புலம் பெயர் தமிழர்களின் காதில் பூ வைத்த பிரபாகரன்

புலம் பெயர் தமிழர்களின் காதில் பூ வைத்த பிரபாகரன்:

பணத்திற்குப் பிணங்களைக் குவித்துக் காட்டிப் புலம்பும் 'மாபியாத்' தலைவர்

-மு.சக்திவேல்- கொழும்பு.


''ஈழத்தமிழரசு'' எடுத்துத் தருவதாகச் சொல்லிக் கொண்டு இலங்கைத் தமிழ் மக்களை, கடந்த 25 வருடங்களாகப் பேய்க்காட்டிப் பணம் பறித்துவரும் மாபியாத்தலைவர் வரும் பிரபாகரனின் இன்னுமொரு 'வாசிப்பு' 27. 11.06ல் நடந்தேறியது. பாலசிங்கத்தின் எழுத்து நடையில், சிங்களவரின் ஏமாற்றுக்கள், அதை உடைத்தெறியும் தமிழ் வீரம், தமிழ் உணர்வு, போராட்டம், தியாகங்கள், ஒட்டுமொத்தமான ஈழக்கனவு அத்தனையையும் மசாலாவாக்கி யாரோ எழுதிக்கொடுத்ததை மிகவும் 'அப்பலாக முகத்தில் தூவிய பவுடருடன்' நாடக மேடையில் ஒரு ஒரு கோமாளி நடிகள் போல் மாவீரர் உரை நிகழ்த்தினார் பங்கர் அரசர்.

தூக்கமுடியாத உடம்புடன், பங்கருக்குள் எங்கேயோ ஒரு உரலில் ஏறி நின்று வழக்கம் போல் சிங்களவர்களையும் மாற்றுக்கருத்துள்ள துரோகிகளையும் வசைபாடித்தள்ளினார். பொறுத்ததுபோதும் பொங்கியெழு என்று தமிழ் மக்கள் தன்னிடம் பலதடவைகள் சொன்னதாகச் சொன்னவர் இன்று ' நாங்கள் இன்னும் சிங்களவரை நம்பப்போவதில்லை. ஈழத்தை விரைவில் எடுப்போம் என்று சொன்னார். பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு உணவு போகாமற் தடுப்பவர் என்னவென்று ஒரு வீரப்படையை உருவாக்குவார் என்று தெரியாது. அதிலும் முக்கியமாக வாகரைப்பகுதியில் ஒரு லொறியும் போகாமற் தடுத்து மட்டக்களப்பு 'பட்டினி' இளைஞர்களைத் தன் படையிற் சேரப்பண்ணுவதற்காகப் பல முயற்சிகள் எடுக்கிறார். வெளிநாடுகளில் உறவினர் உள்ளவர்களும் கொழும்பிலுள்ள வசதியாக வாழும் தமிழ் இளைஞர்கள், இலங்கையிற் தொடரும் அசம்பாவித நிலைகளைக்காட்டிப் பல வெளிநாட்டு ஸ்தானிகராலயங்களுக்குப் படையெடுக்கும்போது, வாகரைப்பகுதி அப்பாவித்தமிழர் ' ஈழத்தின்' பலியாடாகிறார்கள்.

இவரின் பேச்சு புலம் பெயர்ந்த தமிழர்களைக் கவர்வதிலும் இந்தியத் தலைவர்களைத் தூக்கி வைப்பதிலும் முக்கியமாகக் குறி வைத்திருந்தது. ஏ9 பாதையால் எடுக்க முடியாத கொள்ளையைப் புலம் பெயர்ந்தோர் மூலம் பெறுவதற்காகப்புனையப்பட்டது இந்தப்பிதற்றல். ஒரு காரசாரமான அரசியற் செய்தியுமற்றுச் சிங்கள அரசுகளின் குற்றங்களை வெளிப்படுத்தும் தோல்வித் தொனியில் ஒரு மணித்தியாலத்திற்குமேல் உளறிக்கொட்டினார் தலைவர். 'உங்கள் அளப்பெரிய உதவியை எதிர்பார்க்கிறோம் என்று புலம் பெயர்ந்தோர் உணர்ச்சியைத் திணறப்பண்னினார். இந்தியர்களுக்கு நன்றி சொன்னார். பணத்துக்காக எதையும் , சில இந்திய அரசியல்வாதிகள் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதை இந்திய அரசியல் பலதடவைகளில் உலக மக்களுக்குச் சொல்லியிருக்கிறது. காசுக்கு மாரடிக்கும் வைக்கோவும் திருமாவும் முதலில் தங்கள் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப்பற்றிப் பேசட்டும்.

தென்னிந்தியத் தெருக்களில் அனாதைகளாகவிருக்கும் 'சுத்தத் தமிழனுக்கு' இந்தியத் தமிழ்த் தலைவர்கள் அடைக்கலமும் ஒருபிடிச்சோறும் கொடுக்கட்டும் . தனது வீட்டு ஓட்டையை அடைப்பதற்குப்பதில் மற்றவர் வீட்டு ஓட்டையைப்பார்த்துக் கண்ணீர் வடிப்பது நடிப்பு, துரோகம், பிழைப்பு வாதம். இலங்கைத் தமிழருக்கு உதவி செய்ய இந்தியா வந்ததும், சிங்களப்பேரினவாதிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு இந்தியர்களை ஓட ஓட விரட்டியடித்து விட்டு 'உலகில் நான்காவது பெரும் இராணுவத்தை எங்கள் மண்ணிலிருந்து விரட்டி விட்டோம்' என்று முழங்கிய புலிகள் இன்று இந்தியா வந்து தங்களைக்காப்பாற்ற வேண்டும் என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

வைக்கோவுக்காகக் கருணாநிதி குடும்பத்தையும் குறிவைக்கத் தயங்காதவர்கள் சந்தர்ப்பவாதிகளாய் மாறி இன்று தமிழக முதல்வருக்குத் தூது அனுப்புகிறார்கள். தென்னிந்தியத்தமிழ்த் தலைவர்கள் புலிப்பயங்கரவாதிகளுக்குக் கூலிக்கு மாரடிக்கும்போது, காஷ்மீர் முஸ்லிம்களுக்காக்ப் பாகிஸ்தானில் குரல் வந்தால் அது சர்வதேச அரசியலாகி விடுகிறது. இந்தியா புலிகளின் தனியரசு கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. பாசிச வாதிகளான புலிகளுடன் இணைவதன் மூலம் முஸ்லிம் மக்களைத் தமிழ்ப்பகுதியிலிருந்து அழித்தொழிக்கும் புலிகளின் முயற்சிக்கு இந்தியா உதவப்போகிறதா என்ற கேள்வி இஸ்லாமிய மக்களிடையே எழுகிறது.

இந்தியாவில் ராஜீவுக்கு நடந்ததின் தொடரை அனுமதிக்கப் புலிகளுக்கு இடமெடுத்துக் கொடுக்கப் பார்க்கிறார்கள் சில தமிழக அரசியல்வாதிகள். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவோ ஏழைகளுக்காகவோ போராடாமல் இலங்கைத் தமிழருக்காக வெற்றுக்கண்ணீர் வடிப்பது தென்னிந்திய அரசியல்வாதிகளின் மிகப்பெரிய அரசியல் நடிப்புத் திறமையாகும். இந்தியா தனது நாட்டில் வேகமாக வளரும் நக்சலைட்டுக்களுடன், உலகத்திலேயே மிகவும் கொடிய பயங்கரவாதிகளான புலிகளையும் சேர்த்து விருந்து கொடுக்க வைகோ போன்றவர்கள் துணைபுரியலாம். இந்தியத் தமிழர்;, இந்தியாவின் எந்த மூலைக்கும் போகலாம், வாழவும் உரிமை இருக்கிறது. இலங்கைத்தமிழர் இலங்கையின் எந்த மூலைக்கும் போகலாம். ஆனால் இலங்கைப்பிரசையான ஒரு சிங்களவரோ முஸ்லிமோ பிரபாகரனின் வன்னிக்குப்பகுதிக்குள் போகமுடியாது. ஒற்றர்கள் என்று உடனடியாகச் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.

மாவீரர் பேச்சு நடந்து சரியாக ஒரு கிழமையின்பின் கொழும்பில் தற்கொலைதாரியின் தாக்குதல் (01.12.05)ல் நடந்தது. ஜனாதிபதியின் சகோதரருக்கு வைத்த குறி நாளைக்கு வேறு யாருக்கோ வைக்கப்படலாம். உலகத்தில் புலிகள் ஒரு அதிசிறந்த பயங்கரவாதிகள் என்பதை நினைவு படுத்த. பத்திரிகையிற் தங்கள் பெயர் வர அடிக்கடி இப்படி ஒரு தற்கொலைத் தாக்குதல்கள் தேவையாயிருக்கிறது. புலிகளின் தற்கொலைத்தாக்குதல்களுக்குப் பயந்து இலங்கை அரசாங்கம் ஈழம்; கொடுப்பதானால் அந்த விடயம் எப்போதோ நடந்திருக்கும். 'எங்கட் பொடியள் கொழும்பில அடிச்சுப்போட்டான்கள்' என்று சில தமிழர் பேசி மகிழவும் அதற்கு கூலியாகப் பணம் கொடுக்கவும் புலிகள் இப்படிச் சில புலிகளைத் தமிழரின் விடுதலை என்ற பெயரிற் தொடர்கிறார்கள். அதனாற் துன்பப்படுபவர்கள் புலிகளிடமிருந்து மறைந்துவாழும் எங்களைப்போன்ற கொழும்புத் தமிழர்கள்தான். தென்னாசியாவிலேயே மிகவும் படிப்பறிவுள்ள இனமாக ஒரு காலத்தில் விளங்கிய மிகவும் புத்திசாலிகளான யாழ்ப்பாணத்துத் தமிழரை, தனது கள்ளத் தோணி வியாபாரத்தை வியாபிக்கும் நோக்கத்தை அடித்தளமான,'ஈழம்'' என்ற கனவுலகின் முட்டாள்களாக்கிய புலிகளுக்கு பரந்த உலக அரசியல் அறிவு கிடையாது என்பதை இவருக்குப்பணம் கொடுக்கும் பெரும்பாலான புலம் பெயர் தமிழர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

புலிகளுக்கு அரசியல் ஞானம் இருந்தால், சிங்களப் பேரினவாததுக்கு எதிராகக் கொதித்தெழுந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களையும் மாற்றுக்கருத்துள்ள தலைவர்களையும் படுகொலை செய்திருக்கமாட்டார்கள். - படு முட்டாள்த்தனமாக ராஜீவ் காந்தியைக்கொலைசெய்து இந்திய மக்களினதும் அரசினதும் வெறுப்பை வாங்கியது மட்டுமல்லாமல், விடுதலைப்போராளிகள் என்பதற்குப்பதில் ' பயங்கரவாதிகள்' என்ற பட்டத்தையும் பெற்றிருக்கமாட்டார்கள். -தனது குழந்தைகளையும் மனைவியையும் லண்டனுக்குப் பத்திரமாக அனுப்பிவைத்து விட்டு மற்றவர் குழந்தைகளைப் புலித்தலைவர் பலிகொடுக்க மாட்டார். - இதுவரையும் புலம் பெயர்ந்த மக்களிடமிருந்தும் 'வேறு' பலரிடமிருந்தும் சேர்த்த கோடிக்கணக்கான பணத்தில் உலகின் பல பாகங்களிலும் தனது குழந்தைகளுக்கும் சொந்தக்காரர்களுக்கும் சொத்து சேர்த்து வைக்காமல் போராட்டத்தால் துயருறும் தமிழ் ஏழைகளுக்குச் எத்தனையோ முன்னேற்றங்களைத் செய்திருப்பார்.
கள்ளக் கடத்தல் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்திற்கப்பாலான பரந்த அரசியற் கண்ணோட்டம் இருந்திருந்தால் தமிழருக்கு 1987ல் தமிழ் ஈழம் கிடைக்கப் பண்ணியிருப்பார்.-சிங்களப் பேரினவாத சக்தியான பிரேமதாசாவுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான தமிள் இளைஞர்களைக்கொலை செய்திருக்கமாட்டார்.

-தமிழினத்தின் ஒரு அங்கமான முஸ்லிம்களைப் படுகொலைசெய்திருக்க மாட்டார், நாடு கடத்தியிருக்கமாட்டார். தமிழரின் போராட்டத்தின் மிகச்சிறந்த வெற்றிகளைப்பெற்றுக்கொடுத்த கருணாவுடன் பகைத்துக் கொண்டு கிழக்கை கோட்டை விட்டிருக்க மாட்டார். மாரிகாலதில் தவளை வெளிவந்து சத்தம்போட்டுத் தன் இருப்பைக்காட்டிக் கொள்வதுபோல் இவரும், வருடத்துகொரு தரம் பங்கரைத் தாண்டி வந்து(??) யாரோ எழுதிக்கொடுத்த பத்திரத்தைப் படித்தி விடுவதால் 'ஈழம்' கிடைத்து விடும் என்று இவரும் இவரை நம்பும் முட்டாள்களும் இலவு காத்த கிளிகளாகத் தொடர்ந்து வாழட்டும். அகதிகளாய் ஓடிப்போய் உலகம் பரந்து வாழும் பல தமிழர்கள் இன்னும் மிகவும் அடி மட்டமான வேலைகளைச்செய்து பிழைக்கிறார்கள். கொழும்பில்வாழும் உறவினர்களுக்கு உதவ வெளிநாட்டில் வாழும் எனது தம்பி மூன்று வேலை செய்து மாரடிக்கிறான். 'ஈழம் வந்தால் எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் கிடையாது' என்று கனவு காண்கிறான்.

