சிறுவர்களை யுத்தகளத்தில் பலிகொடுக்கும் புலிகள்

மனிதாபிமானம் பேசிக்கொண்டே சிறுவர்களை யுத்தகளத்தில் பலிகொடுக்கும் புலிகள்! தப்பி வந்தோர் கூறும் கதை


சிறுவர்களை படையில் சேர்ப்பது, அவர்களை ஆயுதம் ஏந்த வைப்பது, யுத்த களங்களில் போரிட வைப்பது என்பதெல்லாம் பாரிய அத்துமீறலென ஐக்கிய நாடுகள் சபை முதல், அனைத்து சமூக ஆர்வம் கொண்ட நிறுவனங்களும் சொல்லிக் கொள்ளும் விடயமாகும்.


இலங்கை பொலிஸ் மற்றும் முப்படைகளைப் பொறுத்தவரை, ஒருவர் இதில் இணைந்து கொள்வதற்கான அடிப்படைத் தகைமைகளில் ஒன்று அவர் 18 வயதினைப் பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும் என்பதாகும். ஆக சிறுவர்களையோ பராயமடையாதவர்களையோ இலங்கை அரசு தமது பாதுகாப்புப் படைகளில் இணைத்துக் கொள்வதில்லை. இது அனேகமாக உலகிலுள்ள ஜனநாயக நாடுகள் அனைத்தினதும் நடைமுறையாகும்.


ஆனால் புலிகள் இயக்கத்தின் படையணிகளில் மிக அதிகமாக சிறுவர்களே செயற்பட்டுவருகின்றனர். இது தொடர்பாக யுனிசெப் உட்பட பல்வேறு சர்வதேச ஸ்தாபனங்கள் புலிகளை பல முறை குற்றம் சாட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறுவர்களை படைகளில் சேர்க்கக் கூடாது என்கின்ற சர்வதேச அழுத்தங்களுக்கு அமைய, புலிகள் தமது படையில் சிறுவர்களை சேர்ப்பதில்லை என்றும் இணைந்துள்ளவர்களை விடுவிப்பதாகவும் பலமுறை தெரிவித்திருந்தனர். ஆனால் புலிகள் அவ்வாறு நடந்துகொள்ளவேயில்லை.

புலிகளைப்பொறுத்தவரை அவர்கள் தமது குற்றவியல் செயற்பாடுகள் எதனையும் இதுவரை நேரடியாக ஏற்றுக்கொண்டதுமில்லை, அவர்களுக்கு சாதகங்களை வழங்காத உத்தரவாதங்களை கடைப்பிடித்ததுமில்லை. இது வரலாறு!

தமது இயக்கத்தில் உள்ள சிறுவர்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்டே புலிகள் சிறுவர்களை தமது படையணியில் பலாத்காரமாக இணைத்துக்கொண்டு வருகின்றனர். நேற்று (29ம் திகதி) நிறைவடைந்த ஜெனீவா பேச்சுவாரத்தைகளில் கூட சிறுவர்களை படையணிகளில் சேர்க்கக்கூடாது என்கின்ற விடயத்தை அரச தரப்பினர் பிரதானப்படுத்தி தமது பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலில் இணைக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் கடந்த புதன்கிழமை 25ம் திகதி ஐந்து சிறுவர்கள் உட்பட ஏழு புலிகள்இயக்க உறுப்பினர்கள் சேருநுவர கல்லாறு பொலிஸ் வீதிச் சோதனைச்சாவடியில் சரணடைந்துள்ளனர். இவர்களில் சிலர் 15மற்றும் 17வயதினைக் கொண்டவர்களாவர். புலிகளின் கதிரவெளி முகாமிலிருந்தே இவர்கள் தப்பிவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தர்க்கீகன் என்பவர் தப்பித்து வந்தவர்களில் ஒருவர். 15வயது இவருக்கு. உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த தர்க்கீகனின் பாடசாலைக்கு வந்த புலிகள் தர்கீகன் உட்பட நான்கு மாணவர்களை கடத்திச் சென்றனர். தர்க்கீகன் புலிகள் இயக்கத்தில் இணையுமாறு வற்புறுத்தப்பட்டார். கடத்தப்பட்ட மாணவர்களுக்கு பலாத்காரமாக ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் தர்கீகன் இப்போது புலிகளிடமிருந்து தப்பித்து வந்துவிட்டார். ~~எனக்கு சண்டை பிடிக்கவில்லை|| என்று அழுத்திக் கூறும் தர்கீகன் ~~நான் தொடர்ந்து படிக்கவேணும்|| என்கிறார்.

சரணடைந்த சிறுவர்களில் ஒருவரான திலகனின் கதையும் கண்ணீராலானது. ~~நான் கட்டபறிச்சான் விவேகானந்தர் வித்தியாலயத்தில் ஆண்டு 10 படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பாடசாலைக்கு போகும் வழியில் புலிகள் என்னை பலாத்காரமாக கடத்தி கதிரவெளி முகாமுக்கு கொண்டுசென்றனர். தப்பிக்க எவ்வளவோ முயன்றேன் அவர்கள் என்னை சங்கிலியால் கட்டிவைத்து அடித்தார்கள்.

எனக்கு ஒரு சகோதரி இருக்கிறார். நான் வீட்டுக்கு போக வேண்டுமென்று கடத்தியவர்களிடம் கூறியபோது என்னை சித்திரவதை செய்தார்கள். அவர்களின் கொடுமையை என்னால் இனித்தாங்க முடியாது, எப்படியோ தப்பித்து வந்துவிட்டேன். அங்கே 85 பேருக்கு ஆயுப்பயிற்சி வழங்கினார்கள். அதில் 35 பேர் எனக்கு முன்னரேயே தப்பி ஓடிவிட்டார்கள். எனது குடும்பத்தை நான்தான் பார்க்கவேணும்|| என்றார் அந்த சிறுவன் திலகன்.

இவ்வாறு ஒவ்வொருவரின் கதையும் புலிகளால் சிதைக்கப்பட்டவை.

சம்பூருக்கு படையினர் வந்தபோது, தன் சகோதரியுடன் அகதி முகாமில் தங்கியிருந்தவர் காந்திகணேஷன். அங்கு வந்த புலி உறுப்பினர்கள் மிக பலாத்காரமாக காந்திகணேஷனை கதிரவெளி முகாமுக்கு கடத்திச் சென்றுள்ளனர். ~~என்னை அவர்கள் அடித்தார்கள். அந்தக்கொடுமைகளை தாங்கமுடியாது. தப்பித்து வந்துவிட்டேன்|| என்று கூறும் காந்திகணேஷன் பொலிஸாரிம் சரணடைந்தவர்களில் மற்றுமொருவர்.

தினுஷ், அன்பழகன், செல்வராஜா ஹரீஸ்ஹரன், ப்ரனாஷ் ஆகியோர் சரணடைந்தவர்களில் ஏனையோர்களாவர்.

அண்ணன் சு.ப அவர்களே! ஒரு நிமிசம்

நீங்கள் ஜெனீவாவுக்குச் சென்று எமது மக்கள் யாழ் குடாநாட்டில் எதிர்நோக்கும் மனிதாபிமான பிரச்சினைகளை பற்றி எடுத்தியம்பியபோது உண்மையில் தமிழர்களாகிய எங்களுக்கு மெய் சிலிர்த்தது. இந்த மனிதாபிமான பிரச்சினையை மாத்திரமல்லாம யுத்த நிறுத்த ஒப்பந்தம் 100 வீதம் அமுல்படுத்தப்பட வேண்டும் என நீங்கள் உரைத்தபோது உணர்ச்சி மேலீட்டில் எங்கள் கண்கள் குளமாயின.

நீங்கள் தமிழ் மக்களின் மனித உரிமையிலும், மனிதாபிமானத்திலும் காட்டும் இந்த அக்கறையை விபரிக்க எம்மிடம் வார்த்தைகள் இல்லை. எமது மக்கள், எமது மக்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை மக்கள் மீதான வாஞ்சையை வெளிப்படுத்தினீர்கள்.

அண்ணே நீங்கள் கேட்பதை இந்த அரசு புரிந்து கொண்டதோ என்னவோ நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

2002 பெப்ரவரியில் இருந்து 2006 ஆகஸ்ட் 10ம் திகதி வரை இந்த ஏ9 பாதை உங்களுக்கு ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. சவளால் பணத்தை அள்ளி சாக்குகளில் நிரப்பிய காட்சிகள் ஒரு கோடீஸ்வர தமிழரசு உருவாகிறதென்று இறுமாந்திருந்தோம். ஆனால் பாழாய்போன இந்த தமிழ் சனத்திற்கு அது விளங்கவில்லை. அந்த தமிழ்ச்சனம் முணுமுணுத்துக் கொண்டு புறுபுறுத்துக்கொண்டுதான் பணத்தைத் தந்தார்கள். நீங்கள் ஏ9 வீதியால் போகவிடுவதும் போதாதென்று நீங்கள் கேட்கும் பணத்தை வழங்குவதற்கு பஞ்சிப்படும் தமிழ்ச்சனத்தை என்ன செய்வது. இவர்களுக்கு எத்தனை கசையடிகள் கொடுத்தாலும் தகும். பாதாள சிறைகளில், பங்கர்களில் விடுவதும் மிகச்சரியே. ஜெயதேவன், விவேகானந்தனுக்குக் கொடுத்த தண்டனைதான் இந்த புறுபுறுப்புக்காரருக்கெல்லாம் கொடுக்க வேண்டும். புறுபுறுத்தோ கறமுறுத்தோ மிண்டிப்பார்த்த சனங்களையும் வெருட்டி, நலமடித்து எங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் கப்பம் வாங்கும் லாவகம் உலகில் எந்த விடுதலை இயக்கத்திற்கும் வராது பாருங்கள். என்னதான் இருந்தாலும் நீங்க மெத்த படித்த சமூகத்தின் ஏகபிரதிநிதிகள் அல்லவா.

இந்த வீதியில் விரும்பிய போது நீங்கள் விரும்பிய ஆட்களை கடத்திச் செல்ல முடிந்தது. கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த வாகனங்களை தெற்கின் பாதாள உலகத்தையும் உங்கள் முகவர்களையும் பாவித்து வன்னிக்குள் கொண்டு சேர்ப்பிக்க முடிந்தது. எத்தனை தற்கொலை குண்டுதாங்கி அப்பாவிகளை இந்த பாதையின் ஊடாக நாலா திசைகளிலும் அனுப்பி தென்னிலங்கையில் பரவலாக மனித உயிரழிவுகளை ஏற்படுத்த முடிந்தது. யாழ்ப்பாணத்திற்குள் விதைக்கப்பட்ட கிளேமோர்கள் எல்லாம் சென்று சேர்வதற்கு இந்த பாதையல்லவா ஒரு வரப்பிரசாரமாக இருந்தது. கோயிலடியில், ஆஸ்பத்திரியடியில், பஸ் ஸ்டாண்டில், பாடசாலைகளுக்கு அருகில் ,சனசந்தடிமிக்க பண்டிகை நாட்களில், நகரங்களில், சந்தைகளுக்கருகில் வைத்ததன் மூலம் படையினருக்கும், பொலிசாருக்கும், இந்த எளிய நன்றிகெட்ட சனங்களுக்கும் பாடம் படிப்பித்துக் கொண்டிருந்தீர்கள். ஒரு நல்ல பயக்கெடுதியையும் ஏற்படுத்தியிருந்தீர்கள். அதோட இந்த எளிய சனம்தான் குண்டு வைக்கிறார்கள், கிளேமோர் வைக்கிறார்கள் என்று இல்லாததையும் பொல்லாததையும் நன்றாகவே போட்டுக் கொடுத்தீர்கள். உங்களுடைய உச்ச நடவடிக்கையாக யாழ்ப்பாணத்தையும் பிடித்து விடலாம் என்ற பேரவாவில் ஆகஸ்ட் 11ம் திகதி முகமாலையில் ஒரு பின்னேரம் சண்டையைத் தொடங்கினீர்கள். ஆனால் அந்தச் சண்டை அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது என்று நீங்கள் சொல்லுமளவுக்கு நீங்கள் கருதியிருந்த வெற்றி உங்களுக்கு தோல்வியாக மாறியது. அது ஏ9 பாதையில் ஒவ்வொருநாளும் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த உங்கள் கப்ப வசூலை ஒரேயடியாக வாத்தைக் கொன்ற கதையாக முடிந்து விட்டது.

அரசாங்கத்திடமிருந்து புது வாத்து வாங்கலாமா என்ற நம்பாசையுடன்தான் நீங்கள் ஜெனீவா சென்றீர்கள். உலகத் தமிழினமும், வயிறு வற்றி உலர்ந்த வடக்கு- கிழக்குத் தமிழர்களும் ஏதோ தங்கள் வயிற்றுப் பிரச்சினையையும், உயிர்ப்பிரச்சினையையும் கதைக்கத்தான் நீங்கள் ஜெனீவா சென்றிருக்கிறீர்கள் என்று ஆவலுடன்தான் எதிர்பார்த்திருந்தார்கள். எங்கு பார்த்தாலும் இதே கதைதான். ஆனால் அவர்களுக்குத் தெரியாது நீங்க புது வாத்து வாங்க போயிருக்கிறீர்கள் என்று.

அண்ணே சும்மா சொல்லக்கூடாது. நீங்கள் திரைப்படத்தில் நடித்தால் சிவாஜி கணேசன், கமலஹாசன், மாலன் பிரண்டோ போன்றவர்கள் அட்ரஸ் இல்லாமல் போயிருப்பாங்கள். நீங்கள் எங்கள் மக்கள், எங்கள் மக்கள் என்று உருகியது நீங்கள் அந்த மக்களில் ஒருவராகவே வாழ்ந்து காட்டி நடித்தீர்கள். ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா நாய் வளக்கேல்ல அதுக்கு பதிலா என்னைத்தான் வளத்தா என்ற கமலஹாசனின் சினிமா வசனத்தை விட எங்கள் மக்கள் எங்கள் மக்கள் என்ற உங்கள் டயலக் வாவ் - டாப் - டக்கர் - சுப்பர் - தூள்

1995ம் ஆண்டு நீங்கள் வன்னிக்கு வரச்சொல்லியும் வராம ஆமியிட கட்டுப்பாட்டுக்க யாழ்ப்பாணத்துக்கு திரும்ப சனம் போன போது நீங்க யாழ்ப்பாண சனத்தை வெருட்டி அடிச்சு விட்ட நோட்டீஸ் இன்னும் கைவசமிருக்கு. நீங்க யாழ்ப்பாணத்து சனத்துக்கு அப்ப சொல்லியிருந்தனீங்க சொல்லு கேக்காம போன நீங்க(துரோகியள்) எங்களிட்ட நல்ல பாடம் படிப்பீங்கன்னு.

அண்ணே அநியாயத்தை சொல்லக்கூடாது ,நீங்க அப்பப்ப யாழ்ப்பாண சனத்துக்கு மருந்து குடுக்கிறீங்க. நீங்க சொல்லியிருக்கிறீயளே. இப்ப வெளியுலக தொடர்பு இல்லாம துண்டிக்கப்பட்டிருக்கிற யாழ்ப்பாண சனத்துக்கு கப்பல்ல சாப்பாட்டு சாமான் போனா அடிப்பம் என்று. ஐ.சி.ஆர்.சி க்கும் இந்த வழித்துணை வழங்கும் விபரீத விளையாட்டு வேணாமென்று எச்சரித்திருக்கிறீங்க.

ரிஸ்க் எடுத்து ஒரு ஒப்பரேசன் மாதிரி யாழ்ப்பாணத்துக்கு சாப்பாடு போற மாதிரி பண்ணி வச்சிருக்கிறீங்க சபாஷ். இதுதான் சரியான தமிழீழ விடுதலைப் போராட்டம்.

பெரியண்ண தேசிய தலைவர் விரும்பின மாதிரி உலகம் வியக்கும் தமிழன்ர சுடலையொன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறீங்க. இன்னும் சில வருட மரணங்களில் முழுமையான சுடலை தேசம் உருவாகி விடும். நரகத்துக்கு போன தமிழனும், சொர்க்கத்துக்கு போன தமிழனும் சுதந்திரமான சுடலையை அங்கிருந்து பார்த்து மன நிறைவை எய்துவார்கள். ஏனென்றால் தங்களை போல் வதைபடுதற்கு ஒரு குஞ்சு குருமானும் தமிழீழத்தில் இல்லையென்பதை நினைத்து. அவர்களுடைய ஆன்மாவும் அப்போதுதான் சாந்தியடையும்.

சரியண்ணே கூட போயிட்டனோ தெரியேல்ல, என்டாலும் அண்ணே சில விசயங்கள் சொல்ல வேண்டிகிடக்கு. ஒரு நப்பாசையிலதான்.

