ஃபயர்பாக்ஸ்



அந்த நெருப்பு நரியை ஒருவழியாக படம் பிடித்தாகிவிட்டது.

ஆண்களுக்கும் உகந்த அறிவுரைகள்

கருமையான கூந்தலை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. நம் அனைவருக்கும் கூந்தல் பெரியதோ, சிறியதோ அதை அழகாக வைத்திருக்க வேண்டும். விதவிதமான அலங்காரங்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது.
இப்படி நமது கூந்தலை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் கூந்தலை நன்றாக ஆயுர்வேதிக் ஆயில் மசாஜ் மூலம் பராமரித்துக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரபல சர்வதேச அழகுக் கலை நிபுணர் ஹசீனாசையத். இவர் சென்னை திருவல்லிக்கேணியில் இந்தியன் இன்ஸ்டிடிïட் ஆப் பிïட்டி தெரபி மற்றும் தி.நகரில் ஆம்பியன்ஸ் இன்டர்நேஷனல் அழகுக்கலை பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவர் மேலும் கூறியதாவது:-
கூந்தலை நல்லமுறையில் பராமரித்தால்தான் நாம் விரும்பும் வண்ணத்தில் கூந்தலை பல்வேறு விதங்களில் ஸ்டைல் செய்து கொள்ளலாம். நீளமான கூந்தலை சுருட்டிக் கொள்ளலாம். சுருள் முடியை நிமிர்த்திக் கொள்ளலாம்.
இப்படி இன்றைய நவீன உலகில் கூந்தலை எப்படி வேண்டுமானாலும் சில மணி நேரங்களில் ஸ்டைல் செய்து கொள்ளலாம். இன்றைய பேஷன் உலகில் பல பெண்கள் வெளியே விசேஷங்களுக்கு செல்கையில் தங்களது கூந்தலை தற்காலிகமாகவோ சுருட்டிக்கொள்ளவோ விரும்புகிறார்கள்.
இதற்கு ஹாட்ரோலர்ஸ், ஹாட்டாங்க்ஸ், கிரீம்பர்ஸ் என்று பலவிதமான கருவிகள் பயன்படுத்தலாம். பெர்மிங்கும் இன்றைய பெண்கள் மிகவும் விரும்பி செய்து கொள்கிறார்கள். இதே போல் சுருள் முடியையும் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நிமிர்த்திக் கொள்ளலாம்.
இது மட்டுமில்லாமல் இன்றைய பெண்களிடம் ஹேர்கலரிங் வரவேற்பை பெற்றுள்ளது. இதிலேயும் பல்வேறு விதமான நிறங்கள் உள்ளன. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிறம் மாற்றிக் கொள்ளலாம். இப்படி நமது கூந்தலை நாம் அழகாக அலங்கரித்துக் கொள்ளலாம்.
இளநரையா?
இளநரைக்கும் செம்பட்டை முடி கருநிறமாகவும் முற்றிய பெரு நெல்லிக்காய்களை கொட்டை நீக்கி நிழலில் உலர்த்தி பின்பு தேங்காய் எண்ணெயில் போட்டு கருகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இளநரையை போக்கி இதையும் டிரை பண்ணி பார்க்கலாம். சிவாக்காய், பாசிப்பயிறு, பச்சரிசி, சிறிது கறிவேப்பிலை, மருதாணி இலை ஆகியவற்றை காயவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வாருங்கள். இள நரை மாயமாவதை கண் கூடாகக் காண்பீர்கள்!
பின்பு வடிகட்டி தினமும் தடவி வர வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடி கருநிறமாகும்.
அதிமதுரத்தை பொடி செய்து எருமைப்பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வழுக்கை மறைந்து தலைமுடி வளர ஆரம்பிக்கும்.
தினமும் இரவில் சுத்தமான தேங்காய் எண்ணையை லேசாக சூடுபடுத்தி தலையில் 10 நிமிடம் தேய்த்துக் கொண்டு பின்பு காலையில் ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூள் (சோறு வடித்த கஞ்சியில் கலந்து) தலைக்கு குளித்தால் நீண்ட கூந்தலை பெறலாம்.
வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்தால் பொடுகு மறைந்து விடும்.
செம்பருத்திப்பூவை நன்றாக காயவைத்து தேங்காய் எண்ணையில் போட்டு வைத்து தலைக்கு தேய்த்து வாருங்கள். கூந்தல் செழிப்பாக வளரும்.
துளசி இலையை அரைத்து தலையில் தடவி குளித்து பிறகு ஷாம்பு போட்டு குளிக்க... பேன் இராது.

நல்ல ஒரு பதிவு

http://agaraathi.blogspot.com/
தமிழ் ஆங்கில அகராதியை நன்றாக பதிந்து வைத்திருக்கும் பதிவருக்கு நன்றி

நிஜமாகவே

என் வீட்டு நாய்க்கு கோபம் வந்தால்

ஒரு நாள் என் கம்ப்யூட்டர் மௌஸை திறந்து பார்த்தேன்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

பார்க்குரல் கொண்ட போஸ்னியா, பீகாரில் ஜகன்னாபாத்தில் சிறை தகர்ப்புக்குப் பின் என்று மாறுபட்ட சூழல்களில் அமைதிப் பணி என்று அன்பு வலையை எப்படி விரிக்க முடிகிறது?

அதில் தான் வெற்றி இருக்கிறது. இப்போது கூட மொராக்கோவில் இருந்து 42 பேர் குழு இங்கு வந்து சென்றதைப் பார்த்தீர்கள். போஸ்னியா மட்டும் அல்ல, ஐரோப்பாவின் பல பகுதிகளிலும், அமெரிக்காவிலும் பண்புப் பதிவு பெற, மனித உணர்வு பெற ஆர்வம் அதிகரித்திருப்பதை இவர்கள் வருகை காட்டுகிறது.
பீகாரில் ஜகன்னாபாத் சிறை தகர்ப்புக்குப் பின் அங்கே விவசாயிகளின் போர்ப் படையான ரண்வீர் சேனாவுக்கும், மவோயிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்த்தனர், அவ்வளவு இறுக்கம். ஆனால் "வாழும் கலை' இயக்கப் பிரசாரகர்கள் இரு தரப்பையும் சந்தித்துப் பேசி தொடர்ந்து அமைதி காத்தனர். அதனால் பெரிய அளவில் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது.
கம்யூனிசம் தவிடுபொடியான பின் இன்றுள்ள ரஷ்யாவின் நிலையே வேறு. அமெரிக்காவும் ஒரே வல்லரசாக தான் நினைத்ததைச் செயல்படுத்தும் முடிவில் இருக்கிறது. கம்யூனிசத்திற்கும் மதத்திற்கும் இடைவெளி அதிகம். ஆனால் தங்கள் இயக்கம் அதிபர் புடின் ஆதரவைப் பெற்றது எப்படி?
ரஷ்யாவில் வாழ்க்கை முறை நெறிகெட்டிருப்பது உண்மை, அங்கிருக்கும் கிறிஸ்தவ சர்ச் முதலில் வாழும் கலை அமைப்பு வளர்வதை ஆதரிக்கவில்லை . ஆனால் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கை, தெளிவில்லாத அரசியல் சூழ்நிலை ஆகியவற்றில் இருந்து வெளியேற மக்கள் விரும்புவதன் அடையாளமே அங்கு "சுதர்ஷன கிரியா' பயிற்சி நடத்த அனுமதிக்கப்பட்ட செயலாகும். ரஷ்ய ராணுவத்தினர் ஒரு லட்சம் பேருக்கு அரசு அனுமதியுடன் இப்பயிற்சி தற்போது தரப்படுகிறது.
தமிழகத்தில் பாபநாசத்தில் பிறந்த தாங்கள் இம்மாதிரி அன்புப்பிணைப்பை அதிகரிப்பதில் பெரும் வெற்றி கண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. ஞானத்திற்கும், இலக்கியத்திற்கும் முன்னணியாக உள்ள பகுதி தமிழகம். இங்கே பிறக்காமல் இருந்திருந்தால் பெருமை பெறுவது சிரமம் என்றே கூறுவேன். அதனால் தமிழகத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தவிரவும் "வாழும் கலை ' அமைப்பு துவங்கி , 25 ஆண்டுகள் ஆகி வெள்ளி விழா நடைபெற இருக்கிறது. விழா வரும் பிப்ரவரி 17 முதல் 19ம் தேதி வரை இங்கே பெங்களூரில் நடக்கும். அந்த மகா சத்சங்கத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக அன்புள்ளங்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மகா சத்சங்கத்திற்கு எல்லாரும் வர அழைக்கிறேன். அதன் மூலம் எல்லா இல்லங்களிலும் அன்பு ஒளி பரவட்டும்.

எருமேலி முதல் சந்நிதானம் வரை

சபரிமலைக்கு செல்லும் வழியில் அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்தப்புழை, பந்தளம் ஆகிய இடங்களிலுள்ள தர்ம சாஸ்தாவின் கோயில்களுக்கு சென்று வழிபட்டு பின் எருமேலி என்னும் புனித தலத்தை சென்றடையலாம். அங்கிருந்த சுமார் 40 மைல் நடந்து சபரிமலையிலுள்ள தர்மசாஸ்தாவின் சந்நிதானம் சென்றடையும் பாதையே பெருவழிப்பாதை என்று கூறப்படுகிறது.
எருமேலி: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் இது. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் சுவாமி காட்சியளிக்கிறார்.
வாவர் கோயில்: எருமேலியில் தர்மசாஸ்தா கோயிலின் சற்று துõரத்தில் வாவர் கோயில் உள்ளது. வாவர் முஸ்லீம். ஹிரிஹரபுத்திரனின் நண்பருமாவார். ஐயப்ப பக்தர்கள் வாவர் கோயிலில் சென்று வணங்கி அங்கு பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
பேட்டைதுள்ளல்: இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு. உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான ஆயுதங்களுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாவர் சந்நிதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சந்நிதி வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு யாத்திரையை தொடர வேண்டும்.
பேரூர்தோடு: இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.
காளைகட்டி: காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து அழகிய அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் வதம் செய்வதைக் காண கைலாயத்திலிருந்து வந்த சிவபெருமான், அவருடைய வாகனமான காளையைக் கட்டிய இடமே காளைகட்டி என்று புராணங்கள் கூறுகின்றன.
அழுதாநதி: காளைக்கட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். இங்கு ஒரு இரவு தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மணிகண்டனால் துõக்கி எறியப்பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.
மறுநாள் அதிகாலையில் அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டம். பூஜைக்குப்பின் உணவருந்தி சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம்.
அங்கேயுள்ள கல்லிடும் குன்று என்னுமிடத்தில் அழுதையாற்றிலிருந்து எடுத்து வந்த கற்களைப் போட்டு சுவாமியை வணங்க வேண்டும்.
பின் யாத்திரையை தொடர்ந்து காடு, மலை ஏறி, இறங்கி உடும்பாறைக் கோட்டை இலவந்தோடு முதலிய இடங்களைக் கடந்து கரிவலம் தோடு என்ற இடத்தை அடையலாம். அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க வேண்டும்.
கரிமலை: பின் கரிமலை அடிவாரத்தை அடையலாம். இந்த மலையின் மண் கருப்பாக இருப்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு யானைகள் மற்றும் கொடிய மிருகங்களின் தொல்லையும் அதிகம்.
இந்த மலையில் ஏறும்போது தங்கள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்தியை உணரலாம். மலை உச்சியில் கரிமலைநாதர் என்ற மூர்த்தியின் கசிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. விரதம் தவறிய பக்தர்களை தேவதைகள் இதற்குமேல் செல்ல விடுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த மலையின் உச்சியில் நீர்வற்றாத கிணறு ஒன்று உள்ளது. ஐயப்பன் தன் அம்பை எய்து இக்கிணற்றை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. இங்கு சிறிது ஓய்வெடுத்தப்பின் செங்குத்தான வழியில் இறங்க வேண்டும். சிறயானைவட்டம், பெரியானைவட்டம் என்ற யானைகள் தங்குமிடங்களை கடந்து காட்டில் பயணம் செய்து பம்பா நதியை அடையலாம்.
