிகளிடமிருந்து தப்பி அகதிகள் வாழைச்சேனைக்கு வருகை

4 December 2006
பதினாறு குடும்பங்கள் வாழைச்சேனைக்கு வருகை
04th December 2006
புலிகளின் பிடியிலிருந்து தப்பிய 16குடும்பங்களைச் சேர்ந்த 46பேர் நேற்றுமுன்தினம் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள வாழைச்சேனை விநாயகபுரம் பிரதேசத்துக்கு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வாகரைப் பகுதியிலிருந்து, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். விநாயகபுரம் பாடசாலையில் இவர்களுக்கான தங்குமிட வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். இராணுவத்தினரின் உதவியுடன் விநாயகபுரம் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளின் நலன் பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஊடக மத்திய நிலைய அதிகாரி தெரிவித்தார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு