இளையதம்பி இரத்தினசபாபதி அவர்கள் மறைவு

தமிழர்கள் மத்தியில் மாற்று அரசியலின் முன்னோடிகளில் ஒருவர்

ஈழத்தமிழர் சமூகத்தில் இளையதம்பி இரத்தினசபாபதி அவர்கள் மாற்று அரசியலின் முன்னோடிகளில் ஒருவா.; ;தமிழர்களின் போராட்டம் என்பது குறுந்தேசியவாதமாக அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரவினரை அணிதிரட்டியதாகவும், சர்வதேச விடுதலை இயக்கங்கள், சோசலிசமுகாமின் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்றும் அவர் கருதியிருந்தார். தேசியஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமாக மாத்திரமல்லாமல் சோசலிசத்தை நோக்கியதாக இப்போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தி நின்றார்.அதன் பொருட்டு அவர் கருதிய ஈழப்புரட்;;சி அமைப்பின் ஸ்தாபகரானார்.

அவர் மலையகத்தோட்டத்தொழிலாளர்கள், வடக்கு- கிழக்கில் தொழிலாளர் விவசாயிகள் அணிதிரட்டப்படவேண்டும். அவர்கள் தான் தலைமையேற்க வேண்டும் என்பதும் அவரது கருத்தாக இருந்தது. 'பருத்தித்துறைமுதல் பதுளைவரை மன்னார் முதல் மட்டக்களப்பு வரை பொத்துவில் அடங்கலான பிரதேசத்தில் சமத்துவ சமதர்ம ஈழத்தை நிலைநாட்டுவோம,; நாம் ஈழவர் நமது மொழி தமிழ், நமது நாடு ஈழம"; இக்கோசம் இன்று பொருத்தப்;பாடில்லாததும் யதார்த்தத்திற்கும் முரண் என்பதுமே உண்மையாகும் என்பது வரலாற்றால் உணர்த்தப்பட்டுள்ளது. இந்த சுலோகத்தில் பிற்காலகட்டத்தில் இரட்ணசபாபதி அவர்கள் நம்பிக்கை உடையவராக இருந்திருக்கமாட்டார் . ஆனால் சாதாரணமக்களின் அரசியல் பொருளாதார உரிமைகள் தொடர்பான அவரது கரிசனை இங்கு கவனத்திற்குரியது. பாலஸ்தீனவிடுதலைக்கான பிரபலமுன்னணியின் பாசறையில் தோழர் பத்மநாபா உட்பட சகதோழர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டவர் . உலகளாவிய ஒடுக்குமுறைக்கெதிரான விடுதலை இயக்கங்கள், சோசலிசநாடுகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்தியா இவற்றில் அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

மக்களை அணிதிரட்டி முன்னெடுத்துச் செல்லவேண்டிய அரசியல் பற்றி அவர் வலியுறுத்தியருந்திருக்கிறார். ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பூட்டானிலும் இந்தியாவிலும் நடைபெற்றபேச்சுவார்த்தைகளில் பங்கு பற்றியருக்கிறார். 'ஈழவர் இடர்தீர" என்று பின்னர் தர்க்கீகம் வெளியீடாக வந்த கைநூலில் ரட்ணசபாபதி அவர்களின் கருத்துக்களை நாம் அவதானிக்கமுடியும். தமிழ் குறுந்தேசியவெறியினுள் சிக்கி விடாமல் மாற்று பாதை ஒன்று உருவாகுவத்தில் திரு இரட்ணசபாபதி அவர்கள் தனது ஆரம்பநாட்களில் 1970களின் நடுப்பகுதி தொடக்கம் 1970களின் இறுதிவரை பங்களித்திருக்கிறார். மக்களை முன்னிறுத்திய அரசியலையே அப்போது அவர் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவருடைய கனவுகள் பல சந்தர்ப்பங்களில் நிராசையாகவும் போயின. ஆனால் புதிய பரம்பரை ஒன்றின் உருவாகத்தில் அவரது பங்களிப்பும் இருக்கிறது எனலாம். இணுவிலைப்பிறப்பிடமாகக் கொண்ட இரத்தினசபாபதி அவர்கள் தனது இறுதிநாள்வரை உற்றம் சுற்றம் என்று பாராது சமூகம் நன்றாக இருக்கவேண்டும் என்று கருதி வாழ்ந்து தன்னையே உருக்குலைத்து மறைந்த மனிதர் அவரது மரணமும் இறுதியாக லண்டனில் உள்ள முதியோர் இல்லத்திலேயே நிகழ்ந்தது.தோழர் இரத்தினசபாபதி அவர்களின் வாழ்வும் மரணமும்

ஈழத்தமிழர் சமூகத்தில் சமூக சாதக நிலைக்கருத்துருவாக்கத்தில் எத்தகைய சவால்களையும் புறக்கணிப்புக்களையும் சந்திக்கவேண்டும் என்பதை உணர்த்தி நிற்கிறது.

நன்றி: தமிழ்நிய+ஸ்வெப்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு