கிளிநொச்சியில் மனித வெடிகுண்டுகள் தினம்

கிளிநொச்சியில் மனித வெடிகுண்டுகள் தினம்
சூனா.பானா சிறப்புரை


மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது:

சிரிச்சு சிரிச்சு சொன்னார் சூனா.பானா டோய்!
கோ.வாலுசாமி

உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு. கொலைகாரனே மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுகின்றான். தன்னிலை மறந்து பேசுறதிலை சூனா.பானாவை மிஞ்ச உலகிலை யாருமில்லை.கிளிநொச்சியிலை மனித உரிமைகள் நாள் நிகழ்ச்சி நடந்ததாம். அதிலை கொலைகளைச் செய்து போட்டு சிரிச்சுக் கொண்டே மழுப்பிப் பொய் சொல்லுறதுக்குப் பேர் போன சூனா.பானா மனித உரிமைகள் நாள் நிகழ்விலை உரையாற்றினாராம். மனித உரிமைகள் நாள் நடக்கிறஇடம் கிளிநொச்சி உரையாற்றுகிறவர் சூனா.பானா. எங்கை போய் முட்ட. நிகழ்ச்சி சிலவேளை பாலசிங்கண்ணை சொன்ன கிளிநொச்சியிலை இருக்கிற பொட்டம்மானின்ரை ஹொட்டலிலைநடந்திருக்குமோ?

சுப்பன். பரமன்ரை மோனுக்கு இருண்டது விடிஞ்சது தெரியாது. அது மட்டுமில்லை மனித உரிமை மீறல்களை அனைத்துலக சமூகம் அமைதி காத்து வருகுதாம். சூனா.பானா ஒண்டைமட்டும் அறிய வேணும். அனைத்துலக சமூகம் கண்ணை மூடிக்கொண்டிருந்தா சூனா.பானாவின்ரை இயக்கத்தை பயங்கரவாதிகளெண்டு முத்திரை குத்தி தடை செய்திருக்குமே?

ஆர் மனித உரிமை மீறல்களை செய்கிறதெண்டு சர்வதேச சமூகத்திற்கு வடிவாத் தெரியும்.

சூனா.பானா எந்த லோகத்திலை இருந்து பேசுகிறாரோ தெரியேல்லை. சர்வதேச சமூகம் எதுக்கு புலியை பான்ட் பண்ணின தெண்டதை சூன.பானா அறிஞ்சு போட்டுக் கதைக்கவேணும். சிறுவர்களை கடத்தி யுத்தத்திலை ஈடுபடுத்திறதும் கர்ப்பிணிப்பெண்ணை மனித வெடிகுண்டாக அனுப்பிறதிலையும் உலகத்திலை நீங்கள் தான் நம்பர் வண்ணுங்கோ சூனா.பானா சர்வதேச சமூகம் வன்னியிலை இருக்கிற பொட்டம்மானின்ரை சித்திரவதை முகாமுகளையும்பாக்க ஆசைப்படுகிது. சூனா.பானா ஓருக்கா சர்வதேச சமூகத்தை கூட்டிக்கொண்டு காட்டினால் அவைக்கு இன்னும் உதவியாகவல்லோ இருக்கும். உங்கடை இருண்ட வன்னியை கனபேர்பாக்க ஆசைப்படகினம் ஒருக்கா ஓப்பிண் பண்ணுங்கோ.

மனித உரிமைகள் தினம் எண்டதுக்குப் பதிலா மனித வெடிகுண்டுகள் தினம் எண்டு கொண்டாடினால் உங்களுக்குப் பொருத்தமாயிருக்கும். பின்லாடனும் தன்ரை பிரதிநிதிகளை அனுப்பிவைப்பார்.





கோ.வாலுசாமி

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு