ஆகாயப் புழுகர்களை வென்ற பிரபா-ஞ்சப் புழுகு

ஆகாயப் புழுகர்களை வென்ற பிரபா-ஞ்சப்- புழுகு

பொய்யாமொழி தண்டாயுதபாணி (நன்றி தாயகம்)


புலிகளின் முட்டாள்தனமான செயற்பாடுகளுக்கு எல்லாம் அரசியல் விளக்கம் கொடுக்கும் அரசியல் ஆய்வாளர்களின் புழுகு பற்றி அண்டப் புழுகர்களை வென்ற ஆகாயப் புழுகர்கள் என மேதகு கியூறியஸ் ஜி தாயகத்தில் எழுதியிருந்தார்,

கடந்த வாரம் ஒரு நாள் தற்செயலாக புலிகளின் உத்தியோகப்பற்றர்ற கனடிய வானொலியில் இவ்வாறான ஒரு ஆகாயப் புழுகுசித்தனான ஆய்வாளர் ஒருவரின் ஆய்வு ஒன்றை குவியம் என்ற பெயரில் மெய்சிலிர்க்க வைக்கும் பின்னண்p இசையுடன் கேட்டு இன்புற நேரிட்டது, சமாதான காலத்தில் புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றியும் தற்போதைய தாக்குதல்கள் பற்றியும் விளாசித் தள்ளிய அந்த ஆய்வு வழமை போல. புலிகளின் சாகசங்கள் பற்றிய புழுகுகளுடன், வெளிநாடுகளில் வெளிநாட்டமைச்சர்களுக்குரிய மரியாதைகளுடன் 13நாடுகளில் புலிகள் அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய தீரமும் சிங்கள அரசின் பிரசாரங்களை புலிகள் முறியடித்த சாதனையும் சொல்லி, பின்னால் அதற்கு முரணாக அந்த நாடுகள் புலிகளைத் தடை செய்ததையும் வெட்கமில்லாமல் சொல்லி. சம்பூர். முதூர் என தற்போதைய யுத்தத்தில் பின்வாங்கியதை ராஜதந்திரம் என்றும் புழுகி, ஏதோ கேட்பவன் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்கள் போல காதில் பூவுடன் அலைவதாக நினைத்துக் கொண்டு ஒரே விளாசல்,

அட, இதெல்லாம் வழமையான. காது புளிக்கும் புழுகு தானே என்று நீவிர் புறந் தள்ளக் கூடும், பின்னால் தானே இருக்கிறது பெருங் குண்டு,

புலிகள் சிங்கள அரசின் இந்தத் தந்திரங்களை உண்ர்ந்து கொண்டு தற்போது தனியான அரச அமைப்பு ஒன்றை. அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும். கட்டி எழுப்பியுள்ளார் களாம், ஆனால் ஏன் அவர்கள் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தவில்லை என்ற கேள்வியையும் எழுப்பி. அதற்கான பதிலையும் வழியையும் குவியம் புழுகிக் குவித்தது, அதாவது, அரசைப் பிரகடனப்படுத்தினால் அதை நடத்திச் செல்வதற்கான பொருளாதாரப் பலம் இல்லையாம்? ஆகையால். வெளிநாட்டுத் தமிழர்கள் புலிகளின் கையைப் பலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளும் மர்ம இசைப் பின்னண்pயுமாக குவியம் கரைந்தது,

ம், காசைக் கொடுத்தால் எல்லாம் சரி,? மிச்சத்தை தம்பி பார்த்துக் கொள்ளுவார்,?

இது மாவீரர் தினத்திற்கு முன்னைய தின ஒலிபரப்பு, இந்த ஆகாயப் புழுகை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு இன்னொரு பிரபஞ்சப் புழுகு, அதுதான் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, மாவீரர் தின உரை?

ஆகா, ஏதோ ஜோர்ஜ் புஷ் ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் நிலைமை பற்றி உரை நிகழ்த்தப் போவது போல, முழு உலகுமே தலைவரின் உரையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்று புலிகளின் ஊடகங்கள் புலி வருது என்று கட்டியங் கூறிப் புழுகித் தள்ள, தலைவர் யுத்தம் என்று கூறினாலும். சமாதானம் என்று கூறினாலும் தமிழ் மக்களும் சர்வதேச சமுகமும் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற அற்புதமான ஆசிரியர் தலையங்கங்கள் மறுபுறத்தில் தலையைச் சுத்த, இரத்த வெறி பிடித்து அலையும் பிணந் தின்னிக் கழுகுகள் போல வெளிநாட்டுத் தமிழர்கள் தலைவர் யுத்தப் பிரகடனம் செய்யப் போகிறார் என்று காத்திருக்க,

புலம் பெயர்ந்த தமிழினத்தின் இரத்த வெறியை அப்போது தான் காண முடிந்தது, யுத்தத்தின் அழிவுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல். ஏதோ தமிழ்ச் சினிமாக் கதாநாயகனின் அரிவாளால் இரத்தம் சீற வெட்டிச் சரிக்கப்படும் வில்லர்களைப் பார்த்துக் கை தட்டி விசிலடிப்பது போல, தலைவர் யுத்தப் பிரகடனம் செய்யப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்த கூட்டத்தை என்ன செய்ய.

கைவிடப்பட்ட காதலியின் வாழ்வு அஸ்தமித்து விட்டது என்பதை சிம்போலிக்காகக் காட்ட. சூரிய அஸ்தமனத்தைக் காட்டும் தமிழ்ப் பட டைரக்டர்களின் கற்பனாவளம் போன்று, சூரியனின் கதிர்கள் நாலா பக்கமும் சிதறும் பின்னண்pத் திரை முன்னால். உலகெங்கும் வாழும் தமிழர்களின் உயிரும் வாழ்வும் தன் கையில் என்பதை சிம்போலிக்காக காட்டிக் கொண்டு, நம் சூரியதேவன், வஞ்சகமில்லாமல். தன் ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய, உலகமெங்கும் தடைகளைச் சுத்துவதற்காக வௌவேறு பெயர்களில் இறுதி நேர அறிவிப்புகளுடன் நடத்தப்பட்ட மாவீரர் தினங்களில் கூடியிருந்த ரசிகப் பெருமக்களின் விசிலடிகளுக்கும் மத்தியில். சார்ள்ஸ் டிகோல் தொப்பியும். நஞ்சுண்ணாக் கண்டனாய் கழுத்தில் தொங்கிய புனித நச்சுக் குப்பியும். இன்டலக்சுவல் லுக் அடிக்கும் கண்ண்hடியுமாக, ஜொர்ஜ் புஷ்ஷின் State of the Union உரை நிகழ்த்தும் பேருரைக் குறுமேடை போன்ற ஒன்றின் முன்னால், முகபாவனைகளோ. குரலில் ஏற்ற இறக்கமோ இல்லாமல். திருவிழாவில் தூங்கி வழியும் பக்த கோடிகளுக்குப் பாராயணம் படித்த பாங்கில் நிகழ்த்திய உரை கண்டு தமிழ்கூறு நல்லுலகம் புல்லரித்துப் பேருவகை கொண்டது,

தலைவர் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விடயத்தை இரண்டு விடயங்கள் முலம் அறிந்து கொள்ளலாம், முதலாவது, தலைவரின் மாவீரர் தினத்தில் வரும் அறிவிப்புகள் குறித்து எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தமிழ்ச்செல்வன் அளித்த Nபட்டிகள்,

ஒரு அமைப்பின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் குறைந்த பட்சம் தினசரி தன் தலைவருடன் தொடர்பில் இருக்க வேண்டியவர், அத்துடன் மாவீரர் தின உரை பற்றி அரசியல் பிரிவுத் தலைவருடன் கருத்துப் பரிமாறாமல் உரை நிகழ்த்தவும் முடியாது, தமிழ்ச்செல்வனுக்குக் கூட தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்பது தெரியாமல் இருக்கும் நிலைமை என்றால்,

அடுத்தது, தலைவர் உரை நிகழ்த்தும் போது தளபதிகள். தொண்டர்கள். சமுக மற்றும் மதத்தலைவர்கள். மக்கள் என்று பல்வேறு தரப்பினரும், முடிந்தால் நோர்வேப் பிரதிநிதிகளும், கலந்து கொண்டு கரகோஷம் செய்யும் போது தான் அதற்கு ஒரு உயிர்த் தன்மை இருக்கும், எங்கோ அடையாளம் குறிப்பிடப்படாத இடத்தில். தனிமையில் இருந்து State of the Union பந்தாவுடன் உரை நிகழ்த்தும் போது, மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருப்பதாகக் கருதாமல் என்னவென்பது

சர்வதேச அரசியல் போக்கு பற்றிய யதார்த்த நிலையிலிருந்து விடுபட்டு. தன்னுடைய உலகத்தில் வாழும் ஒரு மனிதனுடைய நிலை தான் தலைவருடையது, எமது அரசியல் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலக நாடுகளையும் சர்வதேச சமுகத்தையும் அன்போடு வேண்டும் தலைவர். அதற்கு ஓரிரு நாட்களுக்குள்ளேயே கொழும்பில் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதை, யதார்த்தத்திலிருந்து விடுபட்டிருப்பதாக நினைக்காமல் வேறு எப்படிக் கருத முடியும்

நீதியின் வழி நடக்கும் நோர்வே புலிகளை அடிக்கடி பிணை எடுத்து விடுவதால். புலிகள் பற்றிப் பிடித்திருக்கும் ஒரே துரும்பு நோர்வே மட்டும் தான், ஐரோப்பிய சமுகத்தின் தடை முதல் பல்nவறு சம்பவங்களில் புலிகளைக் காவாந்து பண்ண நோர்வே எடுத்த முயற்சிகளுக்கு நன்றியுண்ர்வுடன் இருப்பது நல்லது தான்,

இது ஒருபுறமிருக்க, சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமேயில்லாத ஒருவரின் வார்த்தைகளுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதின் அர்த்தம் இதுவரைக்கும் பொய்யாமொழிக்குப் புரிந்ததில்லை, வழமை போல, மாவீரர் தின உரையில் வரும் ஓரிரு பகுதிகளைப் பொறுக்கி எடுத்து சர்வதேச ஊடகங்கள் தலையங்கம் எழுதும், ஆனால், வரிகளுக்கு இடையில் வாசிப்பவர்களுக்கு மட்டுமே தலைவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியும்,

இம்முறையும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் னநகரnஉவ என்ற வார்த்தையே சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது, இந்த போர்முனைப்புச் செயற்பாட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து போய் கிடக்கிறது என்பது தான் தலைவர் கூறியது, இந்த ஒரு வரியின் மொழிபெயர்ப்புத் தான் சர்வதேச ஊடகங்களின் கண்களுக்குத் தென்பட்டது,

ஆனால் ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப் போன தாளாகி உருக்குலைந்து கிடக்கிறது என்ற தலைவரின் அடுத்த வரியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாமல் திணறியதாலோ என்னவோ. ஆங்கில மொழிபெயர்ப்பில் தமிழ்நெட் அந்த வசனத்தை வெளியிடவில்லை, இல்லாவிட்டால் அதையும் சர்வதேச ஊடகங்கள் மகிழ்ச்சியுடன் மறுபிரசுரம் செய்திருக்கும், சர்வதேசமுகமும் தலைவரின் உரையில் விஞ்சி நின்ற கவிநயம் பற்றியும் எஞ்சி நின்ற பொருள் நயம் பற்றியும் கண்டு மெய் சிலிர்த்திருக்கும், (நம் பைந்தமிழ் மொழிக்கு தலைவர் ஈந்தளித்தருளிய முளையம் என்ற வார்த்தைக்கான கருத்தை ஆங்கில மொழிபெயர்ப்பில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை)

சென்ற ஆண்டு உரையில் மகிந்த நடைமுறை யதார்த்தவாதி என்று சிலாகித்து அவருக்கு அவகாசம் கொடுத்ததாகக் கூறிய உரை முடிந்து சில வாரங்களுக்குள்ளேயே பொங்கி எழும் மக்கள் படை கண்ணிவெடித் தாக்குதல்களை ஆரம்பித்தது அறிந்ததே, தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அது மக்களின் எழுச்சி என்றும் புலிகள் வேண்டுமானால் தங்கள் ஆதரவாளர்களை ஏமாற்றிக் கொள்ளலாம், ஆனால். சர்வதேசமும் அதை நம்பும் என்று எதிர்பார்க்கும் புலிகளின் முட்டாள்தனத்தை சர்வதேச சமுகம் புரிந்து கொள்ளாமலா இருக்கும்