அண்ணே நீங்க நூறு வீதம் யுத்த நிறுத்தம் ஒப்பந்தம் கடைபிடிக்க வேணும் எண்டிறயள். எங்கட மக்கள், எங்கட மக்கள் பட்டினி கிடக்கீனம் ,சாகினம் எண்டிறயள் உண்மை! நியாயமா யோசிக்கிற எல்லா மனுசனும் மனுசியும் இதை ஒத்துக் கொள்ளுவினம். ஆனாலும் அண்ணே சின்ன டவுட். நீங்க பகிடிக்கு சொல்லுறீயளா? உண்மையா சொல்லுறீயளா?

நீங்க பகிடிக்கு சொல்லுறீயளா எண்டா இதுல நாங்க கதைக்கிறது வேஸ்ட். உண்மையென்டா சில விசயத்த உங்கட மேலான கவனத்துக்கு கொண்டு வாறோம் அண்ணே.

நீங்க ஏ9 பாதை திறக்கோணும் ஏ9 பாதை திறக்கோணும் என்று ஒரே புடியா நிற்கிறீயள். சரி! ஒரு கதைக்கு ஒத்துக் கொள்ளுவம். ஏனென்டா மனிதாபிமான நெருக்கடி இருக்குது. இது உண்மையிலும் உண்மை. ஊரறிந்த உண்மை. அனுபவபூர்வமான உண்மை. பனங்கிழங்குக்கும், மரவள்ளி கிழங்குக்கும் தவண்டையடிக்கிற நிலவரம் எங்கட ஊருக்குள்ள வந்துட்டுது. அப்ப சாப்பாடு போக வேணும். மருந்து போகவேணும். மண்ணெண்ண, பெற்றோல், டீசல், குழந்தைகளின்ர பால்மா போக வேணும். எல்லாத்துக்கும் மேலால ஆக்கள் போய் வர வேணும்.

அண்ணே உங்களிட்ட களவெடுக்கிற லாவகம் பழகின ஆக்கள் யாழ்ப்பாணத்தில சனத்துக்கு கப்பல்ல வாற சாமானில கொஞ்சத்த கள்ள சந்தைக்கு அனுப்பினம். அது உங்களுக்கும் விருப்பம் என்டது அவைக்குத் தெரியும். சனத்துக்கு சாமான் போறது குடுக்கிறவைக்கு மேல நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கக் கூடாது எண்டதுல நீங்க கவனமா இருக்கிறீங்க. நீங்க வசதியா போய் நின்னு ஜெனீவாவில கதைக்கிறதுக்கு பொயின்ட்ஸ் வேணுமில்ல.

சரி பொன் முட்டையிடும் வாத்துறோட்டுக்கு வருவம். அப்பிடி ஏ9 போய் வாறது எண்டா இப்ப ஓமந்தையிலோ, முகமாலையிலோ கப்பம் வேண்டுறதில்ல, என்ற நிலவரத்த கொண்டு வர வேணும். நீங்க அந்த பாதையால போற வாற ஆட்கள ,பிரயாணிகள கடத்திக் கொண்டு போகாம இருக்க வேணும். இத கண்காணிக்கிறதுக்கு ஆக்கள் வேணும். இது உள்ளுர் ஆக்கள் சரிபட்டு வராது. ஏனெண்டா அவ உங்களுக்குப்யப்படுவினும் நேர்மையா இருந்தாலும் நீங்க உங்கட இரண்டாம் நம்பர்வேலைக்கு பழக்கி போடுவியள். வெளிநாட்டு ஆக்களிருக்கிற யுத்த நிறுத்த கண்காணி;ப்புக்குழு, ஐ.சி.ஆர்.சி போன்றவைதான் இதுக்கு தோது. ஏனென்டா அண்ணே நீங்க நூறுதரம் சொன்னாலும் அண்ணே நீங்க றோட்டில காசு புடுங்க மாட்டயள் எண்டத இந்த எளிய சனம் நம்ப போறதில்ல. தமிழீழ அரசு கோடீஸ்வர அரசாக இருப்பதும் ,தேசியத் தலைவர் சுகபோகமாக வாழ்வதும் இந்த சனத்துக்கு புடியாது. சரியான பொறாம புடிச்ச சனம். ஆனபடியாத்தான் அண்ணே இந்த ஏற்பாடு வேணும். நூறு இருநூறு கண்காணிப்புக்குழு காரர்கள் ஒமந்தையிலும், முகமாலையிலும் ஏ9 பாதையில் ரோந்திலும் இருக்க வேணும் .அப்படி இருந்தாலும் உங்களால சுழிக்கேலும். என்டாலும் அண்ணே ஓரளவாவது அண்ணே, சாமானும் சனமும் பாதுகாப்பா போய் வருது என்றொரு தெம்பிருக்கும். யாழ்ப்பாணத்தின் பட்டினி நிலையும் முடிவுக்கு வரும்.

இன்னொரு பிரச்சினை இருக்கண்ணே, இலங்கையிலிருந்து போத்துகீசர், ஒல்லாந்தர் கறுவா கராம்பு யாவாரம் செய்த மாதிரி ஆங்கிலேயன் வந்து கோப்பி தேயிலை ரப்பர் ஏற்றுமதி செய்தமாதிரி நீங்க பொலிஸ், நீதித்துறை, நிர்வாகம், எல்லாம் வச்சிருக்கிற வன்னி நாட்டில இருந்து நீங்க இப்ப லேட்டஸ்ட்டா கிளேமோர், பார்சல் குண்டு, தற்கொலை குண்டு என நாலா பக்கத்துக்கும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறியள். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது போல் உங்களது கப்பல்களில் வெடி மருந்துகளையும், நவீன ஆயுதங்களையும் உலகெங்கும் இருந்து வன்னி நாட்டுக்கு கன கச்சிதமாக கொண்டு சேர்ப்பிக்கிறீர்கள். வன்னி நாட்டு தமிழரசின் வழி காட்டலின் கீழ் வாகனக் கடத்தல், போதை வஸ்து வியாபாரம் என்பன தளைத்தோங்குகின்றன.

அண்ணே, நீங்க இப்படி வெடி குண்டுகளை, தற்கொலை குண்டுகளை தெற்கிற்கு அனுப்புவதால் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் குடியிருக்க விரும்பாமல் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, கொள்ளுபிட்டி, பம்பலபிட்டி, வத்தளை, நீர்கொழும்பு, மொறட்டுவ, கல்கிசை மலையகம் என போய் வாழும் தமிழ்ச்சனமும் அடிவாங்கக்கூடிய ,எப்போதும் சந்தேக பிராணிகளாக பார்க்கப்பட கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறியள். எனவே இந்த குண்டுகள், துவக்குகள் அனுப்பும் விபரீத விளையாட்டும் கண்காணிக்கப்பட வேண்டும். ஏனெனில் உங்களுடைய இந்த வன்னியிலிருந்து பயங்கரவாத ஏற்றுமதி யாவாரம் நேரடியாகவே பல லட்சம் மக்களை அகதிகளாக்கக்கூடியது. பல ஆயிரம் மக்களை உயிர்ப்பலி வாங்கக்கூடியது.

நீங்க கடந்த ஏப்ரல் மாதம் திருகோணமலை சந்தையில் நடத்திய ஒத்திகை தமிழ் மக்களை பாக்கு நீரிணை தாண்டி இராமேஸ்வரத்தில் கரையொதுங்க வைத்தது.

ஆனபடியா அண்ணே, வன்னியிலிருந்து வெளியில போற வாற வாகனங்கள் ஆட்கள் நன்கு சோதனையிடப்பட வேண்டும் என்பத நேர்மையா மனசத் தொட்டு யோசிச்சா ஒத்துக்கொள்ளுவயள். ஏனென்டா உங்களுக்கு பழக்கதோசம் விடாது பாருங்க. கிட்டடியில மதவாச்சியில பிடிபட்ட வானில செசிக்குள்ள குண்டு வைச்சு அனுப்பினீங்க. பொலிஸ் நாய் அத மணந்து பிடிக்க கூடாதென்டதுக்காக வானுக்குள்ள இறைச்சியை வச்சீங்க. டிரைவர் சிங்களவர். பொலிஸ் புடிச்சுப்போட்டுது. இதேமாதிரி முகமாலைக்குள்ளால போகேக்கேயும் ஆயுதங்கள் பிடிபட்டிருக்கு. காலி கரந்தெனியாவிலும் கிளேமோர் சில மாதங்களுக்கு முன்னர் பிடிபட்டிருக்கு. கதிர்காமத்துக்கு கிட்ட திசமாறாகமவில தற்கொலை குண்டு வெடிக்க வைக்கும் பெண் பிடிபட்டிருக்கு. இலங்கை பாராளுமன்றத்துக்கு பக்கத்துல பத்தரமுல்லவில வச்சும் தற்கொலை குண்டு பெண் பிடிப்பட்டிருக்கு. வத்தளையில் வச்சு ஆயுத லொறி பிடிபட்டிருக்கு, பொரளை சந்தை பகுதியில் பொது மக்களை இலக்கு வைத்து வைக்கப்பட்ட குண்டு பிடிப்பட்டிருக்கு. இப்படி எக்கச்சக்கமா பிடிபட்டிருக்கு. கடலால நடந்ததுகள பற்றி மிக நீண்டு போகும் என்டபடியால் சொல்லேல்ல. நீங்க கெப்பிட்டிகொலாவில 150 சிங்கள கிராம சனங்கள கிளேமோர் கண்ணிவெடியில் ஒரே மூச்சில கொலை செய்தீங்க. இராணுவ தலைமயகத்துக்குள்ள பிள்ளதாச்சி பொம்பிளையை தற்கொலை குண்டுதாரியா அனுப்பி ஆமிக்காரரை கொலை செய்தீங்க. இலங்கை ஆமி கொமான்டர காயப்படுத்தினீங்க. ஹபரணையில லீவில வீட்டுக்கு பஸ்ல வந்த நேவிக்காரர் நூறு பேரை தற்கொலை குண்டு வச்சு கொலை செய்தீங்க. எல்லா இடத்திலேயும் 1983 மாதிரி ஒன்று தமிழருக்கு எதிரா நடக்காதா என்று திரும்பத் திரும்ப ட்ரை பண்ணுறீங்க. சிங்கள சனம் நிதானமா இருக்கிறது. உங்கள கோபபடுத்திச்சு. காலியிலும் போய் அடிச்சு பாத்தீங்க. சரிவரேல்ல. திருகோணமலையில இருந்து காலி வரைக்கும் அடிச்சு இனக்கலவரம் வந்து தெற்கில தமிழர் இருக்கிற இடமெல்லாம் சுடலையாக வேணும் என்று ட்ரை பண்ணுறியள். என்னவோ அண்ணே இது உங்களுக்கு பழக்க தோசமா போச்சு. நீங்க உங்கட ஆக்கள் டக்கென்னு இந்த பழக்க தோசத்த விடமாட்டினம். ஆனபடியா நீங்க பயங்கரவாதத்த ஏற்றுமதி செய்யிற முக்கிய துறைமுகமான ஓமந்தையிலும், முகமாலையிலும் முறையான சோதனை இருக்க வேண்டும். இத சிம்பிளா விட்டுட்டு போக ஏலாது அண்ணே. ஏனென்டா நீங்க இப்ப சொல்லுற நாங்களும் ஒத்துக்கொள்ளுற யாழ்ப்பாணத்து சனம் எதிர்நோக்குற மனிதாபினமான நெருக்கடிய விட பயங்கரமான மனிதாபிமான நெருக்கடி நாடு முழுதும் உருவாகும் அண்ணே. நீங்க சொல்லுறதில அண்ணே முன்னுக்கு பின் முரண்பாடும் இருக்கு. யாழ்ப்பாண சனம் எங்கட சனம் கஷ்டப்படுதென்று அழூறியள். மற்றப்பக்கம் நாடு முழுக்க குண்டு வைப்பம் என்று வெருட்டுறியள். ஏதோ சரவணமுத்து மைதானத்தில, பிரேமதாசா மைதானத்தில, யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில, காலி,கண்டி மைதானங்களில ஏதோ கிரிக்கட் விளையாட ரெடி என்ற மாதிரி சிம்பிளா மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்குவோம் என்று எச்சரிக்க விடூறியள். ஏனென்டா அண்ணே கற்பு நிலையெண்ணு சொல்ல வந்தா இரு கட்சிக்கும் அதனை பொதுவில் வைப்போம் என்று பாரதி பாடியிருக்கிறான் அண்ணே. ஆனபடியா அண்ணே நீங்க நாடு முழுக்க உருவாக்கி வச்சிருக்கிற மனிதாபிமான பிரச்சின பற்றியும் பேச வேணும்.

ஏ9 பாதை கட்டாயம் திறக்க வேணும் அண்ணே. ஆனா இப்படியான பிரச்சினையள் கடல் போல விரிஞ்சு கிடக்கு. இந்தப் பிரச்சினையள கருத்துக்கு எடுத்துதான் அண்ணே திறக்க வேணும். இத நீங்க மறுக்கேலாதென்று நம்புறம் அண்ணே.

அடுத்த பிரச்சின ,நீங்க ஜெனீவாவுக்கு பொன் முட்டையிடும் வாத்து வாங்க போயிருந்தாலும் நீங்க தமிழாக்களிட பிரச்சினைக்கு என்ன தீர்வு வச்சிருக்கிறீங்க ,என்டும் கேட்டனீங்களாம் எண்டு ரேடியோவில கேட்டம். அதுக்கும் அரச தரப்பு பதில் சொல்லேல்ல, எண்டு குறைபட்டனீங்களாம். ஏன் அண்ணே தமிழரின்ர ஏகபிரதிநிதிகள் நீங்கள.; நீங்களெல்லோ என்ன தீர்வு வேணும் என்று சொல்லியிருக்கோணும். கடைக்குப் போறவன் தனக்கு என்ன சாமான் வேணும் என்று கடைக்காரனிடம் சொல்ல வேண்டும். என்ன சாமான் இருக்குதென்னு கேட்கக்கூடாது. நெருப்பாத்த நீந்தி கடந்த உங்களுக்கு நாங்க புத்தி சொல்லத் தேவையில்ல.

ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை எண்டு போய் இப்படி லூட்டி அடிச்சு, சிரிச்சு, சிவப்பு விளக்கு பகுதிக்கெல்லாம் போய் பிறகு மனம் சலிச்சு கோவிச்சுக்கொண்டு வரக்கூடாது. போனா எங்கட மக்கள், எங்கட மக்கள் என்று சொல்லுறீயளே அந்த அலுவல இதய சுத்தியோட பார்க்க வேணும். இல்லாம உங்கட பயங்கரவாத யந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்கு ஈழ மா சுடலையை உருவாக்குவதற்கு ஜெனீவாவில வழி கிடைக்குமா எண்டு பார்க்க கூடாது. ஜெனீவா ஒரு நல்ல இடம். அது மனித உரிமைகளை பற்றி பேசுற இடம். உலக மகா சபை ஐ. நா இருக்கிற இடம். அங்கே போகேக்க கோயிலுக்கு போற மாதிரி மனச்சுத்தத்தோட போக வேணும். கள்ளச்சாராய வியாபாரி தனது சாராய யாவாரம் கச்சிதமாக நடைபெற வேணும் என்று அழுக்கு மனத்துடன் கோயிலுக்குப்போற மாதிரி போகக்கூடாது.

நீங்க பேர்லின் சுவர் போல் யாழ் குடாநாட்டு மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள், எண்டு ஐரோப்பாக்காரருக்கு மனித அவலத்தை விளங்கப்படுத்த வெளிக்கிட்டனீங்க. நான் மரியாதையுடனும், பணிவுடன் கேட்கிறன், அண்ணே உங்களுக்கு பேர்லின் சுவரின்ர சரித்திரம் தெரியுமா எண்டு. ஹிட்லர் என்றொரு நாசகாரி இருந்து ஜேர்மனியிலயும் ,அயலட்டையில் உள்ள நாடுகளிலயும் உங்கட பாணியிலேயே பிரமாண்டமாக அக்கிறமம் செய்யேக்க நாலைஞ்சு நாடு சேர்ந்து அடிச்சுத்தான் அவரை கட்டுப்பாட்டுக்கே கொண்டு வரவேண்டியிருந்தது. அந்த காலத்தில வல்லரசுகளுக்குள்ள இரண்டு முகாம் இருந்தது. ஒன்று சோவியத் முகாம், மற்றது மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க முகாம். இந்த முகாம்கள் ஒருங்கிணைஞ்சுதான் ஹிட்லர் எண்ட மனிதகுல விரோதியின்ர அட்டகாசங்களை கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்தது. வௌ;வேறு நாடுகள் வௌ;வேறு பிரதேசங்களை பொறுப்பெடுத்துக் கொண்டன. இந்த சூழ்நிலையில்தான் பேர்லின் சுவர் எழும்பியது. கால ஓட்டத்தில் அது தேவையற்று இடிந்து விழுந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினே.

