அம்பாறை முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள்

அம்பாறை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகள் துண்டுப்பிரசுரம்.




அம்பாறையில் வாழுகின்ற முஸ்லீம்களை வெளியேறச்சொல்லி புலிகள் துண்டுப்பிரசும் மூலம் அறிவித்துள்ளனர். இப்பிரசுரம் அம்பாறையில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் மூதூரில் இதுபோன்ற துண்டுப்பிரசுரம் வெளியிட்டபின் முஸ்லீம்கள் வெளியேறாததைத்தொடர்ந்து மூதூரில் இராணுவத்தாக்குதல்களை பலவந்தமாக மேற்கொண்ட புலிகள் அங்கு வாழ்ந்த மக்களை அகதிகளாக இடம்பெயர வைத்தனர்.

வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடையே பொருளாதார, அரசியல் விடயங்களில் முரண்பாடுகள் இருப்பினும் கூட, புலிகளின் 1990; பின்னான முஸ்லிம்கள் மீதான செயற்பாடுகளினால்தான் தீவிர முரண்பாடுகள் ஏற்பட்டன. வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தம்மை ஒரு தனித்த தேசமாகவும் நிலைநிறுத்த முற்பட்டனர். இந்த யதார்த்தத்தை தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் மூடி மறைத்துவரும் புலிகள்@ தமது இராணுவவாத படுகொலைகளை திட்டமிட்டு தொடர்ந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடுவதே@ தமிழ் முஸ்லிம் மக்களிடையே பெரும் மோதலுக்கு தீ மூட்டத்தான். என்பதை என்பதை வடக்கு கிழக்கு வாழ் மக்களின் ஜனநாயகப் பேரவை. பிரசுரம் மூலம் வெளிப்படுத்தியிருந்தது. புலிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு முஸ்லிம் சமூகம் இலக்காகக்கொள்வது அப்பாவித் தமிழ் மக்களைத்தான். (இந்த உண்மை பல்வேறு கலவரங்களிலும் காணப்பட்டது) இந்த வாய்ப்பை பயன்படுத்தும் புலிகள் தாம்தான் தமிழ் மக்களின் இரட்சகர்கள் என்றும்@ முஸ்லிம்களிடமிருந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றால் அது புலிகளால் மட்டுமே நடைபெற முடியும் என்ற தோற்றப்பாட்டையும் மிக மோசமான இனவாதத்துடன் கலந்து தமிழ் மக்கள் மத்தியில் பரப்பியுமுள்ளனர், பரப்பியும் வருகின்றனர். முஸ்லிம்களை விரோதிகளாகவும், தாக்குதல் தாரிகளாகவும் தமிழ் மக்கள் முன் காட்டும் புலிகள், முஸ்லிம்களின் உணர்வெழுச்சிக்கு தமது படுகொலைகளும் அடக்குமுறைகளும் காரணமாகவிருந்ததை திட்டமிட்டு மூடிமறைத்தே வந்துள்ளனர்.

யுதார்த்தத்தில் வடகிழக்கில் நிலவி வரும் புலிகள், முஸ்லிம்களுக்கிடையிலான முரண்பாட்டை தமிழர், முஸ்லிம் முரண்பாடாக மாற்றும் புலிகளின் குய யுக்தியை தகர்த்தெறிவதற்கு தமிழ், முஸ்லிம் முற்போக்கு சக்திகள் முன்வர வேண்டும்! (இதனூடாக நாம் புலிகளின் கபடத்தனமான அரசியலை மிகத் தெளிவாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த முடியும்)




இந்த வருட ஆரம்பத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக புலிகளால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை என்கிற பெயரில் வெளியிடப்பட்ட பிரசுரம்

வட-கிழக்கு முஸ்லிம்களை அழிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை

வட-கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை தெரிவிப்பு

வடக்கு கிழக்கிலிருந்து முஸ்லிம்கள் அனைவரையும் அழிக்கும் நிலை ஏற்படும். அதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை என்று வடகிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு படை அறிவித்துள்ளது.

குறித்த படையின் பெயரில் திருகோண மலை, மூதூர் பகுதிகளில் ஒரு நோட்டீஸ் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளது. 'முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் ஒரு முதல் எச்சரிக்கை" என்ற தலைப்பிலான அந்த நோட்டீஸில் பின்வருமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழன் தனது உரிமைக்காக இரத்தம் சிந்தி போராடிக்கொண்டிருக்கிறான். அவனின் இந்த போராட்டத்திற்கு எதிராக பேரினவாதத் துடன் இணைந்து செயற்படுவதும், காட்டிக் கொடுப்பதும் நீங்கள் காலம் காலமாக செய்து வருகின்ற விடயங்களாகும். யுத்த காலங்களின் போது கொழும்பு மற்றும் பல இடங்களில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படு வதற்கும், காணாமல் போவதற்கும், சுற்றி வளைப்புகளின் போதும் தமிழ் பெண்கள் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றீர்கள். இப்படியான விடயங்கள் எனது சிறுவயது முதல் நேரிடை யாகவே பார்த்து அனுபவித்திருக்கின்றேன். இப்படியான நாசகார செயல்கள் மட்டுமல்ல பேரினவாதத்தால் உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு பதிலாக அப்பாவி தமிழ் மக்களை தாக்குவதும் உடைமைகளை சேதப்படுத்துவதும் என்னால் தொடர்ந்தும் அவதானித்து வரும் விடயங் களாகும். தமிழனின் உரிமைப்போராட்ட வரலாற்றில் மூன்று பேரிடம் அடிவாங்கிக் கொண்டே இருக்கின்றான். ஒன்று பேரின வாதத்திடம், இரண்டு பேரினவாத அரசால் சாப்பிட்டுவிட்டு வீசி எறியப்படும் எலும்புத் துண்டுகளுக்கு அடிவருடிகளாக செயற்படும் தமிழ் குழுக்களிடம், மூன்று முஸ்லிம்களாகிய உங்களிடம் தமிழ் அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சுக்ககளின் போது முஸ்லிம்கள் எங்கள் உறவுகள், தமிழ் முஸ்லிம் உறவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். உங்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அடிக்கடி பேசு கின்றார்கள். உங்க ளுக்கு இவ்வாறான எண்ணங்கள் மனதில் இருக்குமா?

நீங்கள் யார்......?

வியாபாரத்திற்காக இலங்கை வந்தவர் கள்தானே நீங்கள். உங்களின் நோக்கங் கள் முடிந்தளவுக்கு இனத்தை பெருக்கு வது இதன் மூலம் தமிழனின் நிலங் களை அபகரிப்பது, வியாபாரத்தை பெருக்கு வது. இதற்காக எத் தகைய சுயநலப்போக் கான விடயங்களிலும் ஈடுபட தயங்காதவர் கள் நீங்கள். உங்க ளுக்கு சொந்தமென வடக்கு, கிழக்கு மட்டு மல்ல நாட்டின் எந்த வொரு பிரதேசமும் இல்லை என்பதை உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின் றேன். உங்களுடைய சுயநலத்திற்காக தமி ழனையும் அவனது உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுப்பதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

உங்களின் இந்த நடவடிக்கைகள் அனைத் தும் நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் தகுந்த சந்தர்ப்பம் வரும்போது உங்கள் அனை வரையும் வடக்கு கிழக்கிலிருந்து முற்றாக அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவேன் அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை தங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன். இது உங்களுக்கான முதல் எச்சரிக்கை.

உங்களின் இந்த விரும்பத்தகாத துரோகத் தனங்களால் உங்களுக்கெதிராக என்னால் விசேடமாக உருவாக்கப்பட்டிருக்கும் படை ''வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை""

தலைவர்

வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை

13 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

மனிதத்தன்மையே இல்லாத மிருகங்களாக புலிகள் ஆகி வெகுகாலம் ஆகிவிட்டது.

6:35 AM  
Blogger மாசிலா மொழிந்தது...

நீங்கள் பதிக்கும் இந்த செய்தி உண்மையெனில், மிகவும் வருந்தத்தக்கது. எனினும், இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தான் சிங்கள அரசுக்கு, தமிழர்களை அழிக்க ராணுவ உதவி செய்து வருகிறதே அதைப்பற்றி ஒன்றுமே எழுதமாட்டீர்களா? அல்லது விருப்பத்துடன் தவிர்த்துவிட்டீர்களா?

6:54 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

மாசிலா
என்ன பேத்தல் இது? இதெல்லாம் ஒரு காரணமா?

இலங்கை உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுடனும் ராஜீய உறவை கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முந்தியே புலிகள் இஸ்ரேலில் பாடம் படித்து வந்தார்களே?

கடந்த 50 வருடங்களாக பாகிஸ்தான் இந்தியாவுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக இந்தியாவில் இருக்கும் எந்த அரசாங்கமாவது முஸ்லீம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்களா?

முஸ்லீம்களை தமிழர்கள் என்று இன்றைக்கு புலிகள் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்காக அவர்களை துரத்துகிறார்கள். ஏற்கெனவே சிங்களர்களை புலி கட்டுப்பாட்டு பிரதேசங்களிலிருந்து துரத்தினார்கள். பிறகு முஸ்லீம்களை துரத்தினார்கள். அடுத்து யாரை துரத்தப்போகிறார்கள்?

துரத்துவதற்கு யாரேனும் பாக்கி இருப்பார்களா?

எல்லோரையும் கொன்று சுடுகாடாக்கிய பின்னால், பிரபாகரனும், சொர்ணமும் லண்டனுக்குச் சென்று ஏற்கெனவே அங்கிருக்கும் தங்கள் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட வேண்டியதுதான் பாக்கி

7:12 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஏதேனும் கிறிஸ்துவ நாடு இலங்கைக்கு உதவினால், கிறிஸ்துவர்களை எல்லாம் பிரபாகரன் துரத்திவிடுவாராமா?