பம்பா நதி: எருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர். சிறிது துõரத்தில் வேறு ஒரு நதி இதனுடன் கலக்கிறது. இந்த இடம் திரிவேணி என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடி நீண்டதுõரம் நடந்து வந,த களைப்பைப் போக்கிக் கொள்ளலாம்.
பம்பையாற்றின் கரையில் ஓர் இரவு தங்கி, இரவில் ஆற்றில் பம்பாவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டு பின் உணவு தயார் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு ஐயப்பன்மார் சிலருடன் சேர்ந்து உணவருந்தலாம்.
பின்னர் பம்பையாற்றின் கரையிலுள்ள விநாயகர், ராமர், அனுமன், சக்தி கோயில்களில் வழிபட்டு, பந்தள மன்னர் பரம்பரையில் வந்தவர்களுக்கு காணிக்கை செலுத்தி, அவர்களிடம் விபூதி வாங்கி நெற்றியில் அணிந்து நீலிமலை ஏற துவங்கலாம்.
நீலிமலை: இந்த மலையில் ஏறுவதும் கரிமலையில் ஏறுவது போல் மிகக்கடினம். வழியில் அப்பாச்சிமேடு என்ற இடத்தை வந்தடைந்தவுடன் கன்னி சாமிகள் பள்ளத்தாக்கில் அரிசிமாவு உருண்டை எரிந்து துர்தேவதைகளை திருப்தி செய்வர்.
சபரிபீடம்: சிறிது துõரம் நடந்து சபரிபீடம் என்று அழைக்கப்படும் ஓர் சமதளமான இடத்தை அடையலாள். இங்குதான் சபரி என்னும் பக்தை தவம் செய்து விண்ணுலகம் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.
சரங்குத்தி: இது கன்னி ஐயப்பன்மார்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். சபரிமலைக்கு புனித யாத்திரை வரும் கன்னி ஐயப்பன்மார் தங்கள் இருமுடிக்கட்டில் ஓர் அன்பினை செருகி எடுத்து வருகின்றனர். அதை சரங்குத்தியில் செருகிய பின்பே புனிதமான பதினெட்டுப் படிகளில் ஏறும் தகுதி பெறுகின்றனர். கடைசியில் சுவாமி ஐயப்பனின் புனித சந்நிதானம் சென்றடையலாம்.
எருமேலியிலிருந்து மலைகளில் ஏறி, இறங்கி காட்டினுள் நடந்து தரமசாஸ்தாவின் சந்நிதிக்கு சுமார் 40 மைல் கடந்து வரும் இந்த பாதைதான் பெரும்பாதை என்றழைக்கப்படுகிறது. சாலக்காயம் வழியாக பம்பையாறு வந்தடைவோரும், குமுளி, வண்டிப்பெரியார் வழியாக நேராக சந்நிதானம் வந்தடையும் பக்தர்களும் உண்டு.
பக்தர்கள் பதினெட்டுப்படிகளின் இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, தேங்காய் உடைத்து, சரண கோஷத்துடன் பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும்.
பக்தர்கள் பின் கோயிலை வலம் வந்து ஹரிஹர புத்திரனாகிய தரமசாஸ்தாவை தரிசிக்கலாம். அடுத்து கனிமூலை கணபதியையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும். இருமுடிக்கட்டு இல்லாத பக்தர்கள் வடக்கு முகமாக உள்ள படிகளில் ஏறி சுவாமியே தரிசிக்கலாம்.
பின் வாவர் சந்நிதியிலும், நாகர் சந்நிதியிலும் கும்பிட்டுவிட்டு மாளிகைப்புறத் தம்மன் கோயிலை சென்றடையலாம். இங்கு மஞ்சள்பொடி துõவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலை எழுந்து நீராட வேண்டும். குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும்.
அந்த நெய்யினால் ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்து அந்த நெய்யையும், அந்த தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன் உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.

சேமிக்கவும்

எனக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்கவும்,
எனக்குப் பிடித்த பாடல்களை சேமிக்கவும்

இதனையும் நீ சேமிக்கவும்

பரிசோதனை

பரிசோதனை