புலம்பெயர்நாடுகளில் கூலிவேலை செய்து பிழைக்கும் பல ஏழைத் தமிழருக்கு 'ஈழ' சாம்ராச்சியக்கனவு'' மிகவும் உயர்ந்த கனவாகும். அவர்களிற் பலர் இலங்கைக்கு வந்து ஏழை மக்கள் படும் அன்றாட அவலத்தைக் காணாதவர்கள். வெளிநாடுகளில் புலிப்பத்திரிகைகள் தங்கள் பத்திரிகையின் விற்பனைக்குக் கொலையையும் இனவாததையும் முன் பக்கத்திலும் கல்யாண விளம்பரங்களையும் கருவாட்டு மலிவு விபரங்களையும் அடுத்தடுத்த பக்கங்களிற் பிரசுரித்து பிழைப்பு நடத்துவதுதான், தமிழ்ப்போராட்டத்தின்' மீடியா' வேலை. கடின உழைப்பின்பின் வீடுவரும் புலம்பெயர் தமிழனை இரவு பகலாக இந்தத் தமிழீழ்க்கனவு தட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது. புலம் பெயர்ந்து வாழும் வாய் பேசும் வயது வராத தமிழ்க்குழந்தைகள் தமிழ் டெலிவிசன்களில் காட்டப்படும் வெறிபிடித்த இனவாதக் கர்ச்சனைகஈ உள்வாங்கிக் கொள்கிறார்கள். ''புலிகளிடம் முப்படைகளும் உள்ளன, அவை ' சிங்களஇனத்தை வெல்ல நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றன'' என்ற பொய்ப்பிரசாரத்தை நம்பி அப்படைகளுக்கு உதவி செய்யத் தனது கடின உழைப்பின் ஊதியத்தின் ஒரு பகுதியைப் புலிகளுக்குத் தானம் கொடுக்கும் அப்பாவித் தமிழர்களுக்குப் பிரபாகரன் தனதும் தன் குடும்பத்தின் இருப்புக்கும்தான் இந்தச் சண்டையைக் கொண்டிழுக்கிறார் என்பதைப் புரியும் கெட்டித்தனம் இன்னும் வரவில்லை.

வெளிநாட்டுக்குப் படிப்பின் துணையுடன் வந்து முன்னேறாமல், தனது உண்மையான திறமையைக்காட்ட வசதியற்ற பலருக்கு இந்த ' ஈழக்' கனவு ஒரு புதிய உலகைக்காட்டுகிறது. தமிழரின் போராட்டத்தில் இறந்துபோன இளம் தமிழருக்கு அஞ்சலி செய்யும் நாளென்று சொல்லப்படும் 27.11ம் திகதி ஆடல் பாடல், குடி கும்மாளம் போடும் நாளாகத் திரிவு பெற்றுவிட்டது. எப்போது அரசியல் நெருக்கடியால் ஒரு சமுதாயம் அல்லற் படும்போது இன்னொரு சாரார் அந்தத் தருணத்தைப் பாவித்துப்பணம் படைப்பார்கள் அப்படிப் பணக்காரர்களாகிய சிலர் சமுதாயப்பிரமுகர்களாக இந்த மாவீரர் தினம் போன்ற நாட்கள் வழிகளமைக்கின்றன. மேடையேறவும் பரதநாட்டியமாடவும் மாறுவேடப்போட்டிவைத்து மகிழவும் இலங்கை ஏழைத்தமிழ் இளைஞர்களின் மரணம் ஒரு வெற்றுச்சாட்டு.

கல்லறைகளிற் துயில் கொள்ளும் ஆயிரக்கணக்கானவர்களுக்கப்பால், புலிகளால் மரணமடைந்த வர்களின் தொகை எத்தனையோ மடங்கு பெரிது. அவர்களின் மரணம் ஒரு பொருட்டாக மாவீரர் தினம் கொண்டாடும் தமிழருக்குத் தெரிவதில்லை. வாகரையிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளிலும் அடிமைகளாக நடத்துப்படுவர்களைப்பற்றி வெளிநாட்டுத் தமிழர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் தலைவரின் உணர்ச்சியைத் தூண்டும் பேச்சும் தற்கொலைத்தாக்குதல்களாலும் துன்பபடுபவர்கள் தாய்நாட்டில்வாழும் சாதாரண தமிழர்கள்தான் என்பதைப்புலம் பெயர்தமிழர் உணராதவரை இலங்கையில் தமிழர்கலின் அழிவு தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு