பெரியவருக்கு பின்னாலை பிளேன்ரை படத்தை காணேலை

பெரியவருக்கு பின்னாலை இந்தமுறை பிளேன்ரை படத்தை காணேலை

பிரபாகரனின் உரைக்கு பொழிப்பு எழுதும் புலம்பெயர் தமிழர்கள் !

- ஜானகி


புலிகளின் தலைவர் அதி உத்தம மேதகு மாமனிதர் பிரபாகரனின் மாவீரர் தின மசாலா அவரின் புலம்பெயர் உறவுகளை குசிப்படுத்தியிருக்கும் அதே நேரம், பல பொறுப்புள்ள தமிழர்களை கொதிப்படையவும் வைத்திருக்கிறது.இலங்கையின் வட-கிழக்கு மற்றும் தென் பகுதிகளைச் சேர்ந்த இவர்களுள் சிலரிடம் இந்த வருட மாவீரர் தின உரை பற்றிக் கருத்துக் கேட்டபோது அவர்களுள் பெரும் பகுதியினர் தேசிய தலைவரைக் கண்டித்துள்ளனர்.

திருமதி நாகம்மா (63 வயது: விதவை: புன்னாலைகட்டுவனைச் சேர்ந்த இளைப்பாறிய கை வைத்தியர்;: 12 வருடங்களாக லண்டனில் வசிப்பவர்)) –

~ சிங்களவனுக்கு அடி குடுக்கிறதுக்கு அவரை விட்டால் வேறை ஆர் மோனை இருக்கினம் ? அந்த மாதிரி குடுத்திருக்கிறார் சிங்களவனுக்கு. எனக்கு காது கேக்கர்து மோனை. ஆனால் அவற்றை படத்தை பாத்தனான். அந்தமாதிரி இருக்கிறார். கடவுளே கண் பட்டிடக் கூடாது. போன முறை மாதிரி பின்னுக்கு ஒரு பிளேன் படமும் வைச்சிருந்தல் நல்லாய் இருந்திருக்கும். சிங்களவன் பீச்சிக்கொண்டு திரிஞ்சிருப்பான். |

திரு சிவக்கொழுந்து ( 66 வயது: திருமணமானவர்: முன்னாள் விதானையார், அல்லைப்பிட்டி: 22 வருடங்களாக லண்டனில் வசிப்பவர்) :

~ தலைவரை ஒருதராலையும் அசைக்கேலாது எண்டதை நிருபிச்சிட்டார். சிங்களவன் நினைச்சான் பொருளாதார தடையைக் கொண்டுவந்தால் தலைவர் இறங்கிவருவார் எண்டு. பொருளாதாரத் தடை தலைவரைப் பாதிக்காதெண்டு தெரியாத முட்டாள்கள். இந்தமுறை தலைவற்ரை பேச்சோடை கலங்கிப் போய் இருப்பாங்கள்|.

~ எனக்கென்ன முழுப் பிள்ளையளும் இஞ்சை. பிரச்சினையில்லை. என்ரை பிள்ளையள் ஒருநாளும் அங்கைபோய் இருக்காதுகள். ஒரு ஒன்பது பரப்பு காணியள் மட்டிலை ஊரிலை இருக்கிது. நளப்படையள் போய் அதுக்கை அடாத்தாய் இருக்கிதுகள். இயக்கப் பெடியளைப்பிடிச்சு அதையும் விக்கிறதுக்கு அலுவல் பாத்துக் கொண்டிருக்கேக்கை இந்த நாசமாய்போன சண்டை வந்திட்டிது. அதையும் வித்துப்போட்டனெண்டால் என்ரை பிரச்சினை முடிஞ்சுது. வெளியாலை வரமுடியாமல் அங்கை இருக்கிற அப்பாவிச் சனங்கள்தான் பாவம். ஆனால் அதுக்கென்ன செய்யிறது. ஏல்லாம் அவர் அவற்ரை விதி. தனிநாடு வேணுமெண்டால் இழப்புகள் வருமெண்டு தலைவர் எப்பவோ சொல்லீட்டாரே|.

~ வேலைக்குப் போறபடியாலை இந்தமுறை பேச்சை முழுசாய் கேட்கேலை. பெரியவற்ரை படத்துக்குப் பின்னாலை பிளேனைக் காணேலை எண்டு என்ரை பிள்ளையள்; சரியாய் குறைப்பட்டிதுகள். தலைவர் போனமுறை மாதிரி பிளேன்ரை படத்தையும் போட்டு விட்டிருந்தால் சிங்களவனுக்கு அந்தமாதிரி இருந்திருக்கும்|.

திரு சிவசீலன் (22 வயது: திருமணமாகாதவர்: எரிபொருள் நிலையத்தில் வேலை செய்பவர்; யாழ்ப்பாணம்: 3 வருடங்களாக லண்டனில் அகதி அந்தஸ்துபெற்று வசிப்பவர்) –

~ தலைவர் சொன்னதோடை நிப்பாட்டாமல் உடனையே சண்டையை தொடங்கீடோனும். சிங்களவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்காட்டில் சரி வரமாட்டான். எனக்கும் குடும்பமெல்லாம் ஊரிலைதான், ஆனால் அவையளை நான் இந்தியாவுக்கு அனுப்ப வழிபாத்துக் கொண்டிருக்கிறன். கொஞ்ச நாளிலை என்ரை பிரச்சினையெல்லாம் தீர்ந்து போடும். அதுக்குப் பிறகு நான் தலைவருக்கு காசு குடுப்பன்|.

பெயர் சொல்ல விரும்பாதவர்: லண்டனில் 20 வருடமாக வசிப்பவர்: நெல்லியடியைச் சேர்ந்தவர்: ஊடகவியலாளர்:


~ நீண்ட காலமாக லண்டனிலை மிகப் பெரிய மண்டபங்களிலை, பெரிய களியாட்ட விழா போலைதான் மாவீரர் தின விழா நடந்து வந்தது. போன வருசம், ரெண்டு சின்ன மண்டபங்களிலை வைச்சினம். இந்தமுறை நாலு குட்டி குட்டி மண்டபங்களிலை வைச்சிருக்கினம். புலிகளுடைய இணையத்தளங்களிலை லண்டன் ஹரோ மண்டபத்திலை நடந்த மாவீரர் நாளைப் பற்றித்தான் படங்கள் போட்டு எழுதினம். உண்மையிலை அந்த மண்டபத்திலை ஆகக்கூடியது 300 பேர்வரைதான் கொள்ளும். லண்டனிலை டூட்டிங் எண்ட இடத்திலை ஒரு ரெஸ்டோரண்டிலைதான் மாவீரர் நாளை வைச்சிருக்கினம். புலிகளுக்கு புலம்பெயர் நாடுகளிலை ஆதரவு குறைஞ்சு வருகிது எண்டதைதான் இது காட்டுது. ஒண்டு ரெண்டாகி இந்த வருசம் ரெண்டு நாலாகி இருக்கிது. அடுத்த வருசம் நாலு எட்டர்குமோ அல்லது ஒண்டும் இல்லையோ தெரியாது.

இதுவரை வந்த 17 மாவீரர் தின உரையளிலை, இந்தமுறையான்தான் மிக மோசமான மாவீரர் தின உரை. தலைவருக்கு எழுதத்தெரியாத படியாலை மாவீரர் உரையை ஆரோ தானே எழுதிக் குடுக்கோணும். இந்தமுறை ஆர் எழுதிக் குடுத்தீச்சினமோ தெரியாது. நிறைய சினிமா வசனம் பேசியிருக்கிறார். பேபி சுப்பிரமணியமோ தெரியாது. |

~ சிங்கள சமூகம் புதிய உலக மாற்றத்திற்கேற்ப புதிதாய் சிந்திக்க மறுக்கிறது எண்டு சொல்லிறார். உண்மையிலை உவர்தான் உலக மாற்றத்தை கவனத்திலெடுக்க தயாரில்லை. அதனாலைதான் சமாதான காலத்திலைகூட பல நாடுகளிலை பயங்கரவாத இயக்கமெண்டு தடைசெய்யப்பட்டிருக்கினம்|.

உண்மையிலை இவற்ரை உரையை வடிவாய் வாசிச்சுப் பாத்தால் தங்களுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளுறது வடிவாய் தெரியும். தன்னுடைய தலைமையிலை நடந்த 25 வருட போராட்டமும் மனித அவலங்களைத்தான் தந்திருக்கு என்றதை ஒப்புக்கொண்டு தானே பட்டியல் போடுறார்|.~ தமிழீழ மக்களுக்கு எந்தவித செய்தியும் இவற்ரை உரையிலை இல்லை. முழுக்க முழுக்க புலம்பெயர் தமிழ் மக்களுக்குதான் இந்தமுறை வாசிச்சிருக்கிறார்|.;

~ இந்தப் பயல் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படும் மட்டும் தமிழ் மக்களுக்கு நிம்மதி ஏற்படப் போவதில்லை.|

பெயர், ஊர் சொல்ல விரும்பாதவர்: ஒரு பேராசிரியர்: மேற்படிப்பு நிமித்தம் இரண்டு வருட விடுமுறையில் லண்டன் வந்திருப்பவர:;; தென் இலங்கையில் வசிப்பவர்:

~ எந்தவித பொறுப்புமில்லாத பேச்சு. ஆனால் ஒரு வழியிலை பாத்தால் தோல்வியை ஒப்புக்கொள்ள விருப்பமில்லாத பட்சத்திலை பிரபாகரன் வேறை என்னத்தைத்தான் சொல்ல முடியும்|.~ தமிழ் ஈழம் என்பது உலகத்திலை எந்த ஒரு நாட்டாலையும் அங்கீகரிக்கப்படப் போவதில்லை எண்டது தெரிஞ்ச பிறகும், அதுவும் தன்னுடைய தலைமையில ஒரு நாளும் தமிழ் ஈழம் எண்ட ஒரு நாட்டை உலகத்திலை உள்ள எந்த ஒரு நாடும் அங்கீகரிக்காது எண்டு தெரிஞ்ச பிறகும், முழுப் பொது மக்களையும் ஏமாத்திறதுக்காகவும், புலம் பெயர் மக்களிட்டையிருந்து தொடர்ந்து பணம் கறக்கிறதுக்காகவும், ஈழப் போராட்டத்தை தொடங்கப் போறதாகக் கதை விட்டிருக்கிறார். தமிழ் மக்கள் பாவம்.|

கலாநிதி திருச்சிற்றம்பலம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவ ஆசிரியரான அன்ரன் பாலசிங்கம் கலாநிதிப் பட்டம் பெற்ற அதே பல்கலைக் கழகத்தில் அன்ரன் பாலசிங்கத்துடன் ஒரே வகுப்பில் படித்து அன்ரன் பாலசிங்கத்தைப் போலவே கலாநிதிப் பட்டம் பெற்றவர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்;:

~ இலங்கையின் எந்தப் பகுதியிலுமுள்ள தமிழ் மக்களின் நலன்களையும் கவனத்தில் எடுக்காத பொறுப்பற்ற பேச்சு. இவர் ஒரு பேட்டை ரவுடி. இந்தியா, அமெரிக்கா போன்ற பெரியசண்டியர்களுடன் சவால்விடப் பாக்கிறார். அது தமிழ் மக்களுக்கு பெரிய அழிவைத்தான் கொண்டுவரும்.|~ நாம் நேர்மையுடனும், நெஞ்சுறுதியுடனும் சமாதானத்திற்கு முயற்சித்ததாக பச்சைப் பொய் சொல்கிறார். போரைவிட சமாதானத்தின் மூலம் தீர்வை அடைய நீண்ட காலம் எடுக்கும். இலங்கை அரசை அம்பலப்படுத்தவேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தவறவிட்டிட்டு இப்ப பச்சைப் பொய் சொல்லி முழுத் தமிழ் மக்களையும் ஏமாற்றப் பார்க்கிறார். சமாதானம் தொடங்கினதிலையிருந்து 2004ம் ஆண்டு மட்டும் மாற்றுக்கட்சி அரசியல் தலைவர்கiயும், அப்பாவி உறுப்பினர்களையும், பெண்கள் பிள்ளைகளையும் கொலை செய்தது புலிகளே. 2004ல் கருணா பிரிந்தபின் தான் புலிகளிற்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமாகியிருந்தன. அதுவரை மாற்றுக்கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்களை தலைவர் கொலை செய்யும்போது தமிழ் அரசியல் தலைமையோ அல்லது தமிழ் புதினப் பத்திரிகைகளோ அவற்றைக் கண்டிக்கவில்லை. பிறகு 2005 பிற்பகுதியில் மக்கள் படையெண்டு சொல்லி சில காட்டுமிராண்டியளைகொண்டு அரச படைகள்மேல் தாக்குதல் நடத்திப் பார்த்தார். இப்போது அரச படைகள் மிக மோசமாக, தலைவருடைய பாணியிலை திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளனர். பலியாவது அப்பாவித் தமிழ் மக்களும்தான். மக்கள் படை மாயமாய் மறைஞ்சு போட்டிது. இதைப்பற்றி கேட்க ஒருவருமில்லை. தலவர் என்ன செய்வது எண்டு தடுமாறுவது அவருடைய பேச்சிலை தெரியுது.|

~ கருணா அம்மானுடைய பிரச்சினையை கவனமாகக் கையாண்டிருக்கலாம். அதுவும் அவராலை முடியாமல் போய் இப்ப கிழக்கு மாகாணம் ஏறத்தாழ முழுவதாய் பறிபோயிட்டிது. தனது பேச்சில் அடிக்கடி ஏகபோக தமிழ் மக்கள் என்று குறிப்பிடுவதன் மூலம், தமிழ் மக்களின் ஏகபோக உரிமை தற்போது தங்களிடமிருந்து பறிபோய் விட்டது என்பதை தலைவர் உணர்ந்திருக்கிறார் போல் தெரிகிறது. யார் இந்த முறை பேச்சை எழுதிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால் இவர் பேச்சில் சொன்னபடி சர்வதேச உலகமும் எதிர்க்கின்ற ஈழப் போராட்டத்தை ஆரம்பிப்பரானால், மேலும் சர்வதேசத்திடமிருந்து இவர் தனிமைப் படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகும். இவர் சர்வதேசத்தைப்பற்றி பகடியாக எடுக்கிறார்போல் தெரிகிறது. இவ்வளவுதூரம் சர்வதேசத்தால் அந்நியப்படுத்தப்ட்ட எந்தவொரு இயக்கமும் உலகத்திலை எந்தவொரு காலத்திலையும் இருந்ததில்லை என்பதை தலைவருக்கு ஆராவது செல்லோணும்|.

~ ஒரு பக்கத்தில் பார்த்தால் பிரபாகரன் பாவம் போலவே தெரிகிறது. நண்பர் அன்ரன் பாலசிங்கமும், தமிழ் சனங்களும், தமிழ் பத்திரிகையளும் இவ்வளவு இழப்புகள் வருமட்டும் நல்லாய் உசுப்பேத்தி விட்டிட்டாங்கள். இப்ப தலைவருக்கு வேறை வழியே இல்லை. இறங்கி வரேலாது. இறங்கி வந்தால் ஒரு லட்சம் அப்பாவி மக்களுடைய இழப்புக்கும், கிட்டத்தட்ட இருபதினாயிரம் புலிப் போராளியளுடைய இழப்புக்கும் கணக்கு காட்ட வேண்டும். இந்த நிலையிலை தலைவர் என்ன செய்யலாம்.?|

~ தலைவருடைய காலம் எண்ணப்படுகிறது என்பதைத்தான் என்னால் சொல்ல முடியும் |.

ஏ-9 வீதியை மூடிவைத்திருப்பது மக்கள் விரோதமானது

ஏ-9 வீதியால் அவர்களுக்கு கப்பமாக கிடைக்கும் 30 கோடி ரூபா புலிகளது மாலை நேர தேனீர் செலவுக்கு ஒப்பானது என்றுதான் சொல்ல வேண்டும்.

- ஞானம் அருட்பிரகாசம்

இலங்கையில் ஏனைய பகுதிகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குமான ஏ-9 பாதையை அரசாங்கம் மூடி மூன்றுமாதங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பாதை மூடப்பட்டதால் யாழ் குடாவில் வாழுகின்ற சுமார் 5லட்சம் மக்கள் மோசமான உணவு,மருந்து,எரிபொருள் மற்றும் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், சுதந்திரமான போக்குவரத்து தகவல் தொடர்பு இன்மையாலும் அல்லப்படுவது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

நோக்கங்கள் வௌ;வேறாக இருப்பினும் இப்பாதையைத் திறக்கும்படி யாழ்ப்பாணமக்கள், விடுதலைப் புலிகள், தென்னிலங்கை மனிதாபிமான சக்திகள் என்பன வேண்டுகோள் விடுத்தவ்ணம் உள்ளன. இப்பொழுது இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் வாசிங்டனில் கூடிய பொழுது இவ்வாறானதொருவேண்டுகோளை விடுத்துள்ளன.

ஏ - 9 வீதிய+டாக பொருட்கள் கொண்டு செல்லும் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடுவதையும், தமக்கு விரோதமானவர்களைக் கடத்துவதையும் கைவிடுவதாக உறுதியளித்தால் பாதையைத் திறக்க முடியும் என அரசாங்கம் கூறுகின்றது. பலிகளைப் பொறுத்தவரை இவை இரண்டையும் அவர்கள் என்றுமே கைவிடப்போவதில்லை. அப்படிப்பார்த்தால் இப்பாதை என்றுமே திறக்கப்படப்போவதில்லை என முடிவாகின்றது.

எனவே இப்பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானது தானா?

புலிகள் அமைப்பு ஒரு பாசிச இயக்கம். அதற்கு அதன் சொந்த மக்களைப் பற்றியே எந்தவித அக்கறையும் கிடையாது. தேசியஇன விடுதலை என்று சொல்லிக்கொண்டு தனது சொந்த இன மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துள்ள இயக்கம் என்றால் அது விடுதலைப் புலிகள் மட்டும்தான். சமீபத்திய ஆய்வொன்றின்படி இலங்கை இராணுவம் கொலை செய்த தமிழ் மக்களைவிட புலிகள் கொலை செய்த தமிழ் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு எனத் தெரியவருகின்றது. (அரசாங்கப் படைகளுடன் போரிட்டு மடிந்த புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை)

எனவே இப்பாதை திறப்பு விவகாரத்தில் அரசாங்கம் தமது கட்டப்பாட்டிலிருக்கும் தனது சொந்தக் குடிமக்களான 5 லட்சம் யாழ்ப்பாண மக்களின் பிரச்சினையை எவ்வாறு கையாளுகின்றது என்பதே கேள்வியாகும். ஏனெனில் இம் மக்கள் 1995 அக்டோபர் 30ம் திகதி புலிகளால் பலவந்தமாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் புலிகளின் வேண்டுகோளை ஏறறு வன்னி செல்லாமல் அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்துக்கு வந்து மீளக் குடியேறியவர்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.

ஏ- 9 பாதை மூடப்பட்டிருப்பதால் புலிகளுக்கு மாதாந்தம் கிடைத்துவரும் சுமார் 30 கோடி ரூபா இழப்பு ஏற்படும், அது புலிகளைப் பாதிக்கும் என அரசாங்கம் தான் பாதையை மூடிவைத்திருப்பதற்கு நியாயம் கூறுகின்றது. புலிகளின் மாதாந்த வருமானம் ஆக இந்த 30 கோடி ரூபா தானா? இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதும் சிரிப்புக்கிடமானதுமான கருத்தாகும்.

புலிகளின் வருடாந்த நிகர வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாக்கள் என மேற்குநாட்டு உளவு அமைப்புகளே கூறுகின்றன. புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற லட்சக் கணக்கான தமிழ் மக்களிடமிருந்து புலிகள் மிரட்டிக் கறக்கின்ற பணம் கோடிக்கணக்கான ரூபா. இதுதவிர புலிகள் சர்வதேச ரீதியாக நடாத்துகின்ற போதைவஸ்து வியாபாரம், ஆயுத வியாபாரம், கப்பல் போக்குவரத்து வியாபாரம் என்பனவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபா (முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததற்கு கூலியாக மேற்கு நாடொன்றிடமிருந்து பலநூறு கோடி ரூபாவை புலிகள் பெற்றதாக கூறப்படுகிள்றது)

இதுதவிர நோர்வேயும் வேறு சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களும் புலிகளுக்கு ஒழுங்கான முறையில் பணப் பட்டுவாடா செய்துவருகின்றனர்.

கொழும்பு, யாழ்பாணம் போன்ற அரசாங்கக் கட்டுப்பாட்டு நகரங்களிலும் ஏன் இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும்கூட புலிகள் பல்வேறு வர்த்தக முயற்சிகளில் பலகோடி ரூபா முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். (இலங்கையில் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து இராணுவ ரகசியங்களை புலிகள் கறப்பதும் அண்மையில் அமெரிக்க அதிகாரிகளுக்கே புலிகள் லஞ்சம் கொடுக்க முற்பட்டதும் புலிகளின் அசுர உள்நாட்டு வெளிநாட்டு பணபலத்துக்குச் சான்றாகும்)

கனடாவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பெரும்பெரும் சுப்பமார்கேட்டுக்களை புலிகள் நிர்மாணித்திருக்கிறார்கள்.

கனடாவில் கடந்த லிபரல் அரசாங்கத்தில் அதிமுக்கிய பதவி வகித்த ஒருவரின் மகன் நாடாத்தும் சர்வதேச கப்பல் கம்பனி ஒன்றில் புலிகளும் ஒரு பங்குதாரர்கள் என புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

இதுதவிர புலிகளின் முகவர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உலகம் முழுவதும் பலகோடி ரூபாவை புலிகளுக்காக திரட்டி வருகின்றது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் வன்னிப் பிரதேசத்தில் மக்களுக்கு அரசாங்கமே நிவாரணப்பொருட்களை அனுப்புகின்றது. புலிகள் அங்குள்ள கிராமசேவகர்கள் மூலம் கூடுதலான ஆட்களின் பெயர்களை பதிவு செய்து தமது உறுப்பினர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை எடுப்பது ரகசியமானது அல்ல.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வீதிகள், குளங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என எல்லாவற்றினதும் அபிவிருத்திக்கு அரசாங்கம் அனுப்பும் பணத்தை புலிகளே சூறையாடுகிறார்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயற்படும் அரச ஊழியர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்பட, அவர்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்குகின்றது.

இத்தனை வழிகளிலும் புலிகளுக்கு கிடைக்கும் வருமானம் எத்தனைகோடி ரூபாவாக இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள். இவையெல்லாவற்றையும் அரசாங்க நியாயப்படி நிறுத்தவல்லவா வேண்டும்.உண்மையில் புலிகளின் மொத்த மாதாந்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் ஏ-9 வீதியால் அவர்களுக்கு கப்பமாக கிடைக்கும் 30 கோடி ரூபா அவர்களது மாலை நேர தேனீர் செலவுக்கு ஒப்பானது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே ஏ-9 பாதையை அரசாங்கம் மூடிவைத்திருப்பதற்கான பிரதான காரணம் அரசாங்கம் கூறுவதுபோல புலிகளுக்கு கிடைக்கும் வருமானம் அல்ல. இராணுவ ரீதியான காரணங்கள் இருக்க வேண்டும்.

புலிகளைப் பொறுத்தவரையில் ஏ- 9 வீதியைத் திறப்பதால் வரிப்பணம் கிடைப்பது மாத்திரமின்றி போதிய பொருட்களைப் பெறமுடியும் என்பதும் மாத்திரமின்றி தென்னிலங்கைக்கும் யாழ்பாணத்திற்கும் தமது புலனாய்வாளர்கள், தற்கொலை குண்டுதாரிகள், ஆயுதங்கள் என்பனவற்றை கடத்த முடியும் என்பதும் பிரதானமானது. ஆனால் ஏ - 9 பாதை இல்லாவிட்டாலும் (சற்றுச் சிரமம் இருப்பினும்) புலிகளால் அவற்றைச் செய்ய முடியும் என்பது நிராகரிக்க முடியாத உண்மையாகும்.

எனவே ஏ - 9 பாதையை மூடியதன் மூலம் பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் புலிகளை முடக்கிவிட முடியும் என அரசாங்கம் கருதுமாக இருந்தால் அது தப்பான கருத்தாகும்.

உண்மையில் ஏ- 9 பாதையை மூடியதால் புலிகளைவிட மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் யாழ் குடாநாட்டு மக்களே. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அங்கு பொருட்களுக்குத் தட்டுப்பாடும் விலையுயர்வும் ஏற்பட்டுள்ளது. போதாததற்கு புலிகளுக்கு லட்சகணக்கில் கப்பம் செலுத்தும் யாழ் வர்த்தகர்கள் இச் சந்தர்ப்பத்தைப் பாவித்து பொது மக்களிடம் ஈவிரக்கமின்றி கொள்ளை லாபம் அடித்துவருகின்றனர். வெளிநாட்டு வருமானம் உள்ள யாழ் குடாநாட்டு மக்களே இன்றைய சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் அல்லாடுகையில் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் கதி என்ன?

அரசாங்கத்தின் இந்தவகையான சமயோசிதமற்ற, மக்கள் விரோத செயற்பாடுகள் யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் விரக்தியையும் கோபத்தையும் உண்டு பண்ணியுள்ளதுடன், அவர்களை அரசுக்கு எதிராக திரும்பவும் வைத்துள்ளது.

புலிகளின் செயற்பாடுகளுக்காக யாழ் குடாநாட்டு மக்களை அரசாங்கத்திலுள்ள சில சக்திகள் பழிவாங்குவதற்கு முற்படுவதுபோல் தெரிகின்றது. ஆனால் புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கும் அதன் இன்றைய வளர்ச்சிக்கும் காரண கர்த்தாக்கள் யாழ் குடாநாட்டு மக்கள் அல்ல. புலிகளை வளர்த்துவிட்டவர்கள் இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களே.

தமிழ் மக்கள் தமது தேசியப் பிரச்சினைகளை சாத்வீகமாக தெரிவித்தபோது அதை தீர்ப்பதற்கு பதிலாக இராணுவ ஒடுக்குமுறையை பிரயோகித்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது அரசாங்கமே. குறிப்பாக 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர், ஜெயர்த்தனாவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே இன்றைய யுத்தத்தின் பிரதான சூத்திரதாரி ஆகும்.

இந்த நிலைமைகளின் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் என்ற உலகின் மிகக் கொடூரமான பாசிச இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கத்தின் தோற்றத்தினாலேயே செயற்பாடுகளினாலும் உண்மையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் அல்ல, தமிழ் - முஸ்லீம் மக்களே. இந்த இயக்கத்தின் செயற்பாடுகளால் தமிழினம் தேசிய இனம் என்ற அந்தஸ்தை இழந்து நாடோடி அகதிகளாக மாறியுள்ளதுடன் சாதாரண மனித வாழ்வையும் இழந்துள்ளது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வெறுமனே இராணுவ ரீதியான நடவடிக்கைகளால் புலிகள் இயக்கத்தை ஒழித்துவிடலாம் என கருதிச் செயற்படுவது ஒருபோதும் வெற்றியளிக்ப்போவதில்லை. ஏனெனில் புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கமாக இருந்த போதிலும் அவர்கள் தமது இருப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையையே பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாகவே அரசின் தவறான செயற்பாடுகளினாலும் தமிழ் மக்களின் கணிசமான ஒரு பகுதியினர் புலிகளின் பக்கமே நிற்கின்றனர். அத்துடன் இப்பிரச்சினையில் மத்தியஸ்தம் என்ற போர்வையில் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக சர்வதேச சக்திகளுகம் நுழைந்துவிட்டன.

எனவே உண்மையில் புலிகளை தோற்கடித்து தமிழ் மக்களை அவர்களது பிடியிலிருந்து விடுவிக்கவும் நாட்டை அழிவிலிருந்து பாதுகாக்கவும் அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்குமாக இருந்தால் முதலில் செய்ய வேண்டியது தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தீர்வு காண்பதே. அரசியல் தீர்வுடன் இணைத்து புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளையும் அரசாங்கம் கையாளுமாக இருந்தால் வெற்றி பெறுவது நிட்சயம்.

அரசாங்கம் அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் இவ்வாறான ஏ- 9 வீதி மூடுவதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளை கைவிடவேண்டும்.

எது எப்படியிருப்பினும் தனது பிரசைகளான யாழ் குடாநாட்டு மக்களுக்கு நாட்டின் ஏனைய பகுதி மக்களைப் போல பொருட்களை தாரளமாக கிடைக்கச் செய்வதும், அவர்களது சுதந்திரமான போக்குவரத்தை உத்தரவாதம் செய்வதும் புலிகளின் கைகளில் அல்ல, மாறாக அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதை அரசாங்கம் எக்காரணம் கொண்டு தட்டிக்கழித்துவிட முடியாது.

thenee.com

மாவீரர்கள் பேசுகிறார்கள்


- சித்திரபுத்திரன்

அன்பான தமிழ் மக்களே!


கொடூரமான யுத்தம் ஒன்றில் அநியாயமாக பலியாகிப்போன எமக்கு மாவீரர்கள் என நாமம் சூட்டி, எமது கல்லறைகளில் ஏறிநின்று எமது நினைவில் தனது பிறந்த நாளை கொண்டாடிக் குதூகலிக்கும் ஒருவனை தேசியத் தலைவராக ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டு வாழும் தமிழ் மக்களாகிய உங்களுடன் எமது உள்ளத்து வேதனைகளை பங்கிட்டுக்கொள்வதே எமது இந்தச் செய்தியின் நோக்கமாகும்.

சிறுவர்களான நாம் இந்த யுத்தத்தில் விருப்புடன் பங்குபற்றி பலியானவர்கள் அல்ல. எம்மில் பலரை பிரபாகரன் தலைமைதாங்கும் புலிகள் இயக்கம், பாடசாலைகளிலும் தெருவிலும் நாம் விளையாடும் இடங்களிலும் ஏன் எமது வீட்டில் எமது பெற்றோர் முன்னிலையில் பிடித்துவந்து கட்டாய ஆயுதப் பயிற்சி அளித்து போர்களத்தில் பலியாக்கியதன் மூலமே நாம் அவர்கள் சொல்லும் மாவீரர்களாக ஆக்கப்பட்டோம்.

புலிகள் இயக்கத்தின் இந்தக் கொடூரமான நரவேட்டைக்கு முன்னாள் எமது ஏழைப் பெற்றோர்களோ, சொந்தச் சகோதரர்களோ சுற்றம் சூழவுள்ளவர்களோ ஏதும் செய்ய முடியாத அபாக்கியசாலிகளாக பேசாமடந்தைகளாக செயலற்ற மனித சடலங்களாக ஆக்கப்பட்டனர். இன்று எமது மரணத்தினால் ஏற்பட்ட லாப நட்டங்களை இயக்கத் தலைமை கணக்குப் பார்த்து மேலும் நரபலிக்கு ஆயத்தமாகும் அதேவேளையில் எமது இரத்த உறவுகள் எமது கல்லறைகளில் தலையை முட்டி மோதி குமுறி வெடிக்கும் காட்சிகள் எமது மனக்கண் முன்னே விரிகின்றன.

அதிகார வெறியும் பேராசையும் கொடூர மனமும் கொண்ட ஒரு தலைவனின் அபிலாசைகளை ப+ர்த்தி செய்வதற்காக நடாத்தப்படும் ஒரு போரில் நாம் பலியாக்கப்பட்டோம். ஆனால் அநியாயமான இப்போர் தமிழ் மக்களான உங்களின் விடுதலைக்கான போர் என நாமகரணம் சூட்டப்பட்டே நடாத்தப்படுகின்றது. உங்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ப+ட்டப்பிள்ளைகளும் கொப்பாட்டப்பிள்ளைகளும் ஏன் கோந்துறு மாந்துறு பிள்ளைகளும் கூட தொடர்ச்சியாக இப்போரில் பலியாவதற்கான திட்டங்களை புலிகள் இயக்கம் தீட்டிக் கைவசம் வைத்திருக்கின்றது. ஆனால் அதுவரையில் எமது இனம் தப்பிப்பிழைக்குமா என்பது சந்தேகமே.

உயிரினில் அரிய மானிடப் பிறப்பையெடுத்து நாம் இப்ப+மியில் பிறந்தோம். எத்தனையோ ஆசைக் கனவுகளுடன் வளர்ந்தோம். எமது வாழ்வில் புலிகள் இயக்கம் யமனாக குறுக்கிட்டது. எமது ஆசைகள் நிராசைகள் ஆகின. வளரும் நாம் முளையில் கிள்ளி எறியப்பட்டோம். பூக்கும் வேளையில் மொட்டுகளில் கருக்கப்பட்டோம். உற்றம் சுற்றம் என்ற கடலில் இருந்து தரையில் தூக்கி வீசப்பட்ட மீனானோம். அந்தகாரத்தில் ஆழ்த்தப்பட்ட ஆவிகளானோம்.

புலிகள் இயக்கத்தில் இருந்த காரணத்தால் எம்மில் சுமார் இருபதினாயிரம் பேருக்கு மாவீரர் என்னும் பட்டத்தை ப+மியில் சூட்டினர். ஆனால் நாம் இப்போழுது வாழ்கின்ற இந்த உலகில் எமக்கு எந்தவித பட்டமும் கிடையாது. நாம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் காரணமாக எமக்கு நாமே கொலைகாரர்கள் என நாமம் சூட்டுவதே பொருத்தமானதாகும்.

ஏனெனில் எம்மால் கொலை செய்யப்பட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் - அப்பாவிப் பொதுமக்கள், மற்றுக் கருத்துக்கொண்டோர், ஜனநாயகத்தை நேசித்தோர், மாற்று இயக்கப் போராளிகள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் கல்விமான்கள் என்போரும் எமக்கு அண்மையிலேயே உறைகின்றனர். அத்துடன் நாம் ஆயிரக் கணக்கில் கொலைசெய்த முஸ்லீம், சிங்கள மக்கள், கதறித் துடிக்க துடிக்க எம்மால் கொலை செய்யப்பட்ட குழந்தைகள், கற்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள், தொழுகையில் ஈடுபட்ட இறைவிசுவாசிகள் எல்லோரும் எமக்குத் தென்படும் வகையிலேயே வலம் வருகின்றனர்.

ஆனால் அவர்கள் எவருமே எம்மை விரோதிகளாக நோக்கவில்லை. குரோதக் கண்களுடன் பார்க்கவில்லை, கோபக் கனலை வீசவில்லை. புலிகள் தலைமையினால் அநியாயமாக பலியிடப்பட்ட ஆத்மாக்களாகவே அவர்கள் எங்களை நோக்குகின்றனர். தமது துன்பத்தை மறைத்துக்கொண்டு எமக்காக அனுதாபப்படுகின்றனர். எமது தலைமையில் கண்களில் வீசும் கொலைவெறி அவர்களது கண்களில் காணப்படவில்லை. நாம்தான் எமது கடந்தகால செய்கைகளை நினைந்து கூனிக் குறுகின்றோம்.

நாம் இங்கு துயிலும் உலகின் கதவுகள் அடைக்கப்படும் அறிகுறி தென்படுவதாக இல்லை. நாளும் பொழுதும் புதிது புதிதாய் எமது உலகிற்கு ஆட்கள் வந்தவண்ணமே உள்ளனர். ப+மியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, ருவாண்டா, இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், கொலம்பியா, ரஷ்யா என நாடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.

இதில் எமது நாட்டிலிருந்து வரும் எண்ணிக்கையில் எமது இயக்கத்தின் பேரால் அனுப்ப்படுவோரின் தொகையே எப்போதும் அதிகமாக இருக்கின்றது. ஆண்டவனின் பல்வகைத் தொழில்களில் அழித்தல் தொழிலை எமது தலைமை விரும்பி எடுத்ததும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

வருங்காலத்தில் மேலும் மேலும் ஆட்கள் வருகையில் நாம் இப்பொழுது உறையும் இடத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் இப்பொழுதே இங்குள்ள பலருக்கு தொற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே எம்முடையதைப்போன்ற பல உறைவிடங்கள் நிறைந்துவிட்டதாக இங்குள்ளோர் பேசிக்கொள்கின்றனர். எமது இடமும் நிறைந்துவிட்டால் எனிப்போவதற்கு வேறு இடமில்லை என்றும் கூறுகின்றனர்.

ப+மியில் கொலைகள் நிறுத்தப்படாமல் போனால் இனிமேல் வரவுள்ள நீங்கள் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் திரிசங்கு சுவர்கத்திலேயே தங்கவேண்டியேற்படலாம். அது மிகவும் கஷ்டமானது. இதற்கு தீர்வு ஒன்றுதான் உள்ளது.

எண்ணிக்கையில் கூடுதலான பொதுமக்களான நீங்கள் மரணத்தின்பின் நிம்மதியாக உறங்குவதற்கு இடந்தேடி அலைவதைவிட, உங்களை மரணத்துக்குள்ளாக்கும் அந்த ஒரு சிறுதொகை மானிடக்கொல்லிகளான புலித்தலைமையை நீங்கள் ஒன்றுதிரண்டு நின்று மரணிக்கவைப்பதே அது.

எமது பெயரால் நினைவுகூரலை செய்யும் இத்தினத்தில் நீங்கள் எடுக்கவேண்டிய பிரதிக்ஞை இதுதான்.

உங்கள் உயிர்கள் ப+மியிலேயே நிலைக்கட்டும்.

உங்கள் நினைவுகளில் மூழ்கித்தவிக்கும்

மாவீரர்கள்.

கருணா அம்மானின் மாவீரர் தின அறிக்கை


மாவீரர் தினம் என்பது பிரபாகரனைப் பொறுத்தவரை அது அவரது வாய்ச்சவாடல்களுக்கும், வீரவசனங்களுக்குமான களமாகப் பயன்படுகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானின் மாவீரர் தின அறிக்கை

தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நிம்மதியான வாழ்விற்காகவும் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் இச்சந்தர்ப்பத்தில் சில முக்கிய விடயங்கள் குறித்து அளாவ அவாவுற்றுள்ளேன்.

உன்னதமான இலட்சியங்களைச் சுமந்து அதற்காக தம் உயிர்களை அர்ப்பணித்த எம் மாவீரர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் காலத்தாலும், காவியத்தாலும் மறக்கப்பட முடியாது. தாய் மண்ணிற்காகவும், தன் இனத்திற்காகவும் யாவையும் துறந்து சமர்களம் புகுந்து வீரகாவியமாகி விட்ட எம்மாவீரர்களுக்கு நாம் என்றும் தலைவணங்குகின்றோம். தமிழின வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது எம்மாவீரர்களின் சரிதைகள் . அவர்கள் என்றுமே கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். ஆனாலும் இம்மாவீரர்களின் தியாகங்களும், அர்ப்பணி;ப்புக்களும் இன்று பிரபாகரன் எனும் ஒரு தனி மனிதனின் அதிகார மோகத்திற்கும், ஏதோச்சதிகார வாழ்விற்கும் விளம்பரமாகப் போவதுதான் வேதனை.

தமிழின மக்களின் நிம்மதியான வாழ்விற்காக தம் உயிர்களை துச்சமாக மதித்து வீரகாவியமான மாவீரர்களை எம்மக்களின் நிம்மதியான வாழ்விற்கு இன்று பெரும் தடையாகவுள்ள பிரபாகரனும், அவரது கூட்டமும் நினைவு கூருவது அம்மாவீரர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் களங்கப்படுத்துகின்றது. இதனைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மாவீரர்களின் தியாகங்களும், அவர்கள் சுமந்த இலட்சியங்களும் வியாபார, விளம்பரப் பொருட்களாகிவிட்டன. தம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவும், தமது சுக போக வாழ்விற்காகவும் மாவீரர்கள் விற்கப்படுகின்றனர்;. மாவீரர்கள் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள். ஆனால் சில்லறைத்தனமான சிதறல்களாக அவர்களின் தியாகங்கள் விலை போவதுதான் வேதனை. தன் பிறந்த தினத்தின் பெருமையை பேர் சொல்ல பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்கள் துணைக்கழைக்கப் படுகின்றன.

மாவீரர்களின் மரணங்கள் சரித்திரங்கள் ஆனால் அம் மரணங்கள் பயங்கரவாதிகளினதும,; அடக்குமுறையாளர்களினதும் அதிகாரத்திற்கும், சுயநலத்திற்குமாக நினைவுகூரப்படுவது நிறுத்தப்பட வேண்டும், எம் பிரிவின் பின்னரும் எம்மக்களுக்காக, அவர்களின் பாதுகாப்புக்காக, நிம்மதியான வாழ்விற்காக எம் பல போராளிகள் துரோகத்தனமாகவும், கோழைத்தனமாகவும் கொல்லப்பட்டார்கள். அவர்கள் சுமந்த அவ்வுன்னதமான இலட்சியங்களுக்காகவே நாம் இன்று களத்தில் நிற்கின்றோம்.

எம் இனத்தின் அச்சமற்ற, நிம்மதியான வாழ்விற்கு இன்று பெரும் தடையாக இருப்பது பிரபாகரனின் தனிமனித அதிகாரப் போக்கும், கொலை வெறியும் தான். இதற்காக நாம் இழந்தவைகள் கொஞ்ச நெஞ்சமல்ல. ஒரு தனி மனிதனின்; இருப்பிற்காகவும், அதிகார மோகத்திற்காகவும் அறிஞர்களையும், சமயக் குரவர்களையும் அப்பாவிப் பொதுமக்களையும் எம் இனம் இழந்துள்ளது. இவ்வவல நிலைமை தொடராமல் எம் மக்களையும், மண்ணையும் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

மாவீரர் தினம் என்பது பிரபாகரனைப் பொறுத்தவரை அது அவரது வாய்ச்சவாடல்களுக்கும், வீரவசனங்களுக்குமான களமாகப் பயன்படுகின்றது. அவரது யுத்த மோகமும், போர்ப் பிரகடனங்களும் சொல்லளவிலேயே நிற்கின்றதேயன்றி செயலளவில் அல்ல. சென்ற மாவிரர்தின உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு குறுகிய கால அவகாசம் கொடுப்பதாகவும் அதற்குள் தமக்கான தீர்வு கிடைக்காவிட்டால் போர்ப்பிரகடனம் எனவும் மிரட்டினார். அவர்களின் குறுகிய கால அவகாசம் இன்னும் முடிவடையவில்லை போலும். அதற்கு முன்பும் யாழ் குடா நாட்டை மூன்று தினங்களில் கைப்பற்றுவோம் என வீரப்பிரதாபம் பேசியவர்களின் நிலை என்னவானது என்று அனைவருக்கும் தெரியும். பொறுமை என்னவென்றே தெரியாதவர்கள் எம் பிரிவின் பின் பொறுமையின் உண்மையான பெறுமதியை உணர்ந்திருக்கின்றார்கள். பிரபாகரனின் வீரவசனப் பேச்சில் சமீப காலமாக புலி உறுப்பினர்களே நம்பிக்கை இழந்துவிட்டனர். சமீப கால மோதல்களில் பெற்ற மோசமான அனுபவமும், திறமையான தலைமைத்துவமும், உரிய வழிகாட்டலும் இல்லாமல் பெற்ற தோல்விகளும், இலக்கில்லாத மோதலும் புலி உறுப்பினர்களை விரக்திக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் அவர்கள் தம் வீடுகளுக்கு தப்பிச் செல்வதுடன் எம்மிடமும் அரச படைகளிடமும், சரணடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தெளிவான இலட்சியமும், உரிய இலக்குமில்லாமல் புலிகள் இயக்கம் தன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றது.

இதற்கு இப்போது புலிகள் கிழக்கில் அடைந்துள்ள பின்னடைவு தக்க சான்றாகும். கிழக்கு மக்களினால் எப்போதே நிராகரிக்கப்பட்டு விட்ட புலிகள் இராணுவ ரீதியிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்து தமது பலத்தை வெறும் மூன்று கிராமங்களுக்கு மட்டுமே மட்டுப் படுத்தியிருக்கிறார்கள். இங்கிருந்தும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு மிக விரைவில் கிழக்கு மண் எம் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும். எம் மண்ணை ஆக்கிரமிக்து எம்மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு முடிவு காணும் காலம் அண்மித்து விட்டது.

அதன் பின் எத்தடைகளும் இன்றி எம்மக்களின் அடிப்படை பிரச்சினையையும், அபிலாசைகளையும் பூர்த்தி செய்வதற்கான அரசியல் ரீதியான எம்பயணம் வெற்றிகரமாக முன்னெடு;க்கப்படும். எம் வளர்சியானது விரோதிகளினதும், துரோகிகளினதும் எதிர்ப்புக்களை உடைத்தெறிந்து எம் போராளிகளின் அர்ப்பணிப்பிலும,; எம்மக்களின் ஆதரவினாலும் அபரிமிதமாக முன்னேறி வருகின்றது. எம்மக்கள் தமது பிரதிநிதிகள் என்னும் மகுடத்தை எமக்கு சூட்டியுள்ளனர். இதற்காக நாம் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட இழப்புகளும், வலியும் ஏராளம். நாம் கடக்கப் போகும் பாதையும் பூக்கள் தூவப்பட்ட பாதையல்ல என்பதும், முட்கள் நிறைந்த பாதை என்பதையும் நாம் நன்கறிவோம். இருந்தும்; எம்மக்களுக்காக, எம்மக்களின் நிம்மதியான வாழ்விற்காக நாம் அவற்றை இன்முகத்துடன் எதிர்கொள்வோம். இன்று நாம் அரசியல் ரீதியாக அடைந்துள்ள இப் பரிணாமமானது. இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வோ, நிரந்தர சமாதானமோ எம்மை விடுத்துச் சாத்தியமில்லை. என்பதை சம்மந்தப்பட்ட அனைவருக்கும் உரத்துக் கூறுகின்றது. எம்மூடாக எம்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாத எதவும் செல்லாக் காசுதான்.

பிரபாகரனும் அவரது கூட்டமும் இப்போது நடத்திக்கொண்டிருக்கும் பிழைப்புவாதப் போரில் பொதுமக்களே மையப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ். குடாநாட்டில் 6 இலட்சம் தமிழ் மக்களையும், வாகரையில் 30 ஆயிரம் தமிழ் மக்களையும் மனிதக் கேடயங்களாகவும், பணயமாகவும் வைத்து தம்மை மட்டும் பாதுகாக்கும் பிழைப்புவாதப் போரில் ஈடுபட்டிருக்கின்றனர். குடாநாட்டு மக்கள் எதிர்நோக்கியிருக்கும் மனிதாபிமான, மனித அவல நெருக்கடிக்கு களமமைத்தவர்கள் புலிகள்தான் என்பதை மக்கள் நன்கறிவர். தமது வருவாயை மட்டும் முன்னிலைப்படுத்தி ஏ9 பாதையை திறக்கும் படி வற்புறுத்தும் புலிகள் குடாநாட்டு மக்கள் தம் மக்கள் என்ற உணர்விலருந்தால் அம் மக்களுக்கு எவ்வகையிலேனும் அத்தியாவசிய, அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதற்கு இணங்கியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் கடல் வழியாக குடாநாட்டிற்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு பாதுகாப்புத்தரவாதம் இல்லையென்பதும், ஏ9 பாதையினூடாக ஓரே தடவையில் போதுமான உணவுப் பொருட்களை அனுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும்; குடாநாட்டு மக்கள் புலிகளின் சுரண்டல்களுக்கு மாத்திரமே அன்றி அம்மக்களின் நலனிலோ, அபிலாசைகளிலோ எவ்வித அக்கரையுமில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

இதே போன்று வாகரையிலும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் 30,000 மக்கள் மனிதக் கேடயங்களாக்கப்பட்டுள்ளனர். அம்மக்களின் அவலங்களும், அழுகுரல்களும் பிரபாகரனின் உள்ளத்தை இளக வைக்கவில்லை. பிரபாகரனும் அவரது கூட்டத்தினருக்கும் தமது பாதுகாப்பு, இருப்பு, தேவைகளே முன்னிலைப் படுத்;தப்பட்டு மக்கள் இரண்டாம் பட்சமாக்கப்படும் துர்ப்பாக்கியம் தொடர்கதையாகின்றது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். எம் மக்களின் நலன்களும், பாதுகாப்பும், அபிலாசைகளும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். எம்மக்களின் விரோதிகளும், பயங்கரவாதிகளும் ஓரங்கட்டப்பட வேண்டும்.

இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கும், சிங்கள சகோதரர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் முக்கிய கடப்பாடு உண்டு. பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை பிரித்துப் பார்க்க வேண்டும். யாழ்ப்பாணத் தமிழ் மக்களாயினும், மட்டக்களப்புத் தமிழ் மக்களாயினும் அவர்களும் இந்நாட்டின் குடி மக்களே. பயங்கரவாதிகளினால் பணயமாக, மனிதக் கேடயங்களாக்கப்படும் தமிழ் மக்களை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் எதிரான நடவடிக்கையில் எவ்வகையிலும் தமிழ் மக்களோ ஏனைய சகோதர இன மக்களோ பாதிக்கப்படக் கூடாது. நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கான மனிதாபிமான, அடிப்படை வசதிகளை அரசாங்கம் துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். இதில் ஏற்படும் காலதாமதம் பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பாகவும், மக்களுக்கு வெறுப்பையும், சலிப்பையும் ஏற்படுத்தும் என்பதை மறந்து விடக்கூடாது. வடக்கு-கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை பாகுபாடின்றி பிரபாகரனி;ன் அடக்குமுறையில் இருந்தும், கொலைக் கலாச்சாரத்திலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாமும் அடக்குமுறையில் இருந்து வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற மக்களை மீட்டெடுக்கவே போரிடுகின்றோம். எமது ஆயுதப் போராட்டத்தின் எல்லை வரையறுக்கப் பட்டது. எம் எல்லையை நாம் அடைந்தவுடன் நாமாகவே எம் ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து விடுவோம். நாம் ஆயுதங்களுடன் என்றும் தோழமை பூண்டிருக்க வேண்டுமென்றோ, அடைய முடியாத இலட்சியங்களுக்காக அர்த்தமற்ற ஆயுதப் போரொன்றை தொடர வேண்டுமென்றோ என்றுமே எண்ணியதுமில்லை, விரும்பியதுமில்லை. நாங்கள் இன்று சுமந்திருக்கும் ஆயுதம் நாங்களாக விரும்பியதல்ல, நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம். எம் மக்களின் அச்சமற்ற, நிம்மதியான வாழ்வு தம் தாயக பூமியில் உறுதிப்படுத்தப்படவும், சகோதரத்துவம் நிலைநாட்டப்படவும், ஜனநாயக நீரோட்டத்தினூடான எமது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவும், பிரபாகரனினதும், அவரது கூட்டத்தினதும் அடக்குமுறைக்கும், பயங்கரவாதத்திற்கும் எம்மண்ணில் சமாதி கட்ட வேண்டிய அவசிய, அவசரத் தேவை எமக்கிருக்கிருந்தது. அதனாலேயே நாம் ஆயுதங்களை சுமந்தோம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பாக ஜனநாயக, அரசியல் நீரோட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு அரசியல் கட்சி. எம்மக்களின் பிரச்சினைகளையும், அபிலாசைகளையும் இதனூடாகவே பெற நாம் உறுதி பூண்டுள்ளோம்.

எமது அரசியல் பயணம் வேகமாக முன்னேறி வருகின்றது. எம்மக்களிடமும், சகோதர இன மக்களிடமும் எம்மீதான நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. எம்மக்களை வழிநடாத்த, வழிகாட்ட வெற்றிடமாக இருந்த அரசியல் தலைமைத்துவத்தை நாம் பொறுப்பேற்று விட்டோம். எமது அரசியல் பணிகளும், விஸ்தரிக்கப் பட்டு வருகின்றன. பொத்துவில் தொடக்கம் திருமலை வரை எம் அரசியல் செயலகங்கள் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும், அடிப்படை விடயங்களுக்கும் தீர்வு காணும் செயற்கூடங்களாக பரிணாமிக்கின்றன. எம்மக்களினால் தமது பிரதிநிதிகள் என்று எமக்களிக்கப் பட்டுள்ள அங்கீகாரத்தை தேசியமும், சர்வதேசமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளில்; எம்மக்களின் பிரதிநிதிகளின் பிரசன்னங்களும், அவர்களின் அபிலாசைகளும் பூர்த்தி செய்யப்படாத எத்தீர்ப்பும் பயன்தரப் போவதில்லை. அதேசமயம் காத்திரமான தீர்வானது சகோதர இன மக்களின் அரசியல் உரிமைகளையும், அபிலாசைகளையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே எம் நிலைப்பாடு.

அதே சமயம் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தனது அரசியல் தீர்வுத் திட்டங்களை வெளியிட வேண்டும். அத்தீர்வுத் திட்டத்தினூடாக தமிழ் மக்களின் உரிமைகளும், அபிலாசைகளும் எவ்வாறு பேணப்படும் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். இது அவசியமும், அவசரமுமான பணியாகும். இது குறித்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் மட்டுமன்றி சகோதர இன மக்களுடனும் கலந்தாலோசிக்கப் பட வேண்டும். இவ்வரசியல் தீர்வானது தமிழ் பேசும் மக்களின் உரிமைகளையும், அபிலாசைகளையும் உறுதிசெய்யும் பட்சத்தில் அதற்கு ஒத்துழைப்பவர்களை அணைத்துக் கொண்டும், ஒத்துளைக்காதவர்களை ஓரங்கட்டிவிட்டும் இத்தீர்வானது முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புணர்சியுடனும், உடனடியாகவும் காரியமாற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினையானது வெறும் பேச்சளவிலேயே இருக்குமானால் அது பயங்கரவாதிகளுக்கு அனுகூலமாக அமைவதுடன் மக்களிடையே வெறுப்பையும், விரக்தியையுமே விதைக்கும். இதில் அரசாங்கம் உடனடியாக கூடிய கவனமெடுக்க வேண்டும்.

இவைகள் விடயத்தில் புலம் பெயர்ந்து வாழும் எம்மினச் சகோதரர்களுக்குப் பொறுப்பும், கடமையும் உண்டு. நீங்கள் தாயக மண்ணிலுள்ள எம்மக்களின் விடிவுக்காக கொண்டுள்ள அக்கறை உன்னதமானது. எம்மக்களின் விடிவுக்காக உங்களால் வழங்கப்பட்ட உதவிகள் அனைத்தும் எம்மக்களைத்தான் சென்றடைகின்றதா என்பது குறித்து நீங்கள் தெளிவடைய வேண்டும். மக்களின் போர்வைகளில் பயங்கரவாதிகளிடமே உங்களின் உதவிகள் சென்றடைவதனால் எம்மக்களின் சுமைகளும், துயரங்களும் இன்னும் கனமாகின்றதே தவிர தளர்வடையவில்லை. பாடசாலைச் சிறுவர்களையும், அப்பாவி இளைஞர்களையும் கடத்துவதற்கும், கட்டாய ஆயுதப்பயிற்சியளிக்கவுமே உங்களது உதவிகள் பயன்படுகின்றன. நீங்கள் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும் பிரபாகரனிடமும், அவரின் முக்கியஸ்தர்களிடமும் யுத்த களம் சென்று போரிடக் கூடிய வயதில் பிள்ளைகள் உண்டு. ஆனால் இன்று அவர்களின் பிள்ளைகள் எங்கே? யுத்த களத்தில் நின்று போரிடுகின்றார்களா? இல்லையே அவர்கள் பாதுகாப்பாக மேற்கத்தைய நாடுகளில் கல்வி பயில, படிப்பறிவற்ற ஏழைப் பெற்றோரின் பிள்ளைகள் யுத்த முனைகளில் பலி கொடுக்கப்படுகின்றனர். இந்நிலைமை தொடர வேண்டுமா என்று தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டிய கடமை உங்களுக்குண்டு. உங்களின் உதவிகள் இன்று பட்டினியினால் வாடும், வறுமையில் உழலும் எம்மக்களுக்கு கிடைக்கச் செய்யுங்கள். எம்மக்களின் அவல வாழ்விற்குச் முற்றுப்புள்ளி வைக்க உதவுங்கள்.

இதே போன்று புலி உறுப்பினர்களும், அவர்களின் பெற்றோர்களும் இவ்வுண்மையை உணர வேண்டும். உங்களின் பிள்ளைகள் இலக்கின்றி, இலட்சியமின்றி ஒரு தனி மனிதனின் அதிகார மோகத்திற்கு பலி கொடுக்கப்படுகின்றார்கள். யார் பெற்ற பிள்ளை என்பதினால் அப்பிள்ளை யுத்த முனையில் பலி கொடுக்கப்பட தான் பெத்த பிள்ளைகள் பாதுகாப்பாகக் கல்வி பயில்கிறனர். பெற்றோர்களும், போராளிகளும் இப்பாகுபாட்டையும், பாரபட்சத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எம் இளைஞர்களின் பெறுமதிமிக்க உயிர்கள் அநியாயமாகவும், அநாவசியமாகவும் இழக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். எம் மக்களும் தம் தாயக பூமியில் சகோதர இனங்களுடன் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதுடன் உலக மயமாக்கலுக்கேற்ப சமூக பொருளாதார, அபிவிருத்தியுடன் தமக்கான கலை, கலாச்சார, பண்புகளுடனும், மேன்மையுடனும் வாழ வேண்டும். இதனை நோக்கிய எம் பயணத்தில் சமூக விடுதலையை விரும்பும் அனைவரும் கை கோர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.

ரி.பி.சி வானொலியின் ஊடக அறிக்கை


எமது ஜனநாயகக் குரல் எவ்வளவு வலிமையானது என்பதையே இக் கொடுஞ் செயல்கள் எமக்கு உணர்த்துகின்றன.


ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட அன்புத் தமிழ் நெஞ்சங்களே!

தமிழ்பேசும் மக்கள் மீது வன்முறை, பயங்கரவாதம் என்ற இருள் கௌவியுள்ள இச் சூழலில் அம் மக்களை அத் துன்பச் சுமையிலிருந்து விடுவித்து அங்கு ஜனநாயக சூழலை ஏற்படுத்த கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வந்த உங்களின் பிரியமான வானொலியாகிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த 24-11-2006ம் திகதி வெள்ளிக் கிழமை நள்ளிரவில் கொள்ளையிடப்பட்டு, சூறையாடப்பட்டுள்ளது.

இக் கொடுமையான, அநாரிகமான சமூக விரோதச் செயலை யார் புரிந்தார்கள்? என்பதை நாம் அடையாளம் காட்டத் தேவையில்லை. வன்முறையினாலும், பயங்கரவாதத்தினாலும், மிரட்டல்களினாலும் மக்களின் குரலை ஒடுக்கி அதன் மூலம் தமது காட்டுத் தர்பார் அரசியலை நடத்தி வரும் ஜனநாயக விரோத சக்திகளின் ஈனத்தனமான செயலே இதுவாகும். சில தொழில் நுட்பக் கருவிகளை திருடுவதன் மூலம் அல்லது அழிப்பதன் மூலம் மக்களின் குரலை ஒடுக்கி விடலாம் என நப்பாசை கொண்டிருக்கும் இச் சமூக விரோத சக்திகள் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை உணர்த்தும் காலம் அண்மித்து விட்டது.

அன்பார்ந்த நெஞ்சங்களே,

எமது ஜனநாயகக் குரல் எவ்வளவு வலிமையானது என்பதையே இக் கொடுஞ் செயல்கள் எமக்கு உணர்த்துகின்றன. எதிரியின் கோட்டை தகர்ந்து வருவதன் அடையாளமே இதுவாகும். தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைக்காக தமது இன்னுயிரை ஈந்த ஆயிரக் கணக்கான மக்களின் தியாகங்களை நினைவு கூரும் தினம் அண்மிக்கையில் அத் தினத்தைப் பயன்படுத்தி சில சமூக விரோத சக்திகள் தம்மைப் பலப்படுத்தும் கைங்கரியத்தைப் புரிந்து வருகின்றனர். பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் அந் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முடியாத நிலையில் தடுமாறுகின்றனர். ஜனநாயத்தின்பால் அவர்களுக்கு அக்கறை இருக்குமாயின் மக்களுக்கு நிலமைகளை விளக்க ஏன் தயங்குகின்றனர்? இவ் வன்முறையாளர்கள் தமது கொடிய திட்டங்களை நிறைவேற்ற மக்களை இங்கும் கேடயமாக்க முயற்சிக்கின்றனர்.

தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளின்பால் அக்கறையுள்ள மக்கள் இச் சதியாளர்களின் குறுகிய நோக்கங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை மிகவும் தொடர்ச்சியாக உங்கள் கவனத்திற்கு எடுத்து வந்தது தமிழ் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். இதனை எதிரி நன்கு புரிந்து கொண்டுள்ளான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இத்தனை வலிமையான குரலை நீங்களே ஆதரித்தீர்கள். நீங்களே உரமி;ட்டு வளர்த்தீர்கள்.

ஜனநாயத்தின் குரல் எத்தனை வலியது என்பதை உணர்த்த நாம் ஆயிரம் வார்த்தைகள் தரப்போவதில்லை. எமது பலத்தை உணர்த்தவேண்டிய தருணம் இதுவாகும். பேச்சுவார்த்தைகளை உருப்படியாக நடத்த முடியாத வங்குறோத்து அரசியலைக் கொண்டிருக்கும் இவ் ஜனநாயக விரோத சக்திகள் தமது தனி மனித காடைத்தனத்தை அரசியலாக்கி உள்ளனர். இதன் பலமும் பலவீனமும் இதுவே. இதைத் தவிர வேறு எதுவும் இவர்களிடம் இல்லை.

வானொலியை மீண்டும் பலமுள்ள வகையில் பாதுகாப்புடன் செயற்படுத்துவதற்கு சுமார் 20000 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்டுகள் தேவைப்படுமென தொழில் நுட்பவியலாளர்கள் கணித்துள்ளனர். சுமார் இரண்டு மாதங்களுக்குள் இதனைப் பூரணமாக மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற பிடிவாதத்தோடு செயற்படுகிறோம். உலகெங்கிலும் வாழும் ஜனநாயக சக்திகள் இவ் வானொலியின் அவசியத்தைப் புரிந்து கொண்டு எமது இலக்கை நோக்கி மீண்டும் பயணிக்க உதவ முன்வர வேண்டும்.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

நிர்வாகத்தினர்.

26.11.06

ராஜீவ்காந்தி படுகொலை - ஏடுபுரட்டும் புலிகள்

ராஜீவ்காந்தி படுகொலை

ஏடுபுரட்டும் புலிகள்




புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.த அவர்கள் இந்தியாவின் பிரபல செய்தி சேவையான என்.டி.ரி.வி க்கு பேட்டியொன்றை அண்மையில் வழங்கியுள்ளார். அப் பேட்டியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலையை புலிகள் செய்யவில்லை என்று புதிய புலுடாவை அவிழ்த்துள்ளார். அண்மையில் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை வரலாற்றின் துன்பியல் அதற்கு நாங்கள் வருந்துகிறோம் என்று தற்போது கடும் பிணி கண்டிருக்கும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருந்தார். இதே என்.டி.ரி.விக்கு வழங்கிய பேட்டியிலேயே பாலசிங்கம் இவ்வாறு தெரிவித்திருந்தார். பாலசிங்கத்தின் இந்த கூற்றுத் தொடர்பில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம், இந்திய வெளிவிவகார இணையமைச்சர் ஆனந் சர்மா, ராஜீவ்காந்தி படுகொலை பற்றி விசாரித்த ஜெயின்கமிசன் தலைவர் ஜெயின், முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் கார்த்திகேயன் இவர்கள் உட்பட பலரும் தமது பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். சர்வ சாதாரணமாக இந்தியாவின் பிரதமர் ஒருவரை படுகொலை செய்தது தொடர்பாக பாலசிங்கம் தெரிவித்திருந்த வருத்தம் கடும் விசனத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

இப்போது புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.த அவர்கள் ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலையை புலிகள் புரியவில்லை என்றும் இதுபற்றி மேலதிக விசாரணை தேவை என்றும் மாய்மாலக் கதையை அவிழ்த்திருக்கிறார்.

மௌனம் சாதிப்பதும், பொட்டுக்கேடு நன்றாக வெளிப்பட்டபின் அதனை துன்பியல் சம்பவம் என்பதும் பின்னர் வருந்துகிறோம் என்பதும். இப்போது தாம் அதனை செய்யவில்லை என்பதும் புலிகள் எவ்வளவு நயவஞ்சகமான சுத்துமாத்து பேர்வழிகள் என்பதை புலப்படுத்துகிறது.

இதற்கு முன்னர் 2002 ஏப்ரலில் வன்னியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேள்விக்கு மேல் கேள்விக்கணைகளை தொடுத்து ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை பற்றி வினா எழுப்பியபோது பிரபாகரன் பேந்த பேந்த சுற்றுமுற்றும் விழித்துக் கொண்டிருந்த நிலையில் அதுவொரு துன்பியல் சம்பவம் என்று அடியெடுத்துக் கொடுத்தவர் பாசிச ஆலோசகர் ஸ்ரனிசுலசு பாலசிங்கம். இதற்கு முன்னர் ராஜீவ் காந்தி படுகொலை நடந்த சமயத்தில் வன்னியில் நின்றவர் -பாலசிங்கம். ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவின் கதை முடிந்தது என ஆணவமும், திமிர்த்தனமும், குரோதமும் தொனிக்க தனது புலி சகாக்களுடன் அளவளாவியவர்தான் இந்த ஸ்டனிசுலசு

இப்போது அவர் கடும் பிணி கண்டுள்ளாராம். உடல் முழுவதும் புற்றுநோய் பரவிவிட்டதாம். இந்தச் சூழ்நிலையில் நாலைந்து மாதங்களுக்கு முன்னர் ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை வரலாற்றின் துன்பியல் என்றுரைத்த பாலசிங்கத்தின் கூற்றை அவசர அவசரமாக உயிருடன் புதைத்துவிட்டு இப்போது புதுக்கதை விடுகிறார் சு.ப.த.

இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், மிக முக்கியமான மிக பாரதூரமான விடயங்கள் தொடர்பில் நாளுக்கும் பொழுதுக்கும் ஒவ்வொரு கதை சொல்லும் புலிகளுடன் சேர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு இலங்கை அரசை சர்வதேச சமூகம் கூறுவதுதான் பொருத்தமில்லாத விடயமாக இருக்கிறது.

இத்தகைய ஏடு புரட்டும் பேர்வழிகளுடன் கிளிநொச்சி சென்றும் வெளிநாடுகளுக்கு அழைத்தும் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது எவ்வளவு அர்த்தமில்லாத வியர்த்தமான விடயமென்பதை சர்வதேச சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இதேவேளை புலிகளின் முகவர்களான சில எழுத்தர்கள், இந்தியா மனிதாபிமான பிரச்சினைக்களுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு வழங்கும் உதவிகளைக் கூட அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வழங்காமல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வழங்குமாறு பூடகமாக பொடி வைத்து எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி என்பது நேரடியாக சுயாதீனமாக செல்லக்கூடாது அவை புலிகளுடாக செல்ல வேண்டும் என்பதை அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.

ராஜீவ்காந்தி அவர்களை புலிகள் படுகொலை செய்யவில்லை என்று சு.ப.த சொல்லவருவதன் மூலம் இந்தியாவின் நூறு கோடி மக்களின் பகுத்தறிவை, பொதுப்புத்தியை தமிழ்ச்செல்வன் இழிவுபடுத்த முனைகிறார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது திருக்கூட்டத்தாரையும் தவிர மற்றவர்கள் எவரும் புத்தியில்லாதவர்கள் என்பது போல் இந்த கருங்காலி கூட்டத்தின் பேச்சாளர் சு.ப.த சொல்ல வருகிறார்.

பிரபாவும், பொட்டுவும் இந்திய நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள். ஜெயின் கமிசன் விசாரணை ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை தொடர்பான பல விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் தலைமையிலான புலனாய்வுத்துறை படுகொலையின் மர்ம முடிச்சுக்களை அக்குவேறு ஆணிவேறாக அவிழ்த்தெடுத்தது.

இத்தனை புலமையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள்,புலனாய்வாளர்கள், நீதித்துறை சார்ந்தவர்கள் ஊடாக தெளிவுபடுத்தப்பட்ட விடயத்தை வன்னியில் வதியும் உலக பெயர்பெற்ற பாசிச பயங்கரவாதியின் பிரதிநிதி, 250 க்கு மேற்பட்ட தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்த பாசிக பயங்கரவாத இயக்கத்தின் பிரதிநிதி, ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலையை புலிகள் செய்யவில்லை என்று உலகமகா பொய்யை அவிழ்க்கிறார்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களை படுகொலை செய்துவிட்டு அதனையும் மறுத்தவர்கள் புலிகள். ஆனால் அமிர்தலிங்கம் அவர்களை சுட்டுவிட்டு தப்பிச்சென்ற புலிக் கொலைகாரர் அமிர்தலிங்கத்தின் மெய்பாதுகாவலரால் சுடப்பட்டதனால் குட்டு அம்பலத்துக்கு வந்தது. சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் பத்மநாபாவையும் அவரின் 13 சக தோழர்களையும் பட்டப்பகலில் கோடம்பாக்கத்தில் வைத்து படுகொலை செய்தவர்கள் பல ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களையும் பொது மக்களையும் கொன்று தள்ளியவர்கள், பல தமிழ் தலைவர்களை, கல்விமான்களை உடல் மீதியின்றி அழித்தவர்கள் இந்த கொலைமா பாதகங்களை எப்போதும் ஒப்புக்கொண்டது கிடையாது.

இப்போது மக்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்டுவருதலும், கிழக்கு அணியினர் பிரிந்து போனதன் பின்னர் ஏற்பட்ட ஆட்பற்றாக்குறை ஆகியன புலிகளின் இருப்பிற்கு சவாலாக எழுந்துள்ளன. எனவே எவ்வழியிலும் தம்மை காவாந்து பண்ணுவதற்கு நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதற்கு மார்க்கங்களை அவர்கள் தேடுகிறார்கள்.

வன்னியில் இன்னுமொரு அதிசயம் நிகழ்கிறதாம். புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்கள் மாவீரர் குடும்பங்கள் என அழைக்கப்பட்டு வந்தன. அந்தக் குடும்பங்களை புலிகள் நீண்டகாலம் அலட்சியப்படுத்தி விட்டனர். இப்போது ஆட்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மாவீரர் குடும்பங்களை தூசிதட்டி மினுமினுப்பு காட்ட முனைகிறார்கள். வன்னியில் மாவீரர் குடும்பங்களை கௌரவப்படுத்தல் என்ற பெயரில் - மாவீரர் குடும்ப வரவேற்பு நிகழ்ச்சிகள், மாலை மரியாதைகள,; தாரை தப்பட்டைகள் என தூள் பறக்கிறதாம்.

மறுபுறம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் வீடுகளிலும், வீதிகளிலும் வைத்து புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு உழவு இயந்திரப் பெட்டிகளிலும், கன்ரர் ரக வாகனங்களிலும் ஏற்றிச்செல்லப்படுகிறார்களாம்.

இந்த நிலையிலிருந்தே ராஜீவ்காந்தி படுகொலை மறுப்பையும், இந்தியா உதவ வேண்டும் என்ற புலிகளின் பாசாங்கையும், புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் வேறு, மக்கள் வேறு என்பது இந்தியாவிற்கு நன்கு தெரிந்த விடயம். தமிழ் கல்விமான்கள், ஜனநாயக அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், சாதாரண பொது மக்கள்- இவர்கள் இந்தியா உதவ வேண்டும் என்பது பரந்த சமுதாய நோக்கிலிருந்தே. புலிகளின் சுயரூபம் மக்கள் மத்தியில் சிறிது சிறிதாக அம்பலப்பட்டு வருகிறது.

புலம் பெயர் தளத்தில் அவர்கள் கணிசமாகவே ஆட்டம் கண்டுள்ளார்கள். மாற்றுக் கருத்துக்கள் ஜனநாயகம், மனித உரிமை பற்றிய விழிப்புணர்ச்சிகள் புதிய வீச்சுடன் மேலெழுந்துள்ளன.

அகதித்தமிழன்

மட்டக்களப்பில் உக்கிர மோதல்

மட்டக்களப்பில் இராணுவத்திற்கும் புலிகளிற்கும் இடையில் உக்கிர மோதல்

கிழக்கில் மட்டகளப்பில் போர் முன்னரங்க பகுதிகளில் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்திற்கும் உக்கிர மோதல் இடம்பெறுவதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினர் யுத்த கலங்களுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி முன்னேறுவதாக விடுதலைபுலிகளின் இராணுவப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளதாக.

தற்போது இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதலை நடத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்..

எனினும ஸ்ரீPலங்கா இராணுவ தரப்பு இம் மோதல் குறித்து தெரிவிகையில் விடுதலைப்புலிகளின் வழமையான தாக்குதலிற்கு பதில் தாக்குதலே இராணுவம் மேற்கொவதாக அத்துடன் மாங்கேணி போர் முன்னரங்கப்பகுதிகளில் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கு மோதல் நடைபெறுவதாக இதில் 7 படையினர் தற்சமயம் காயமந்துள்ளதாக இராணுவ தரப்பு நமது செய்தியாளருக்கு தெரிவித்துள்ளது..

காலை முதல் மட்டகளப்பில் நடைபெறும் மோதலிகளின் போது விமானப்படையினரது உதவியும் பெறப்பட்டுள்ளது. மட்டகளப்பில் விடுதலைப்புகளின் கட்டுபாட்டு பகுதியில் ஸ்ரீலங்கா விமானப்படை கிபிர் ஜெட்கள் குண்டுகள் போட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது...

அத்துடன் புலிகள் தமது போரளிகளுடன் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி முன்னேற முயன்றதாகவும் எனினும் புலிகளின் முன்னகர்வை இராணுவத்தினர் ஆட்டிலறி தாக்குதலால் முறையடித்துள்ளதாகவும் இதனையடுத்தே விமானப்படையினரது உதவி பெறப்பட்டதாக தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. .

பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுக்க 8 ஆயிரம் கண்ணி வெடிகள்!

கிழக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி பொது மக்கள் வெளியேறுவதைத் தடுக்க வௌ;வேறு பிரதேசங்களில் சுமார் 8 ஆயிரம் கண்ணி வெடிகளை புலிகள் புதைத்துள்ளதாக புலிகளின் பயிற்சி முகாமொன்றிலிருந்து தப்பி வந்து படையினரிடம் சரணடைந்துள்ள சிறுவன் ஒருவன் தகவல் தெரிவித்துள்ளான்.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,குடும்பத் தலைவர்களையும் சிறுவர்களையும் புலிகள் பலவந்தமாகக் கடத்திச் செல்வதனால் அச்சமடந்துள்ள பொது மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து வெளியேறி படையினரின் கட்டுப்பாடடுப் பிரதேசங்களுக்குச் செல்கின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் கிழக்கில் 462 குடும்பங்களைச் சேர்ந்த 2342 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் வாழைச்சேனை விசேட முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வகைகள் அரசாங்கத்தாலும் தனியார் தொண்டு நிறுவனங்களாலும் வழங்கப்பட்டுவருகின்றன.

கிழக்கில் விடுவிக்கப்படாத பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் பொதுமக்கள் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் முகமாக பணிச்சங்கேணி, ஈச்சிலம்பற்று, மற்றும் கட்டைமுறிப்பு ஆகிய பிரதேசங்களில் 8 ஆயிரம் கண்ணிவெடிகளை புலிகள் புதைத்துள்ளனர். புலிகளின் பயிற்சி முகாம்களில் இருந்து தப்பிவந்தவர்கள் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்

இதேவேளை, நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை புலிகளின் கிழக்கு பயிற்சி முகாமில் இருந்து 61 பேர் தப்பிவந்து படையினரிடம் சரணடைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தாh

இணைத் தலைமை கூட்டு அறிக்கை

பொதுமக்களுக்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி அவர்களைக் காயப்படுத்தும் விதத்தில் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் இருந்து தாக்குதல்களை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது

டோக்கியோ உதவிவழங்குவோர் மாநாட்டின் இணைத் தலைமைத்துவம் விடுத்துள்ள கூட்டு அறிக்கை

டோக்கியோ உதவி வழங்குவோர் மாநாட்டின் இணைத் தலைமைத்துவ நாடுகளான நோர்வே, ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான 2006 நவம்பர் 21ஆம் திகதி வாஷிங்டனில் நடாத்திய கூட்டத்தைத் தொடர்ந்து பின்வரும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

இலங்கையில் பல உயிர்களைப் பலி கொண்டு, பரவலான மனித உரிமைகள் மீறல்களுக்கு வழிவகுத்திருக்கும் வன் செயல்கள் தீவிரமடைவது பற்றி இணைத் தலைமைத்துவ நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் மற்றும் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் வேண்டுமென்றே தொடர்ச்சியாக யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபடுவதை இணைத்தலைமைமத்வதும் கண்டிப்பதோடு, நாட்டின் மோதலைச் சமாதானமாகத் தீர்ப்பதற்கு 2002 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்த வரலாற்று ரீதியிலான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு நாம் இரு தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம். நிலையான மற்றும் விடயம் சார்ந்த பேச்சுவார்த்தைகளுக்குத் தம்மை அறுதியாக ஈடுபடுத்துவதனால் மாத்திரமே அதிகரித்து வரும் வன்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை மாற்றியமமைக்க முடியும்.

குறிப்பாக பொதுமக்களுக்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி அவர்களைக் காயப்படுத்தும் விதத்தில் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் இருந்து தாக்குதல்களை மேற்கொள்வது பற்றி புலிகளையும், அத்தகைய தாக்கமுறக் கூடிய பிரதேசங்களை நோக்கித் தாக்குதல்களை மேற்கொள்வது பற்றி இலங்கை அரசாங்கத்தையும் இணைத் தலைமைமத்துவம் கண்டிக்கிறது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்குமாறும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களின் பாதுகாப்புக்காக இராணுவ சூன்ய வலயங்களை அமைக்குமாறும் அவர்கள் இரு தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றனர்.

தமது ஆணையை நிறைவேற்றுவதற்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான இரு தரப்பினரின் கடப்பாடு பற்றியும் அவர்கள் நினைவ+ட்டியுள்ளார்கள். நவம்பர் மாதம் 8ஆம் திகதி இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் பற்றி இணைத் தலைமைத்துவ நாடுகள் கவலையடைந்துள்ளன. யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் தீர்மானங்களை மதித்து, ஏ-9 நெடுஞ்சாலையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான தரப்பினரின் பொறுப்புப் பற்றி அவர்கள் ஞாபகமூட்டியுள்ளனர்.

ஒக்டோபர் 28-29ஆம் திகதிகளில் நடைபெற்ற பேச்சுக்கள் பற்றி கவனம் செலுத்திய இணைத் தலைமைத்துவ நாடுகள், ஜெனீவாவில் அரசாங்கம் குறிப்பிட்ட படி புலிகள் அதனை வரவேற்றதற்கேற்ப, யோசனை ஒன்றைப் பெற்றுக் கொண்டதும் நிபந்தனைகள் இன்றி சீரான மற்றும் நிலையான பேச்சுவார்த்தைகள் செயற்பாட்டுக்குத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுமாறும் தரப்பினரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தரப்பினரிடையே மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு உதவக் கூடிய விதத்தில் அதிகாரப் பகிர்வுக்கு ஏதுவாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்டிசிகளுக்கிடையிலான ஒப்பந்தம் அமைய வேண்டும். அதே வேளையில், ஒப்பந்தம் ஒன்றுக்குக்கான கலந்துரையாடலைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அடிப்படையாகவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு பற்றிய குறிப்பான ஏற்பாடுகள் சிதைவுறாமல் பேணப் பட வேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களை உள்ளிட்ட சகல சமூகங்களினதும் நியாயமான நோக்கங்களும் அபிலாசைகளும் அரசியல் தீர்வொன்றின் அங்கமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

மனித உரிமைகள் பற்றி விசாரிப்பதற்கான சர்வதேச அவதானிப்பாளர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்றை அமைப்பது பற்றிய இலங்கை அரசாங்கத்தின் யோசனையில் அடைந்துள்ள முன்னேற்றத்தை இணைத் தலைமைத்துவ நாடுகள் வரவேற்றுள்ளன. சகல தரப்பினரும் மனித உரிமைகளை தீவிரவமாக மீறி வருவதையும் சிவில் சமூகம், அரசியல் மற்றும் ஊடகத்துறையை பீடித்திருக்கும் பீதியையும் அவர்கள் கண்டித்துள்ளனர். இவற்றின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தட்டிக் கேட்பார் இல்லாத நிலையை மாற்றுவதற்கும் இவ்வாணைக்குழுவும் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இம்முரண்பாட்டில் பொதுமக்கள் சிக்குண்டுள்ளதோடு, அவர்களைச் சென்றடைய தொண்டு நிறுவனங்களுக்கு முடியாமலிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களை நாம் இனங்கண்டுள்ள அதே வேளையில், சர்வதேச முகவர்கள் எதிர்நோக்கும் மனிதாபிமான பிரவேசத்தைப் பெற முடியாத நிலை பற்றிய சிக்கல்களைத் தீர்ப்பதற்காக மனிதாபினமான உதவி பற்றிய கலந்துரையாடல் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதையும் வரவேற்கிறோம்.

மனிதாபிமான விடயங்களை அரசியலில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்காக கடல் மற்றும் தரை வழிகளை உடனடியாக, நிரந்தரமாக மற்றும் நிபந்தனையின்றித் திறந்து விடுமாறும் இரு தரப்பினரையும் இணைத் தலைமைத்துவ நாடுகள் கேட்டுக்கொள்கின்றன. இது தொடர்பான முதல் நடவடிக்கையாக, யாழ்ப்பாணத்துக்கு ஏ-9 நெடுஞ்சாலையினூடாக வாகனத் தொடர் ஒன்றை அனுப்புவதற்கு மற்றும் தமது செயற்றினை நிரூபித்துள்ள சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்கள் தம் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு அவர்கள் உடனடியாகச் செல்வதை அனுமதிப்பதற்கான அரசாங்கத்தின் தயார் நிலையையும் இணைத் தலைமைத்துவ நாடுகள் வரவேற்கின்றன. அத்தகைய முன்னெடுப்புக்களுடன் ஒத்துழைக்குமாறு புலிகளை இணைத் தலைமைத்துவ நாடுகள் வேண்டிக் கொள்கின்றன.

சமாதானச் செயற்பாட்டுக்கு அனுசரணை வழங்குவதற்கான நோர்வேயின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிப்பதில் இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்பக்குழு வழங்கும் பங்களிப்புக்கும் இணைத்தலைமைத்துவ நாடுகள் சர்வதேச சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களுடன் இணைந்து தம் உறுதியான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.



thenee.com

தமிழ் பாசிசத்தின் இருப்பு

தமிழ் பாசிசத்தின் இருப்பு என்பது தமிழ் சமூகத்தின் சிதைவு என்பதன் பிரிக்க முடியாத அங்கம்

இலங்கையில் மிக அவசரமாக உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய, முடிவு கட்டப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. அவை உள்ளுர், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இராஜதந்திர வட்டாரங்களிலும் கடுமையான அதிருப்தி நிலைமைகளை தோற்றுவித்துள்ளன.

இந்த நாட்டில் அனைத்து மக்களினதும் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். முதலாவதாக நாளும் பொழுதும் நிகழும் கொலைகள் உடனடியாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஏன்? எதற்கு? என்ற விவஸ்தையில்லாமல் எப்போது வேண்டுமானாலும் யாரையும் படுகொலை செய்யலாம் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்துச் சென்றால் இலங்கையில் மனித உரிமை, ஜனநாயகம் தொடர்பான எஞ்சியுள்ள பெறுமானங்களும் தீர்ந்துவிடும்.

கடந்த கால்நூற்றாண்டுகளில் இத்தகைய மனித உரிமை மீறல்கள் அடிக்கடி எழுந்தன. 1980 களின் பிற்பகுதியில் அவ்வாறானதொரு நிலை காணப்பட்டது.

1994 இற்குப் பின்னர் நிலைமை ஓரளவு சீரடைந்தது எனினும் அண்மைக்காலத்தில் படுகொலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரை படுகொலைகளின் வரலாறு பிரத்தியேகமான தன்மை கொண்டது. தமிழர்கள் மத்தியிலும் ஏன் சக சமூகங்கள் மத்தியிலும் படுகொலை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதில் புலிகளுக்கு பெரும் பங்குண்டு. தந்திக்கம்ப மரண தண்டனைகள், வீதிN;யார படுகொலைகள், சித்திரவதைகள், கூரிய ஆயுதங்களை பாவித்து கொலை செய்தல், பார்சல் குண்டு, நஞ்சுவைத்து கொலை செய்தல், தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்தல், உயிரிருடன் நெருப்பில் இடல், தற்கொலை குண்டுதாரி என பல படுகொலை விகாரங்கள் எமது சமூகத்தில் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனை புலிகள் நேரடியாகவும் அவர்களிடமிருந்து பிரதி பண்ணி வேறு வேறு ஆட்களும் படுகொலைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேவேளை 1979 பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்து ஜே.ஆர் ஜெவர்த்தனா நீதிக்குப் புறம்பான கொலைகளை சமூகத்தினுள் வடக்கு கிழக்கில் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த கொலை விகாரங்கள் ஒன்றையொன்று மேவியும் ஒன்றோடொன்று கலந்தும் ஒன்று மற்றொன்றாகவும் செயற்பட்டிருக்கின்றன. இதன் சிதைவியக்கம் இன்று இந்த நாட்டில் மனித உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குரியாக்கியுள்ளது.

மனித உரிமைகள் என்றால் என்ன என்று புதிய தலைமுறையினருக்கு தெரியாதவொரு சூழ்நிலை, விளங்காதவொரு சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழர் வரலாற்றில் நவ காட்டுமிராண்டி காலம் எனலாம்.

அண்மையில் வவுனியாவில் விவசாய கல்லூரியைச் சார்ந்த ஐந்து மாணவர்கள் கிளேமோர் கண்ணிவெடிச் சம்பவத்தை தொடர்ந்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

படையினருக்கு புலிகள் கண்ணிவெடி வைத்ததில் ஐந்து படையினர் கொல்லப்பட்டு இரண்டு பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இடையில் அகப்பட்டு வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் உயிரிழந்ததாக படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் விவசாய கல்லூரிக்குள் நுழைந்த படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவிக்கின்றது.

இது இவ்வாறிருக்க இங்கு குறித்துரைக்கப்பட வேண்டிய முக்கியமான விடயமொன்றிருக்கிறது.

நாம் இதனையொரு கேள்வியாக எழுப்புவோமானால் புலிகளுக்கு மக்களின் உயிர்மீதும் அவர்களின் பட்டினி வாழ்வின் மீதும் அக்கறை இருக்கிறதா? கரிசனை இருக்கிறதா? என்றால் அது அப்படியில்லை அது இவற்றுக்கு விரோதமாகத்தான் இருந்திருக்கிறது. இருந்து வந்திருக்கிறது என்பதற்கு பல நூறு உதாரணங்கள் இருக்கின்றன. புலிகள் அநேகமாக பொது மக்கள் புழங்கும் இடங்களிலிருந்தே தாக்குதல்களை நடத்துவார்கள். தாங்கள் நடத்தும் தாக்குதல்களின் பிரதி விளைவுகள் தமிழ் மக்கள் மீது நிகழவேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கூடாக தமிழ் மக்கள் தவிர்க்க முடியாமல் தங்களை சார்ந்து நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்குமென அவர்கள் நினைக்கிறார்கள். தங்களை அண்டி பிழைப்பவர்களாக தமிழர்கள் இருப்பதற்கான நவ பாசிச இராணுவ, அரசியல் வழிமுறையையே புலிகள் பின்பற்றுகிறார்கள். இது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சமூகத்தின் மரணத்தை நோக்கிய பயணமாகும். சமூகத்தை அழித்து தன்னை தக்க வைத்துக் கொள்ளும் பாசிச முறைமைகளையே புலிகள் கடந்த இரண்டு தசாப்தங்களில் பின்பற்றி வந்திருக்கிறார்கள். தமிழர்கள் சுயாதீனமான ஒரு சமூகமாக வளர்ச்சி பெறுவதை புலிகள் அனுமதிக்கப் போவதில்லை. மாறாக தமிழர்களின் வாழ்வை ஒரு சிதைவியக்கமாக புலிகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாசிசத்திற்கேயான பிரத்தியேக குணாம்சத்துடன் சகோதர சமூகங்களான முஸ்லீம்கள், சிங்களவர் மீதும், தமிழர்களுக்கு ஆபத்தில் உதவ வந்த நட்பு நாடான பாரதத்தின் படையினர் மீதும், அதன் இளந்தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் மீதும் அவர்கள் கொலை வெறித்தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் வடக்கு கிழக்கை இணைத்து உருவாக்கிய அரசியல் நிர்வாக கட்டமைப்பை சீர்குலைப்பதில் முன்னோடிகளாக இருந்தவர்களும் இவர்களே.

உதாரணமாக உலக தராதரத்திலான எந்த விடுதலை இயக்கமும் தான் எந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடுகின்றதோ அதன் சுபிட்சமான, சுதந்திரமான எதிர்காலத்திற்கு தன்னை அர்ப்பணிக்கும். மனித உயிர்களின் பெறுமதி, ஜனநாயக விழுமியங்களை உயர்நிலையில் பேணும். ஆனால் இங்கு தலைகீழான நிலைமையே காணப்படுகிறது.

உண்மையில் புலிகளுக்கு மக்கள் மீது அக்கறையிருந்தால் இன்று இந்த நாட்டின் பிரதான வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவும், மருந்தும், அத்தியாவசியப் பொருட்களும் சென்று சேர்வதற்கு அது எவ்வழியேயாயினும் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் புலிகள் அவ்வாறில்லை.

கடல் மார்க்கமாகவோ, வான் மார்க்கமாகவோ, தரை மார்க்கமாகவோ கொஞ்சமேனும் மக்கள் தமது உயிர் மூச்சை காப்பாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் ஆதரிப்பார்கள். ஆனால் மக்களின் நலன்களை புலிகளின் குறுகிய இராணுவ அகங்கார நலன்களுக்காக பணயம் வைத்திருக்கிறார்கள். இத்ததையவர்களின் கையில் தமிழ் மக்களின் தலைவிதி செல்லுமானால் எஞ்சியுள்ள தமிழர்களும் அழி;ந்து போவதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

புலிகள் அகதிகள் மத்தியில் இருந்து அல்லது அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகில் இருந்து குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் மக்கள் மீது அதன் பிரதிவிளைவாக குண்டு விழ வேண்டுமென்று மனசார எதிர்பார்க்கிறார்கள்.

கெப்பிட்டிகொலாவ, ஹபரண தாக்குதல்கள் மூலம் புலிகள் எதிர்பார்த்தது அதன் பிரதி விளைவுகள் தமிழர்கள் மீது நேர வேண்டுமென்பதே.

இதேபோன்ற தாக்குதல்களை புலிகள் எதிர்காலத்தில் தீவிரப்படுத்துவார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. தமது இருப்பை இத்தகைய குரூர மக்கள் விரோத வழிகளிலேயே புலிகள் நிலைநிறுத்த முயல்கிறார்கள்.

தமிழ் பாசிசத்தின் இருப்பு என்பது தமிழ் சமூகத்தின் சிதைவு என்பதன் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கிறது. இந்த விடயம் தமிழ் மக்களுக்கு புரிய வேண்டும். சர்வதேச சமூகத்துக்குப் புரிய வேண்டும்.

அதேவேளை புலிகளையும் அவர்களால் அடிமைப்படுத்தப் பட்டிருக்கும் அவர்களின் சதிவலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களையும் வேறாக தெளிவாக பிரித்துணரும் பக்குவம் அரசுக்கும் வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக சக்திகளை, மனித உரிமை சக்திகளை, பலப்படுத்தும் விடயத்தில் முதலும் முக்கியமுமாக சர்வதேச சமூகம் அக்கறை செலுத்த வேண்டும்.

சமாதானத்துக்கான முன் முயற்சிகள் நடைபெற வேண்டும். அதேவேளை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதுதான் சமாதான முயற்சி என்ற குழப்பத்திலும் ஆழ்ந்துவிடக்கூடாது.

இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைத்து பிரிவினரும் ஐக்கிய இலங்கைக்குள் சுயமரியாதை கௌரவத்துடன் தமது தனித்துவங்களுடன் ஐக்கியமாக வாழ்வதற்கான உறுதியான அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நாடு இனங்களின் மோதல் களமாக மாறி சின்னாபின்னப்பட்டு சீரழிந்து கிடக்கிறது. மக்கள் சமூகங்களின் உரிமைகளை அங்கீகரிப்பதன் ஊடாகவே, உறுதிப்படுத்துவதன் ஊடாகவே உண்மையான ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும்.

அதிகாரப் பகிர்வும் பன்மைத்துவமும் ஜனநாயக மனித உரிமைகளும் நிலை நிறுத்துவதற்கான ஆயுதங்களே இங்கு முதன்மையானவை. அவற்றினூடாகவே மக்களை வெல்லலாம். உயிர்கொல்லி ஆயுதங்களால் இந்த நாட்டில் சிதைவியக்கமே தொடர்ந்து நிகழும்.

தேங்கிய குட்டையாக இல்லாமல் பீறிட்டு பாயும் அருவி போன்ற சிந்தனை வேண்டும். அதற்கு மனதில் உறுதியும் வார்த்தையில் தெளிவும் வேண்டும்.

அகதித்தமிழன்

நன்றி: தமிழ்நிய+ஸ்வெப்

வாழ்த்துப்பா -திவாசன்

வாழ்த்துப்பா திவாசன்

வாழி வாழி நீடூழி நீ வாழி
நீ வாழி உன் உற்றம் சுற்றம் வாழி
பங்கரில் நீ வாழி கூடவே வேலுப்பிள்ளையும் வாழி
அண்ணன் மனோகரன் சிங்கப்பூரில் வாழி
அக்கா கனடாவில் வாழி
பிள்ளைகள் அயர்லாந்தில் வாழி

மாங்காய் திருடியவனும் மாடு திருடியவனும் மாறி மாறி
மண்டையிலை போட்டதும் போய்
மாற்று இயக்கத்தவனை மண்டையிலை போட்டும்
ரயர்போட்டு உயிருடன் கொழுத்தியதும் போய்
இலங்கை இராணுவமும் இந்திய ராணுவமும் அழித்ததும் போய்
வன்னியிலும் தெருவோரங்களிலும் இறந்ததும் போய்
எஞ்சியிருப்போர் அவலத்தில் வாழி

அந்தரித்துப்போய் அவலங்களைச்சுமந்து அகதிகளாய்
அக்கரை சென்றவர்களும் வாழி

பொன் முட்டையாய் இட்டுக்கொடுத்த ஏ-9 பாதை வாழி
புலிவால் பிடித்த கூத்தமைப்பு வாழி
சித்திரவதைக்கைதிகள் பொட்டம்மானின் ஒட்டலில் வாழி
ஆலோசகர் அன்ரன் பாலா லண்டனில் வாழி

பல்லைக் காட்டியே பொய் பேசும் சுப்பர் பரமுவின் மோனும் வாழி
மாவீரரும் மாமனிதரும் கல்லறைகளில் வாழி
புலம் பெயர் பினாமிகளும் பவுத்திரமாய் வாழி

பணத்திற்காய் கிளேமோர் வெடிக்கும் புலிக்கூலிகளும் வாழி
வாழி வாழி நீடூழி

http://www.eelanaasam.com/

ரவிராஜ் கொலை - புலிகளை நோக்கி நீளும் விரல்கள்

ரவிராஜ் கொலை - புலிகளை நோக்கி நீளும் விரல்கள்

- எஸ். பாலச்சந்திரன்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ந. ரவிராஜ் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலதரப்பினராலும் வன்மையாக கண்டிக்கப்பட்டு வருகின்றது. ஜனநாயக ரீதியியல் செயல்பட்டு வந்த ரவிராஜ் கொலை செய்யப்பட்டது நிச்சயமாக ஜனநாயக விரோத சக்திகளின் கைங்கரியமாகத்தான் இருக்கமுடியும்.

இக்கொலையை எத்தரப்பினர் செய்திருப்பார்கள் என்ற விவாதம் பரவலாக நடைபெற்று வருகின்றது. வழக்கம்போலவே இக்கொலைக்கான பொறுப்பும் அரசாங்கத்தின் மீதும் புலிகளுக்கு எதிரான குழுக்கள் மீதும் போடப்பட்டு சர்வதேச ரீதியாக பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

ரவிராஜின் ப+தவுடலை ஏ9 சாலைய+டாக கிளிநொச்சி கொண்டுசென்று அரசியல் ஆதாயம் தேட புலிகள் மேற்கொண்ட திரைமறைவு முயற்சி கைகூடாமல் போய்விட்டது. என்றாலும் அறிக்கைகள் விடுத்ததன் மூலமும் அவசர அவசரமாக பிரபாகரன் ரவிராஜூக்கு மாமனிதர் பட்டம் வழங்கியதன் மூலமும் தமக்கும் இக்கொலைக்கும் சம்பந்தம் இல்லை என காட்டுவதற்கு புலிகள் படாதபாடுபட்டுள்ளனர்.

சீறும்படை என்றொரு படை இக்கொலைக்கும் தமிழ் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கும் உரிமை கோரியுள்ளதாகவும், அக்குழு கருணா அணியினரைச் சார்ந்தது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மையானால் அப்படை ஏன் முன்னாள் அம்பாறை மாவட்ட தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அ. சந்திரநேரு, திருமலை மக்கள் குழுத் தலைவர் கே.விக்கினேஸ்வரன் ஆகியோரின் கொலைகளுக்கு உரிமைகோரவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

அதேநேரத்தில் கருணா தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் ரவிராஜின் கொலையை வன்மையாக கண்டித்ததுடன் அவருக்கு தமது இறுதி அஞ்சலியையும் செலுத்தியுள்ளது. அப்படியானால் இக்கொலையை புரிந்தது யார்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் இக்கொலையை அரசாங்கத்துடன் தொடர்புடையோரே செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மறுபக்கத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக போட்டியிட ஆவல்கொண்டிருக்கும் எஸ்.பி.திஸநாயக்கா, தமிழ் மக்களின் வாக்குகளை கவருவதற்காக அண்மைக் காலங்களில் எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக இக்கொலையை கருணா குழுவல்ல, அரசாங்கமே நேரடியாக செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இன்னொரு பக்கத்தில் மேற்கத்திய ஏகாதிபத்திய பணத்தில் என்.ஜீ.ஓ நடாத்திவரும் குமார்ரூபசிங்கவும் அரசாங்கமே இக்கொலையைச் செய்துள்ளதாக குற்றம் சாட்டியதுடன் ரவிராஜின் ப+தவுடலை வைத்து தனது என்.ஜீ.ஓ வியாபாரத்தை கனகச்சிதமாகச் செய்துள்ளார்.

ஆனால் கொழும்பில் உள்ள நடுநிலைமையான நோக்கர்களின் கருத்துப்படி அரசாங்கமோ கருணா குழுவினரோ புலிகளின் ஆதரவாளர்களைக் கொல்வதாக இருந்தால் புலிகளால் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கஜேந்திரன், பத்மினி போன்றோரையோ அல்லது கூட்டமைப்பின் தலைவரான ஆர். சம்பந்தனையோ விடுத்து வெளிப்படையாக புலிகளையும்கூட விமர்சித்துவரும் ரவிராஜை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரவிராஜ் மிகவும் உணர்ச்சி வசப்படுபவரும் வெளிப்படையாக பேசுபவரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவர் அரசாங்கத்தை கர்ணகடூரமாக விமர்சிப்பது போல அல்லாவிடினும் புலிகளையும் அவ்வப்போது வெளிப்படையாக விமர்சித்து வந்தள்ளார். இருப்பினும் அண்மையில் அவர் புலித்தலைவர் பிரபாகரனின் குடும்பத்தைப்பற்றி செய்துள்ள ஒரு விமர்சனம் புலிகளின் பார்வையிலும் பாணியிலும் மன்னிக்கமுடியாத ஒரு குற்றமாகும். ரவிராஜ் அக்டோபர் 14ம் திகதி ஏசியன் றிபிய+ன் (யுளயைn வசiடிரநெ) இணையத்தளத்திற்கு கொடுத்த பேட்டியொன்றில் யாழ்ப்பாணத்தில் சாதாரண தமிழ்ப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியாமல் உணவுக்காக கிய+வில் நின்று தவிக்கையில் பிரபாகரனின் பிள்ளைகள் உட்பட வசதியுள்ள தமிழ் குடும்பங்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் பாதுகாப்பாகவும் வசதியாகவும் கல்வி கற்று வருகின்றனர் என்று சற்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

ரவிராஜின் இந்தக் கருத்தால் புலிகளின் தலைமை மிகவும் கொதிப்படைந்துபோயிருந்ததாக கூறப்படுகின்றது. அவரது உயிருக்கு புலிகளால் ஆபத்து ஏதும் ஏற்படலாம் என அவரது நெருங்கிய நண்பர்கள் அவரை எச்சரித்திருந்ததாகவும் தெரியவருகின்றது. ஏனெனில் புலிகளின் தலைவரை சாடமாடையாக குறைகூறியவர்கள் கூட புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் உயிருடன் விட்டுவைக்கப்பட்டது கிடையாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் ஒரு பத்திரிகைப் பேட்டியின்போhது அல்பிரட் துரையப்பாவை சுட்டுவிட்டு வந்த பிரபாகரனுக்கு தாம் தேனீர் தயாரித்து வழங்கியதாகவும் அப்படியிருக்க தனது கணவர் யோகேஸ்வரனை (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) ஏன் அவர் கொலை செய்வித்தார் எனத் தெரியவில்லை என தெரிவித்ததற்காக சில நாட்களிலேயே சரோஜினி புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதேபோல அல்பிரட் துரையப்பாவின் கொலை சம்பந்தமாக தனது கடமையின் நிமித்தம் பிரபாகரனையும் ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்வதற்காக தேடிய காரணத்திற்காக பொலிஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரம்பிள்ளை பிற்காலத்தில் பிடித்துச் செல்லப்பட்டு சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி 1987ல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்னர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து ஒப்பந்தத்தை ஏற்கும்படி சற்று பயமுறுத்தல் பாணியில் மிரட்டியதற்காகவே பின்னர் பிரபாகரனின் உத்தரவுக்கு இணங்க படுகொலை செய்யப்பட்டார்.

இப்படியாக பொதுமக்கள் உட்பட மாற்று அரசியல் கருத்துள்ள எத்தனையோபேர் பிரபாகரனையோ புலிகளின் ஏனைய தலைவர்களையோ விமர்சித்ததற்காக புலிகளால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்ட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படியான ஒரு சூழலில் ரவிராஜ் நேரடியாகவே பிரபாகரனின் பிள்ளைகள் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்தது பிரபாகரனால் எக்காரணம் கொண்டும் மன்னிக்கமுடியாத குற்றமாக இருப்பதுடன் அதிஉயர் தண்டனைக்கும் உரியதாகும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் எத்தனை கோணங்களில் இருந்து பார்த்தாலும் புலிகளைத் தவிர ரவிராஜை கொலை செய்யவேண்டிய தேவை யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. எவ்வளவுதான் கொலை காரர்கள் தமது செயலை மூடிமறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளிவருவது தவிர்க்க முடியாதது.

எது எப்படியிருந்தாலும் ரவிராஜின் கொலையின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவது அரசாங்த்தின் தலையான பொறுப்பாகும் அப்போதுதான் அரசியல் நோக்கம் கொண்ட இவ்வாறான கொலைகளின் பின்னால் ஒழிந்திருக்கும் சூத்திரதாரிகள் யார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

அம்பாறை முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள்

அம்பாறை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகள் துண்டுப்பிரசுரம்.




அம்பாறையில் வாழுகின்ற முஸ்லீம்களை வெளியேறச்சொல்லி புலிகள் துண்டுப்பிரசும் மூலம் அறிவித்துள்ளனர். இப்பிரசுரம் அம்பாறையில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் மூதூரில் இதுபோன்ற துண்டுப்பிரசுரம் வெளியிட்டபின் முஸ்லீம்கள் வெளியேறாததைத்தொடர்ந்து மூதூரில் இராணுவத்தாக்குதல்களை பலவந்தமாக மேற்கொண்ட புலிகள் அங்கு வாழ்ந்த மக்களை அகதிகளாக இடம்பெயர வைத்தனர்.

வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடையே பொருளாதார, அரசியல் விடயங்களில் முரண்பாடுகள் இருப்பினும் கூட, புலிகளின் 1990; பின்னான முஸ்லிம்கள் மீதான செயற்பாடுகளினால்தான் தீவிர முரண்பாடுகள் ஏற்பட்டன. வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தம்மை ஒரு தனித்த தேசமாகவும் நிலைநிறுத்த முற்பட்டனர். இந்த யதார்த்தத்தை தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் மூடி மறைத்துவரும் புலிகள்@ தமது இராணுவவாத படுகொலைகளை திட்டமிட்டு தொடர்ந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடுவதே@ தமிழ் முஸ்லிம் மக்களிடையே பெரும் மோதலுக்கு தீ மூட்டத்தான். என்பதை என்பதை வடக்கு கிழக்கு வாழ் மக்களின் ஜனநாயகப் பேரவை. பிரசுரம் மூலம் வெளிப்படுத்தியிருந்தது. புலிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு முஸ்லிம் சமூகம் இலக்காகக்கொள்வது அப்பாவித் தமிழ் மக்களைத்தான். (இந்த உண்மை பல்வேறு கலவரங்களிலும் காணப்பட்டது) இந்த வாய்ப்பை பயன்படுத்தும் புலிகள் தாம்தான் தமிழ் மக்களின் இரட்சகர்கள் என்றும்@ முஸ்லிம்களிடமிருந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றால் அது புலிகளால் மட்டுமே நடைபெற முடியும் என்ற தோற்றப்பாட்டையும் மிக மோசமான இனவாதத்துடன் கலந்து தமிழ் மக்கள் மத்தியில் பரப்பியுமுள்ளனர், பரப்பியும் வருகின்றனர். முஸ்லிம்களை விரோதிகளாகவும், தாக்குதல் தாரிகளாகவும் தமிழ் மக்கள் முன் காட்டும் புலிகள், முஸ்லிம்களின் உணர்வெழுச்சிக்கு தமது படுகொலைகளும் அடக்குமுறைகளும் காரணமாகவிருந்ததை திட்டமிட்டு மூடிமறைத்தே வந்துள்ளனர்.

யுதார்த்தத்தில் வடகிழக்கில் நிலவி வரும் புலிகள், முஸ்லிம்களுக்கிடையிலான முரண்பாட்டை தமிழர், முஸ்லிம் முரண்பாடாக மாற்றும் புலிகளின் குய யுக்தியை தகர்த்தெறிவதற்கு தமிழ், முஸ்லிம் முற்போக்கு சக்திகள் முன்வர வேண்டும்! (இதனூடாக நாம் புலிகளின் கபடத்தனமான அரசியலை மிகத் தெளிவாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த முடியும்)




இந்த வருட ஆரம்பத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக புலிகளால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை என்கிற பெயரில் வெளியிடப்பட்ட பிரசுரம்

வட-கிழக்கு முஸ்லிம்களை அழிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை

வட-கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை தெரிவிப்பு

வடக்கு கிழக்கிலிருந்து முஸ்லிம்கள் அனைவரையும் அழிக்கும் நிலை ஏற்படும். அதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை என்று வடகிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு படை அறிவித்துள்ளது.

குறித்த படையின் பெயரில் திருகோண மலை, மூதூர் பகுதிகளில் ஒரு நோட்டீஸ் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளது. 'முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் ஒரு முதல் எச்சரிக்கை" என்ற தலைப்பிலான அந்த நோட்டீஸில் பின்வருமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழன் தனது உரிமைக்காக இரத்தம் சிந்தி போராடிக்கொண்டிருக்கிறான். அவனின் இந்த போராட்டத்திற்கு எதிராக பேரினவாதத் துடன் இணைந்து செயற்படுவதும், காட்டிக் கொடுப்பதும் நீங்கள் காலம் காலமாக செய்து வருகின்ற விடயங்களாகும். யுத்த காலங்களின் போது கொழும்பு மற்றும் பல இடங்களில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படு வதற்கும், காணாமல் போவதற்கும், சுற்றி வளைப்புகளின் போதும் தமிழ் பெண்கள் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றீர்கள். இப்படியான விடயங்கள் எனது சிறுவயது முதல் நேரிடை யாகவே பார்த்து அனுபவித்திருக்கின்றேன். இப்படியான நாசகார செயல்கள் மட்டுமல்ல பேரினவாதத்தால் உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு பதிலாக அப்பாவி தமிழ் மக்களை தாக்குவதும் உடைமைகளை சேதப்படுத்துவதும் என்னால் தொடர்ந்தும் அவதானித்து வரும் விடயங் களாகும். தமிழனின் உரிமைப்போராட்ட வரலாற்றில் மூன்று பேரிடம் அடிவாங்கிக் கொண்டே இருக்கின்றான். ஒன்று பேரின வாதத்திடம், இரண்டு பேரினவாத அரசால் சாப்பிட்டுவிட்டு வீசி எறியப்படும் எலும்புத் துண்டுகளுக்கு அடிவருடிகளாக செயற்படும் தமிழ் குழுக்களிடம், மூன்று முஸ்லிம்களாகிய உங்களிடம் தமிழ் அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சுக்ககளின் போது முஸ்லிம்கள் எங்கள் உறவுகள், தமிழ் முஸ்லிம் உறவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். உங்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அடிக்கடி பேசு கின்றார்கள். உங்க ளுக்கு இவ்வாறான எண்ணங்கள் மனதில் இருக்குமா?

நீங்கள் யார்......?

வியாபாரத்திற்காக இலங்கை வந்தவர் கள்தானே நீங்கள். உங்களின் நோக்கங் கள் முடிந்தளவுக்கு இனத்தை பெருக்கு வது இதன் மூலம் தமிழனின் நிலங் களை அபகரிப்பது, வியாபாரத்தை பெருக்கு வது. இதற்காக எத் தகைய சுயநலப்போக் கான விடயங்களிலும் ஈடுபட தயங்காதவர் கள் நீங்கள். உங்க ளுக்கு சொந்தமென வடக்கு, கிழக்கு மட்டு மல்ல நாட்டின் எந்த வொரு பிரதேசமும் இல்லை என்பதை உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின் றேன். உங்களுடைய சுயநலத்திற்காக தமி ழனையும் அவனது உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுப்பதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

உங்களின் இந்த நடவடிக்கைகள் அனைத் தும் நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் தகுந்த சந்தர்ப்பம் வரும்போது உங்கள் அனை வரையும் வடக்கு கிழக்கிலிருந்து முற்றாக அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவேன் அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை தங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன். இது உங்களுக்கான முதல் எச்சரிக்கை.

உங்களின் இந்த விரும்பத்தகாத துரோகத் தனங்களால் உங்களுக்கெதிராக என்னால் விசேடமாக உருவாக்கப்பட்டிருக்கும் படை ''வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை""

தலைவர்

வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை

நவம்பர் 19 தோழர் பத்மநாபா பிறந்த தினம்



தோழர் பத்மநாபா மக்களை முன்னிறுத்திய, அரசியல் தலைமைத்துவத்தை வலியுறுத்திய தலைவராக திகழ்ந்தார். இன்று ஆயுதங்கள் அதிகாரம் செலுத்தும் எமது சமூகத்தில் அன ;றாடம் கொலைகளும், ஆட்கடத்தல்களும் நிகழும் சூழ்நிலையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் மக்களின் அபிலாசைகளையும் முன்னிறுத்திய தோழர் பத்மநாபா நினைவுக்கூரப்பட வேண்டியவர்.



இத்தகைய தலைவர்களை அழித்தே தமிழ் பாசிசம் இன்றைய அவல நிலையை நோக்கி தமிழ்ச் சமூகத்தை இட்டு வந்திருக்கிறது.

தோழர் பத்மநாபா தேசிய ஒடுக்கு முறைகளில் இருந்து இலங்கையின் தமிழர்கள், முஸ்லீம்கள் விடுவிக்கப் படுவதையும் இலங்கையின் சகல இன மக்களிடையேயும் பரந்த ஐக்கியத்தையும் சர்வதேச அளவில் சுதந்திரம், ஜனநாயகம், சமூக சமத்துவம் ஆகியவற்றுக்காக போராடும் மக்களுடன் நாம் கரம் கோர்த்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இடையறாது வலியுறுத்தி வந்தவர்.

ஆக்கபூர்வமான முறைகளிலேயே அவர் எப்போதும் சிந்தித்தார். மனிதர்களின் சுதந்திரமான நல்வாழ்வு என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர் மறைந்து 16 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வும், பொதுவாகவே இலங்கை மக்களின் வாழ்வு பெரும் நாசத்தினுள் தள்ளப்பட்டுள்ளது.

புலிகள் இந்தச் சமூகத்தில் ஆக் கப்பூர்வமான வழிகளில் சிந்தித்த அத்தனை தலைவர்களையும் போராட்டக்காரர்களையும் கடந்த இரண்டு தசாப்தங்களில் படுகொலை செய்திருக்கிறார்கள். அதன் விளைவு பாரிய வெற்றிடமொன்று எம் சமூகத்தில் உருவாகியுள்ளது.

வடக்கு கிழக்கில் அரசியல் உரிமைகளுக்காக போராடிய சமூகம் இன்று அன்றாட உ ணவுக்கு திண்டாட வேண்டிய நிலைக்கும், மரங்களின் கீழ் வாழவேண்டிய நிலைக்கும், உறவுகளை, உட மைகளை இழந்த நிலை க்கு தள்ளப்பட்டிருக்கிறதென்றால் அதற்குப் பிரதான முதன்மையான காரணம் புலிகளின் பாசிச நடவடிக்கைகளே என்றால் அது மிகையல்ல.

1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் ஒ ரு அதிகாரப்பகிர்வு கட்டமைப்பு உருவாக்கப்படுவதில் தோழர் பத்மநாபா தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். இன்றைய அவலங்களில் இருந்து பார்க்கையில் அது எத்தகைய தீர்க்கதரிசனமிக்க நடவடிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நடைமுறை ரீதியாக தாக்கமான தாக சமூகத்துக்கான தனது பங்களிப்பை செய்ய வே ண்டுமென்று கருதியவர் தோழர் பத்மநாபா. ஜனநாயகம், பரந்து பட்ட ஐக்கியம் என்பவற்றை எப்போதும் அவர் ம னதிலிருத்தி செயற்பட்டார்.

எளிமையும் அ ர்ப்பணமும் கொண்ட அவர் போன்ற தலைவர்கள் எமது சமூகத்தில் இன்று காண்பது அரிது. சில மனிதர்களை வரலாறு உருவாக்குகிறது. அவர்கள் ஏனையோரைவிட தீர்க்கதரிசனமிக்கவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் துன்பங்களையும், இன்னல்களையும் ஏன் உயிரை இழக்கும் நிலையைகூட சந்தித்திருக்கிறார்கள். அந்த வகையில் காந்தியடிகளுக்கு என்ன நேர்ந்ததோ, மார்ட்டின் லூதருக்கு என்ன நேர்ந்ததோ, சேகுவேராவுக்கு என்ன நேர்ந்ததோ அன்னை இந்திராகாந்திக்கு என்ன நேர்ந்ததோ அதுவே தோழர் பத்மநாபாவுக்கும் நேர்ந்தது.

தோழர் பத்மநாபாவின் மறைவு குறித்து புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் விடுத்த இரங்கல் செய்தியில் எனது தாயார் இந்திராகாந்தியும், பத்மநாபாவும் ஒரே தினத்திலேயே (நவம்பர் 19) பிறந்திருக்கிறார்கள். ஒரேவிதமான இலட்சியங்களுக்காக போராடி, ஒரே விதமாகவே மரணத்தை சந்தித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

தோழர் பத்மநாபா எமக்கு விட்டுச் சென்ற ஜனநாயகம், ஐக்கியம், சமூக சமத்துவம் ஆகிய உயர்ந்த சமூக விழுமியங்களை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

இலங்கை தலித் மக்களின் அரசியல்

தலித் மக்களுக்கான அரசியல் அறிக்கையும்; அவர்கள் பட்ட படுகின்ற துயர நினைவுகளும்

இலங்கை தலித் மக்களின் அரசியல் சமூகப் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டுக் கழகம் (பிரான்ஸ்)

ஜெர்மனி ஸ்ருட்கார்ட் நகரத்தில் 11,12 ஆகிய இருதினங்களில் இலங்கையர் ஜனநாயக முன்னணியினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட அறிக்கை.


உலக மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் என்பது அரசு, சொத்து, குடும்பம் எனப் பிரிவினைகள் தோன்றியபோதே நிலை பெறத் தொடங்கியதாக நாம் வரலாறுகள் மூலமாக அறிகிறோம். இவ்வாறான சமூக வேறுபாடுகளை பொருளாதார (வர்க்க) வேறுபாடாகவும், பாலியல் வேறுபாடுகளெனவும் இருவகையாகப் பிரிக்கலாம். இந்த வகையில் உலகிலுள்ள பல சமூகங்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் சமூகங்களுக்குமிடையே அடிப்படை வேறுபாடுகள் உள்ளது. உலக சமூகங்களுக்கிடையேயான பொதுவான வர்க்க, பாலியல் வேறுபாட்டை 'வர்ண சாதிய' அடிப்படையில் மாற்றிய நிகழ்வானது இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் சமூகங்களுக்குள்தான் நிலைத்து நீடிக்கிறது.

பிறவியின் அடிப்படையில் தொழில் என்பது உலகில் எல்லா சமூகங்களுக்குள்ளும் நிலவியதொன்றுதான்.!! ஆனால் ''வர்ணச் சமூகமானது'' தொழிலை பிறவி அடிப்படையில் ஒதுக்கியது மட்டுமல்லாது, அதெற்கென சடங்கு, சம்பிரதாயம் எனும் கோட்பாட்டு நியாயம் வழங்கியதோடு, திருமண உறவுகளையும் சாதிக்குள் முடக்கி அதில் எவ்வித மீறல்களும் நிகழ்ந்து விடாது கட்டிக் காப்பாற்றி வரும் சமூகமாகத் திகழ்வதும் இந்து மத ஆதிக்கம் நிலவும் சமூகங்ளில் மட்டுமே.

புருஷன் என்கிற உடலை நான்காக வகுத்து நான்கு வருணங்கள் படைக்கப்பட்டன எனப் பாப்பனர்கள் வேதம் படைத்தனர். பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு வர்ணங்களில் பார்ப்பனர் மேலானவர் சூத்திரர் கீழானவர் என வரிசைப்படுத்தி அவர்களுக்குரிய தொழிலையும் தொடக்ககால வேத (இருக்கு) மதம் முன்மொழிந்ததென்றாலும் இந்த நான்கு வர்ணங்களும் பிறவியோடு இறுக்கமாகத் தொடர்புப் படுத்தப்படவில்லை. கி. மு 185 க்கு பிறகு பௌத்த சமண மதங்களை வீழ்த்திப் பார்ப்பனர்கள் அரியணை ஏறிய பின்பு உருவாக்கப்பட்ட மனு நீதியில் தான் பிறவியோடு தொழில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் பார்ப்பன- சத்திரியரின் மேலாண்மை உறுதி செய்யப்பட்டது. வருணம் சாதியாக மாறிய கதை இதுதான் என்கிறார் அம்பேத்கர்.

அம்பேத்கரின் இந்திய 'மனு நீதி' யும் வர்ணம் சாதியாக மாறிய கதையின் வளர்ச்சியானது யாழ்ப்பாணத்தில் வேர் ஊன்றியதற்கான ஆதரங்களை ' யாழ்ப்பாண வைபவ மாலை ' எனும் நூலில் காணலாம்.

யாழ்ப்பாண இராச்சியமானது 15 ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயரின் 40 வருட ஆட்சிக்குப் பிற்பாடு ஒல்லாந்தர் 1658 இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சம்பவம் குறித்து ' யாழ்ப்பாண வைபவ மாலையில்' உள்ள கீழ் வரும் செய்யுள் விபரிக்கிறது.

திருமருவு யாழ்ப்பாண நாட்டையாண்ட
சிங்கையாரியன் குலத்தை தீங்கு செய்து
பெருமையுடன் காலயுத்தி யானி மாசம்
பிலிப்பனெனும் பறங்கிக்கிளை யரசை யாண்டு
குருநெறியும் மனுநெறியுமில்லா தாக்கிக்
கொடுமையுடன் நாற்பதாண்டளவும் போக்க
உருமருவு முதயகிரி யிரவுபோல
வுலாந்தேக மன்னவன் வந்துதிப்பன்தானே

யாழ்ப்பாண நாட்டை ஆட்சி புரிந்த மன்னவர்கள் சிங்கையாரியர் (ஆரியர்) குலத்ததைச் சேர்ந்தவர்களென்றும் அவர்கள் குருநெறியும் மநு நீதியும் கொண்ட இந்து மதச் சட்டத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள். இவ்வாறான அரசாட்சியை பிலிப்பனெனும் பறங்கியன் கைப்பற்றி 40 வருடங்கள் கொடுமையான ஆட்சி புரிந்தவனென்றும் பிற்பாடு ஒல்லாந்தர்களின் ஆட்சியால் யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதென்பதாகவும் அச் செய்யுள் உரைக்கிறது. நீதி பரிபாலனத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண இராச்சியத்தில் மனு நீதி பின்பற்றப் படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலுள்ள செய்யுள்களிலும் காணக்கூடியதாகவே உள்ளது.

ஆரியச்சக்கரவத்தியினர் வம்சத்து யாழ்ப்பாண மன்னர்களை சிங்கையாரியர்; என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வைபவ மாலையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த 9 ஆரியச்சக்கரவத்திகளின் கீழ்வரும் பெயர்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது.

1. விசய கூழங்கச் சக்கரவத்தி
2. குல சேகர சிங்கையாரியன்
3. விக்கிரம சிங்கையாரியன்
4. விரோதய சிங்கையாரியன்
5. மார்த்தாண்ட சிங்கையாரியன்
6. செயவீர சிங்கையாரியன்
7. குண பூசன சிங்கையாரியன்
8. குண வீர சிங்கையாரியன்
9. கனக சூரிய சிங்கையாரியன்

எனும் பெயர் கொண்ட ஆரிய மன்னர்களாகும்.
யாழ்ப்பாண அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கையாரியனின் காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டது. அவ்வரசனை செய சிங்கையாரியனென்று கைலாயமாலை குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நல்லூரில் அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச் சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன் முகூர்த்தத்தில் அத்திவாரம் போட்டு நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூங்காவும், பூங்காவின் நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூடமும் உண்டாக்கி, அக்காலத்தில் யமுனா நதித்தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்து விட்டு, நதி மண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சேனா வீரரிருப்பிடமும் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியுற் பிரமகுல திலகரான செங்காதர ஐயரும,; அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ்செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்கு பாதுகாப்பாக பிள்ளையார் கோவிலையும், மேற்றிசைக்கு வீரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதேசுவரர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்து வந்தான் முதலாம் சிங்கையாரியன். என மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.

இவ்வாறாக இந்திய- இந்துத்துவ மதக் கோட்பாடுகளுடன் தொடர்ந்து வந்த யாழ்பாண இராச்சியமானது, போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களின் மேலாதிக்கத்திற்கு மாற்றமடைந்தது. அக்கால கட்டங்களில் அதிகாரி, முதலியார், இறைசுவதோர், கண்காணி, தலையாரி உடையார், வன்னியனார் என யாழ்ப்பாண ஆரியச் சக்கரவத்திகளால் பதவிப் பெயர்கள் சூட்டப்பட்ட பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் (வெள்ளாள) சமூக மேலாதிக்கத்திற்கு வட-கிழக்கு தமிழர் பிரதேசங்கள் கைமாறியது. இதுவே இந்திய சாதிய படிநிலைக்கும் இலங்கைத் தமிழ் சமூகங்களுக்குமிடையேயான சாதிய படிநிலைக்குமான வித்தியாசங்கள் . சாதிய மேலாதிக்க மனோநிலையில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணமுடியாது.

சிங்கையாரிய மன்னர்களின் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து இன்றுவரை தமிழ் மகக்களுக்குரிய நீதிபரிபாலன சட்டங்களாக இருப்பது தேசவழமைச் சட்டமாகும். இதில் சமூகரீதியாக நிலவிய சட்டமானது சாதியவழமைச்சட்டமாகும். தேசவழமைச்சட்டத்தை எழுத்து வடிவத்தில் சட்டமாக்கியவர் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த உடயளள ளைளயஉள என்பவராகும். இவரின் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேற்குறிப்பிட்ட பதவிப்; பெயர்கள் கொண்ட மேலாதிக்கச் சாதியினரான முதலியார்களும், உடையார்களுமே.

சிங்கையாரியர்களால் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அடிமை குடிமைகளுடன் (தற்போதைய தலித்துகள்) வந்து குடியேற்றப்பட்ட வெள்ளாளர்களாலேயே இந்தியாவில் இறுக்கம் பெற்றிருந்த சாதிய அமைப்பு முறையானது யாழ்ப்பாணத்திலும் கட்டிக் காப்பாற்ரி வந்ததை வரலாற்று குறிப்புகள் மூலமாக நாம் அறிகிறோம். நான்கு வர்ண சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படுபவர்களிலிருந்து பள்ளர், பறையர், நளவர், அம்பட்டன், வண்ணான் போன்ற சாதியினர் வர்ணச் சாதிய அமைப்பு முறைக்குள் அடங்காத, தீண்டப்படாத சாதிகளாக யாழ்ப்பாண சாதிய வழமையில் கருதப்பட்டு வந்தனர். இந்த ஐந்து சாதிகளைக் குறிக்கும் அடையாளமாகவே யாழ் குடாநாட்டில் பஞ்சமர் எனும் பெயர் நிலவிவந்தது. பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய அமைப்பு முறையானது, சங்கிலயன் தொடங்கி பின்னர் ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன், ஜி. ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வரை வளர்க்கப்பட்டு, இன்று தமிழ்த் தேசியம் எனும் பரிமாணம் கொண்டு ஆயுதங்களுடனும் சாதியத் தீண்டாமை மரபு கட்டிக் காப்பாற்ரப்பட்டு வருகிறது. சாதிகளாக பஞ்சமர் சமூகமானது பலவித சமூகக் கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும் அனுபவித்த வண்ணமாயுள்ளது.

சமூக ரீதியாகப் பேணிவந்த சாதிவழமைச் சட்டத்தை ஐரோப்பியர்கள் கண்டும் காணதவாறும் இருந்து வந்துள்ளனர். யாழ்மேலாதிக்க சமூகத்தின் ஆதரவின் அவசியம் கருதியே ஐரோப்பியர்கள் சாதிவழமைச்சட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லi. இருப்பினும் ஐNhப்பியர்களே வட-கிழக்கு வாழ் தலித் சுமூகங்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான பாதையை திறந்தவர்கள்.இலங்கையில் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் சாதிப் பாகுபாடும், தீண்டாமை ஒடுக்குமுறையும் வௌ;வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழர்களது சொந்த நாடான இலங்கையில் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் தமது புனித மரபுகளை கட்டிக் காப்பாற்றி வருகின்றனர். இந்த சாதியச் சமூகச் சகதிக்குள் வாழ்ந்து கொண்டு!! பேரினவாதம், மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், என்றெல்லாம் பேசிவருகிறோம். இவ்வாறாக இன்று வரை புறனாநூற்றுப் புகழ்பாடும் யாழ்ப்பாண சாதிய இராச்சியத்தில் தலித்துகளுக்கு எதிரான சமூக ஒடுக்கு முறைகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பென்பது நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்பட வில்லை.

1910 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் சாதியத் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டமானது பல இடையூறுகளுக்கு மத்தியிலும் நடைபெற்று வந்திருக்கிறது. எனவே நாம் இவ்வறிக்கை மூலமாக கடந்த காலங்களில் யாழ்ப்பாண மேலாதிக்க சாதியினரால் அன்றிலிருந்து தலித் மக்கள் பட்ட துயரங்களையும், அதற்கெதிராக அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும் நினைவுறுத்துவதோடு. எதிர்காலத்தில் எமது ஒடுக்கப்பட்ட சமூகமானது யாழ்ப்பாண மேலாதிக்க சமூகத்துடன் சம அந்தஸ்துடன் இணைந்து வாழ்வதற்குரிய, எமக்கான தனித்துவமான அரசியல்; உத்தரவாதங்களை இவ்வறிக்கை மூலமாக சமர்ப்பிக்கின்றோம்.

பல நூறு ஆண்டுகளாக மனிதர்களாகவே மதிக்கப்படாத தலித்துக்கள் 1910 ஆம் ஆண்டிலிருந்தே வடபகுதி தொழிலாளர் சங்கம் மூலம் தமது உரிமைக்காக ஸ்தாபன ரீதியாக போராட முற்பட்டனர். இக்காலப் பகுதியில் ஆங்கிலேய மிசனெரியால் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கல்லூரியில் ஜெகப் காந்தி என்னும் தலித் மாணவன் அக்கல்லூரியில் அனுமதி கேட்டபோது யாழ்ப்பாண உயர் சாதி மாணவர்கள் பாடசாலையை பகிஸ்கரித்து போராட்டம் நடத்தினர். ஜேகப் காந்தியும்; சளைக்காமல் தனது கல்லூரி அனுமதிக்கான போராட்டத்தை நடத்தியதனாலும், அப்பாடசாலையில் அதிபராக நியமிக்கப்பட்டிருந்த ஆங்கிலேய பாதிரியாரின் மனிதாபிமான முன்னெடுப்புமே, ஜெகப் காந்தி அப்பாடசாலையில் யாழ்ப்பாண வரலாற்றில் முதல் தலித் மாணவனாக அனுமதிக்கப்பட்ட நிகழ்வு சாத்தியமானது.

சிறிய சிறிய போராட்டங்களை ஆரம்பித்து படிப்படியாக தலித் மக்களுக்கான விழிப்புணர்ச்சி வளர ஆரம்பித்தது. 1927 ஆம் ஆண்டு யோவே போல் என்பவரால் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் என்னும் ஸ்தாபனம் அமைக்கப்பட்டு, தலித் மக்கள் மத்தியில் சமூக விடுதலையின் அவசியத்தை உணர்த்துமுகமாக 'ஜன தர்மபோதினி' எனும் பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. 1928 இல் சேர் பொன இராமநாதன் 79 கிராம சங்க பிரதிநிதிகளுடன் சாதி அமைப்பு முறைப் பாடசாலைகள் கொண்டுவர வேண்டும் எனக்கோரி வெள்ளைக்கார தேசாதிபதியிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தினார். 1929 இல் சாதி வெறியர்களை ஒன்று திரட்டி இந்து மகாசபையின் தலைமையில் கோப்பாய் அரசினர் பயிற்சிச் சாலையை உயர் சாதியினரின் தனி ஸ்தாபனமாக ஆக்குமாறும் தேசாதிபதியிடம் மனுக்கொடுத்தார் இராமநாதன். இவைகளையெல்லாம் எதிர்த்து நின்று யோவேபோல் போன்ற தலித் தலைவர்கள் அம்முயற்சிக்கு எதிராக உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தனர். 1930 களில் தலித்துக்களின் போராட்டத்திற்கு முகம் கொடுக்கமுடியாத கோழைத்தனத்தால், தலித்துக்கள் கல்விகற்ற 13 பாடசாலைகள் உயர்சாதியினரால் எரிக்கப்பட்டது.

காலம் காலமாக இறந்த தலித்துக்களின் உடல்களை எரிப்பதற்கு உரிமையற்று இருந்த வேளை யாழ்ப்பாண வில்லூண்றி மயானத்தில் தலித் பெண் ஒருவரின் உடல் எரிக்கப்பட வேண்டுமென தலித்துக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் அவ்வுடலை எரிக்க விடாது சாதிவேறியர்கள் தடுத்தனர். அந்நிகழ்வானது பெரும் கலவரமாக தோற்றம் பெற்று அதில் உயர்சாதியினர்pன் துப்பாக்கிச் சூட்டிற்கு முதலி சின்னத்தம்பி என்னும் தலித் இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்டு சாதிப்போராட்டக் கலவரத்தில் முதல் தியாகி ஆனார். இச்சம்பவத்தை லண்டன் மகாராணிக்கு தந்தி மூலமாக தெரிவித்து பின்பு மாகாதேசாதிபதியின் அனுமதியுடன் மேற்படி சடலம் எரிக்கப்பட்டது.

1940 ஆம் ஆண்டுக் காலங்களில் தலித் மக்களிடையே பெரும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு யாழ் குடா நாடெங்கும் பல வித ஸ்தாபனங்களை உருவாக்கி தமது போராட்டங்களை விரிவு படுத்தினர். இவைகளில் யாழ்ப்பாண நகரில் மையப் படுத்தப்பட்டு பல தலித் தலைவர்கள் சந்தித்து உறவுளை வலுப்படுத்தவும், போராட்டங்களை வலுப்படுத்தவும் பேர் உதவியாக செயல் பட்டது சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கமாகும்.

இலங்கையில் 1931 இல் சர்வசன வாக்குரிமை அமுலுக்கு வந்தபோது தமிழ்த் தலைவர்களின் பிரரிநிதியாக விளங்கிய சேர் பொன் இராமநாதன் தலித்துகளுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்த வரலாறும் நாம் மறந்து விடக்கூடிய ஒன்றல்ல. 1942இல் சன்மார்க்க ஜக்கிய வாலிபர் சங்கத்தினால் வட இலங்கையில் உள்ள சகல தலித்துக்களின் நலனையும், ஐக்கியத்தையும் கட்டிக்காக்க ஒரு பொதுவான அமைப்பை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்;, 1943 இல் மிகப் பெரும் தலித் மாநாடு கூட்டப்பட்டு அம்மாநாட்டில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப்பு உருவாக் கப்பட்டு யோவே போல் தலைவராக நியமிக்கப்பட்டார். இம் மகாசபையானது கல்வி வாய்ப்பு, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைத் தெரிவு, உத்தியோக வாய்ப்பு, சீவல் தொழிலாளர்களின் மேம்பாடு போன்றவைகளுடன் பொருளாதார முன்னேற்றம் போன்ற அனைத்திலும் தலித்மக்களின் எதிர்கால வளர்ச்சி குறித்துப் போராடிவந்தது.

இம்மகாசபையின் 1944ம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டாவது மாநாட்டில் தலித்மக்களின் இன்னல்களையும் ஒடுக்கு முறைகளையும் தீர்ப்பதற்கு ஏதுவாக தலித்துகளுக்கான தனித் தொகுதியை ஒதுக்கியோ, அன்றி நியமனப் பிரதிநிதித்துவம் மூலமான பதவிகளும், யாழ் மாவட்ட மக்கள் விகிதாசாரத்தின்படி 25 வீதமான இடமும், தலித் மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டு அத்தீர்மானம் இலங்கை அரசிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 1945இல் நடைபெற்ற மகாசபை மாநாட்டில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தனி ஆணைக்குழு நியமிக்கக் கோரியும் சகல ஸ்தாபன சபைகளிலும் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடிய வகையில் வட்டாரங்கள் பிரிக்கப்பட வேண்டுமெனவும், கல்விப் பிரச்சனையில் முஸ்லிம் மக்களுக்கு அளித்த விசேச சலுகையை தலித்துகளுக்கும் வழங்க வேண்டுமெனக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1945இல் இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு இலங்கை வந்தபோது மகாசபை சார்பில் தலித் மக்கள் பிரச்சனை பேசப்பட வேண்டுமென தீர்மானித்து எடுக்கப்பட்ட முயற்சிகள் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினால் முறியடிக்கப்பட இருந்தது. சாதிப் பிரச்சனைகள் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை எனவும், தமிழர்கள் அனைவரும் நாம் ஒற்றுமையாக வாழ்கிறோம் எனவும் சோல்பரி ஆணைக்குழுமுன் பேச முனைந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் நரித்தனத்திற்கு பணிந்து, தயங்கிவிடாமல் மகாசபையானது சோல்பரி ஆணைகுழு முன் உயர் சாதிக் கொடுமைகளை விபரித்தது மட்டுமல்லாது. அக்காலத்தில் கரவெட்டியிலுள்ள கன்பொல்லைக் கிராமத்தில் நிகழ்ந்த சாதிக்கலவர த்தின் அனர்த்தங்களையும் சோல்பரி ஆணைக்குழுவை அழைத்துவந்து நேரில் பார்வையிடவைத்தனர்.

இதனால் ஆத்திரம் கொண்ட உயர் சாதி வெறியர்கள் சோல்பரி ஆணைக்குழு உறுப்பினர்களை கன்பொல்லைக்கு அழைத்துவரக் காரணமாயிருந்த மகாசபை பிரதிநிதிகளான எம்.சி.சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை, டி.ஜேம்ஸ் ஆகியோரை வழி மறித்துத் தாக்கினர். இருப்பினும் அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். மகாசபை மூலம் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முயற்சிகள் யாவையும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற உயர்சாதி நரியர்கள் தமது சதித்திட்டங்கள் மூலம் சிதைக்க முற்பட்டனர். சோல்பரி ஆணைக் குழுவும்பிற்பாடு தலிதமக்களின் அவல நிலைகளை கவனத்தில் கொள்ளாது, உயர் சாதியினாரால் ;உருவாக்கப்பட்ட தேசவழமைச் சட்டத்திற்குள் தலித்துக்களை கட்டிப்போட்ட நிலைதொடரக் காரணமாகிப்போனது. (அதுவே இன்றும் தொடர்கிறது)

1948இல் சுதந்திரம் என்ற பெயரில் பிரித்தானிய அரசு இலங்கையில் இருந்த முதலாளித்துவத்தின் வாரிசுகளான சிங்கள உயர் வர்க்கத்தினரிடமும், யாழ் உயர் மேலாதிக்க சாதியினரிடமும் அரசியல்-சமூக- அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டுப்போக தொடர்ந்தும் தலித்துக்கள் தங்கள் போராட்டத்தினை இடது சாரி சிந்தனையாளர்களின் கருத்தியலின் நம்பிக்கையில் தமது போராட்டத்தை புதிய நோக்கில் முன்னெடுத்துச் சென்றனர். 1955இல் காணி அமைச்சினால் நிறைவேற்றப்பட்ட குடியேற்றத் திட்டங்களில் தலித்துகளுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை மகாசபை உறுப்பினர்கள் காணி அமைச்சரிடம் நேரில் சென்று கையளித்தனர். 1956இல் மகாசபையின் தொடர்ச்சியான போராட்டத்தின் பலனாய் நல்லூர் கந்தசாமி கோவில் நுழைவு அனுமதி தலித் மக்களின் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டது. தொடர்ந்தும் தங்களது தீண்டாமை கொடுமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்ததை யாழ்ப்பாண உயர்சாதி வெறி உணர்வு கொண்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சியாகட்டும், எஸ் ஜே வி செல்வநாயத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சியாகட்டும் தலித் போராட்ட வளர்ச்சியை சகிக்கமுடியாமல் மகாசபையை பிரிக்கும் சதி முயற்சியிலும் ஈடுபட்டனர். 1957இல் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட எம் பி டி சொய்சா அவர்களுக்கு தமிழரசுக் கட்சியானது கறுப்புக் கொடிகாட்டியும், பறை மேளம் அடித்தும் தமது எதிர்ப்பினைக் காட்டினர். இச்சம்பவமானது மகாசபைக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மகாசபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் தமிழரசுக் கட்சியின் சதி வலையில் சிக்கி தலித்போராட்டத்தை நிலை குலையச்செய்தனர். இருப்பினும் மகாசபையின் நீண்டகால கோரிக்கையான சமூக-குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் (தீண்டாமை) பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் சட்டமாக்கப்பட்டதுடன் மீண்டும் 1971 இல் இச் சட்டமானது திருத்தமாக்கப்பட்டு அதற்கான தண்டனைகளான அபராதங்களும், சிறைக்காலங்களும் அதிகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்தும் 1956 தொடக்கம் 1960 வரையிலான மகாசபையின் போராட்டத்தினால் சண்டிலிப்பாய், கரவெட்டி, மட்டுவில், கட்டுவன்புலம், புலோலி, மந்துவில் ஆகிய பகுதிகளில் 19 பாடசாலைகள் தலித்துகளுக்காகவே உருவாக்கப்பட்டன. சிறுபான்மைத்+ தமிழர் மகாசபையின் மூலமாக தீண்டாமைக்கு எதிராகவும் தலித்துக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காகவும் பல போராட்டங்களை நடத்திய போதும் அரச துறைகளில் யாழ் சைவ வேளாள சாதியினரே தலைமைப் பொறுப்புகளில் இருந்து வந்தமையால், நடைமுறையில் தலித்மக்களின் தேவைகள் அதிகம் நிறைவேறமுடியாது போயின இதன் விளைவால் 1967இல் தலித்துக்கள் பௌத்த மதம் மாறுவது என முடிவெடுக்கப்பட்டு பல கிராமங்களில் இருந்து தோழர் யோகரடணம் உட்பட ( புகலிடத்தில் வாழும் தீண்டாமை ஒழிப்புக் களப் போராட்டங்களின் சாட்சிகளில் ஒருவர் ) அனைத்து இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவராக இருந்த வைரமுத்து தலைமையில் நூறு தலித் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தென் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கன்பொல்லை, கரவெட்டி, புத்தூர், பூநகரி ஆகிய கிராமங்களிலும் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.

1965இல் அருந்ததியர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், திருவள்ளுவர் மகாசபை போன்ற பல சங்கங்களினால் சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் பொதுஅமைப்பு உருவாக்கப்பட்டு 1966இல் அச்சுவேலியில் ஒரு மாநாட்டையும் நடாத்தியது. அம்மாநாட்டின் இறுதி முடிவாக தலித்மக்கள் யாழ் உயர் சாதிமக்களுக்குள் இரண்டாம்தர மக்களாக கருதும் நிலைப்பாட்டிற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் போது அம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கரஸ் கட்சி பிரதிநிதிகள் அத்தீர்மானத்தின் பிரகாரம் தலித் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தமக்கு மூன்றுமாதம் அவகாசம் தரும்படி கேட்டுக் கொண்டனர். பின்பு அது அவர்களின் இயல்பான சமூக-அரசியல் ஏமாற்று நடவடிக்கைதான் என்பதை காலம் எமக்கு உணர்த்தியது.

சர்வதேச ரீதியில் ஏற்பட்ட இடதுசாரிக் கோட்பாட்டு முரண்பாடுகளின் நிமித்தம் சீனக் கம்யூனிஸ்ட், ரஸ்ய கம்யூனிஸ்ட் எனும் பிளவு நிகழ்ந்த நிலையில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அப்பாதிப்பு நிகழ்ந்தது. அதன் காரணமாய் சீனச் சார்பினர் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை விட்டு விலகினர். இதில் அங்கம் வகித்தவர்களாலேயே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் அமைப்பாளராக கே டானியல் பணியாற்றினார். இதன் முதலாவது மாநாடு 21-10 -1967 இல் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் அமைந்த சின்னர் கார்த்திகேசு அரங்கில் நடைபெற்றது.சங்கானை தேனீர்க்கடை பரவேசத்தின் போது ஏற்ப்பட்ட கலவரத்தினால் கொல்லப்பட்ட கார்த்திகேசுவே அவராகும்.

1967இல் பொன்னாலைக் கிராமத்திலுள்ள தலித்மக்கள் குடிநீர் பெறுவதற்கு மறுக்கப்பட்டதன் காரணமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சாதி வெறியர்கள் மட்டுமன்றி, அதிகாரிகள் தமிழ் தலைவர்கள் யாவரும் ஒன்றிணைந்து அப்போராட்டத்தை நசுக்க முற்பட்டனர்.இறுதியில் சிறீலங்கா அரசின் தலையீட்டால் குழாய்க் கிணறு அமைத்துக் கொடுத்ததன் ஊடாக அப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. 1967இல் ஆரம்பிக்கப்பட்ட சங்கானைப் போராட்டமானது 1968 வரை பரவலாக வடபகுதி முழுவதும் பரவியது.

1967;இல் ஆரம்பிக்கப்பட்ட சங்கானைப் போராட்டமானது 1968 வரை பரவலாக வடபகுதி முழுவதும்
பரவியது. அதன் விளைவால் நிச்சாமம் எனும் கிராமத்தில் வன்னியன் குமரேசு அவர்கள் சாதி வெறியர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார். இவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட வேளையிலும் பல தலித்துகக்கள் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளான போதும் தொடர்ந்தும் ஊர்வலமாகச் சென்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சங்கானைப் போராட்டத்தின் போது பல்வேறு துன்பங்களை தலித் மக்கள் அனுபவித்த நிலையில், அவர்களின் துன்பத்தில் பங்குகொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம் வந்துதவியவர்களில் கம்பஹா எம் பி யாயிருந்த எஸ் டி பண்டாரநாயக்கா அவர்களும். தாழ்த்தப்பட்ட தலித் தமிழர்கள் சம்பந்தமான போராட்ட வழக்குகளில் ஆஜராவதற்கு யாழ்ப்பாணத் தமிழ் மேட்டுக்குடிச் சட்டத்தரணிகள் எவருமே(அப்புக்காத்துகள்) உதவ முன்வராத நிலையில் பிரயாணச் செலவை மட்டும் ஏற்று எமது தலித் மக்களுக்காகக யாழ்பாணம் வந்து வழக்குகளை நடத்தியவர்கள் வண்டி சொய்சா, எச் எம் கரவித்;த போன்ற சிங்களச் சட்டத்தரணிகளும் என்பதை இவ்வறிக்கையினூடாக நாம் பெருமையுடன் அழுத்திக் கூறுகின்றோம்.

சாவகச்சேரியில் சாதிவெறியர்கள் தலித்துக்கள் மீது தொடர்ந்தும் தமது தாக்குதலை நிகழ்த்திய வண்ணம் இருந்தனர். இதில் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியினர் திரைமறைவில் இயங்கி வந்தனர் என்றும் தெரியவருகிறது. 1968 இல் மந்துவிலில் நிகழ்ந்த சாதிவெறியர்களின் கொடுமைகளுக்கு எஸ் இரத்தினம் என்பவர் பலியாக்கப்பட்டார். இக்கால கட்டத்தில்தான் தீண்டாமை ஒழிப்புப் போராட்ட செயல் பாடுகளில் ஒன்றான மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பிரவேசப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டமே தமிழ்மக்கள் மத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆயுதப் போராட்டமாகும். இதில் பங்குகொணடவர் செல்லக்கிளி என்னும் பெண் போராளியாகும. இவர் நாட்டு வெடிகுண்டொன்றை தண்ணீர் குடத்துள் மறைத்து வைத்து கோவிலுள் சென்று அக்குண்டை வெடிக்க வைத்தார்.மூன்று மாதங்களாக தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் அவ்வாலயம் தலித்துக்களுக்காக திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் ஆலயப் பிரவேசப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. அரச அதிகாரிகள், பொலிஸ் நிர்வாகம் போன்ற அரச இயந்திரங்களின் துணையுடன் உயர் சாதியினர் அம்முயற்சியை அடக்க முயன்றனர். இருப்பினும் அவர்களது கடும் கட்டுப்பாடுகளையும் மீறி சின்னையா என்னும் தலித் குடிமகன் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து உட்காந்து கொண்டார். அவ்வேளை 'அடங்காத் தமிழன்” சுந்தரலிங்கம் தலைமையிலான சாதி வெறிக் குண்டர்கள் சின்னையாவை வெளியேற்றினர். மகாராணிக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தவர், அடங்காத் தமிழன் போன்ற அடைமொழிக்குள் சைவ வேளாளரினால் புகழப்பட்ட சுந்தரலிங்கமே அப்போராட்டத்திற்கு முகம் கொடுக்கமுடியாது போன நிலையும் நிகழ்ந்தது. ஆலயப் பிரவேச போராட்டத்துடன் அக்காலகட்டத்தில் தேநீர்க் கடைப் பிரவேசப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. 1969இல் உடுப்பிட்டித் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மு. சிவசிதம்பரம் அவர்களது காலத்திலும் கோவில் உட்பட அவரது பகுதியிலுள்ள தேநீர்க்கடைகளும்; தலித்துக்காக திறந்து விடப்படவேண்டும் என பல தடவைகள் கோரியும் அவர் அதற்காக எந்த நடவடிக்கை களும் மேற்கொள்ளவில்லை என்கின்ற கசப்பான கறைபடிந்த நிகழ்வுகளை தலித்துக்கள் இன்றும் மறப்பதற்கில்லை. அக்கால கட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமானது தனது தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் பல வெற்றிகளை கண்டுள்ளது.

தலித் மக்கள் தங்களது போராட்டங்களை இடதுசாரிக் கொள்கைகளின் வழிகாட்டுதலிலேயே பின்பற்றி வந்தனர். இதனால் முதலாளித்துவத்தின் கொள்கைகளைக் கொண்ட தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பன வற்றிற்கு தலித் மக்களின் இப்போக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. தமிழ்க் கட்சிகளெல்லாம் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாகி, உயர் சைவ வேளாளர்களின் மன அபிலாசைகளின் வெளிப்பாடாகிய தமிழீழம் என்னும் கோசத்தை முன்வைத்து அதை தமது நலன்களைப் பேணும் முயற்சிக்காக மட்டுமே பயன்படுத்த முனைந்தனர்.

1971இல் தென்மராட்சிப் பகுதியில் பொதுக்குளம் ஒன்றில் குளிக்க முற்பட்டபோது உயர் சாதியினரால் விரட்டப்பட்ட தலித் பிரஜை ஒருவர் பயத்தின் காரணமாக தென்னை மரமொன்றில் ஏறிவிட அத்தென்னை மரத்தையே தறித்து அத்தலித்தை வெட்டிக் கொன்ற கொடூரம் எம்மால் இலகுவில் மறந்து விடக்கூடிய ஒன்றல்ல. தொடர்ந்து 1981 இல் எழுதுமட்டுவாள் கிராமத்தில் தலித்துக்களின் ஜீவன உடைமைகளான ஆடு, மாடு, கோழிகள் வெட்டிக் கொல்லப்பட்டதோடு அக்கிராமத்தை விட்டே விரட்டப்பட்டனர். 1982 இல் புன்னாலைக் கட்டுவன் கிராமமோன்றில் இரண்டு தலித்துக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

1967 தொடக்கம் 1982 வரையான போராட்டத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட தலித்துக்கள் உயர் சாதியினரால் கொலை செய்யப்பட்டனர்.

1. சின்னர் கார்த்திகேசு (சங்கானை)
2. இரத்தினம் (மந்துவில்)
3. வன்னியர் குமரேசு (சங்கானை)
4. மா. சீவரட்ணம் (கன்பொல்லை)
5. க. செல்வராசா (கன்பொல்லை)
6. மு. கந்தையா (கரவெட்டி)
7. அரியரட்ணம் (அச்சுவேலி)
8. நல்லப்பு (சங்கானை)
9. அண்ணாச்சாமி (புன்னாலைக்கட்டுவன்)
10. வையித்தி (சண்டிலிப்பாய்)

இவர்களை அன்றைய அரச இயந்திரத்தின் பொறுப்பிலுள்ள மேட்டுக்குடியினர் பங்கரவாதிகள் எனப் பழி சுமத்தினர். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உடுப்பிட்டியில் இராஜலிங்கம் என்னும் தலித் ஒருவரை பாரளுமன்ற உறுப்பினராக்கியதன் மூலம் வெளியுலகத்திற்கு சாதியைக் கொடுமைகளை மறைப்பதற்கும், இடது சாரிக் கருத்துக்களை தலித் மக்களிடமிருந்து அகற்றுவதற்கும் வழிவகைகளை மேற்கொண்டனர். ஆனாலும் சாதியச் சமூக உளவியலானது இராஜலிங்கத்தை எவ்வாறு இயக்கியது என்பதை தலித்மக்கள் உணராமலில்லை. கரவெட்டி பிள்ளையார் கோவிலுக்கு மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டு அதைத் திறந்து வைப்பதற்கு தலித் பாராளுமன்ற உறுப்பினரான இராஜலிங்கத்தையே அழைத்திருந்தனர்!! இருப்பினும் அவரை கோவிலுக்குள் அழைத்து திறப்புவிழாவை நடாத்தாமல் இருக்க மின்சார இணைப்பு தற்காலிகமாக கோவிலுக்கு வெளிப்பகுதியில் இணைப்பு செய்யப்பட்டு அதைத்திறந்து வைக்க அழைக்கப்பட்டவரை கோவிலுக்கு வெளிப்பகுதியிலேயே நின்றே திறந்து வைக்கும்படியான இராஜதந்திரத்தை (!!!) மேற்கொண்டு இராஜலிங்கத்தை அவமானப்படுத்தினர்.

தமிழ் மக்களின் பாரமபரிய பிரதேசங்களில் தலைப்பட்டினமென சொல்லப்படுகிற வட பிரதேசதத்தில் சாதி அமைப்பு முறையின் சின்னங்கள் பலவும் சாட்சிகளாய் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதியில் தெளிவாக தென்பட்டன அதைத் தொடர்ந்த சகாப்தங்களிலும் அவற்றின் அழிவுகள் ஒரேயடியாக மறைந்து போய்விடவில்லை. '' கிராமங்களின் அமைப்பு முறையும் , ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளும், அவர்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் பாதைகளும், அவர்கள் வாழும் நிலங்களும், அவர்களைச் சுற்றியுள்ள பிரதேச நிலங்களின் பெயர்களும் , ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெரு ஆலயங்களும், குளங்களும், கிணறுகளும், மடங்களும், வேறுபல சரித்திரச் சின்னங்களும் , கால் நடைகளின் பட்டிக்குறிகளும், வீதிப் பெயர்களும், கிராமப் பெயர்களும், பேசு;சு முiறைகளும், பழக்க வழக்கங்களும், நன்மை தீமை வைபவங்களின் நடைமுறைகளும், மிகவும் தீண்டப்படாதோருடன் தொடர்பு கொள்வதற்காக சங்கடப் படலையோடு கூடிய தலைவாயிலும், (இதுவே நடுவீட்டுக்குள் அண்டக்கூடாது எனும் உயர்சாதி மொழிவழக்கிற்கு காரணமாயுமுள்ளது) அதற்குச் சற்று முன் வரிசையில் சவுக்கண்டியும், தம்மோடு ஒத்த சாதியினரை வரவேற்பதற்கான முறையில் அமைக்கப்பட்ட நால்சார வீடும் நடு முற்றமும் பாரம்பரிய பெருஞ்சாதி மனிதர்களின் சாதி அமைப்பு முறையினை அனுசரித்து அமைந்த ஞாபகச் சின்னங்களாக இருப்பதை தெளிவாக உணர முடியும்.'' தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க வெளியீடு ஒன்றில் டானியல் மேல்வரும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் சார்பில் டானியல் போன்றவர்களால் எழுதப்பெற்ற பிரச்சார நாடகங்கள் மேடையேறிமையும் குறிப்படத்தக்க ஒன்றாகும். அதனுடன் கே. பசுபதி போன்ற கவிஞர்களின் கவிதைகளும் தாழ்த்தப்பட்ட தமிழ்த் தலித்மக்களுக்கு உணர்ச்சியையும் , உத்வேகத்தையும் அளிப்பவையாக விளங்கின. 1980 இல் உருவாக்கப்பட்ட ''கலை இலக்கியப் பெருமன்றம்'' டானியலை அமைப்பாளராக் கொண்டு இயங்கியது. மக்கள் இலக்கியம் என்ற பத்திரிகையும், அதுபோல மலர்விழி, தேன்கூடு, வாகை, தாரகை, முதலிய சஞ்சிகைகளும் சிறுபான்மைத் தலித் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை முன்வைப்பனவாக வெளிவந்தன. இந்த வகையில் இலங்கையில் இன்றும் தலித் மக்களின் உயர் சாதி ஒடுக்கு முறை சார்ந்த மனநிலையை தமது இலக்கியப் படைப்பாற்றல் திறனூடாக அம்பலப்படுத்தி வருபவர்களாக தெணியான், டொமிக் ஜீவா போன்றோர் உள்ளனர்.

1983 க்குப் பின்னர் ஆயுதம் தாங்கிய தனிநாட்டுக்கான யுத்தம் தோற்றுவிக்கப்பட்டதன் நிமித்தம்
அதிலிருந்து பல ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் உருவாகின. அதில் இடதுசாரிச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களும், மிதவாதங் கொண்ட வலதுசாரி இயக்கங்களும் மக்கள் மத்தியில் தமது அரசியல் அபிலாசைகள், கொள்கை கோட்பாடுகளை முன்வைத்து போராட்டங்களை ஆரம்பித்தனர். சமூகச் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமது அடிப்படை வாழ்வியல் உரிமைகளுக்காகவும் போராடி வந்த தலித் மக்கள் மத்தியிலும் சோசலிச தமிழீழ சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன. இடதுசாரிக் கருத்துக்களிலும் அதன் கொள்கைகளிலும் அதீத நம்பிக்கை கொண்ட தலித் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பொதுவுடைமை கருத்துக்கூறும் இயக்கங்களுக்குள் தம்மையும் இணைத்துக் கொண்டனர். இந்தவகையில் நுPசுடுகுஇ நுசுழுளு போன்ற தனிநாட்டுப் பிரிவினை கோரிய இயக்கங்களுடனும் பெருமளவு தலித்துக்கள் முக்கிய போராளிகளாகவும், ஆதரவாளர்களாகவும் மாறியது தவிர்க்க முடியாததாகியது. சோசலிச ஈழத்தை பெறுவதன் மூலமே ஆண்டாண்டு தோறும் கட்டிக் காத்துவரும் தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுதலை கிடைக்குமென்ற நம்பிக்கையே அதற்கு முக்கிய காரணமாகும்.

தலித்துக்கள் அதிகமானோர் புரட்சி பேசும் இயக்கங்களுக்குள் தம்மை இணைத்துக் கொண்டதை சகிக்க முடியாத யாழ் மேலாதிக்க வாதிகளும், மிதவாத பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் நு P சு டு கு என்னும் இயக்கத்ததை ஈழம் பள்ளர் விடுதலை முன்னணி என்பதாக புதிய விளக்கவுரை கொடுத்து வந்தனர். பின்னர் இந்தியக் கைக்கூலிகள் எனும் பெயரிலும் பல நூறு தலித்துக்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். இதில் ஆயுதம் ஏந்திய போராளிகள் மட்டுமல்லாது தலித்துக்களின் உரிமைகளுக்காக உழைத்த சிந்தனையாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இவர்களில் 1985 ஆம் ஆண்டுக் காலங்களில் சங்கானை தெங்குப் பனம் பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்க தலைவர் நடேசு என்பவரும் கொலை செய்யப்பட்டார். இவர் வடமாகாண தெ. ப. பொ. உ. வி. கூ. சுங்க சமாசத் தலைவரும் ஆவார். ஊர்காவற்றுறைச் சங்கத் தலைவர் மத்தியாஸ் துPஇ யாழ்ப்பாணச் சங்கத்தைச் சேர்ந்த அப்பையா போன்ற பலர் புலிகளால் கொல்லப்பட்டனர்.

1981 ஆம் ஆண்டு ருNP அரசினால் ஏற்படுத்தப்பட்ட இன அழிப்பு யுத்தத்தின்போது எரிக்கப்பட்ட யாழ் நூல் நிலையம் பின்னர் சந்திரிகா அரசினால் புனரமைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் யாழ் மாநகர சபையின் முதல்வராக இருந்த செல்லன் கந்தையா என்னும் தலித்தால் 05-02-2003 இல் நூல் நிலையத்தை திறப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுத்ததன் பிற்பாடு புலிகளின் மிரட்டல்காரணமாக அந்நிகழ்ச்சி தடுக்கப்பட்டது. இது விடயம் குறித்து 1-03-2003 இல் வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையான னுயுஐடுலு ஆஐசுசுழுசு இற்கு செல்லன் கந்தையா பேட்டி அளிக்கையில் '...நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் நூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம், புலிகள் முற்று முழுதாகச் சாதியடிப் படையிலேயே இப்பிரச்சனையை அணுகினார்கள் என நான் நம்புகிறேன்.'' என பேட்டி கொடுத்ததை எவரும் மறந்து விடமுடியாது.

1996 இல் யாழ் மத்திய கல்லூரியின் அதிபரான இராசதுரை அவர்கள் 12-10-2005 அன்று கலாச்சார நிகழ் வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தபோது புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். யார் இந்த இராசதுரை? ஏன் கொலை செய்யப்பட்டார்? ஆம் அவர் சிறுபான்மை இனமான தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரின் புனர் நிர்மான முயற்சியினால் யாழ் மத்திய கல்லூரி புனரமைக்கப்பட்டுவந்தது. அவர் மாணவர் மத்தியிலும் சமூகமட்டத்திலும் மதிப்பு மிக்க மனிதராக வருவதை பொறுக்க முடியாத மேலாதிக்க உயர் சாதி மனநிலையே அதிபர் இராசதுரை அவர்கள் கொலை செய்யப் படுவதற்கான அடிப்படைக் காரணமாகும்.

தற்போதும் யாழ் குடாநாட்டில் கொல்லப் படுபவர்களில் நூற்றிற்கு தொண்ணூறு வீதமானோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். 2006 இல் இடம் பெற்ற அல்லைப்பிட்டி படுகொலைகளாகட்டும், கரவெட்டிப் பகுதிகளில் படுகொலை செய்யப் பட்டவர்களாகட்டும், சிகை அலங்காரத் தொழில் புரிவோர்களாகட்டும்,மற்றும் படுகொலை செய்யப்படும் ஆட்டோ சாரதிகளாகட்டும் அனைவருமே தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

இருமரபும் துய்யவந்த சைவ வேளாள மேலாதிக்கத்தின் அடக்கு முறைகளால் தலித் சமூகமானது கல்வி, பொருளாதாரம், மற்றும் சமூக கௌரவங்கள் போன்ற மானிட மதிப்புகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே யாழ் குடாநாட்டில் இருந்து வந்துள்ளதையும் அதுவே இன்றும் பல்வேறு வடிவங்களிலும், தமிழ்த் தேசியம் எனும் கோர வடிவத்திலும் தொடர்ந்துவருவதையும் நாம் வரலாற்று ஆதாரங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறோம். இன்று ஜேர்மன் இலங்கையர் ஜனநாயக முன்னணியினாரால் நடாத்தப்படும் வட-கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த கலந்துரையாடலில் வட-கிழக்கில் வாழும் தலித் மக்களுக்கான அரசியல் அதிகார உரிமைகளை பிரத்தியேகமான முறையில் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். தமிழ்த் தேசிய விடுதலை என்னும் பெயரில் தமிழ் மக்களுக்கெனப் பெற்றுக் கொள்ளும்; அரசியல் அதிகாரங்களானது, சமூகப் பலமோ, சமூக மதிப்போ, அடிப்படை மனித உரிமைகளென அனைத்தும் மறுக்கப்படும் தலித் சமூகத்திற்கு எவ்வித உத்தரவாதத்தையும் தந்துவிடாது. கடந்த காலங்களிலிருந்து தலித் மக்களுக்கு எந்த எந்த உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவைகளினூடாகவே நாம் நிவாரணத்தையும் கோருகிறோம்.

பெயரளவிலேயே சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சட்ட திட்டங்கள் எமது நாட்டில் நிலவுகிறது. ஆனால் நடைமுறையில் சமூக மேலாதிக்க உணர்வு நிலையின் அடிப்படையில் தலித்துகளுக்கு சமூக நீதி, நியாயங்கள் மறுக்கப்பட்டே வருகின்றது. எனவேதான் அதிகார மையங்களை நோக்கிய அரசியல் ரீதியான உத்தரவாதங்களை நாம் கோருகின்றோம். இப்போதுள்ள வடக்கு மற்றும் கிழக்கு சனத்தொகைப் பரம்பலின் விகிதாசாரத்திற்கு ஏற்புடையதாக சில உத்தரவாதங்களை தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களில் கொண்டிருக்க வேண்டும் என கோருகிறோம்.

சகல மட்டங்களிலுமான அதிகாரங்களில் தலித்துகளுக்கென வட மாகாணத்தில் ஐம்பது வீதமான பிரதிநித்துவங்களையும் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இருபத்தைந்து வீதமான பிரதிநி தித்துவங்களையும் உத்தரவாதப்படுத்த வேண்டியது அவசியமாகும். குறைந்த பட்சம் எதிர் வரும் ஐம்பது வருடங்களுக்கு மேற்படி உத்தரவாதம் நடைமுறைப் படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே பல நூற்றாண்டுகாலமாக ஒடுக்கப் பட்டுவந்த தலித் சமூகமானது ஏனைய தமிழ் சமூகங்களுடன் சமமாக வைத்து பரிசீலிக்கக்கூடிய நிலைமை ஏற்படும்.

அரசியல் பிரதிநிதித்துவங்களை உத்தரவாதப் படுத்துவதற்கு ஏதுவாக தலித்துகளுக்கு மட்டுமேயான தேர்தல் அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இலங்கை மத்திய ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட தேர்தல்களிலும், தமிழ் மக்களுக்கான சுயாட்சியைக் கொண்ட தேர்தல்களிலும் மேற்படி தேர்தல் ஒதுக்கீடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அரச துறைகள் அனைத்திலும் வழங்கப்படுகின்ற உத்தியோகங்களிலும் தற்போதைய தலித்துக்களின் குடியிருப்பு விகிதாசாரத்திற்கேற்ப ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.
பல நூற்றாண்டு காலமாக எவ்வித மாற்றமுமின்றி (அடிமை முறைச் சட்டம் ஒன்றே நீக்கப்பட்டது. அதுவும் ஆங்கிலேயரின் முயற்சியினால்) வழக்கத்தில் நிலவுகின்ற யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம் நீக்கப்பட்டு புதிதான சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
(அ) தலித்துகளின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஒரு விசேட அணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். இவ் ஆணைக்குழு சமூக பொருளாதாரம், கல்வி, குடியிருப்பு மற்றும் சட்ட ரீதியாக அடையாளம் காணப்படுகின்ற சகல துறை களிலும் தலித்துகளின் சமூக நிலையை ஆய்வு செய்யும் நிலை உருவாகவேண்டும்.
(ஆ) மேற்படி ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் தலித்துக்களாக மட்டுமே இருப்பதோடு மேலும் முஸ்லிம், சிங்கள் பிரஜைகளையும் உள்ளடக்கிய வர்களா அமைதல் வேண்டும்.

தகவலுக்கு உதவிய நூல்கள்

1.. சாதி அமப்பின் தோற்றமும் வளர்ச்சியும் (புதியபூமி வெளியீடு)
2.. டானியலின் எழுத்துக்கள் (கலாநிதி செ.திருநாவுக்கரசு)
3. இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் (சி.பத்மநாதன்)
4. தலித் அரசியல் (அ.மார்க்ஸ்)
5. யாழ்ப்பாண வைபவ மாலை