ஆனா அண்ணே ,யாழ்பாணத்த உங்கட கையில வைச்சிருந்த காலத்தில இருந்து இப்ப உங்கட கொன்றோலுக்க வச்சிருக்கிற வன்னி மற்றும் உங்கட கட்டுப்பாட்டு பிரதேசங்களில இருகிற சனங்களெல்லாம் இரும்புதிரைக்கு பின்னால தானே வாழுதுகள். ஒரு குஞ்சு குருமான் பள்ளிக்குப் போகேலுமே, வீட்டில இருக்கேலுமே, ஒழுஙகேல போகேலுமே எல்லாரையும் கலைச்சு முனசிப்பாலிற்றி காரர் றோட்டில புடிச்ச நாய்மாதிரிதானே அண்ண றெயினிங்குக்கு கொண்டு போறனீங்கள். வன்னிபுனத்தில் அந்த பள்ளிக் கூடப் புள்ளையள் ஏனண்ண சாக வேண்டி வந்தது? நீங்க பள்ளிக்கூடம் போறதெண்டா றெயினிங்கெடுக்க வேண்டும் இல்லாட்டி பள்ளிககூடம் போகேலாது எண்டு உங்கட கல்வியமைச்சர் பேபி சுப்பிரமணிம் சட்டம் போட்டதால் தானே. உங்கட கட்டுபாட்டு பிரதேசங்களிலிருந்து இப்பவும் சரி ,அந்த காலத்திலும் சரி உங்கட கண்ணில எத்துப்படாம தப்பிப்போறதெண்டா பேர்ளின் சுவர் தாண்டிக்குதிக்கிறத விட ஆபத்தான வேல .இப்ப யாழ்ப்பாணம் பேர்ளின் சுவர் எண்டு நீஙக உளறிறது எனக்கு உண்மேல விளங்கேல்ல அண்ண. யாழ்ப்;பாணச் சனம் கஸ்டப்படூதெண்டா அண்ண நான் பணிவுடன் சொல்லிறன் நீங்களும் அதுக்கு பொறுப்பெண்டு.
நீங்க சொன்னீங்க சர்வதேச கண்காணிப்புடன் வடக்கு கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பு நடக்க வேணும் என்று. அண்ணே உங்கட பயங்கரவாதத்தின்ர பிடி வடக்கு- கிழக்கில இருக்கு மட்டுக்கும் சர்வதேச சமூகம் என்னெண்டண்ணே இந்த பணியை செய்ய முடியும்? நீங்க 2004ம் ஆண்டு தேர்தல்ல நடத்தின திருக்கூத்துக்கள், அட்டகாசங்கள் உலகத்துக்கு நல்லாத் தெரியும். 2005 ஜனாதிபதி தேர்தல்ல சனத்தை வெருட்டி வாக்களிக்காம பண்ணியதுக்கு உலகம் எந்தளவு விசனமடைந்தது என்று உங்களுக்கும் தெரியும். இப்ப நீங்க சொல்ற கதை அவைக்கு ஒரு உலக மகா பகிடியை விட்டிருப்பதாகத்தான் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

மற்றது ஜனநாயகம் பற்றி நீங்கள் பேசியது அண்ணே, இலங்கை அரசாங்கத்தை விட நாங்க ஜனநாயத்தை கடைபிடிக்கிறதில பத்தரமாத்து தங்கங்கள் என்றமாதிரி பேசியிருக்கிறீங்க. 1983ம் ஆண்டு ஜனநாயக வழியில் தனிநாடு கோரியவர்களுக்கு ஆறாவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்து பிரிவினை கோரிக்கைக்கு தடை ஏற்படுத்தியதாக சிறீலங்கா அரசை குறைபட்டுக் கொண்டீர்கள். அண்ணே ஜனநாயக மீறலுக்கு இவ்வளவு பலவீனமான உதாரணமா உங்களுக்கு கிடைத்தது. மற்றவரின் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதை விட்டு உங்கள் கண்ணில் இருக்கும் விட்டத்தை பாருங்களேன் அண்ணே. நீங்க மினி 1983 ஐ வடக்கு முஸ்லீம்களுக்கு எதிராக 1990 நடத்தினீர்கள் அண்ணே. வெலிக்கடை படுகொலைக்கு நிகரான கந்தன் கருணை படுகொலை, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, அனுராதபுர போதிமரத்தின் கீழ் படுகொலை என கிடுகிடுவென பாசிச பயங்கரவாதிகளாக மாறிக்கொண்டு உயாந்து கொண்டு போனீர்கள். வடக்கு -கிழக்கில் இருந்த அத்தனை அரசியல் இயக்கங்களையும் அழித்தொழித்து தடை செய்தீர்கள். இரத்த வாடை உங்களுக்கு பழக்கப்பட்டு விட்டதால் உங்கள் உணர்வுகள் மரத்துப் போய்விட்டதா அண்ணே.

நீங்க மனித உரிமைiயின் தலைமையிடத்தில் இருந்து பேசுகிறேன் என்னும் போது உங்களுக்கு கூச்ச நாச்சம் இருக்கவில்ல பாருங்க. வரலாற்றின் முரண் நகை என்னவென்றால் கொலைகாரர்கள,; நீங்கள் ஒட்டு மொத்தமாகவே ஒரு சமூகத்தை சூறையாடிவர்கள் நீங்கள் உங்களுக்கு பேசுவதற்கு கிடைத்த இடத்தைப் பாருங்கள். இதைத்தான் தமிழர்களின் தலைவிதி என்பதோ. பாரதி கேட்டது போல் விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் என எண்ணத் தோன்றுகிறது.

அண்ணே நீங்க இந்த 25 வருசத்தில மாற்று கட்சிகாரருக்கு அவங்களுக்கு ஆதரவளிச்ச ஆக்களுக்கு முஸ்லீம் சனத்துக்கு படிச்சவங்களுக்கு சாதாரண சிங்கள சனத்துக்கு, இந்தியாவுக்கு செய்த துரோகத்துக்கு, செய்த அநியாயங்களுக்கு அக்கிரமங்களுக்கு இன்னைக்கும் நீங்க போய் ஜெனீவாவில போய் பேசேக்க அவங்கள் சகிச்சுக்கொண்டிருக்கிறாங்களெண்டா அதில ஒரு தார்மீக நியாயம் இருக்கு. ஆனால் ஏதோவொரு வழியில் சமாதானம் வரும், நிரந்தர தீர்வு வரும் ,மனிதாபிமான மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியேதும் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் கனவில் இருக்கும் போது நீங்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறியள். இது உங்கள் அனுபவத்திற்கும், முதிர்ச்சிக்கும் அழகல்ல.

உங்களது கால்நூற்றாண்டுகால நாசகார வேலைகளுக்கு எத்தனை சமூகங்கள், எத்தனை மனிதர்கள் உங்கள்ள கோபப்பட வேண்டும். எல்லோரும் எமது நாட்டில் அமைதி திரும்ப வேண்டும். எமது மக்கள் கௌரவமாக வாழ வேண்டும் என்று நினைத்துத்தான் உங்களால் ஏற்படுத்தப்படும் அசௌகரியங்களை எல்லாம் துன்ப துயரங்களை எல்லாம் சகித்துப் போகிறார்கள்.

கடைசியா ஒண்ணு சொல்ல வேணும் என்டு நினைக்கிறன். அண்ணே பலரை பலநாள் ஏமாத்தலாம். எல்லாரையும் எல்லா நாளும் ஏமாத்தேலாது. ஆனபடியா நீங்க செய்த அட்டூழியங்களை நிட்டூரங்களை ஒருமுறை ஆற அமர சிந்தியுங்கள். அழிவு முறையில் இல்லாமல் ஆக்கமுறையில் சிந்தியுங்கள். கடந்த கால்நூற்றாண்டில் எங்கட சனம் படாததெல்லாம் பட்டுட்டு அதுகளை காயடிச்சு விளையாடாதேங்க அதுகள் நிம்மதியா, கௌரவமா சுயமரியாதையோட ,சுதந்திரமா வாழுறதுக்கு ஏதும் செய்யேலுமென்டா செய்யுங்க. பட்டது போதும்.

அகதித்தமிழன்

நன்றி: தமிழ்நியூஸ்வெப

கேதீசுக்கு மரண தண்டனை அளித்த காட்டுமிராண்டிகள்

மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் துரோகங்கள் குறையும், துரோகங்கள் தடுக்கப்படும் என்ற வாதம் மரண தண்டனை ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது. புலிகள் நினைத்தபோதெல்லாம் "துரோகிகளுக்கு" மரண தண்டனையை வழங்கி வருகிறார்கள். சுதந்திரமாக வாயைத் திறப்போம் என்பவர்கள் "துரோகங்கள்" என்ற பெயரில் மரணதண்டனை பெறுவோம் என்பது "தெரிந்தும்" நடந்து கொண்டு தான் இருக்கிறது. "துரோகங்கள்" என்றுமே இல்லாத அளவுக்கு வளர்ந்தும் இருக்கிறது. நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் என்ற நீளும் வரிசையில். கேதீஸ் போன்ற சாத்வீகர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பொழுதும் "துரோகிகளுக்கு" பஞ்சமில்லை. சுதந்திரம் விரும்புபவர்களுக்கு உயிர் மீது எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறான நிலையில் இப்படிப்பட்ட மரண தண்டனைகள், நீங்கள் நிர்ணயிக்கும் "துரோகங்களை" தடுத்து நிறுத்தும் என்பதோ, "துரோகம்" செய்ய நினைப்பவர்களை தடுக்கும் என்பதோ நகைப்பிற்குரிய வாதமாகத் தான் எனக்கு தெரிகிறது.

இது பழிக்குப் பழி வாங்கும் மனோபாவம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதே சமயத்தில் மரண தண்டனை கூடாது என்பவர்களின் வாதங்களும் சரியாக முன்வைக்கப்படுவதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு உயிரை எடுக்க உரிமையில்லை என்று கூறும் ரோசாவசந்த் புலிகளைப் பற்றி வாயே திறந்ததில்லை என்பதும், கேதீஸ் கொல்லப்பட்டது அவரது பதிவில் ஒரு அலையைக் கூட ஏற்படுத்தவில்லை என்பதும் அறிந்தது. கெப்பெத்தி கொலாவையில் 60க்கும் மேற்பட்ட அப்பாவி சிறார்களையும் பஸ் பயணிகளையும் அப்பாவி மக்களையும் பலரை குண்டுவீசி தாக்கியதே அது மனிதநாகரிகத்தின் முதிர்ச்சியான நிலையா ? புலிகளின் இந்த தாக்குதலை அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் புலி ஆதரவாளர்களும் ஆதரித்துக் கொண்டு தானே இருக்கின்றன. காட்டுமிராண்டித்தனத்தை கண்டிக்கக்கூட வக்கில்லாத மக்கள் இருக்கும் போது மனித நாகரிகம் இன்னும் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பது தான் தெளிவாகிறது.

மரண தண்டனையை நீக்கினால் மட்டும் நாகரிக முதிர்ச்சி ஒரு புலி இயக்கத்துக்கு வந்து விடுமா ? எத்தனையோ அப்பாவிகள் புலிகளின் அராஜகங்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சத்தமில்லாமல் மரணிக்கும் நிலையில், சட்டங்களை நீக்குவதால் மட்டும் நம்மை மனிதகுல நாகரிகத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியுமா ?

"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்" என்று ஒரு வாசகம் உண்டு. மரணதண்டனையும் ஒருவன் மீதோ அல்லது ஒரு சமூகம் மீதோ பிரயோகிக்கப்படுவது வன்முறைக்கு ஒப்பானது தான். கருணா போன்றவர்கள் இதிலிருந்து வெளியேறுவதில் ஆச்சரியமென்ன? அவர்கள் புலி முகாம்களை தாக்குவதில் ஆச்சரியமென்ன?

மரண தண்டனை பழிவாங்கும் குரூரமான வெறித்தனம் தானே தவிர நீங்கள் குற்றம் சாட்டும் "துரோகங்களை" தடுத்து விடாது.

-
நன்றி தமிழ் சச்சி

துரத்தும் இறந்தகாலமும் அச்சுறுத்தும் நிகழ்காலமும்

வாஸந்தி (தீராநதி)

இறந்த காலமும் நிகழ்காலமும் வரலாற்றுப் புத்தகத்தின் பின்னிப்பிணைந்த சுழல் பக்கங்கள். நாம் வசிக்கும் புவி கர்ம பூமி என்பதால், வரலாற்றில் ஏற்படும் சுழற்சி தனி நபரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளி உலகத்து அரசியல், நமது அடுக்களைக்குள் நுழைந்துவிட்ட காலகட்டத்தில், தனி மனிதனின் வாழ்வு, அரசியல் நிகழ்வுகளால் சலனப்படாமல் எப்படி இருக்க முடியும்? கடந்த காலத்து நெஞ்சில் பதிந்துபோன நினைவுகளை நான் அசைபோடும் தருணத்தில், இன்று கிடைக்கும் சில சேதிகள் அந்த நினைவுகளோடு சம்பந்தப்படுகையில், பக்கங்கள் வெகு வேகமாகச் சுழன்று இடையில் நழுவிய காலம் பனியாய்க் கரைந்து, இன்றுடன் சங்கமித்துப் போகிறது. மற்ற நினைவுகள் ஒதுங்கி நிற்க இன்று கிடைத்த சேதியும் அது சம்பந்தப்பட்ட நினைவுகளுமே மனத்தை ஆட்கொள்ளுகின்றன.

நார்வே நாட்டில் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் நான் தங்கிப் படித்த நாட்கள் இன்று மீண்டும் மிகத் தாபத்துடன் நினைவுக்கு வருகின்றன. கண்களில் நீரை வரவழைக்கும் நினைவுகள் அவை. அமைதி வகுப்பு ஆரம்பித்த அன்று ஆசிரியர் கேட்ட கேள்விக்கு என் சக மாணவரும் அருமை நண்பருமான இலங்கைத் தமிழர் கேதீஷ் லோகநாதன் சொன்ன விடை, பளிச்சென்று செவியில் ஒலிக்கின்றன. அவரது ஒல்லியான நெருங்கலான உருவம் எதிரில் நிற்கிறது. "இன்று காலை எழுந்ததும் உங்களைச் சந்தோஷப்படுத்திய விஷயம் என்ன?" என்று ஆசிரியர் கேட்டார். சாமான்ய சராசரி வாழ்வு வாழ்ந்த என்னைப் போன்றோர், ஆள் ஆளுக்கு மிக சாமான்ய பதில்களைச் சொன்னோம். கே;தீஷ் சொன்னார்: நான் இன்னமும் ஜீவித்திருக்கிறேன் என்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவரது நாவிலிருந்து வந்த அந்த எளிய வார்த்தைகள் விசேஷ அர்த்தம் பொதிந்தவை என்று உணர்ந்த வகுப்பில், திடீரென்று மூச்சுக் காற்று கனத்துப் போயிற்று.

சென்ற மாதம் கொழும்பில் இலங்கை இனப்பிரச்சினைக்கு சாமாதான வழிமுறைகளைத் தேடும் பணியில் மிகத் தீவிரமாக இருந்த கேதீஷ், தமிழீழ விடுதலைப்புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். சேதி அறிந்து நான் எத்தனைப் பதறிப்போனேன் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை. கூடப் பிறந்த சகோதரனை இழந்ததுபோல, எனக்குத் துக்கம் ஏற்படுகிறது. நடந்துபோன அக்கிரமத்துக்கு யாராவது பதில் சொல்வார்களா என்று தவிக்கிறேன்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக எனக்குக் கேதீஷ் பழக்கம். முதல் முதலில் இலங்கைத் தமிழர் இனப்பிரச்னையை எனக்கு மிகத் துல்லியமாக, அறிவார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் விளங்க வைத்தவர் அவர். ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பைச் சேர்ந்தவராக அப்போது அவர் இருந்தாலும், தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் பயங்கரவாதம் தலையெடுத்ததும், இனமே இனத்தை அழிக்கும் போக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் புலிகள் அமைப்பு கடைப்பிடிக்க ஆரம்பித்ததும், ஒரு புதிய பாசிஸத்தை தமிழ் மக்கள் தனது இனத்தவரிடமே எதிர்கொள்ளவேண்டிய திசைதிருப்பலில் அவர் நிலைகுலைந்து போயிருந்தார். பல்வேறு தரப்பிலிருந்து எனக்குக் கிடைத்த, நான் எனது நாவலுக்காகச் சேகரித்த தகவல்கள் அவரது கவலைக்கான காரணங்களை உறுதிப்படுத்தின.

இடதுசாரி கொள்கை கொண்ட கேதீஸிற்க்கும் எனக்கும் கருத்தொற்றுமை மிக இயல்பாக நிகழ்ந்தது. அவரது கவலைகள் என்னையும் தொற்றிக்கொண்டன. ஆஸ்லோவில் அவரைச் சந்திப்பேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. அங்கு சென்றபிறகுதான் சுமார் 9000 இலங்கைத் தமிழ் வாலிபர்களும் யுவதிகளும் நார்வேயில் அடைக்கலம் தேடி வந்து வாழ்வது தெரிந்தது. அவர்கள் அகதிகள் அந்தஸ்த்தில் வாழ்ந்தாலும், அநேகமாக எல்லோரும் அவர்களுக்கு வெளிநாடு செல்ல டிக்கெட் எடுத்து அனுப்பக்கூடிய வசதி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். இனப்பிரச்னை இலங்கையில் தீவிரமானதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எங்காவது உயிருக்கு அபாயம் இல்லாமல் பிழைத்துக் கொள்ளட்டும் என்று அனுப்பத் தலைப்பட்டார்கள். அநேகம் பேர் புலிகள் பிடியிலிருந்து தப்பவைக்கவே, புலிகள் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்படுவதிலிருந்து விடுவிக்கவே இந்த முயற்சி எடுத்தார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

அப்படி வெளியில் வந்துவிட்டவர்களும் புலிகளுக்குப் பயந்து வாழ்ந்தார்கள். போராட்டக் களத்திலிருந்து விலகிச் சென்ற காரணத்துக்காகப் புலிகளுக்கு 'அபராதத் தொகையைக் கட்டாயமாகச் செலுத்தவேண்டியிருந்தது. அதனை செலுத்தத் தவறினால் அவர்களது பெற்றோர்களுக்கு ஆபத்தாகலாம் என்கிற அச்சம் இருந்தது. எல்லோருக்கும் நார்வே அரசு ஓரளவுக்கு உதவித் தொகை அளித்தாலும் வேலை கிடைக்கவில்லை என்றால், அதில் சமாளிப்பது கஷ்டம். அதனால் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பத்து பதினைந்து இளைஞர்கள் யுவதிகள் சேர்ந்து வாழ்ந்தார்கள். பலர் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் மாணவர்களாகச் சேர்ந்திருந்தார்கள். நான் சேர்ந்த கோடைப்பள்ளியில் (1988) எனது வகுப்பில் கேதீஸ_ம் அவரது மனைவி பவானியும் கவிஞர் ஜெயபாலனும் இருந்தார்கள். என்னைப் போல மாணவர் விடுதியில் தங்கியிருந்தார்கள். அவர்களை அங்கு சந்தித்ததும் மிக நெருங்கிய உறவினர்களைச் சந்தித்ததுபோல எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. போராளி அமைப்பிலிருந்து விலகிவிட்டதாகக் கேதீஸ்; சொன்னார்.

தனது போராட்டத்தை வேறு தளத்திலிருந்து செயல்படுத்தவேண்டும் என்று முடிவெடுத்திருந்தார். நல்ல படிப்பும், ஆங்கிலத்தில் அறிவார்த்த தர்க்கபூர்வமான வாதத்திறனும் கொண்டவர். ஜனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். அவர் எடுத்த முடிவு மிகச் சரியானது என்று நான் நினைத்தேன். கேதீஸ்_ம் மிக மென்மையான சுபாவம் கொண்ட பவானியும் நார்வேயில் எனது நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். நார்வேயிலிருந்து இலங்கை திரும்பியதும் இனப்பிரச்னைகள், அவை உருவாகும் காரணிகள், அவற்றை எதிர்கொள்ளவேண்டிய வியூகங்கள் ஆகியவைப் பற்றின ஆய்வில் (புலிகளால் கொல்லப்பட்ட) நீலன் திருச்செல்வனின் ஆய்வு மையத்தில் கேதீஸ்; பணியாற்றி வந்தார். இனப்பிரச்னை தீர்வுக்கான அனைத்து கட்சிப் பிரதிநித்துவ குழுவிற்கு சமீப காலமாகப் பொதுச் செயலராக இருந்தார். புலிகளுக்கு அவரைத் தமிழினத் துரோகி என்று முத்திரைக் குத்த இவை போதுமானவை. ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றார்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளாகப் புலிகளால் தனக்கு ஆபத்து என்று கேதீஸ்; உணர்ந்திருந்தார். எனவே தமிழர் பிரச்னை தீராத நிலையில், குழந்தைகள் பெறுவது பொறுப்பற்றது என்று தம்பதிகள் முடிவு செய்திருந்தார்கள். குழந்தைகள் இருந்திருந்தால் குண்டுபட்டு கேதீஸ்; இறந்த தருணத்தின் தாக்கம் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். பல ஜென்மங்களுக்கு அசுவத்தாமனின் கோபவெறியுடன் புவியில் அலையவைத்திருக்கும்... நமக்குத்தான் எல்லாம் மறந்துவிட்டது. கவலைப்படவேண்டிய விஷயம் எது என்பதுகூட புரியாமல் போய்விட்டது.

இலங்கை இனப் பிரச்னையைக் கூர்ந்து அக்கறையுடன் கவனித்து வரும் எல்லா பத்திரிகைக்காரர்களுக்கும் கேதீஷைத் தெரியாமல் இருக்கமுடியாது. இலங்கைத் தமிழர்களுக்காகக் 'கண்ணீர்' வடிக்கும் நமது தமிழகத்து அரசியல்வாதிகளும், புலிகளைப் பற்றின செய்திகளை மாய்ந்து மாய்ந்து எழுதும் நமது செய்தி ஊடகங்களும் அந்த அக்கிரமக் கொலையைப் பற்றி வாயே திறக்கவில்லை; பலவருடங்களாக புலிகள் செய்துவரும் குற்றங்களைப் பற்றி வாயே திறக்காதது போல...அடைக்கலம் தந்த மண்ணுக்குத் துரோகம் இழைக்கிறோம் என்கிற கூச்சம் இல்லாமல், பாரத மண்ணில், தமிழ் மண்ணில் முன்னாள் இந்தியப் பிரதமரைக் கொன்று, நமது சட்டத்தை சந்திக்கத் துணிச்சல் இல்லாமல் வீர சாகசப் போர்வைக்குள் மறைத்துக் கொண்டவர்கள் அவர்கள் என்பதுகூட, இப்போது தமிழர்களுக்கு நினைவில்லாமல் போய்விட்டது.

இலங்கை வாழ் தமிழர்கள், புலிகளின் எந்தச் செயலையும் விமர்சிக்கும் உரிமை இழந்து வாய் திறக்காமல் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வாய் திறந்தால் ஆபத்து என்பதைப் புலிகள் மிகத் தெளிவாகக் காட்டிவந்திருக்கிறார்கள். ஆனால், கடல் தாண்டி தமிழ் நாட்டில் இருக்கும் நாம் ஏன் உண்மை பேசத் தயங்குகிறோம் என்பது எனக்கு விளங்காத ஒரு மர்மம். அரசியல் வாதிகள் ஆரம்பகாலம் தொட்டு இலங்கைப் பிரச்சினையை அரசியலாக்கி அதில் லாபம் தேடுகிறார்கள். இது எனக்கு வியப்பை அளிக்கவில்லை. ஆனால், பத்திரிகை தர்மம் என்பது இருப்பதை மறந்தோ அல்லது புலிகள் மிக நேர்த்தியாகச் செய்யும் பிரச்சாரத்திலோ மூளைச்சலவை ஆனதுபோல, தமிழ் பத்திரிகைகள் புலிகள் தலைவர் பிரபாகரனை கதாநாயகப் புருஷனாக வர்ணிப்பதும், பிரமிப்பதும் பூஜிப்பதும் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. புலிகள் விரிக்கும் வலையின் சக்தியோ அது என்று அச்சமேற்படுகிறது.

வால்டர் லிப்மன் என்ற பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளர், செய்தி என்பது முழுமையாக சார்பற்றதாக இருக்கமுடியாது என்று சொல்வார். என்பார். அதாவது நாம் என்ன பார்க்க நினைக்கிறோமோ அதைத்தான் பார்க்கிறோம். எதைக் கேட்க நினைக்கிறோமோ அதைத்தான் கேட்கிறோம். அது அரசியலோ அல்லது ஒரு நபரைப் பற்றின அபிப்பிராயமோ அடிமனத்து கலாச்சார வெளிப்பாடாகவே அதைக் கொள்ளவேண்டும்.

சமீப காலமாகத் தமிழ் மீடியாக்களில் இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பற்றியும் விடுதலைப்புலிகள், அவர்களது தலைவர் பிரபாகரன் பற்றியும் வரும் செய்திகளும் தகவல்களும், பிரசுரிக்கப்படும் பிரபலஸ்தர்களின் எண்ணங்களும் அத்தகைய வெளிப்பாடாகவே தோன்றுகிறது. சில அரசியல்வாதிகளின் பேச்சு எதிர்பார்த்ததுபோலவே உணர்ச்சிவசப்பட்டு, பல சமயங்களில் அதீத எல்லையைத் தொடுகிறது. மொழி என்கிற பிணைப்பு எப்பவுமே உணர்ச்சியைத் தூண்டும் சக்தி கொண்டது. கண்ணையும் மறைக்கவல்லது. இலங்கை இனப் பிரச்சினையைப் பல ஆண்டுகளாகத் தீவிரமாகக் கவனித்து, பல போராளிக் கும்பல்களுடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டு, களப்பணிமூலம் பல உள் விவரங்களை அறிந்து இப்போதுள்ள அரசியல் நிலையைக் கண்டு வருந்தும், பதைக்கும், பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாட்டுப் பத்திரிகைகளின் தான்தோன்றித்தனமான, பொறுப்பற்ற பேச்சும் எழுத்தும் அச்சத்தைத் தருகிறது. .

ஒரு சில காலம் போர் நிறுத்தம் என்பது நடந்ததே செயற்கையானது என்பது போல மீண்டும் போர் மேகங்கள் இலங்கையில் சூழ்ந்திருக்கின்றன. சில கசப்பான யதார்த்தங்களை நாம் மனதில் கொள்ளவேண்டும். இனப்பிரச்னை துவங்கிய காலத்தையும், தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், போராட்டத்தின் நியாயமான காரணங்களையும் இப்போது ஆராய்வது வீண். ஆயுதப் போராட்டமாக அது மாறியதுமே அதன் சுழி மாறிவிட்டது. இன்று இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் அது. 'போர் நிறுத்த' காலத்தில் புலிகள் வன்முறைச் செயல்களில் ஈடுபட ஆரம்பிக்க... இலங்கை அரசு ஆவேசமாக ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டது. மக்களும் நாங்களும் வேறு அல்ல என்று புலிகள் சொன்னாலும், அதில் அப்பாவித் தமிழ் மக்கள்தான் பலியாகிறார்கள். செஞ்சோலை நிகழ்வு அதைத்தான் சொல்கிறது. இலங்கை ராணுவம் வீசிய குண்டில் முல்லைத்தீவு செஞ்சோலை அநாதை இல்லத்து அறுபத்தொரு குழந்தைகள் மாண்டார்கள் என்பதைக்கேட்டு நாம் எல்லோரும் பதைத்தோம். வன்மையாகக் கண்டித்தோம். இலங்கை அரசு அதற்கு எந்த விளக்கம் அளித்தாலும் அது அத்துமீறல், அராஜகம் என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது.

அந்தக் குழந்தைகளின் சாவுக்காக, புலிகள் தலைவர் கண்ணீர் விட்டார் என்கிற செய்தி, மிக நெகிழ்ச்சியுடன் தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டது. அவரது மென்மையான இதயத்தின் அடையாளமாக. அதே தலைவரின் ஆணையால் பச்சிளம் தமிழ்ச் சிறுவர்கள் சிறுமிகள் இன்றும் கட்டாயமாக புலிகள் படையில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதும், அவர்களை அனுப்பப் பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதும், அதற்கு பயந்துகொண்டே அகதிகளின் வருகை அதிகரிப்பதும், யார் இதயத்தையும் இங்கு ஏன் தொடவில்லை? இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இலங்கை சென்றிருந்தபோது (போர் நிறுத்த காலம்), மட்டக்களப்பில் ஒரு முஸ்லிம் பெரியவர் ஒரு 'முஸ்லிம் பொடியனை'ப் புலிகள் கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் சொன்னார். நிறைய பொடியன்கள் காணாமல் போவதாகச் சொன்னார். நாங்கள் எத்தனை நாள் சும்மா இருப்போம்? நாங்களும் துவக்கை எடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வெளியில் எங்களுக்கு உதவ ஆள் இருக்கிறார்கள் என்றார். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுவதாகத் தோன்றினாலும் அங்கு பயங்கரவாத இயக்கங்கள் செயல்படத் தயாராக இருக்கும் நிலையில் இது ஆபத்தான சமிக்ஞையாக எனக்குத் தோன்றிற்று. அல்காயிதாவுக்கு எதிரி அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் என்றோ, காஷ்மீர் பிரச்னையால் லஷ்கர் _இ_ தொய்பாவுக்கு இந்தியா என்றோ, புலிகள் மெத்தனமாக இருக்கமுடியாது. பாகிஸ்தான், இலங்கை அரசுக்கு ராணுவ ஆயுத உதவி அளிக்கத் துவங்கிவிட்டது. புலிகளுக்கு அது தெரியும். பாகிஸ்தான் தூதரைக் கொல்ல கொழும்பில் குறி வைத்த அதன் முயற்சி தவறிவிட்டது மயிரிழையில்.

செஞ்சோலை சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன் கேதீஸ்; கொழும்பில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகளின் வன்முறைப் போக்கை எதிர்த்ததாலேயே அவர் 'விரோதி' என்று அகற்றப்பட்டார். பல சிங்களத் தலைவர்கள் ராணுவ அதிகாரிகள் இந்த 'தர்ம யுத்தத்தில்' பலியானது போக, தமிழர்கள் கண்ணியமாக, சுதந்திரமாக, ஜனநாயக அமைப்பில் இலங்கை அரசுடன் சமாதானமாக வாழப் போராடிவந்த நீலன் திருச்செல்வம் போன்ற பல தமிழர்கள், போராளிகள், புலிகளை விமர்சித்த பத்திரிகையாளர்கள், அறிவாளிகள் புலிகளால் 'அகற்றப்பட்டிருக்கிறார்கள். அதைத் தவிர நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள், வடகிழக்கில் பல தலைமுறைகளாகத் தாமும் தமிழர் என்று நம்பி வாழ்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; அல்லது அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் ஏன் யாரும் பேசுவதில்லை? ஈழத் தமிழர் பிரச்னை பற்றின உண்மையான கவலை இருப்பவர்கள் ஒட்டு மொத்த சித்திரத்தையும் பார்க்கவேண்டாமா? இவர்கள் பேசுவது ஈழத்தமிழர் மீது கொண்ட கரிசனத்தாலா அல்லது புலிகள் மீதுள்ள கரிசனத்தாலா? பயங்கரவாதக் குழு என்று இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் எல்.டி.டி.இ. யைத் தடை செய்திருக்கும் நிலையில், புலிகளை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றால், பயங்கரவாதத்தை ஆதரிக்கிறீர்கள் என்று அர்த்தம். மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி என்பது போல அப்பாவி இலங்கைத் தமிழர்கள் இலங்கை அரசின் அராஜகத்தாலும் புலிகளின் ஃபாசிஸ அடாவடித்தனத்தாலும், அவதிப்பட்டுக் கொண்டிருப்பது பொதுநலன் நோக்கோடு பட்சமில்லாமல் பிரச்னையை அணுகுபவர்கள் அறிந்த உண்மை.

ஆனால், ஒரு யதார்த்தத்தை மறுக்க முடியாது. தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கவும், தமிழர்களைத் தொக்காக இலங்கை அரசு நினைத்து ஒதுக்கிவிடமுடியாத அடையாளமாகவும் புலிகள் அமைப்பு மட்டுமே இன்று கோலோச்சி வருகிறது. அந்த அமைப்பின் சக்தி அச்சுறுத்துவது மட்டுமல்ல, நன்மை விளைவிக்கக்கூடிய அசாதாரண சாத்தியங்களைக் கொண்டது. உண்மையில் புலிகள் மனசு வைத்தால், ஜனநாயக நீரோட்டத்தை ஏற்க சம்மதித்து உலகத்து சமாதானக்குழுக்கள் ஏற்பாடு செய்ய முயற்சிக்கும் பேச்சு வார்த்தைகளுக்கு வந்து ஒத்துழைத்தால் தமிழர் விடிவுக்கான வழி பிறக்கும்.. அதுதான் அவர்கள் மீது உறுதிப்பட்டுவிட்ட பிம்பத்தை மாற்றும். உலக வல்லரசுகள் இப்போது பயங்கரவாதத்தை எதிர்க்கும் போரில் தீவிரமாக இருக்கும் நிலையில் புலிகள் பயங்கரவாதத்தை விட்டொழித்தே ஆகவேண்டும். தற்கொலைப் படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தால் இலங்கை அரசு பதிலுக்கு ராணுவ நடவடிக்கை எடுக்கும். அதற்கு தார்மீக ஆதரவை அமெரிக்க கொடுத்தால் வியப்பதற்கில்லை. பிறகு அதோகதிதான். அப்பாவித் தமிழ் மக்களின் துயரத்திற்கு முடிவே இல்லாது போகும். புலிகளிடம் செல்வாக்கு உள்ள நமது அரசியல் தலைவர்கள், அவர்கள் தங்கள் ரத்தத்தின் ரத்தம் என்று சொந்தம் கொண்டாடுபவர்கள், உணர்ச்சிப் பெறுக்கில் ஆகாயவெளியில் வாள்போரில் ஈடுபடுவதற்கு பதில், அவர்களிடம் இதையெல்லாம் ஏன் சுட்டிக்காட்டக்கூடாது? புலிகளின் பலத்தின் ஜனநாயக சாத்தியக்கூறுகளை ஏன் விளக்கக்கூடாது? இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தாங்கள் ஆற்றக்கூடிய மகத்தான சேவையாக இதை ஏன் நினைக்கக்கூடாது?

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின், அந்தக் கொலையின் முதல் குற்றவாளியாகப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயர் நீதிமன்றத்தில் இருக்கையில், இந்திய அரசு இந்தப் பிரச்னையில் ஓரளவுக்குதான் தலையிடும். ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி சமாதானத்திற்கான நிரந்தர வழிகளைத் தேடும்படி இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முடியும். இங்கு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தந்து பிரச்னைக்கு தார்மீக ஆதரவு கொடுக்கமுடியும். அதற்கு மேல் அது தலையிடும் என்று தோன்றவில்லை. எனது கருத்தை ஏற்காதவர்கள், தமிழீழப் பிரச்னையை வைத்து அரசியல் பண்ணுபவர்கள், என்னைத் தமிழினத் துரோகி என்று முத்திரைக் குத்துவார்கள் என்று எனக்குத் தெரியும். புலிகளை ஆதரிக்காதவர்கள் தமிழினத் துரோகிகள் என்று சொல்வது அவர்களுக்கும் சௌகரியமாகிவிட்டது. புலிகளின் குற்றங்களைத் தைரியமாகச் சுட்டிக்காட்ட அவர்களுக்குத் தயக்கம் இருக்கும்வரை, சமாதான வழிமுறைக்கு புலிகளை நிர்ப்பந்திக்கும் துணிச்சல் ஏற்படாத வரை, தமிழினத்துக்கு துரோகம் இழைப்பவர் யார் என்கிற கேள்வியைப் புலிகளால் மேலுலகத்திற்கு அனுப்பப்பட்ட கணக்கற்ற தமிழரின் ஆவிகள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

யார் பெத்த மகனடா நீ? (எச்சரிக்கை படங்கள் கோரமானவை)

ஆகஸ்டு 3, 1990

காத்தான் குடியில் தொழுகைக்கு குனிந்த தலைகள் குருதியில் சரிந்த நாள்!

இஸ்ரேலிய சியோனிஸ்டுக்களிடம் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்ட பாசிசப்புலிகள்சியோனிசத்தின் ஆலோசனையின் பேரில் கொலை வெறி கொண்டு அலையத்தொடங்கிய அந்த நாட்களில்

1990 இதே தினம்

பள்ளிவாசலில் புகுந்தனர்!உறக்கத்திலிருந்த ஊருக்குள் புகுந்தனர்!இஸ்ரேலியர்களின் ஏவலின் பேரில்குருதியுறைய வைக்கும் கொலைவெறியாட்டத்தைநடத்தி முடித்தனர்!

பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 129 முஸ்லிம் மக்கள் புலிகளினால் துடிதுடிக்க சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இன ஒற்றுமைக்கும், சகோதரத்துவக்கும் இலக்கணமாக கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மீது, விடுதலையின் பேரால் புலிகள் புனிதப் பள்ளிவாசல்களில் குருதியை ஓட விட்ட கோரமான நாள் இதுவாகும்.

இந்த படுகொலையில் காத்தான்குடி பெரிய பள்ளிவாசலில் 103 பேரும், ஹீசைனியா பள்ளிவாசலில் 26 பேரும் புலிகளின் இரத்த வெறிக்குப் பலியானார்கள் ஏறாவூர் கிராமத்திற்குள் புகுந்த புலிகளின் உறக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களை இனப் படுகொலை செய்தனர்.

15 ஆண்டுகள் சென்று விட்ட வரலாற்று கறைபடிந்த இந்த நாளை, இன்று காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, மற்றும் மட்டக்களப்பு வாழ் முஸ்லிம் மக்கள் துக்கதினமாக இன்று அனுஷ்டித்தார்கள். முஸ்லிம் மக்கள் தமது வியாபார நிலையங்களைப் பூட்டியும், வீடுகளில் வெள்ளைக் கொடிகளைப் பறக்க விட்டும் இந்த நினைவு தினத்தை அனுஷ்டித்ததாக எமது மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று காத்தான்குடிப் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக விசேட துவாப் பிராத்தனைகளும் நடத்தப்பட்டன.

கொல்லப்பட்ட சகோதர மக்களை இலக்கு நினைவு கூருகிறது!

நன்றி: இலக்கு இணையத் தளம















கடல்கோள் (சுனாமி)நிதியில் புலிகள் ஆயுதங்கள்

கடல்கோள் (சுனாமி)நிதியில் புலிகள் ஆயுதங்கள் வாங்கியது குறித்து இன்டர்போல் விசாரிக்கும்

கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்புகளுக்குமாக நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கத்தில் சர்வதேச ரீதியில் தமிழர் புனர்வாழ்வு அமைப்பினர் சேகரித்த நிவாரண நிதிகளில் சுமார் 327கோடி ரூபா வரையான பணத்தொகையை விடுதலைப் புலிகள் அமைப்புக்காக யுத்த ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக மேற்படி அமைப்பு செலவு செய்துள்ளதாக கடும் குற்றச்சாட்டுகள் தரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தக் குற்றச் சாட்டுகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பற்றி இரகசிய புலனாய்வுத் துறை உத்தியோகத்தர்கள் பரந்த அளவிலான புலன் விசாரணைகளைத் தீவிரமாக ஆம்பித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இவ்வாறான ஆயுதக் கொள்வனவுகள் பற்றியும் அவற்றுக்காக தமிழர்புனர்வாழ்வு அமைப்பு TRO கடல்கோள் நிதியைச் செலவிட்டிருக்கும் செயற்பாடுகள் பற்றியும் விசாரணை செய்வதற்காக இரகசிய புலனாய்வுத் துறையினர் "இன்ரர்போல்" எனப்படும் சர்வதேச பொலிஸ் பிரிவின் உதவியையும் மற்றும் மேற்படி தமிழர் புனர்வாழ்வு அமைப்பால் கடல்கோள் நிதிகள் வைப்புச் செய்யப்பட்ட மத்திய வங்கி தரப்பின் உதவியையும் பெறப்பட்டிருப்பதாக மேலும் இரகசிய புலனாய்வுப் பிரிவு தரப்பில் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்திகளுக்கேற்ப மேற்படி தமிழர் புனர்வாழ்வு அமைப்பு கடல்கோள் அனர்த்தங்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தமது அமைப்பால் எடுக்கப்படுவதாகவும் அதற்காக நிதி உதவிகளை வழங்கும் படியும் கோரி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான உதவி நிதியைச் சேகரித்ததாகவும் அவற்றில் பெரும் பங்கு நிதியை அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான யுத்த ஆயுதங்கள் கொள்வனவுக்காக புலிகள் அமைப்புக்குக் குறித்த தமிழர் புனர்வாழ்வு அமைப்பு வழங்கி விட்டதாகவும் பல தரப்பிலிருந்து குற்றச் சாட்டும் சந்தேகமும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே தான் இந்தச் சம்பவங்கள் பற்றி உடனடியாக பரந்த விசாரணைகளை இரகசிய புலனாய்வுப் பொலிஸ் பிரிவினர் ஆரம்பித்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி தமிழர் புனர்வாழ்வு அமைப்பு இவ்வாறாகச் சர்வதேச நிதியில் சேகரித்த கோடிக்கணக்கான பணத்தையும் ஸ்ரீலங்காவிலுள்ள பல்வேறு வங்கிகளிலும் தமது வைப்புக் கணக்குகளில் இட்டுவைத்துள்ளார்கள் எனவும் இவ்வாறு மொத்தம் 164 வங்கி வைப்புக் கணக்குகளில் மேற்படி அமைப்புகளின் பேரில் கோடிக் கணக்கிலான சர்வதேச கடல்கோள் நிதியும் இடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் இரகசிய புலனாய்வுப் பிரிவு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்பாக கூடுதல் பணத் தொகை இடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குறிப்பிட்டதொரு வங்கி வைப்புக் கணக்குப் பற்றி புலனாய்வுப் பிரிவின் கவனம் திருப்பப்பட்டிருக்கும் நிலையில் அந்த வங்கி வைப்புக் கணக்கு பற்றி விசேட தீவிர விசாரணைகளை தற்போது இரகசிய புலனாய்வுத் துறை மேற்கொண்டுள்ளது. மேலும் மேற்படி தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் வைப்புக் கணக்குகளில் இடப்பட்டிருந்த பணம் எப்போது மீள எடுக்கப்பட்டு இவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது பற்றி வங்கிகள் தரப்பிலிருந்து புலனாய்வுத் துறையினர் தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் தீவிர புலன் விசாரணைகளை முடுக்கி விட்டதாக இரகசிய புலனாய்வுப் பிரிவு தரப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் திவயின பத்திரிகைக்குக் கூறியுள்ளார

வடுவுக்கு வயது ஆறு


மறக்க முடியாத புலிகளின் பொதுமக்கள் மீதான தற்கொலைத்தாக்குதல்

மூதூர் முஹம்மதலி ஜின்னாஹ் ஜே.பி.



பொதுமக்களைக் கொல்வதற்காகப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தற்கொலை தாக்குதல்
02.10.2000 அன்று மூதூர் இஸ்லாமிய கலாசார முன்றலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குழுமிநின்ற முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டது .மூதூர் பிரதான வீதி மக்களால் நிரம்பி வழிகின்றது. தற்கொலை குண்டுதாரி பிரதான வீதிக்குஅண்மையில் உள்ள மார்க்கட் ஆற்றைக் கடந்து வருகின்றான். மக்கள் தேர்தல் பிரசாரத்தைக்கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அங்கிருந்த ஒரு தேனீர் கடையில் பசி மிகுதியின் காரணமாகதற்கொலையாளி கிழங்குரொட்டி சாப்பிட்டதை தேனீர் அருந்திக்கொண்டிருந்ததை ஏனையோர் காண்கின்றனர். எனினும் பொதுமக்களில் ஒருவனென தவறாக எண்ணியிருந்தனர்.அ தோ பிரசாரம் முடிவுக்கு வருகின்றது. உடனே அழைத்து வந்தவர்கள் தற்கொலையாளியைவிரைவுபடுத்துகின்றனர். ''சுணங்கினமென்டால் சைக்கில எடுத்துக்க மாட்டம்"" என்று இயல்பாகப்பேசிக்கொண்டு வெளியேறுகின்றனர். தற்கொலையாளி தலை கவிழ்ந்து நடக்கின்றான்.

மாலை மயங்கிக்கொண்டு வருகின்றது. 'அல்லாஹ{ அக்பர்" ஏகநாயகனே பெரியோன் என்றும் மஃரிப் பாங்கோசை அக்கரைச்சேனைப் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஓங்கி ஒலித்து காற்றில் கலந்து காதில் இனிக்கிறது. படைத்த ரப்பை தொழுது நன்மை பெற மக்கள் முண்டியடித்து வெளியேற முற்பட்டவேளையில் தற்கொலையாளி மின்னலென நுழைந்து அதோ... விண்ணைப் பிளக்கும் மாபெரும் முழக்கம் உயிரை உறைய வைக்கும் அப்பெருவெடிப்பில் என்ன நடந்தது என்று
உணரவே சற்று நேரம் பிடித்தது.சுற்றிலும் புகைமண்டலம். புகைசுற்றுக் கலைகிறது. அந்தோ மரண ஓலம். ''யாஅல்லாஹ்யாஅல்லாஹ்... காப்பாற்றுங்க ... காப்பாற்றுங்க ... என்று கலிமா சொன்னவர்களின் இரத்தத்தால்பிரதான வீதி குளிக்கிறது.உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் குவிந்து கிடக்கின்றன. உடல்கள் சல்லடையாகிக் கிடக்கின்றன.

சுற்றிலுமிருந்த சுவர்களிலும் கடைகளின் முகப்புகளிலும் அங்கிருக்கும் வேப்பை, காஞ்சி மரங்களில்இரத்தம் கலந்த சதைத் துண்டுகள் ஒட்டிக்கொண்டிருக்க, சாதித்துவிட்ட ப10ரிப்புடன் மாவீரராகிவிட்டதற்கொலைக்காரனின் சேறுபடிந்த கால்களும் தலையும் ஓரமாகக் கிடக்க, தம் உறவுகள் இரத்தத்தில் குளித்திருப்பதை அவதானித்த மக்கள் கண்ணீர் பொங்க வாய்விட்டழுதுகொண்டு, பலர்மயங்கிவிட ஏனையோர் குற்றுயிராய் கிடப்பவர்களை தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர். வைத்தியசாலை மையித்துக்களாலும் குற்றுயிர்களாலும் நிரம்பி வழிகிறது.''தண்ணி ... தண்ணி ..."" என்று அழுகின்றவர்களின் வாயில் ஊற்றிய நீர் விழுங்கப்படாமல் கலிமா கூறி கையசைத்து, விடைபெற்று பிரிந்த காட்சிகள் கண்களைவிட்டு என்றைக்கு மறையப் போகிறது. ஒரேயொரு வைத்தியரால் என்னதான் செய்துவிட முடியும். ஓடியோடி முடிந்ததைச்செய்கிறார். சிலர் தோள்களிலும் ட்ரக்டர்களிலும் தம் உறவுகளைச் சுமந்துகொண்டு துறைமுகத்துக்கு ஓடுகிறார்கள். நேவிப் படகில் ஏற்றி திருமலை வைத்தியசாலைக்கு விரைகின்றனர்.

இரத்தத்தின் இரத்தங்களை எப்படியும் காப்பாற்றியே தீருவது என்ற வேகத்தில் தம் இரத்தத்தை வழங்க இளைஞர் கூட்டம் முண்டியடிக்கிறது. ஆயினும் மௌத்தின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து 24 என்றானது. முடிந்தவரையில் அங்கவீனர்களாகவேனும் 48 பேர் காப்பாற்றப்பட்டனர்.உழைத்து, உண்டு, ஊட்டி வாழ்ந்தவர்கள் இன்று கை இழந்தவர்களாக, கால் இழந்தவர்களாக,கண்ணிழந்தவர்களாக தங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இன்னும் உயிரோடு இருந்தால் நடைபெறப் போகும் சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின்பங்கைப் போராடிப் பெற்றுக்கொண்டு விடுவார்கள் என்பதால் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதம் தன்னிகரில்லா தலைவனான மர்ஹ_ம் அஷ்ரபை பறிகொடுத்த வேதனை வாட்டிக்கொண்டிருக்க,மற்றுமொரு தற்கொலை தாக்குதலில் தம் உறவுகளை இழந்த மக்கள் இன்றும் பொங்கியெழுகின்றனர்.உழைத்து உணவ10ட்டிய மக்களை இழந்த ஏழைப் பெற்றோர்கள், பெற்றோர்களை இழந்த அநாதைகள், விதவைகள், ஊனமடைந்தவர்கள், ஊருக்குழைக்க உருவாகி வந்த பட்டதாரிகளைஇழந்தவர்களாக அற்பசொற்ப நிவாரணங்களைப் பெற்றுக்கொண்டு வாழும் வாழ்க்கை காண்போர்நெஞ்சைக் கசிந்துருக வைக்கும். கணப்பொழுதில் கண்முன்னே காவுகொண்ட உறவுகளைக்காண்பது போன்ற பிரமையை இன்றும் மூதூர் பிரதான வீதி ஊட்டுகிறது. மூதூர் இஸ்லாமியகலாசார மண்டப வீதியைக் கடக்கும்போது மனம் தன்னையறியாமலே கணக்கிறது. கண்கள்பணிக்கிறது.

புலிகளுக்கோ ஒரு மாவீரர் கிடைத்தான்.
அரசியல்வாதிகளுக்கோ மனமுருகப் பேசி வாக்குகளை அள்ள அருமையான பொயின்ட்
கிடைத்தது.
எங்களுக்கோ மையித்துகளும் அங்கவீனர்களும் கிடைத்தார்கள்.
புலிகளின் போராட்டம் தோள் கொடுத்த முஸ்லிம்களுக்கு அள்ளி வழங்கி வரும் வடுக்களுள்
ஒரு வடுவான மூதூர் இஸ்லாமிய கலாசார தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இன்று வயது
ஆறு.
-நவமணி -08.10.06 -

தோழர் கேதீஸ்

தோழர் கேதீஸ் லோகநாதன் மறைவு - ஈடுசெய்யமுடியாத இழப்பு



இலங்கை சமூக விஞ்ஞானிகள் மன்றத்தில் பணியாற்றியவரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மிக நீண்டகாலம் அங்கத்தவராக இருந்தவரும் மத்திய குழு ,அரசியல் பீடங்களில் அங்கத்துவம் வகித்தவரும் ,திம்பு பேச்சுவார்த்தையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பங்கை ஆற்றியவரும் ,தோழர் பத்மநாபாவுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவருமான கேதீஸ் லோகநாதன் இன்று பாசிசவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். நேர்மை, கண்ணியம,; அர்ப்பணம் என்பன அவரின் அருங்குணங்கள்.

அவர் ஈபிஆர்எல்எப் இன் பேச்சாளராகப் பணியாற்றியபோது அவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும், கருத்துக்களும் தமிழ்பேசும் மக்களின் நிலைபற்றி சர்வதேச ஊடகங்களினதும், சர்வதேச கொள்கை வகுப்பாளர்களினதும் கவனத்தை ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தன.

அவர் முன்னாள் உலகவங்கி ஆலோசகராகவும், இலங்கை மத்திய வங்கியின் அத்தியட்சகராகவும் பணியாற்றிய காலஞ்சென்ற திரு லோகநாதனின் புத்திரராவார். அவர் உலகின் எந்த மூலையிலும் மிகச் சௌகரியமாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இலங்கையில் தான் பிறந்த சமூகத்தின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காககவும் தன்னை அர்ப்பணித்திருந்தார். சமூக உரிமைகளுக்கான அவரது குரல் வெளிப்படையானதாகவும், தர்க்க ரீதியாகவும் ,ஆணித்தரமாகவும் அமைந்திருந்தது. யாருக்கும் அஞ்சி உயிருக்குப் பயந்து தனது கருத்துக்களை விட்டுக் கொடுப்பவர் அல்ல அவர் . அவர் கல்விமான்கள் மத்தியிலும், ஜனநாயக சத்திகள் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு பெருமகனாகத் திகழ்ந்தார்.
அவர் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும், பின்னர் இலங்கை சமாதானச் செயலகத்தின் பிரதிப்பணிப்பாளராகவும் பணியாற்றினார். 'இழந்த சந்தர்ப்பங்கள்" என்ற மகுடத்தின் கீழ் அவர் ஒரு நூலை வெளியிட்டார். அது இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக கிடைத்த வாயப்புக்கள் பல எவ்வாறு கை நழுவிப் போயின என்பதை ஆவணப்படுத்தியிருந்தது.

ஈபிஆர்எல்எப் இல் அவர் அங்கத்துவம் வகித்தபோது 'ஈழப்போராட்டதில் ஈபிஆர்எல்எப் இன் பங்கு" என்ற தலைப்பில் ஒரு கொள்கை வகுப்பு நூலை எழுதியிருந்தார். ஆங்கிலத்தில் இனப்பிரச்சனை பற்றி மாதாந்த சஞசிகையொன்றை வெளியிட்டவர். 'சத்தியா" என்ற புனை பெயரில் அவர் ஆங்கில ஊடகங்களில் எழுதிய பல கட்டுரைகள் தமிழ் மக்களின் அவல நிலையை கச்சிதமாக வெளிப்படுத்துவதாகவும் தீர்;வை நோக்கிய ஆக்கபூர்வமான திசையிலும் எழுதப்பட்டன. ஆவர் வீரகேசரியின் சகோதர ஆங்கில வாராந்தரியான 'வீக்கன்ட் எக்ஸ்பிரஸ்"ன் ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.

இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைகழகத்தின் பட்டதாரியான இவர் பலசர்வதேச கருத்தரங்குகளில் கடந்த கால்நூற்றாண்டில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்திருக்கிறார். பல சர்வதேச உள்ள+ர் கருத்தரங்குகளில் பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஆய்வறிக்கைகளை சமர்பித்திருக்கிறார். ஆரோக்கி;யமான விவாதக் களங்களையும் அவர் கருத்தரங்குகளில் உருவாக்குபவர்.

கடந்த கால்நூற்றாண்டில் இனங்களின் பிரச்சனைகளுக்கு இலங்கையில் தீர்வுகாண்பது தொடர்பிலும் ஒரு தேசமாக பரிணமிக்க வேண்டியதன் அவசியத்திலும் ஒரு புலமைத்துவ அக்கறை கொண்டிருந்தார். அதற்காக அவர் தன்னை அர்ப்பணித்திருந்தார் . அதற்காக ஓய்வு ஒழிச்சலின்றி தனது இறுதிமூச்சு வரை உழைத்தார்.
இலங்கையில் பெரும் அரசியல் புயல் வீசிய நாட்களிலெல்லாம் இங்கிருந்து தொடர்ந்து செயற்பட்டவர். நோர்வே பல்கலைக்கழகமொன்றில் அவர் அபிவிருத்தி தொடர்பான ஆராய்ச்சியாளராகவும் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர். வசதி வாய்ப்புக்களுடன் கூடிய வாழ்க்கையை உதறித் தள்ளி மக்களின் விடிவுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு கீர்த்தி வாய்ந்த மனிதனை எமது சமூகம் இழந்து விட்டது. தோழர் கேதீஸின் இழப்பு ஈடற்றது. தோழர் கேதீஸ் யாh?; அவரது இழப்பு எத்தகையது என்பதை புரிந்து கொள்ள முடியாத பரிதாபகரமான நிலையில் எமது சமூகம் நின்று கொண்டிருக்கிறது.

பேய்கள் அரசோச்சும் எமது சமூகத்தில் தோழர் கேதீஸ் போன்றவர்களைப் புரிந்து கொள்வதற்கான இடைவெளி அரிதானதே. இது மிகப் பெரிய அவலமுமாகும்தோழர் கேதீஸின் படுகொலை எந்தளவு தூரம் காட்டு மிராண்டித்தனம் எமது சமூகத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதையே காட்டுகிறது. அவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த போதிலும் சரி, இன்று சமாதானச் செயலகத்தின் உதவிப்பணிப்பாளராக இருந்த போதிலும் சரி எந்த வித பாதுகாப்பையும் பெற்றுக் கொண்டவரில்லை.

தமிழ் பேசும் மக்கள் கௌரவமாக வாழவேண்டும் என்பதிலும் ,இலங்கை ஒரு பல்லின மக்களின் தேசமாகப் பரிணமிக்க வேண்டும் என்பதிலும் அவர் கொண்டிருந்த உறுதியான நம்;பிக்கையை நிஜமாக்குவதே தோழர் கேதீசுக்கு தமிழ் சமூகமும் அனைத்து இலங்கை மக்களும் செய்யவேண்டிய உண்மையான அஞ்சலியாகும்.
அவரை படுகொலை செய்த அற்ப பாசிசப் பதர்கள் அவரின் தார்மீக வலுவைக் கண்டஞ்சியே அவரைப் படுகொலை செய்தார்கள். நிராயுதபாணியான தார்மீகத்துணிவு கொண்ட ஒரு மனிதனைப்படுகொலை செய்ததில் பாசிச வாதிகள் எத்தகைய கோழைகள் என்பதை அம்பலப்படுத்தி நிற்கிறார்.

கிழக்கில் அழிவுப்பாதையில் முஸ்லிம்கள்

(நவமணி- அக்டோபர்)

நான்காம் கட்ட ஈழப்போர் கிழக்கிலிருந்து ஆரம்பமாகும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். கிழக்கில்நடைபெறும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்ததன் விளைவேஇந்த கூற்று என நம்பப்படுகிறது.புலிகளையும் தமிழ்த் தரப்பையும் பொறுத்தவரையில் வடக்குமட்டுமல்ல, கிழக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வடக்கு கிழக்கு இணைந்த நிர்வாகத்தை - அதிகாரத்தை எவ்விதத்திலேனும ;பெறுவதே அவர்களது குறிக்கோள். வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படவேண்டும் என்பதை அவர்கள் முழுமையாக எதிர்க்கின்றனர். வடக்கில் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் கிழக்கில் அப்படி இல்லை. காரணம் கிழக்கில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. கிழக்கில் புலிகள் ஆதிக்கம்செலுத்துவதையும் விரும்பவில்லை.

கடந்த இரு தசாப்தங்களில் கிழக்கில் முஸ்லிம்களை அடக்கியாளபுலிகள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் அவர்கள் மீதான வெறுப்பைஅதிகரிக்கச் செய்துள்ளன. பள்ளிவாசல்களுக்குள் கிராமங்களுக்குள் புகுந்து புலிகள் நடத்திய படுகொலைகள், முஸ்லிம்களைக் கடத்தியது, கப்பம் கேட்டுத் துன்புறுத்தியது, முஸ்லிம்களது பொருளாதாரத்தை அழிக்க முற்பட்டது, சுருக்கமாகக் கூறினால் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பில் புலிகள் ஈடுபட்டது பகிரங்க உண்மைகள்.வடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் கடந்த 16வருட காலமாக அகதி முகாம்களில் அல்லல்படுகிறார்கள்.கிழக்கிலிருந்தும் முஸ்லிம்களை விரட்டுவதே தங்களது நோக்கம்என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் புலிகள் மூதூரை ஆக்கிரமித்துமுஸ்லிம்களை அகதிகளாக்கினார்கள்.கிழக்கில் புலிகளின் பார்வை தீவிரமாக இருப்பதை அறிந்த பேரினம் கிழக்கில் தனது பிடியை இறுக்குவதில் அதி தீவிரமாக உள்ளது. சிங்களக் குடியேற்றம், சிங்களவர் ஆதிக்கம் ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலம் பேரினவாதம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பொத்துவிலில் நடந்த சம்பவங்கள் பேரினவாத திட்டங்களை வெளிப்படுத்துவதாக உள்ளன.

ஆக கிழக்கில் முஸ்லிம்கள் பாக்குவெட்டியில் சிக்கியது போல் தவிக்கிறார்கள். பேரினத்தாலும் பிரச்சினை, ஒரே மொழியைப் பேசும் தமிழ் சிறுபான்மையினத்தாலும் பிரச்சினை. என்றாலும் இந்தவிபரீத நிலையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் நிலையில் முஸ்லிம்கள் இல்லை. காரணம் அவர்கள் மத்தியில் ஐக்கியம் இல்லை, சகோதரத்துவம் இல்லை. விவேகமான வழிகாட்டிகளும் இல்லை.கடந்த சில மாதங்களில் நடந்த சம்பவங்களே முஸ்லிம்களின் அவல நிலையை படம்பிடித்துக்காட்டப் போதுமானவை. புலிகள் மூதூரை ஆக்கிரமித்து படையினருடன் யுத்தம் புரிந்தபோது இடையில்கிழக்கில் முஸ்லிம்கள் பாக்குவெட்டியில் சிக்கியது போல்தவிக்கிறார்கள்.

பேரினத்தாலும் பிரச்சினை, ஒரேமொழியைப் பேசும்தமிழ் சிறுபான்மையினத்தாலும ;பிரச்சினை. என்றாலும் இந்த விபரீத நிலையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் நிலையில் முஸ்லிம்கள் இல்லை. காரணம் அவர்கள் மத்தியில் ஐக்கியம் இல்லை, சகோதரத்துவம் இல்லை. விவேகமான வழிகாட்டிகளும் இல்லை. சிக்கிய முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. புலிகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவதில் அரச தரப்பு காட்டிய அவசரம் முஸ்லிம்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதில் காட்டப்படவில்லை. பொத்துவிலில் பத்து அப்பாவி முஸ்லிம்கள் குரூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவானபோது, சுயாதீனமான விசாரணை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மதிக்காமல் முஸ்லிம்களை கடத்தல்காரர்களாகவும் புலிகளுக்கு ஆதரவானவர்களாகவும் காட்டி அடக்கியொடுக்கவே முயற்சிகள் நடந்தன.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் இத்தகைய சம்பவங்களின்போது முஸ்லிம்களைப் பார்க்காமல் தங்கள் பதவிகளையே பார்த்தன. நீதி நியாயத்தை வலியுறுத்த, முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முடியாத நிலையில் தலைமைகள் செயலற்றுக்கிடந்தன. அரசியல் தலைமைகள் தான் இப்படியென்றால் மார்க்க அறிஞர்கள் எனக்கூறப்படும் உலமாக்களும் முஸ்லிம்களை ஐக்கியப்படுத்தி ஓரணிக்குள் திரட்டி அவர்களது சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தி சமத்துவத்தை நிலை நாட்டி உரிமைகள் பெற்ற தனித்துவ சமுகமாக வாழச் செய்யும் சக்தியுள்ளவர்களாக இல்லை. அரசியல்வாதிகளைப் போல் உலமாக்களும் பல்வேறு கொள்கைகளை முன்வைத்து தாமும் பிரிந்து முஸ்லிம்களையும் பிரிக்கிறார்கள்.

இலங்கையில் தனி முஸ்லிம் கிராமமாக பிரபல்யம் பெற்ற காத்தான்குடியில் முஸ்லிம்கள் பிளவுபட்டு, பிரிந்து மோதிக்கொண்டு, முஸ்லிம்களது இரத்தத்தை ஓடவிட்டு, சொத்துக்களை அழித்து புனித ரமழான் மாதத்தின் கண்ணியத்தையே சீர்குலைக்கும் நிலையை காண முடிகிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் எனக் காட்ட முஸ்லிம் விரோத சக்திகள் தருணம் பார்த்திருக்கும்போது மார்க்கத்தின் பெயரால் மோதிக்கொண்டு பாதுகாப்பு படையினர் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் அளவுக்கு மோசமான கலவரத்தில் ஈடுபடுவது தவறான பிரசாரங்களுக்கும் அழிவுகளுக்கும் அல்லவா வழிசமைக்கும். சரியான வழிகாட்டல் இல்லாமல், விவேகமான தலைமைத்துவம் இல்லாமல் கிழக்கில் முஸ்லிம்கள் அழிவுப் பாதையை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கிழக்கில் நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானால் முஸ்லிம்கள் அழிவதைத் தடுக்க யாராலும் முடியாமல் போய்விடும். கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் விபரீதங்களின் விளைவுகள் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மோசமாக எதிரொலிக்கலாம். முஸ்லிம்கள் மத்தியிலுள்ள கல்விமான்களும் சிந்தனையாளர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த நிலையை மாற்ற விவேகமாக ஏதாவது செய்வது அவசரம், அவசியம்.

முஸ்லிம் இனத்தவர்கள்,தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களல்லர்

''நாங்கள் தமிழ்பேசும் முஸ்லிம் இனத்தவர்கள்,தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களல்லர்''-முஸ்லிம் முன்னணி எழுத்தாளர் மஹ்ரூவ் பவுசர்


லண்டன் தமிழர் தகவல் நடுவத்தில் 1.10.06ல் நடந்த கருத்தரங்கு.

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.


லண்டனில் செப்டம்பர் மாதம் 23ஃ24ம் திகதிகளில், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நடந்த 33வது இலக்கியச்சந்திப்புக்கு, ''ஈழத்தமிழ் இலக்கியமும் முஸ்லிம் படைப்பாளிகளும்'' என்ற தலைப்பில் பேச இலங்கையிலிருந்து வந்திருந்த, முஸ்லிம் எழுத்தாளரான மஹ்ரூவ் பவுசருடனான ஒரு கருத்தரங்கு 01.10.06 ஞாயிற்றுக்கிழமை காலை லண்டனில் உள்ள தமிழர் தகவல் நடுவத்தில் நடந்தது. தகவல் நிலையப் பொறுப்பாளர் திரு. வரதகுமார் அவர்கள் கூட்டத்திற்குத் தலமை வகித்தார். லண்டனில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், சமுகநலவாதிகள், எழுத்தாளர்கள், எனப்பலர் கூட்டத்திற்குச் சமூகம் கொடுத்திருந்தனர். ''இன்று நடக்கும் அரசியற் பிரச்சினைகளும் முஸ்லிம்களின் மனித உரிமைகளும்'' பற்றிப் பேசிய பவுசரின் பேச்சிலிருந்து எடுத்த சில கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் அடக்கப்பட்டிருக்கின்றன.