7:14 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ethil unmai ehtuvum illai.SLA distrubut this nitice

7:19 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஏன் இந்தியா இலங்கைக்கு உதவுகிறதுதானே அப்ப என்ன இந்துக்களையும் துரத்த போகிறார்களா? பிரபாகரன் கிறிஸ்துவர்தானே அதுதானே நோர்வே அவர்களுக்கு உதவுகிறது. அவரின் மகனின் பெயர்கூட சாள்தானே அப்ப லண்டன் காறனையும் துரத்தவேண்டும். இப்பிடியே நாம் மாற்றி மாற்றி மாற்றுக்கருத்து கதைப்போம் மக்கா.

7:23 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான உறவை சீர்குலைக்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து முஸ்லிம் மக்களை வெளியேறுமாறு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டத்தில் இருந்து முஸ்லிம் மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் எனத் தெரிவித்து தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசியல்துறை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

அம்பாறை அக்கரைப்பற்றில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை.

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுநிலையினைக் குலைப்பதற்காக சிறிலங்கா அரசும் அதனுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக்குழுவினரும் மேற்கொண்டு வரும் செயற்பாடாகவே இச்செயற்பாடும் அமைந்துள்ளது.

கடந்த ஒன்பதாம் மாதம் 18 ஆம் நாள் பொத்துவில் இறாத்தல்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் முஸ்லிம் இளைஞர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இச்சம்பவத்தை வைத்தும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவினைக் குலைப்பதற்கான நடவடிக்கையினை சிறிலங்கா அரசும் அதன் துணை இராணுவக் குழுவினரும் மேற்கொண்டு வந்தமையை முஸ்லிம் மக்கள் நன்றாக அறிந்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டுமொரு குழப்பும் வகையிலான செயற்பாட்டினை மேற்கொள்ள சிறிலங்கா இராணுவம் முன்வந்துள்ளது.

இத்துண்டுப்பிரசுரத்திற்கு அஞ்சி முஸ்லிம் மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

7:25 AM  
Blogger மாசிலா மொழிந்தது...

//நீங்கள் பதிக்கும் இந்த செய்தி உண்மையெனில், மிகவும் வருந்தத்தக்கது.//
ஒரே பொது மொழி (தமிழ்) பேசும் ஒருவரை அவர் பின்பற்றும் மதத்தின் காரணமாக ஒதுக்குவுதோ சமுதாயத்தைவிட்டு விலக்குவுதோ சரியல்ல என்று என் முதல் பதிலில் தெளிவு பட கூறியுள்ளேன். நீங்கள்தான் தவறுதலாக புரிந்துகொண்டிருக்கிறீர்.
என் பதிலில் நான் சுட்டிக்காட்ட விரும்பியது உமது ஒருநிலை போக்கைத்தான். சிங்கள் அரசின் அநியாயங்களால் எண்ணிலடங்கா அப்பாவித் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறார்கள். அதெல்லாம் உம் கண்களுக்கு தெரியவில்லையா?

7:39 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஆமாம். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை துரத்தியதும் கூட இலங்கை ஆமிதான்

7:41 AM  
Blogger அகரன் மொழிந்தது...

இன்று அப்பாவி சிங்களவர்களையும் அப்பாவி முஸ்லீம்களையும் புலிகள் கொல்வதை கண்டித்து புலி ஆதரவாளர்கள் எழுதும்போது, 80களில் சிங்களவர்கள் தமிழர்களை கொன்றதை பற்றி எழுதுகிறேன்

7:46 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

காட்டில் வாழ வேண்டிய மிருகங்களால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்காக யார் கண்ணீர் விடுவது?

9:14 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

சிங்கள் அரசின் அநியாயங்களால் எண்ணிலடங்கா அப்பாவித் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறார்கள். /

அதென்ன சிங்கள அரசு? இன்றைக்கும் வரி வாங்காமல் புலி கட்டுப்பாடு பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும் சாப்பாடு போடுவது இலங்கை அரசாங்கம்தான். பிரபாகரன் அல்ல.

A9 பாதையை உணவுப்பொருட்களுக்காக திறக்கிறோம் என்றால் ஏன் புலிகள் மறுக்கிறார்கள்? வரியை இவர்கள் வாங்கிக்கொண்டு ஆயுதம் வாங்குவார்களாம், சாப்பாடு துணி மணி ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தரவேண்டுமாம்.

9:38 AM  
Blogger மாசிலா மொழிந்தது...

//காட்டில் வாழ வேண்டிய மிருகங்களால்?//
சிங்களவர்களை கூறுகிறீரா?

இங்கே கண்ணீர் விடுவது ஒரு தமிழன். அவ்வளவே. இதற்குமேல் எந்த தகுதியும் தேவையில்லை!

9:38 AM  

Post a Comment

<< முகப்பு