எனவே. உரையில் சமாதான வழியை விட்டு விலக மாட்டோம் என்று சொன்னாலோ. அல்லது யுத்தப் பிரகடனம் செய்தாலோ அதைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளத் Nதவையில்லை, ஏனெனில், புலிகள் சொல்வதற்கும் அவர்களின் செயலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை,

சமாதானம் பேசுவதாகச் சொல்லிக் கொண்ட நேரத்திலும் புலிகள் தங்கள் எதிரிகளை, அரசில் அமைச்சராக இருந்த கதிர்காமர் வரைக்கும், கொலை செய்து கொண்டு தான் இருந்தார்கள், சிங்கள அரசாங்கம் தீர்வைத் தராது என்று தமிழர்களுக்குச் சொல்லிக் கொண்டே யுத்தத்திற்கான தயாரிப்புகளில் தான் புலிகள் கவனமாக இருந்தார்கள், விடுதலைப் பாதையைத் திசை திருப்பி. வழியில் பொறிகள் வைத்து சமாதான சதிவலைக்குள் சிக்க வைத்து காலத்தால் மோசம் செய்து சமாதான மாயைக்குள் தள்ளி அழித்தொழிப்பது தான்ழூ வரலாறு காட்டிய வழியாக கருதும் புலிகள் உண்மையில் சமாதான முயற்சி முலம் தீர்வு அடைய முடியும் என்று உண்மையான இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே, நாம் அமைதி காத்த ஆறு ஆண்டு காலத்திலே சமாதான நடவடிக்கைகளில் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொண்டோம் என்று புலன் பெயர்ந்த தமிழரை வேண்டுமானால். சந்தேகம் இல்லாமல் எந்தக் காலமும் சுத்தலாம், ஆனால். எல்லாரையும் எல்லாக் காலமும் சுத்த முடியாது,

தலைவர் கையெழுத்து வைத்த சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே புலிகளுக்கு அக்கறை இருக்கவில்லை, இதற்குள் வாசிக்கின்ற இந்த உரையில் மட்டும் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது

முக்கியமாக. இந்த உரை யாரை நோக்கி நிகழ்த்தப்பட்டது என்பது முக்கியமானது, இது நிச்சயமாக. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களை நோக்கி நிகழ்த்தப்பட்டது அல்ல, இன்று தலைவர் கூறும் தமிழ் மக்களின் நிலைமை அவர்கள் நாளாந்தம் அனுபவித்து வருகின்ற ஒன்று தான், அதைத் தலைவர் சொல்லித் தான் அவர்கள் அறிய வேண்டும் என்றும் இல்லை, அவர்களை நோக்கியதாக இருந்தால். அவர்களின் அன்றாட அவலங்களைப் போக்குவதற்கான வழிகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும்,

சர்வதேச சமுகம் நோக்கியதுமல்ல இந்த உரை, முழுப் பூசண்pக்காயை சோற்றில் மறைக்கும் பொய்களை விழுங்கிக் கொள்ள சர்வதேச சமுகம் ஒன்றும் முட்டாள்க் கூட்டமும் அல்ல, இந்தச் சர்வதேச ச்முகத்தை நோக்கியதாக இருந்தால். அவர்களின் எண்ணப் போக்கை மாற்றுவதற்கான அரசியல் வழி முறைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும், வெறுமனே சிங்கள அரசைக் குற்றம் சாட்டும் புலிகளின் பிரசாரம் அங்கே அவியாது,

முழுக்க முழுக்க இது புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் புலிகளின் விடுதலை வேள்வியின் தர்மகர்த்தாக்களும் போர்த்திருவிழாவின் உபயகாரர்களும் நோக்கிய உரை தான்,

யானை பார்த்த குருடர்கள் போல, தங்கள் சிற்றறிவுக்கு எட்டிய விதத்தில் தலைவரின் உரையை விளங்கிக் கொள்ளும் வெளிநாடு வாழ் தமிழ்க் குடிமாக்களுக்கு. வழமை போல, தலைவரின் உரையை வக்கிரமான நகைச்சுவையுடன் தமிழில் மொழிபெயர்த்துத் தர, பெருங்குடிமகனான மது உரைஞர் தற்போது மரணப் படுக்கையில் உள்ளதால், பரிதவித்துப் போன நெஞ்சுகளில் பால் வார்க்க, தமிழ்கூறு நல்லுலகில் குறைவில்லாமல் புழுத்துப் போயிருக்கும் புழுகுசித்தர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள், வள்ளுவன் குறளுக்கு பொருள் எழுதிய பாங்கில். பொழிப்பும் மொழிபெயர்ப்பும் அவரவர் புத்திக்கு எட்டிய விதத்தில் ஓகோ என்று நடக்கிறது, சிங்களத்தின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்திய தலைவரின் தீரம் முதல். தனது இராணுவ நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தி எதிரிக்கு முன்னெச்சரிக்கை வழங்காமல் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நினைக்கும் தலைவரின் சாதுரியம் வரைக்கும் இவர்கள் புகழ்ந்து தள்ளியாயிற்று,

முடிவாக யுத்தப் பிரகடனம் செய்வதற்கும் போதிய ஆட்பலம் முன்பு போல இல்லை, விமானக் குண்டு வீச்சை வெல்வதற்கு. விமானப்படையும் இல்லை, தமிழீழப் பிரகடனம் செய்வதற்கும் அரசியல் முதிர்ச்சியோ. சர்வதேச ஆதரவோ இல்லை, சமாதானப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் அக்கறை காட்டாததால். அதிலும் தொங்கிக் கொர்டிருக்க முடியாத நிலை, சர்வதேச அழுத்தம் காரணமாக, சமாதான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம் என முடிவாகச் சொல்லவும் முடியாத திரிசங்கு சொர்க்க நிலையில். எப்போதோ முடிவு செய்யப்பட்ட தமிழீழம் தான் முடிவு என்பதை மீண்டும் ஒரு தடவை உச்சாடனம் செய்ததை. தலைவர் அந்த மாதிரிக் குடுத்திருக்கிறார் என்று புலம் பெயர்ந்த தமிழர்கள் மகிழ்ச்சிக் கடலில் முக்குளித்துப் போயிருக்கிறாhர்கள்,

அப்படி என்ன தான் தலைவர் புதிதாகச் சொல்லியிருக்கிறார் வழமை போல. எதிரியின் காய் நகர்த்தல்களை முறியடிக்கும் தங்கள் புத்திசாதுரியத்தை விதந்தும். முழுப் பழியையும் எதிரி மேல் சுமத்தியும். அரசின் அராஜகங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் சர்வதேச சமுகத்தைக் குறை கூறியும். மாவீரர்களின் துணையுடன் தமிழீழம் வெல்லப்படும் என்றும் முடிகின்ற ஒரு உரையைத் தலைவர் தான் வாசிக்க வேண்டும் என்று விதி ஏன் இருக்கிறது? இதைத் தானே. புகலிடத்து ஊடகங்களில் புழுத்துப் போயிருக்கும் ஆய்வாளர்கள் காலாகாலமாகச் செய்து கொண்டு வருகிறார்கள்,

காசு தேவையென்றால் நேரடியாகக் கேட்க வேண்டியது தானே, அதற்கேன் இந்த சுற்றி வளைப்பு எல்லாம்

தன்னுடைய பிள்ளைகளை இரத்த வாடையே படாமல் வெளிநாடுகளிற்கு அனுப்பி படிப்பித்துக் கொண்டு. ஏழைகளின் பிள்ளைகளைப் பலவந்தமாய் பிடித்து வந்து மாவீரர்களாக்கும் தலைவர் அவர்களை இறந்தும் வாழ்கிறார்கள் என்று புகழ வேண்டியது காலத்தின் கட்டாயம், இவ்வாறான தியாகங்களால் தான் தலைவரும் அவர் தம் மார்புமிகு தளபதிகளும் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளில் படிப்பித்து ஒப்பேற்றும் நிலையில் யாழ் பல்கலைக்கழகம் புலிகளின் புணணியத்தில் மூடப்பட்டுக் கிடப்பது பற்றி மூச்சே இல்லை,

அரசாங்கம் பற்றிப் புலிகள் கூறும் பல குற்றச்சாட்டுக்களில் உண்மை இருந்தாலும். அதே குற்றச்சாட்டுக்கள் புலிகள் மீது சுமத்தப்பட்டால். அவர்களும் அதே அளவு குற்றவாளிகள் என்பதை மறைத்துக் கொண்டு, மற்றவர்களை மட்டும் குற்றம் சாட்டும் புலிகளின் பாரம்பரியத்திலிருந்து விலகாமல், மக்களை உரிமைகளை மறுத்து திறந்த சிறைச்சாலைக்குள் அரசு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டும் உரை. வன்னியில் மக்கள் சிறையில் வாழ்வதையும் வடக்கில் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையான வாக்குரிமையைக் கூட அனுபவிக்க முடியாமல் புலிகளின் அடக்குமுறைக்குள் வாழ்வதையும் கச்சிதமாக மறைத்து விடுகிறது,

தலைவர் குற்றம் சாட்டும் அரசின் விமானக் குண்டுவீச்சு உட்பட்ட தாக்குதல்கள் எல்லாம் மாவிலாறில் தொடங்கிய அதிர்ச்சி வைத்தியத்தின் திருவிளையாடல் என்பதை உரை மறந்து விடுகிறது, திருநெல்வேலிக் குண்டுத்தாக்குதலால் எழுந்த கலவரத்தை தமிழர் இன அழிப்பு என்று பிரசாரம் செய்தது போல, தமிழர் காலியில் தாக்கப்பட்டது பற்றிக் கூறும் தலைவர் காலியில் கடற்படை முகாம் மீதான தாக்குதல் முயற்சி வரைக்கும் அங்கு தமிழர்கள் பிரச்சனையின்றி இருந்தார்கள் என்ற உண்மையை மறைக்கிறது,

எமது விடுதலை இயக்கமும் சரி. எமது மக்களும் சரி. என்றுமே போரை விரும்பியதில்லை, வன்முறைப் பாதையை விரும்பியதில்லை, நாம் சமாதானத்தையே விரும்புகிறோம், சமாதான வழிமுறை தழுவி. அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதில்லை என்ற மகத்தான உண்மையை நம்புபவர்கள் யாராவது எஞ்சியிருந்தால். அகிம்சை வழியில் வென்றெடுப்பதாகக் கூறிய தலைவர்களை துரோகிகளாக்கி மண்டையில் போட்ட வரலாறை தலைவருக்கு ஞாபகப்படுத்துவது நல்லது,

கருணாவின் பிரச்சனையை உள்வீட்டுப் பிரச்சனை என்று கூறி பின்னால் அழிக்க முடியாமல் போன கையாலாகாத் தனத்தை மறைத்து ஒட்டுக் குழுக்களை சந்திரிகா அரசு அரங்கேற்றியதாகக் குற்றம் சாட்டும் அதே நேரம். அதே சந்திரிகா அரசு தான் புலிகள் கடல் மூலமாகவும் அரச கட்டுப்பாட்டுப் பகுதி ஊடாகவும் கருணா அணியினரை அழிப்பதற்கு சென்ற போது கண்டு கொள்ளாமல் இருந்தது என்பதை மறந்து விடுகிறது, அன்று சந்திரிகா அரசு புலிகளின் அந்த நகர்வைத் தடுத்து நிறுத்தியிருந்தால் இன்று நிலைமை புலிகளுக்கு இன்னமும் மோசமாக இருந்திருக்கும், கருணா குழுவின் பிரிவிற்கும் அவர்கள் அரசின் அனுசரணையுடன் புலிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு புலிகளின் அரசியல் பண்pகளை இடைநிறுத்த நிர்ப்பந்தித்ததற்கும் புலிகளே காரணம், இந்திய இராணுவத்தின் நிர்ப்பந்தத்தில் புலிகள் பிரேமதாசாவில் காலில் வீழ்ந்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் உண்டு

இந்த துணைக்குழுக்களால் அறிவுஜீவிகள். அரசியல்வாதிகள். ஆதரவாளர்கள். பத்திரிகையாளர்கள். போராளிகள். அப்பாவிப் பொதுமக்கள் எனப் பலரும் கொல்லப்பட்டனர் என்று கூறும் தலைவர் புலிகள் அவ்வாறு யாரையும் தாங்கள் கொல்லவில்லை என்று மறுப்பாரா இந்த ஆயுதக் குழுக்களின் அராஜகத்தால் தமிழர் தாயகம் வன்முறைக் களமாக மாறியது என்று குமுறும் தலைவர் வடக்கு கிழக்கில் தினசரி கொன்று குவிக்கும் அந்த இனந் தெரியாத நபர்கள் மற்றும் கொன்று தள்ளும் எல்லாளன் படை எல்லாம் யார் என்பதைக் கண்டுபிடித்து தமிழ் மக்களுக்குத் தெரிவிப்பாரா

தூர நோக்குடைய எதிர்காலப் போரியல் திட்டங்களுக்கு அமைவாக மாவிலாற்றிலும் சம்பூரிலும் நாம் மேற்கொர்ட தந்திரோபாயப் பின்வாங்கலை முன்னரே நிகழ்த்தியிருந்தால் போராளிகள். பொதுமக்கள் என்ற பெரும் பேரழிவைத் தடுத்திருக்கலாமே? முன்னேறி வரும் இராணுவத்தைத் தடுத்து நிறுத்தும் புலிகளின் தாக்குதல் பற்றி புலிகள் ஊடகங்களும் இராணுவப் பேச்சாளரும் விளாசித் தள்ளியதை யாரும் தலைவருக்குச் சொல்லவில்லையா முடியாத போது சீ, சீ, இந்தப் பழம் புளிக்கும் என்றால் எப்படி?

இந்த விடுதலைப் பாதையில் சென்று. சுதந்திரத் தமிழீழத்தனியரசை நிறுவுவது என இன்றைய நாளில் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம் என்று கூறினாலும். இது வரை காலமும். சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலும் கூட. தமிழீழத் தாயகம் தானே தமது தாகம் என்று புலிகள் கூறி வந்தார்கள்,

இதற்குள். தேர்தல் வந்தால் வெட்கமின்றி யாருடனும் கூட்டு வைக்கத் தயாராக இருக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நன்றியும் தெரிவித்து. உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் வேண்டி நிற்பதாகவும். அவர்கள் தங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறும்ழூ உரை வேண்டி நிற்கிறது,

வேலிசண்டையில் வெட்டுக் கொத்துக்கு உள்ளாகி கோடேறி வழக்காடிய வீரப்பரம்பரை ஒருபுறமிருக்க, வேலிச் சண்டைகளில் அடுத்த வீட்டானை எதிர் கொள்ளப் பயந்து. தெருச் சண்டியர்களுக்கு பணம் கொடுத்து காரியம் சாதிக்க முயன்ற படித்த யாழ்ப்பாண்pகள் போல, இன்றும் பண்த்தைக் கொடுத்து ஈழம் பெறலாம் என்ற கனவில் பலர் உள்ளதை, மாவீரர் தினத் தொலைக்காட்சி நிகழ்வில் காண முடிந்தது, மாவீரர் கல்லறை போன்ற ஒன்றை வரிசையாக நின்று பூ வைத்து தொட்டுக் கும்பிடும் பாமரர்கள் இருக்கும் வரைக்கும் விடுதலை வியாபாரம் குறைவில்லாமல் ஓகோ என்று நடக்கும் என்பதில் சந்nதகமேயில்லை, இந்த கூத்துக்கள் எல்லாம் தமிழ்த்தேசியம் புதிய காற்றைச் சுவாசித்து புதிதாகச் சிந்திக்க மறுக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது,

வெளிநாட்டுத் தமிழர்கள் பணத்தைக் கொடுத்து விட்டு தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து விசிலடித்து மகிழலாம், 85ம் ஆண்டு முதல் ஏவுகணை வாங்க என்று சேர்க்கத் தொடங்கிய பண்ம் இன்னும் சேர்த்து முடியவில்லை, சேர்த்த பணத்தில் ஏவுகணை வாங்கப்பட்டதோ என்னவோ. பலர் மார்க்கம் நகரில் வீடு வாங்கியிருக்கிறாhர்கள்,

ஆனால், இன்று வடக்கிலும் கிழக்கிலும் அன்றாட உணவுக்கு கூட தட்டுப்பாடு உள்ள நிலையில் பரிதவித்து நிற்கும் மக்களுக்கு புலிகளின் இந்த தமிழீழம் தான் ஒரே தீர்வு விடயம் அடிவயிற்றில் இடி விழுந்த கதை தான், மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி வாங்கிக் கொண்டிருக்கும் மக்கள் பட்டினி கிடந்து இறந்தாலும் பரவாயில்லை. தமிழீழம் காண்போம் என்று சபதமிட்டால். எல்லோருமே அவர்களின் முன்னால் தலை வணங்க முடியும்,

குறைந்த பட்சம் இராணுவப் பேச்சாளரின் கண்டி வீதியைத் திறக்காவிட்டால் திறக்க வைப்போம் என்ற சவடாலை நிறைவேற்றினால் கூடப் பரவாயில்லை, அவர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல். வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகளை வசதியாகப் படிப்பித்துக் கொண்டு விடுமுறைகளில் விலாசம் காட்டச் செல்வதற்காகத் தமிழீழம் பெறுவதற்கு அவர்களிடம், கொன்று சிவந்த கரங்கள் கொடுத்துச் சிவந்த கரங்களிடம், கையேந்தி நிற்பது அப்பாவி மக்களதும் மாவீரர்களதும் பலி கொடுப்பு தற்போதைக்கு நிற்கும் சாத்தியம் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது,

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

UN Special Representative Coomaraswamy chides LTTE for bombing a school

Courtesy; Asian Tribune

[Subidcham Comment: There is nothing new about the LTTE attacking schools and using Tamils as human shields. This is very much their strategy right along. They have also for too long a time had the encouragement of many foreign organizations that saw the LTTE as a Tamil liberation organization. They are neither a liberation organization nor fighting for the Tamils.

Both are myths that helped the Tigers too long. The myths prevailed because successive governments failed to appreciate the minority problems and get to sort them out. Even at this crucial hour, the government is dilly-dallying because there are elements in the majority community who cannot accept that just as the majority Sinhalese, the minority Tamils and Muslims are also Sri Lankans.

We will strongly urge those who cannot step off from the pedestal of racism not to feed the Tigers. We have not the slightest doubt that a large majority of the Sri Lankans see themselves as brethren and want to live in peace reaching out to each other but it is only a small group of political mischief makers that are the cause for our problems. Terrorists are evil and those who cause the terrorists to dominate are just as evil and both these come from the majority and minority community.]

We present the reactions of the UN Special Representative:

The UN Special Representative for Children and Armed Conflict, Radhika Coomaraswamy chided the Liberation Tigers of Tamil Eelam for the shelling a school in Kallar in the Sri Lanka’s Trincomalee district.

Radhika Coomaraswamy pointedly said that the mortar attack by the Liberation Tigers of Tamil Eelam on a school in Kallar village which killed one child and wounded ten school children is a grave violation.

"Attacks on schools and hospitals are too considered violations of international humanitarian law," said Radhika Coomaraswamy.

She further added, "This kind of warfare takes an enormous toll on children. Sinhalese, Tamil and Muslim children have all suffered terribly in the last few months."

The full text of Radhika Coomaraswamy’s statement is given below:

Sri Lanka: LTTE attack on school is a grave violation of rights of children

Amidst reports of increasing clashes in the north and east of Sri Lanka leading to many casualties and the movement of internally displaced persons, Radhika Coomaraswamy, the UN Special Representative for Children and Armed Conflict, calls for the respect of humanitarian law.

"Attacks on schools and hospitals are clear violations of international humanitarian law. The recent mortar attack by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) on a school in Kallar village which killed one child and wounded ten school children is a grave violation. Indiscriminate shelling by both sides against civilian targets has resulted in a great deal of suffering", she declared.

The Special Representative remains concerned about the humanitarian situation in Sri Lanka and especially in Vaharai and Trincomalee where intense shelling continues for the fifth day. Civilians are direct victims of the attacks or forced to flee their homes in the midst of recent clashes.

According to the UN Resident Coordinator in Colombo, 35,000 people remain trapped along a sliver of land where government forces and LTTE are engaged in a military campaign.

"This kind of warfare takes an enormous toll on children. Sinhalese, Tamil and Muslim children have all suffered terribly in the last few months," added Ms. Coomaraswamy.

"The government must take responsibility to secure humanitarian access to the population and the LTTE must stop placing its military hardware in civilian areas. The parties should come to an agreement with humanitarian actors on the ground on the ways and means to protect civilians," she said.

8:42 PM  

Post a Comment

<< முகப்பு