திரு மஹ்ரூவ் பவுசர், இலங்கையில் நன்கு தெரியப்பட்ட மனித உரிமைப் போராளியும் முன்னணி முஸ்லிம் எழுத்தாளர்களில்மொருத்தருமாகும். அத்துடன் இவர் ''மூன்றாம் மனிதன்'' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்துகொண்டு அப்பிரசுரத்தின் மூலம் இதுவரை இருபத்தொரு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். தினகரன் பத்திரிகையின் ஆசிரியராகவும் அண்மையில் நியமனம் பெற்றிருக்கிறார். 'மிலேனியம் புக் லாண்ட்' என்ற ஸ்தாபனத்தின் முக்கிய நிர்வாகியாகவுமிருக்கிறார்.தென்னிந்தியாவில் 2000ம் ஆண்டு நடந்த ''தமிழ் இனி'' போன்ற பல மகாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அவர் தனது, ''முஸ்லிம் மக்களும் மனித உரிமைகளும்'' என்ற தலைப்பில் நிகழ்த்திய பேச்சில் கீழ் காணும் கருத்துகள் பிறந்தன: இன்று இலங்கையில், யதார்த்த சமுகநிலைகள், மக்கள் குழுக்கள், அவர்களின் குரல்கள் என்பன பல பிரச்சினைகளை முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. மனித உரிமைகள், பல்லின மக்களின் உரிமைக்குரல்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை முக்கியமான விடயங்களாக உருவாகியுள்ளன. கடந்தகால நிகழ்ச்சிகள் பல்லின மக்களிடையேயும் ஒரு பரபரப்பான நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட முயற்சிகளாற் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கலாம். பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டுபோவதால், இன்றைய நிலையில் பல்லின மக்களும், பகைமைக்கண்களுடன் ஒருத்தரை ஒருத்தர் அவதானிக்கிறார்கள். இன்று, இலங்கை ஒரு சமத்துவமற்ற, குழப்பமான சமுதாயமாக விருக்கிறது.

கடந்த காலங்களிற் தலையெடுத்த அரசியற் பிரச்சினைகள் இன்று , இனப்பிரச்சினை போன்ற அக முரண்பாடுகளைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கையில் இன்று பெரிது படுத்தப்பட்டிருக்கும் சிங்கள தேசியவாதமோ அல்லது குறுகிய தமிழ்த் தேசியவாதமோ இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்கும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்று சிந்தனையாளர்களும் புலம் பெயர்ந்து வாழும் மனித உரிமைவாதிகளும், முற்போக்குவாதிகளும் இலங்கையில் பல்லினங்களும் சமத்துவமாக வாழும் ஒரு சமுதாயம் உருவாகப் பாடுபடுகிறார்கள். இலங்கையில் தற்போது நடக்கும் விடயங்களால், ஏற்கனவே நிம்மதியற்றிருந்த சமுதாய நிலை மனித இனமே வெட்கப்படும் மனித உரிமை மீறல்களுக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளது.

நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துப் பலர் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டியிருக்கிறது. தமிழ் முற்போக்கு சக்திகள், இலங்கையில், இன, மத, மொழி வேறுபாடுதாண்டி நடக்கும் சகல மனித உரிமைமீறல்களையும் எதிர்த்துக்குரல் கொடுக்கின்றன. அதற்காகப் பலர் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். நாட்டைவிட்டோடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து நடக்கும் வன்முறைகளாற் சில கொலையாளர்கள் சந்தோசப்படுகிறார்கள். கெப்பற்றிக்கொலாவ, மூதூர், செஞ்சோலை, பொத்துவில் போன்ற பலபகுதிகளில் நடந்த கொலைகளைப்பார்த்து சந்தோசப்பட வௌ;வேறு கூட்டங்கள் இருக்கின்றன. கொலைகளை நியாயப்படுத்திச் சந்தோசப்படும் சிந்தனைகள் மக்கள் மனதில் தெரிந்தோ தெரியாமலோ மிகவும் ஆழமாகப் புகுத்தப்பட்டு விட்டன. தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். அந்தப்பிரச்சினையிலிருந்து, அதைத் தொடர்ந்து இன்று முஸ்லிம் பிரச்சினை தோண்டியிருக்கிறது. இவற்றிற்கு நிவாரணம் எடுக்கும் முயற்சிகள் இன அடிப்படையில் அமைவதல்ல. சிங்கள பயங்கரவாதத்தாலும் அதற்கு எதிரான வாதங்களாலும், இலங்கையில் எழுத்துரிமை, பேச்சுரிமைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. துப்பாக்கிகளின் அதிகாரம் மிகவும் மோசமாகத் தலை விரித்தாடுகின்றது.

இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை; தமிழ்த் தேசியத்துக்கு எதிர்நிலைப்பார்வையா, அல்லது சார்ந்த பார்வையா? இலங்கையின் வடக்கு, கிழக்குப் பக்கங்களில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை அவர்களின் சமத்துவ வாழ்க்கையின் அத்திவாரமாகும். இது, இதுவரை தீர்க்கப்படாத விடயமாகவிருக்கிறது. முஸ்லிம் மக்களின் பிரச்சினை என்ன? அது எப்படி வடிவம் எடுக்கிறது? அதன் தோற்றப்பாடுகள் என்ன என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் தனித்துவத்திற்கும் உரிமைகளுக்கும்' ஒலிக்கும் குரல்களுக்குச் செவிமடுக்கவேண்டும். ஒட்டுமொத்தமான, வட, கிழக்கு மக்களின் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கென்ன? அவர்கள் (முஸ்லிம்கள்) எப்படி நடத்தப்படுகிறார்கள்? விடுதலைப்புலிகள் இதை எப்படிப்பார்க்கிறார்கள் கையாள்கிறாகள்?

வடக்கும் கிழக்கும் ஒரு தனித்த பிராந்தியம் அங்கு தமிழரும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். தனித்த தமிழ்த் தேசியத்தில், முஸ்லிம் மக்களின் சமத்துவ வாழ்க்கை நிலைக்கு இடமில்லாதபோது, வட கிழக்கு தனித்த அரசியற் பிராந்தியமாகவிருக்காது என்பது, முஸ்லிம்கள் தங்களுக்குத் தனிப்பிரதேசம் கேட்கும் நிலைக்குப்போகும். கருணாவும், கிழக்குமக்களின் சமத்துவ வாழ்க்கைக்காகக் கிழக்குப்பிராந்தியத்தின் பிரிவு பற்றிப்பேசியதுமுண்டு. ஆரம்ப காலத்திலிருந்து எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் இன்றைய பிரச்சினைகள் உருவாகும் நிலைகளுக்குத் தள்ளப்பட்டபின், முஸ்லிம்களைத் தங்களின் (விடுதலைப்புலிகளின்), நன்மைகளுக்குள் வைத்துக்கொண்டு நடத்துவது சரியல்ல. 1955ம் ஆண்டுவரைக்கும் முஸ்லிம்கள் தமிழரின் அரசியற் பிரச்சினைக்குள் இருக்கவில்லை. அதன்பின், தமிழரசுக்கட்சியின் மூலம் பாராளுமன்றம்போய், அதன்பின் தங்கள் நன்மைக்காகக் கட்சி மாறிய முஸ்லிம் தலைவர்களை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்தமாக அனைத்து முஸ்லிம்களையும் எடைபோடுவதும், இதுதான் முஸ்லிம் சமுதாயத்தின் பொதுவான அடையாளம் என்று சித்தரிப்பதும் கவனமாகப் பார்க்கப்படவேண்டிய விடயங்கள்.

1985ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் நடந்த பலவிடயங்கள் முஸ்லிம் அடையாளங்களாக மாறியது. விடுதலைப்புலிகளின் இந்த அடையாளக்குறியீடுகளை 'இஸ்லாமியத்தமிழர்கள்' வெறுத்தார்கள். சிங்களப் பேரினவாதிகள் எப்படித் தமிழரின் அடையாளங்களைப் பார்த்தார்களோ அப்படியே விடுதலைப்புலியினரும் முஸ்லிம்களைப் பார்க்க்கும்போது, முஸ்லிம்களை வௌ;வேறு தளங்களுக்குத் தள்ளிவிட்டார்கள். வட,கிழக்கில் முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஒக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய அதேகாலகட்டத்தில் கிழக்கிலிருந்தும் முஸ்லிம்களை வெளியேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன்பிரதிபலிப்பாக, முஸ்லிம்கள் வாழ்ந்த பல கிராமங்கள் இன்னும் வெற்றிடங்களாகவிருக்கின்றன. 1991-95 வரைக்குமுள்ள காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். தாங்களும் தமிழர்கள்தான் என்ற உணர்வுடன் விடுதைப்புலிகளின் போராட்டத்தில் இணைந்திருந்த நூற்றுக் ;கணக்கான முஸ்லிம் போராளிகள் ஒரு இரவில், அவர்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களென்ற காரணத்தால் கொலைசெய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமையான நிகழ்ச்சிகள், முஸ்லிம்களை அன்னியப்படுத்திவிட்டன.

கிழக்கில் முஸ்லிம் மக்கள் விவசாயிகள். கிழக்கை விட்டு மற்றப்பகுதிகளில் வாழும் முஸ்லிம் வியாபாரம், அரச உத்தியோகங்களில் இருக்கிறார்கள். கிழக்கின் சனத்தொகையின் 28 வீதமான முஸ்லிம்கள். விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள், ஒட்டுமொத்தமான அரச நிலத்தில் 10வீதமான நிலத்தின் சொந்தக்காரார்களாக மட்டும்தான் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அரசு, முஸ்லிம்களுக்குக் காணிகளைப் பகிர்ந்து கொடுக்க வந்தபோது பல பிரச்சினகள் வந்தன. விடுதலைப்புலிகளின் கருத்து நிலைகள் முஸ்லிம் பிரிவினைக்குத் தளமமைத்தது. வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுபோது ''தற்காலிக'' வெளியேற்றம் என்றுதான் சொல்லப்பட்டது. அது நடந்து 13 வருடங்களாகியும் அந்த மக்கள் இன்னும் 'அகதிகளாகத்தான்; வாழுகிறார்கள். மீளச் சென்று யாழ்ப்பாணத்தில் வாழும் நம்பிக்கை அவர்களிடம் குறைந்து விட்டது.

இன்று விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்படும் 'ஈழம்'' என்பது. ''தனியரசு'' பற்றியது. இந்தக்கோட்பாட்டைத் தமிழ்ப்பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. வட, கிழக்கை விடுதலைப் புலிகளிடம் கையளிப்பது பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தும். அங்கு முஸ்லிம் மக்கள் ஒடுக்கப்படுவார்கள். சிங்கள பௌத்தவாதம் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கியது. விடுதலைப்புலிகளின் இராணுவச்செயற்பாடுகள் முஸ்லிம்களை ஒடுக்குகின்றது. ஆனாலும் பலதரம் முஸ்லிம்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விடுதலைப் புலிகளை நாடினார்கள் ஐPமுகு இலங்கையில் இருந்தபோது முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்தார்கள். வாகரையில் கிட்டு, மாத்தைய்யாவுடன் சேர்ந்து, முஸ்லிம் மக்களின் பிரச்சினை பற்றிப்பேச ஒரு மகாநாடு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை, முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி ஒரு தீர்வையும் முன்வைக்கவுமில்லை.

இன்று இலங்கையில், முற்போக்கு சக்திகள் அனைத்தும் அடக்கப்பட்டிருக்கின்றன. இன்று, முஸ்லிம் மக்களின் பிரச்சினையை வட, கிழக்கு மக்களின் பிரச்சினையுடன் வைத்துத்தான் பார்க்கவேண்டும்.மனித உரிமைகளைப் புறக்கணித்துவிட்டுத் தேசிய விடுதலையை முன்வைக்க முடியுமா என்ற கேள்விகள் எழுப்புகின்றன. 1980களில் எப்படி முஸ்லிம் மக்கள் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருந்தார்களோ அதே மாதிரியே இன்று முஸ்லிம் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். இந்த வன்முறைகளுக்கு முகம் கொடுப்பது ஒட்டுமொத்தமான அழிவைத்தான் எங்களுக்கு ஏற்படுத்தும்.

இன்றைய பல ஊடங்கள், ஊடக தர்ம தார்மீகங்களை மீறுகிறார்கள். தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யத் தவறுகிறார்கள். முஸ்லிம்களை இனவிரோதிகளாக, துரோகிகளாகத்தான் பார்க்கிறார்கள். சில புத்திஜீவிகள் கூடத் தாங்கள் சார்ந்த்திருக்கும் தளங்களிலிருந்துதான் பிரச்சினைகளைப்பார்க்கிறார்கள், எடைபோடுகிறார்கள். தேசியப்பிரச்சினையை முன்னெடுப்பவர்கள் மனித உரிமை மீறல்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமான விடயம். கடசியாகத் தன் பேச்சில் '' மற்றவனின் சுதந்திரத்தை மறுப்பவர்கள் ஒட்டுமொத்தமான 'மனிதர்களின் சுதந்திரத்தை' வெறுப்பவர்களாகத்தானிருப்பார்கள்'' என்று பவுசர் குறிப்பிடார். அவரின் பேச்சைத்தொடர்ந்து பல்ரின் கேள்விகள் இடம் பெற்றன.

முஸ்லிம் 'இன அடையாளம்' பற்றிக்கேட்கப்பட்ட கேள்விக்கு '' முஸ்லிம்கள் மொழியால் தங்களை அடையாளம் காணாமல் தங்களின் இனத்தால் அடையாளம் காண்கிறார்கள். நாங்கள் தமிழ் பேசும் முஸ்லிம் இன மக்கள்'' என்று விடையளித்தார். இன்னுமொருவர், முஸ்லிம் ''அடையாளம்'' பற்றிப்பேசும்போது, '' வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகம், கடந்த நூறு வருடங்களாக வட கிழக்கில் எந்தச் சிங்களவ்ரும் வாழவ்pல்லை, இன்று சிங்களக்குடியேற்றத்தால் வடகிழக்கு கணிசமான சிங்கள மக்களைக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள், இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்திருக்கிறாகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக்கால கட்டத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களின் ' தனித்துவம்'' பற்றிப் பேசுவது சரியல்ல'' என்று சொன்னார்.

அதற்குப்பதிலளித்த பவுசர், ''வடக்கும் கிழக்கும் தமிழ்பேசும் மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் தாயகம் ஏன் இன்று முஸ்லிம்கள் தனித்துவத்தை' முன்னெடுக்கிறார்கள் என்பதைன் காரணிகளை ஆராய்தல் நல்லது என்றார்.

இன்னொருத்தர் குறிப்பிடும்போது, '' இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் ஒட்டுமொத்தமான தொகையில் 38 வீதமானவர்கள் மட்டும்தான் வட, கிழக்கில் வாழ்கிறார்கள். மிகுதி 68 வீதமும் இலங்கையின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்கிறார்கள். 47ம் ஆண்டுக்குப்பின் இலங்கை அரசாங்கம் தமிழ்ப்பகுதிகளைப் பிரிப்பதில் ஆர்வம் காட்டிக் குடியேற்றங்களை முன்னெடுத்தார்கள். இன்று நடக்கும் '' தமிழீழக் கோரிக்கைக்கு' முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமான பங்களிப்பைச்செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. முஸ்லிம்களுடன் வாழ்ந்த தமிழ்ப்பகுதிகளில் மக்களின் கொலைகளுக்கு முஸ்லிம் ஹோம் கார்ட்ஸ் பொறுப்பாளிகளாயிருந்தார்கள்.

இன்று தொடரும் நடவடிக்கைகள் பல்லின மக்களின் தொடர்புகளையும் உறவுகளையும் துண்டாடிவிட்டதால் கசப்பும் பகையுணர்ச்சிகளும், பழிவாங்கும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன. இவை நிறுத்தப்படவேண்டும். சமூக நலத்திட்டங்கள், சமூகப்பெரியவர்களின் பங்களிப்புக்கள் ஒரு நல்ல சமுதாய உறவை வளர்க்க உதவிசெய்யும். சமூக நலத்திலும் விருத்தியிலும், சமூக உறவை வளர்ப்பதிலும் அக்கறை கொண்டவர்கள் அடிமட்டமக்களுடன் இணைந்து பல வேலைகளைச்செய்யலாம்' என்றார். அதற்குப் பதில் அளித்த பவுசர்'' ஒரு கட்டுக்கோப்பான, பல்லின மக்கள் நல்லுறவுடன் வாழும் சமுதாயத்தை கட்டியமைக்கும் திட்டம் சாத்தியமானதே. அது மற்றவர்களின் அடையாளத்தை அழிப்பதனாற் சாத்தியப்படமாட்டாது. மனநிலையில் இஸ்லாமியத்தமிழர்களை வேறுபடுத்திப்பார்க்காமல் தமிழர்களுடன் சேர்த்துப்பார்க்கவேண்டும். ரnவைல றiவா னiஎநசளவைல என்பது மிகவும் முக்கியம். அடக்கு முறைக்கு எதிராகத் தமிழ்மக்களுக்கு வந்த விழிப்புணர்ச்சி முஸ்லிம் மக்களுக்கும் வந்து விட்டது.

'இலங்கை முஸ்லிம் மக்கள், தங்களை அகில முஸ்லிம்களுடன் இணைத்து அடையாளம் காணப்பார்க்கிறார்களா'' என்ற கேள்விக்குப் பதிலளித்த பவுசர்'' இது எதிரும் புதிருமான கேள்வி. இன்றைய இலங்கை அரசியற் பிரச்சினையில் இலங்கை முஸ்லிம்கள் தங்களைத் தனியினமாக அடையாளம் காண்கிறார்கள் தங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்பார்க்கிறார்கள். முஸ்லிம்களின் சிந்தனை மொழி தமிழ், வீட்டு மொழி தமிழ். தேசியம் என்பதில் பல்லினங்கள் இருக்கலாம் . அந்த தேசியப் பிரதேசத்தில் அங்கு வாழும் மக்கள் அத்தனைபேரும் சமமாக நடத்தப்பட்வேண்டும் இல்லையென்றால், தமிழரை அடக்க முனைந்த சிங்களவரிடமிருந்து தமிழர் பிரிய முனைந்ததுபோல் ,தமிழ்த் தேசியத்திமூலம் முஸ்லிம்களை அடக்க முயலும்போது முஸ்லிம்கள் பிரிந்துபோக நினப்பதும் தவிர்க்கமுடியாதது என்று நினைக்கிறார்கள்'' என்றார்.

பல்லின ஒற்றுமைக்கும், சமூகவிருத்திக்கும் முற்போக்கு சக்திகள் இணைந்து உழைக்கவேண்டும் என்ற குரலுடன் கருத்தரங்கு முடிவு பெற்றது.

பொதுப்புத்தி

சிங்கள படைகளுடன் தொடர்பு உள்ளதாக புலித்தலைமையால் குற்றம் சாட்டப்பட்டு, Xக்கு தீர்பளிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான நிலைபாடுகளுக்கு, வழக்கம் போல பொதுப்புத்தி சார்ந்த எதிர்வினைகள், வலைப்பதிவுகள் உட்பட்ட எல்லா உடகங்களிலும் வந்துள்ளன. 'நமது விடுதலைப்போருக்கு துரோகியாக செயல்பட்டவன்; அதை பிரபாகரன் உறுதி செய்தாகி விட்டது; அவன் சாவதுதான் எல்லாவிதத்திலும் நியாயமானது' என்பதற்கு மேல் வேறு எதையுமே யோசிக்கத் தெரியாத, யோசிக்க விரும்பாத பொதுபுத்தியுடன் எதையும் உரையாட முடியாது. இந்த விஷயத்தில் விநோதம் என்னவென்றால், Xன் மரண தண்டனைக்கு எதிராக வலைப்பதிவுகளில் கருத்து சொல்ல வந்த சில ஈழத்தவர்கள் கூட, இந்த பொது புத்தியிலிருந்து விலகி எதையும் சொல்லமுடியவில்லை என்பதுதான். பிரபாகரனும் ஒரு காலத்தில் சிங்கள படைகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்தேனே, சிங்களத்தின் அடியாளாக இந்திய படைகளை தாக்கியவர்தானே என்பதற்கு மேல் அவர்களிடமும் வேறு வாதங்கள் இல்லை. வேறு யாரிடமிருந்தும் எந்த வகை குரலும் ஒலித்ததாக எனக்கு கேட்கவில்லை.

வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. Xன் மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் ஈழ தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், சிங்கள படைகளுடன் தொடர்பு உடையவராக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், பொட்டு அம்மானின் உளவுத்துறையின் கண்காணிப்பும், கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது

இந்த விஷயத்தில் தெளிவான நிலைபாடு எடுக்கும் அளவிற்கு, செய்திகளையும், ஆதாரங்கள் குறித்த கட்டுரைகளையும் நான் இன்னும் படிக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளின் மூலம் தெரிந்த அளவில் Xக்கு சிங்கள படைகளுடன் தொடர்பு இருப்பதாக நம்பவே காரணங்கள் அதிகமாக இருக்கிறது. அவரே அதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. எனது தெளிவின்மை, Xக்கு தாக்குதலில் எந்தவிதமான பங்கு, அதற்கான ஆதாரம் என்பதை பற்றி மட்டுமே இருக்கிறது. நிச்சயமாக மாஸ்டர் மைண்டாக தாக்குதலை திட்டமிட்டு, அதில் நேரடியாய் பங்கு பெற்ற காரியத்தை X செய்ததாக தெரியவில்லை. நேரடியாய் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லை. திட்டமிடலின் பிராதான மூளையாக, இயக்கமாக இருந்து தாக்குதலை செயல்படுத்தியவர்களை புலிகள் நெருங்கப் போவதில்லை. அப்படியில்லாமல் ஏதோ வகையில் தொடர்பு கொண்டதான பங்கிற்கு, இந்த மரண தண்டனை நியாயமானதுதானா என்கிற விதத்தில்தான் எனக்கு கேள்வி இருக்கும்.

பத்மநாபா, சிரிசபாரத்னம் ஆகியோரின் ஆயிரக்கணக்கான இயக்கத் தோழர்களை ஒட்டுமொத்தமாக மரண தண்டனை ஆணையிட்ட தீர்ப்பும் எப்படி பரவலான, பொதுப்புத்தி சார்ந்த வரவேற்பை பெற்றது என்பதை பார்க்க வேண்டும். புலி ஊடகங்கள் சரித்திர புகழ்வாய்ந்த தீர்ப்பாக அதை கொண்டாடியது. பிரிந்து கிடந்த இயக்கங்களுக்கான பொறுப்பில் அந்த ஆயிரக்கணக்கான் பேரும் நேரடியாய் பங்கு கொண்டு அதில் ஈடுபட்டதாகவும், அனைவரையும் கொல்வது மிகவும் நியாயமானதாகவுமே புலி உருவாக்கிய பொதுபுத்தி கருதியது. ஆனால் இது குறித்து ஓரளவு தீவிரமாய் உள்ளே போய் ஆராய்பவருக்கு கூட, அந்த் இயக்கங்களில் இருந்த பெரும்பாலோனோர் புலிகளுக்கு நேரிடையாக எதிர்ப்பில்லாதவர்கள் என்பதும் ஏதோ ஒரு வகையில் ஈழ விடுதலைக்காக போராடியவர்கள் என்பதையும் அறியலாம். அவர்களுக்கு, அரசியல் நிலைபாடு சார்ந்து தமிழ் தேசியவாதிகள், தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் என்று பலரின் கரிசனம் அப்போது காணப்படவில்லை. இந்தியா போன்ற நாடாக இருந்திருந்தால், பின்னர் மேல் முறையிடப்பட்டு, செலவு செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வாதாடப்பட்டு விடுதலையாகும் அதிர்ஷ்டம் இருந்திருக்கலாம். (ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேல் முறையிட்டு விடுதலை ஆனவர்களை, தண்டனை குறைக்கப்பட்டவர்களை இங்கே நினைவு படுத்திக்கொள்ளலாம்) மீண்டும் நான் இங்கே குறிப்பிட விரும்பவது, புலி உருவாக்கும் பொதுபுத்தியின் பட்டறிவில் வெளிபடும், புலி தவிர்த்த அனைவருமே குற்றவாளிகளாகவும், அவர்களை கொல்வது மிகவும் நியாயமானதுதான் என்ற விமர்சனமற்ற ஆழ்ந்த நம்பிக்கை பற்றி மட்டுமே.

எனது கருத்தை சொல்லியாக வேண்டுமென்பதால் - இந்த எல்லாவற்றிலும் எனது நிலைபாடு தூக்குதண்டனை என்பதற்கே எதிரானது. அது ஆட்டோ சங்கருக்கும், வீரப்பனுக்கும், சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டவனுக்கும், 24பேரை ஒரே சமயத்தில் கொன்றவனுக்கும் சேர்த்து அது பொதுவானது; 'ஒரு நிரபராதி கொல்லப்பட்டு விடக்கூடாது' என்ற வாதத்தின் அடிப்படையில் வரும் தூக்குதண்டனை எதிர்ப்பு வாதம் அல்ல; எந்த வகை குற்றம் நிறுவப்படுதலுக்கும், ஒரு உயிரை அரசாங்கம் என்ற நிறுவனமோ, அரசாங்கமாக விரும்பும் நிறுவனமோ, மிகுந்த இயந்திரத்தனமான திட்டமிடுதலுடன் மிக நிதானமாக செய்யப்படும் அங்கீகரிக்கப் பட்ட கொலையை செய்வது, ஒரு நாகரீக சமுதாயத்தில் நடக்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் மரண தண்டனையை எதிர்க்கிறேன். (ஈழத்தமிழ் சமுதாயம் அநாகரிகமான சமுதாயம் என்று தங்களையே சொல்லிக்கொள்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை) அந்த பார்வையில் கமலின் 'விருமாண்டியை', அவர் பிரசாரித்தது போல், தூக்குதண்டனைக்கு எதிரான ஒரு படமாக என்னால் பார்க்க முடியவில்லை. குற்றம் செய்யாமல் மாட்டிகொண்ட கமலின் நிரபராதி பாத்திரம, தூக்கிலிடப்படுவதை பிரச்சனையாக பார்ப்பது அல்ல, தூக்குதண்டனைக்கு எதிரான பிரச்சாரம்; கமல் தூக்கு தண்டனையை எதிர்த்து படமெடுக்க நினைத்தால், அவர் பசுபதியின் பாத்திரம் தூக்கிலிடப்படுவாதாகவும், அதற்கு எதிராகவும் என்பது மாதிரி கதை நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் பசுபதி கொல்லப்படுவதுதான் சரி என்கிற நியாயத்துடன் அமைந்த திரைக்கதையை, தூக்கு தண்டனைக்கு எதிரானதாக என்னால் பார்க்க முடியவில்லை. (படத்தில் வேறு பல பிரச்சனைகள் உண்டு எனினும் இது முதன்மையானது.)

இந்தப் பார்வையில் எனது நிலைபாடு, எல்லாவகை தூக்கு தண்டனையையும் எதிர்ப்பதுபோல், Xக்கான மரண தண்டனையையும் எதிர்க்கிறது. இவ்வாறான, எல்லாவகை குற்றம் நிறுவப்பட்டவர்களுக்குமான மரணதண்டனை எதிர்ப்பை பற்றி பேசுவது இந்த பதிவின் நோக்கமில்லை. விரிவாக பேச இயலாதது மட்டுமின்றி, அவ்வாறு பேசுவது இந்த குறிப்பிட்ட பிரச்சனையை திசை திருப்பவும் செய்யும். ஏனெனில் X மீதான மரண தண்டனைக்கு எதிரான விவாதம், என்னை மாதிரி நட்டு கழண்ட சில கேஸ்களின் ஒட்டுமொத்த தூக்கு தண்டனைக்கான எதிர்ப்புடன் மட்டும் தொடர்புடையது அல்ல. ஐரோப்பிய கூட்டமைப்பு போன்ற, மனித நாகரீகத்தின் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட ஒரு குமுகாயமாக நாம் இல்லாத யதார்த்தத்தை ஒப்புகொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுக வேண்டியிருக்கிறது.

அவ்வாறாக மரணதண்டனையின் இருப்பை அங்கீகரித்துக் கொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுகும் போதே, Xக்கு இந்த தாக்குதலில் எந்த வகையில் பங்கு, அதன் ஈடுபாடு மற்றும் தீவிரம் என்ன என்பதை பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. முதன்மை குற்றவாளிகளை பிடிக்க இயலாத கையாலாகத்தனத்தை இவரை கொல்வதன் மூலம், நாம் தணித்து மனச்சமாதானம் அடைய விரும்புகிறோமா என்றும் கேட்டுக்கொள்ளலாம். அந்த வகையில் Xஐ கொல்வதன் நியாயம் குறித்து எனக்கு தெளிவான கருத்து எதுவும் இல்லை. ஆனால் எந்த வித விவாதத்திற்கும் தயாராக இல்லாத மனங்கள், கொல்வது மட்டுமே தர்மம் என்றும், அதில் இருந்து விலகி சிந்திப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்று நினைக்கும் ஒரு சூழலில், இந்த தெளிவின்மையை முன்வைப்பதும் எனக்கான அரசியலாக இருக்கிறது.

இவர்கள் வெளிப்படுத்தும் கூட்டு ஹிஸ்டீரியாவின் கொடூரத்தை அறிய, நாம் இதே போல குற்றம் சாட்டப்பட்டு, பங்கர்களில் உடல்ரீதியில் கொடுமையாய் சித்ரவதை செய்யப்பட்டு, பின்பு மிக ஒட்டையான ஆதாரங்கள் மற்றும் பொய்யாக தயாரிக்கப் பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அது நன்றாக தெரிந்தும் மரண தண்டனை அளிக்கப் பட்டு, சாவு தலைக்கு மேல் தொங்கும் பயங்கரத்துடன் மீண்டும் பங்கர் ஜெயில் வாழ்க்கை வாழ்ந்து, இறுதியில் அதிர்ஷ்டவசமாக தப்பிய X1ன் கதையை மிக விரிவாக அறிய வேண்டும். X1 என்ற பலரது அன்பிற்குரிய பேராசிரியரின் மீதான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான்; இந்த 'ஆதாரங்களின்' அடிப்படையில் X1 கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, குடும்ப அமைதி எல்லாவற்றையும் இழந்து, மரணதண்டனை பயமுறுத்த சில ஆண்டுகள் வாழ நேர்ந்து, இறுதி கட்டத்தில் உயிர் தப்ப நேர்ந்தது. இதை இந்த சந்தர்ப்பத்தில் சொல்ல ஒரே ஒரு காரணம்தான் உண்டு. மேலே பேசியுள்ள பொதுப்புத்தி எல்லாவகை புலி ஊடகங்களிலும் X1 பற்றியும், அவருக்கான தண்டனை பற்றியும் எப்படி வெளிப்பட்டது என்பதுதான். இப்போது X பற்றி வெளிபடும் அதே குரல்கள்தான் X1 பற்றியும் வெளிபட்டது; 'ஒரு கல்லூரி பேராசிரியரே இலங்கை அரசுக்கு துணை போவது' பற்றியும் கவலை கொண்டது; X1யும் கொல்வது சரி என்ற தன் கருத்தில் எந்த பரிசீலனைக்கும் அது இடம் அளிக்கவில்லை. X1ன் உதாரணம், சமூகத்தில் மதிப்பு பெற்ற ஒருவரின் கதி பற்றியது. அவ்வாறு இல்லாமல் இலங்கை முழுவதிலும் அநியாயமாய் சிறையில் வாடும் அப்பாவிகளை (சிங்களர் தமிழர்கள் உட்பட) பற்றி பேசுவது எனது சக்தியை, இந்த வலைப்பதிவின் சாத்தியதை தாண்டியது

இந்த பொதுபுத்தியை மீறி சிந்திக்கவும், பரிசீலிக்கவும், அதை வெளிப்படையாய் பேசவும் மிகுந்த மனத்துணிவு வேண்டும்; பாயக்கூடிய வசைகள், தேசத்துரோக பட்டங்கள், அதிகாரத்தின் மிரட்டல் இதை மீறி செயல்படவும் வேண்டும்; இந்த நேர்மையால் பத்து பைசா பயன் இருக்காது; மாறாக விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்குமானதாக திரிக்கப்படும் அவதூறு பற்றிய கவலையும் இருக்க கூடாது; அந்த வகையில் செயல்படும் சிறுபான்மை அறிவுஜீவிகளை நான் மிகவும் மதிக்கிறேன்.

ஆனால் இவ்வாறான நிலைபாடுகளையும் ஒற்றை பரிமாணத்தில் சுயவிமர்சனமின்றி எடுப்பதும் ஆபத்தானதாகவே எனக்கு தெரிகிறது. பொதுபுத்தி நமக்கு எதிராளியாகும் கட்டாயத்தில், சுயவிமர்சனமற்ற ஒரு சுழலில் மாட்டிக்கொள்ளும் அபாயமும் இருப்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியுள்ளது. அத்தகைய விமர்சனத்தை Xல் விவகாரத்தில் நான் காண நேராததால் இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது; எனது கருத்தும் - X1 பற்றிய பிரச்சனையில் இருப்பது போல் - இந்த பிரச்சனையில் தெளிவில்லாமல் இருப்பதாகவும் முன்வைக்க வேண்டியுள்ளது.

- நன்றி ரோசாவசந்த்

எல்லா Xகளுக்கும்

யாரைச் சொல்கிறார் கலைஞர்?

மைக்ரோசாப்ட் X லினக்ஸ்